பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!

BA00776

20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் ஓரிரு விண்கற்கள் பூமியை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்கல் பூமியை தாக்கியது. 18 மீட்டர் அகலமும், 11 ஆயிரம் டன் எடையுடன் கூடிய அக்கல் ரஷியாவை நோக்கி வந்தது.

விஞ்ஞானிகளின் முயற்சியில் அந்த இராட்சத விண்கல் 460 டன்னாக உடைக்கப்பட்டு சிதறல்களாக பூமியில் விழுந்தது. அதன் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இக்கல் செலியாபின்ஸக் என அழைக்கப்படுகிறது. அது போன்ற 20 மிகப்பெரிய இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருகின்றன.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் கம்புலுடன்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லோஸ் டி லா புயன்டா மஸ்கோஸ் தலைமையிலான குழுவினர் இதை கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.

கடந்த 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்பாறை ஒன்று சூரிய குடும்பத்துக்குள் வந்தது. சூரியன் அருகே வந்த போது கடும் வெப்பம் மற்றும் புவிஈர்ப்பு விசையால் அந்த இராட்சத விண்பாறை பல துண்டுகளாக நொறுங்கியது.

தற்போது அவற்றில் சில விண்வெளியில் மிதிக்கின்றன. அவற்றை கடந்த 2011ம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதற்கு 2011 EO 40 என பெயரிட்டனர். அவ்வாறு மிதக்கும் 20 இராட்சத விண்கற்கள்தான் பூமியை தாக்கும் நிலையில் அச்சுறுத்தி வருகின்றதாம்.

ஓடும் ரயிலில் சாகசம் செய்ய முயன்ற சிறுவன் பரிதாபமாக பலி!!

the_magic_nostalgia_of_the_epic_train_ride

மும்பையில் ஓடும் ரயிலில் பாதுகாப்பாக நிற்காமல் சாகசம் செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவன் நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா என்ற சிறுவனும் பயணம் செய்துக்கொண்டிருந்தான்.

14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.

மோஷினின் உயிரிழப்பு குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் அளித்த போது அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோஷின் ரயிலில் சாகசம் செய்த போது விழுந்து இறந்ததை நம்ப முடியவில்லை. அமைதியான, பொறுப்பு மிக்க மகனாக தான் மோஷின் இருந்தான் என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ரயிலில் சாகசம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சிததற்காக வழக்கு தொடரப்படும்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் எந்த விதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்களால் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கபடுவதால் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம் எனக் கூறியுள்ளார்.

சீனாவில் வெப்பத்தைத் தணிக்க குழந்தைகளுக்கு தர்பூசணி பழ உடை!!(படங்கள்)

சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறன.
சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெப்பநிலை உயரும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வென்சூ நகரை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாக்க புதுவிதமான ஆடை ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரது எளிமையான கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் குவிந்ததுடன், இணையத்திலும் பிரபலமாகி வருகிறது.

அப்படி என்ன தான் கண்டுபிடித்தார் என்றால் ஒரு தர்பூசணியை எடுத்து அதன் சதை பகுதியை நீக்கினார். பின்னர் தோல் பகுதியில் பெல்ட் கோர்த்து, 2 துளைகள் இட்டு குழந்தைக்கு மாட்டி விட்டார். தர்பூசணியிலேயே தொப்பியும் காலணியும் தயாரித்து அணிவித்தார்.

தர்பூசணி உடையின் குளிர்ச்சியால் சிரித்த தனது குழந்தையை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார், அவ்வளவுதான். இதற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தவுடன், பலரும் குழந்தைகளுக்கு தர்பூசணி ஆடையை அணிவிக்க தொடங்கி விட்டனர்.

4

1 

ஆரம்பத்தை தொடர்ந்து வீரம் : அஜித்தின் அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு!!

ajith

படத்தின் தலைப்பு வைக்கப்படாமலேயே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. சமீபத்தில் இந்த படத்திற்கு ஆரம்பம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் பாடலை வெளியிடவிருக்கின்றனர்.

இப்படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த 1 வருட காலமாக படாதபாடுபட்டனர் படக்குழுவினர். கடைசியில் ஒருவழியாக ஆரம்பம் என தலைப்பிட்டு படத்தை வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சந்தானம், ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி, நாடோடிகள் அபிநயா, இளவரசு, மயில்சாமி, பெரியார்தாசன், தேவதர்ஷினி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

இப்படமும் தலைப்பு அறிவிக்கப்படாமல்தான் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கு வீரம் என பெயர் வைத்துள்ளனர். அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்துள்ள வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்களின் தலைப்பில் உள்ள முதல் எழுத்துக்களான வ, வி ஆகியவற்றின் வரிசையில் தொடர்ந்து வரும் படம்தான் வீரம்.

இந்த படத்திற்காக ஓடும் ரெயிலில் நடக்கும் சண்டைக் காட்சி ஒடிஷாவில் உள்ள ராயகடா என்ற இடத்தில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை வரும் தைப் பொங்கலுக்கு வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. வருகிற ஓகஸ்ட் 15ம் திகதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்படுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் கூடுதல் தகவல்.

தயாரிப்பாளர் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!!

arrahman

தன்னுடைய இசையால் உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகிறார். இசை அமைப்பாளர் விஜய் அண்டனி நான் படத்தைத் தயாரித்ததோடு அந்தப் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

அவரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மதயானைக் கூட்டம் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். அவர்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் தயாரிப்புக் களத்தில் குதிக்கிறார். இதற்காக YM Movies என்ற தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார்.

முதன்முதலாக இந்திப் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடன் இராஸ் நிறுவனம் கைகோர்த்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தினைத் தயாரிப்பதோடு கதை மற்றும் திரைக்கதையையும் ரஹ்மானே எழுதி உள்ளார். இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களின் உதவியுடன் கதையை தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இது காதல், கலை, தன்னைக் கண்டறிதல் ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்குமாம்.

