ஷேவாக், காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா??

virender

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே கூறும் போது,

ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. உள்ளூர் போட்டியில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. திறமையாக விளையாடினால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். உடல் தகுதி இல்லாத ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது தங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள் என்று கூறினார்.

இந்திய அணிக்கு ரோகித்சர்மா, ஷிகார்தவான் தற்போது தொடக்க வீரர்களாக உள்ளனர். இருவரும் நன்றாக ஆடுவதால் ஷேவாக், காம்பீர் ஆகியோர் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ போனில் மின்சாரம் தாக்கி இளம் பெண் மரணம்..!

iphoneசீனாவில், ஐ போனில் மின்சாரம் தாக்கி,இளம் பெண் பலியானார். சீனாவின்,உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா, 23. இவர்,சீனாவின் விமான சேவை நிறுவனத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து,பின் ராஜினாமா செய்தவர்.

மா தன், ஐ போனை, சார்ஜ் செய்வதற்காக, மின் இணைப்புடன் இணைத்திருந்தார். அப்போது, அதில் அழைப்பு வரவே, மின் இணைப்பைத் துண்டிக்காமல்,அப்படியே பேசினார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்ததில், அதே இடத்திலேயே,மா இறந்தார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஐ போன் நிறுவனம், இது குறித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, டிவிட்டர் இணையதளத்தில், மாவின் சகோதரி தெரிவித்து உள்ளார். இது குறித்து, வருத்தம் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், எல்லாவிதமான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்,மின்சாரம் பாய்ந்தது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தெரிவித்து உள்ளது.

ஆர்யாவுடன் கும்மாளமிட்ட அனுஷ்கா!!

Anushka and aarya

சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த விருந்தில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம்.
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சூர்யா விருந்து கொடுத்தார். விருந்திற்கு பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

விருந்திற்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த விருந்தில் கலந்து கொள்ள அனுஷ்கா ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமான விருந்து மறுநாள் காலை வரை நடந்துள்ளது.

விருந்து தொடங்கியதில் இருந்து முடியும் வரை அனுஷ்கா ஆர்யாவின் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாராம். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து அதிர வைக்கும் ஆட்டமும் போட்டாராம். அவர்களுடன் சேர்ந்து லிங்குசாமியும் டான்ஸ் ஆடினாராம்.

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு – சாட்சியாகிறார் டிராவிட்..!

ipl

ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீநாத், அஜித் சாண்டிலா, அன்கித் சவான் ஆகியோர் கடந்த மே மாதம் 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பல சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி பொலிசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் ரோயல்ஸ்அணியின் தலைவர் ராகுல் டிராவிடிடம் விசாரணை நடத்த பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த 10-ம் திகதி பெங்களூர் சென்றது.

அவர்கள் டிராவிட்டின் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலம் சூதாட்ட வழக்கிற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் ராகுல் டிராவிட் அரசுத் தரப்பு சாட்சியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பட்டி உப்டோ தற்போது தென்னாபிரிக்காவில் உள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவரும் அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவர் கூட்டாளி சோட்டா சகில் உள்பட பலரின் பெயர் இடம் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பிரம்ம குமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18-07-2013 முதல் 21-07-2013 வரை 12 ஜோதி லிங்க தரிசனம் இடம்பெறும்.

வவுனியா சுத்தானந்த இந்துளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்வானது குறித்த நான்கு நாட்களிலும் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணிவரை இடம்பெறும்.

2
1

அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்த மூவர் கைது..!

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான காசோலை மூன்று, கடவுச் சீட்டு மற்றும் உபகரணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு இலங்கை வருகை..!

euஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவரான ஜீன் லம்பேர்ட் தலைமையிலான மேற்படி தூதுக்குழுவினர் தங்களின் ஒருவார கால விஜயத்தின்போது வட புலத்திற்கு பயணிக்கவுள்ளதுடன் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஏனைய குழுக்களின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பரில் வட மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

