
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே கூறும் போது,
ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. உள்ளூர் போட்டியில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. திறமையாக விளையாடினால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். உடல் தகுதி இல்லாத ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது தங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள் என்று கூறினார்.
இந்திய அணிக்கு ரோகித்சர்மா, ஷிகார்தவான் தற்போது தொடக்க வீரர்களாக உள்ளனர். இருவரும் நன்றாக ஆடுவதால் ஷேவாக், காம்பீர் ஆகியோர் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில், ஐ போனில் மின்சாரம் தாக்கி,இளம் பெண் பலியானார். சீனாவின்,உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா, 23. இவர்,சீனாவின் விமான சேவை நிறுவனத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து,பின் ராஜினாமா செய்தவர்.



சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.