மேற்படி தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில் இலங்கையில் நடைபெற்றிருந்த இறுதிக்கால கட்ட யுத்தம் குறித்து தேசிய மட்டத்திலான விசாரணைக்கு மேலாக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட முற்பகுதியில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊடகவிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் பற்றிய முறைப்பாடுகளையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விசனமடைந்துள்ளதுடன் அவற்றுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அது ஊக்கப்படுத்துவதாகவும் ஜீன் லம்பேர்ட் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் இலங்கையில் பொறுப்புக் கூறும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தேவைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் வீசா அனுமதி வழங்குமாறு பிரிட்டன் கோரிக்கை..!

britanஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலருக்கு இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி வழங்காது என்று கவலைகள் எழுப்பப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே, பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

´சில ஊடகவியலாளர்கள் இலங்கை செல்வதற்கு வீசா கிடைக்காது என்பது போலத் தெரிவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெறுகின்ற எல்லா ஊடகவியலாளர்களும் மாநாட்டுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் அங்கிருக்கும்போது இலங்கையில் சுதந்திரமாக பயணிக்கக் கூடுமாக இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது´ என்றார் பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர்.

´ஊடகவியலாளர்களுக்கு பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வேண்டும் என்று அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு மாநாட்டை நடத்தும் நாடு வீசா வழங்குவது என்பது தானாக நடக்கவேண்டிய ஏற்பாடு. இதில் முடிவுகளை எடுக்க வேண்டியது காமன்வெல்த் செயலகம் தான்´ என்றும் அலிஸ்டர் பர்ட் கூறினார்.

இதற்கிடையே, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி என்பது முன்னைய பொதுநலவாய மாநாடுகளின்போது கடைப்பிடிக்கப்பட்ட பொதுநலவாய செயலகத்தின் ஒழுங்குவிதிகளின் படியே நடக்கும் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

மாநாட்டை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களின் வீசா விண்ணப்பங்களை பரிசீலிப்பது இலங்கை அரசின் பொறுப்பு என்று பொதுநலவாய மாநாட்டின் ஊடக விவகாரங்களுக்குப் பொறுப்பான இலங்கை அதிகாரி சரித்த ஹேரத் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(BBC)

இளவரசன் மரணமானது எப்படி? – நாளை மர்ம முடிச்சுகள் அவிழும்..!

ilavarasanதர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இளவரசன் உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் மூலம் மறு பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த13ந் திகதி இளவரசனின் உடலை எய்ம்ஸ் டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த மறு பிரதே பரிசோதனை அறிக்கையை இன்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மருத்துவக் குழு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன் இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார். நாளை இந்த அறிக்கை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகே, இளவரசன் சாவு தொடர்பான மர்ம முடிச்சுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு..

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை கொடுத்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்தும் ஒலிவியாவின் கண்ணில் ஒவ்வொரு நாளும் சில தடவைகள் இரத்தம் வடிந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் வசதி குறைந்த ஒலிவியாவின் குடும்பத்தினர் ஏனையோரிடமிருந்து பெற்ற நன்கொடை பணத்தினைக் கொண்டு கண் வைத்திய நிபுணரை நாடியுள்ளனர்.

இதனையடுத்து இரத்தக் கசிவுக்கான காரணத்தை கண்டுபிடித்து ஒலிவியாவுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித் வருகின்றனர். ஆனாலும் இரத்தக் கண்ணீர் ஏற்படுவதற்கான முறையான அறிகுறிகளை வைத்தியர்கள் தெரிவிக்கவில்லை.

ஹீமோலக்ரியா எனும் பாதிப்பு மிக அரிதாகவே மனிதர்களில் ஏற்படுவதுண்டு. இதேபோன்றதொரு பாதிப்பு 2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தது. அச்சிறுவனுக்கு ஒரு நாளில் மூன்று முறை இரத்தக் கண்ணீர் வந்துள்ளது.

சூர்யாவுக்கு பிடித்த நடிகர் விஜயா? அஜீத்தா?

surya

தல, தளபதி இந்த இருவரில் யாரை பிடிக்கும் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் தனக்கு பிரச்சினை வராத பதிலை அளித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் சூர்யா படத்தை தன் தோளில் தாங்குகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களும் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளன. இந்நிலையில் சூர்யா கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஹரியுடன் வந்த சூர்யாவிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

ஹிந்தி படமான தோஸ்தானாவை தமிழில் ரீமேக் செய்தால் அதில் யாருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சூர்யா சட்டென்று மாதவன் பெயரை தெரிவித்தார். தல, தளபதி ஆகியோரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று மாணவிகள் கேட்க, வம்பே வேண்டாம் என்று நினைத்த சூர்யா இருவரையும் பிடிக்கும் என்று கூறி நைசாக நழுவிவிட்டார்.

சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும், லிங்குசாமியின் படத்திலும் நடிக்கிறார். இதில் துருவ நட்சத்திரம் படத்திற்கு நாயகி தேர்வு இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழப் போரின் பின்னணியில் வெளியாகும் ஹிந்திப்படம்!!

madras cafe

ஜோன் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் புதிய படத்துக்கு ஜப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை யுத்தத்தின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதில் இந்திய உளவுப்பி‌ரிவின் அதிகா‌ரியாக ஜோன் ஆபிரஹாம் நடித்திருக்கிறார். சர்வதேச பத்தி‌ரிகையாளராக நர்கீஸ் பக்‌ரி.
விக்கி டோனர் படத்தை இயக்கிய Shoojit Sircar மெட்ராஸ் கஃபேயை இயக்கியுள்ளார்.

நாயகன் இந்திய உளவுப்ப‌ரிவு அதிகா‌ரியாக இருக்கும் படத்தில் இந்தியாவுக்கு சார்பானதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் ரெய்லர் அதனை உறுதி செய்கிறது.

இந்தநிலையில் போரை நியாயப்படுத்தியும் போராளிகளை இழிவு செய்தும் காட்சிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தமிழீழ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் அதே பெய‌ரில், அதே ஆடையில் படத்தில் வருகிறார்களாம். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியும் அங்கு இருப்பதாக காட்சிகள் உள்ளன.

ஒகஸ்ட் 23 ல் படம் வெளியாகும் போது கடும் சர்ச்சைகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவருகிறது சிங்கம்-3..!

singamநடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோவையில் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு திடீரென்று தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன் பின்பு சூர்யா கூறுகையில், எந்த ஒரு திரைப்படத்திற்கும் 2–ம் பாகம் வந்தால் அந்த படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது.

ஆனால் சிங்கம்–2 படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் ரசிகர்களே ஆவர்.

இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியமைப்பு, வசனம் அனைத்தையும் நீண்டநேரம் யோசித்து படைத்தார்.

அதன் காரணமாகவே படம் வெற்றியடைந்துள்ளது. இயக்குனர் ஹரியுடன் எனக்கு இது 4வது படம்.

ஆனால் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

நல்ல கதையம்சம் அமைந்தால் சிங்கம்–3 பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி?

sruthi

நடிகை ஸ்ருதி, நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் தொலைக்காட்சி நாடகம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கன்னட பட இயக்குனர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினார். 3 வருடத்துக்கு முன் பிரிந்து விவாகரத்து பெற்றார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியதும், அதில் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.

சில ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திரசேகருடன் பழகி வந்தார். அவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஊடகங்களில் நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவரை கர்நாடக மருத்துமனையில் கவலைகிடமான நிலையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்ருதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் இதற்கு காரணம் என்று யூகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ருதி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் சாப்பிட்ட உணவு சரிமானமின்மையால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ஸ்ருதி ஊடகங்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில்,

எனக்கு நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மை என்றாலும் தற்கொலை செய்யும் அளவு கோழை நான் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் போட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை!!

srilanka

இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் போட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் போட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

அந்த போட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து போட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது.

கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும்.

சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களுக்குள் செல்ல தடை..!

sanjiwaஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சஞ்ஜீவ பண்டார கோட்டை நீதவானால் எதிர்வரும் காலங்களில் எந்த வித ஆர்ப்பாட்டங்களுக்கும் கலந்து கொள்ளக்கூடாது என விதிக்கப்பட்ட சட்டத்தை மீறியதாலேயே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதனாலேயே கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திற்குள்ளும் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.