3 மாதங்களாக 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி..!!

chile

அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான் காஸ்டன்க்வேய். அவருடைய மனைவி ஹான்னா. அவர்களுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும் ரஹப் என்ற குழந்தையும் உள்ளது.

மத நம்பிக்கை மிக்க அந்த குடும்பத்திற்கு அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்றுக் கொள்வது, கருக்கலைப்பை ஏற்றுக்கொள்வது போன்றவை பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி அங்கிருந்து 3300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாட்டிக்கு செல்ல தீர்மானித்தனர்.

அதன்படி அவர்கள் கடந்த மே மாதம் சன்டீகோவில் இருந்து சிறிய படகில் கிரிபாட்டிக்கு புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்ட நேரத்தில் புயல் அடித்து அவர்களின் படகு படாதபாடுபட்டது.

படகை மேலும் செலுத்த முடியாமல் அவர்கள் மாதக் கணக்கில் கடலிலேயே தவித்தனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அந்த வழியாக சென்ற விமானம் ஒன்று அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இறக்கிவிட்டது. அவர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு விமானச் சீட்டு எடுத்துக் கொடுத்துள்ளது.

 

பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு!!

facebook_new_look

பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பேஸ்புக் பக்கத்தின் புதிய வடிவமைப் தரக்கூடிய இவ்வசதியினை கூகுள் குரோம் உலாவிகளில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென பிரத்தியேக நீட்சி ஒன்று காணப்படுகின்றது. அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் News Feed வசதி கிடைத்துவிடும்.

தரவிறக்க இங்கே அழுத்துக..

ஆஸஷ் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி : அவுஸ்திரேலியா பரிதாபத் தோல்வி!!

Ashesseries

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியகள் மோதும் ஆஸஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதையடுத்து 32 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கண்டாலும், இயன்பெல், டிம் பிரிஸ்னன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை எடுத்திருந்தது. இயன்பெல் 105 ஓட்டங்களுடனும், டிம் பிரிஸ்னன் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. இயன்பெல், டிம் பிரிஸ்னன் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்கள். நிலைத்து நின்று ஆடிய இயன்பெல், ரையான் ஹாரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 95.1 ஓவர்களில் 330 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

ஆஸி. அணி தரப்பில் ரையான் ஹாரிஸ் 7 விக்கெட்டுக்களையும், நதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்ஸ், டேவிட் வோனர் ஆகியோர் களம் கண்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 109 ஓட்டங்களை குவித்தது.

ரோஜர் 49 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த உஸ்மான் கவாஜா 21 ஓட்டங்களில் வெளியேறினார்.பின்னர் வோனருடன் இணைந்தார் கிளார்க். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வோனர் 71 ஓட்டங்களிலும், கிளார்க் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததானது.

இறுதியில் அந்த அணி 68.3 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஸ்வர்ட் பிராட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21ம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

 

மசூதிக்குள் தொழுது கொண்டிருந்த 44 பேர் சுட்டுக் கொலை..!

massothi

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர்.

போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

50சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அவ்வப்போது கிருஸ்துவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதேபோல், பழைமைவாதம் பேசும் முஸ்லிம்களையும் அவர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைப்பு..!

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காலி கடற்படை முகாமிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

88 பேரே கைது செய்யப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த போதும், அவர்களது தொகை 111ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இவர்கள் ருவன்புத்தா என்ற படகில் கடந்த 7ஆம் திகதி பேருவளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸார் மூலமாக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைவா பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார் : விஜய் நம்பிக்கை!!

vijay

சேலத்தில் தலைவா’திரைப்படத்தின் திருட்டு சிடி தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும் காவல் துறையையும் விஜய் பாராட்டியதோடு தமிழக முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

திருட்டு சி.டி. தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ, விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

நமது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். என்.எல்.சி. பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லப்டப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்தவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்களும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதலமைச்சர் தலைவா பிரச்சினையிலும் தலையிட்டு விரைவில் தமிழகமெங்கும் தலைவா வெளிவர ஆவன செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

மனிதர்களின் மரணத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு!!

death-clock-logo2

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள் அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது…

கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும் லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன.

இந்த செல் பகுப்பாய்வின் மூலம் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம் மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.

மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம் மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும். எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!!

moon

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும் என சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே சில நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர் பாஸ் லேன்ஸ்டார்ப் இது தொடர்பில் தெரிவித்ததாவது,

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள், ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்துவதற்குரிய சூழல் உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு பலரும் விரும்புகின்றனர்.

இந்தப் பயணத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இளைஞர்களாகவும் இருக்கலாம் முதியவர்களாகவும் இருக்கலாம். பயணம் செய்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து அவர்களிடம் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

எதிர்வரும் 2022ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. இதற்காக 40 விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு எட்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப மாட்டார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் பயண நடைமுறையை வகுத்துள்ளோம்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் அங்கு காய்கறிகளை விளைவிப்பது மருத்துவ சிகிச்சையை அளிப்பது போன்ற பணிகளைக் கவனிப்பார்கள் எனவும் லேன்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார்.

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் உயர்வு..!

vavuniyaசீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சீன சுற்றலாப் பயணிகளின் வருகை 72 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 9622 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 16582 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுச் செல்வதாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிறுவனத்தின் துணைப் பணிப்பாளர் யுவராஜ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் சீனர்கள் பிரவேசித்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனர்கள் இலங்கையை ஆக்கிரமித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

குறிப்பாக நாட்டின் தொழிற்சந்தையில் சீனர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் உள்நாட்டுப் பிரஜைகள் மேலும் வேலையில்லாப் பிரச்சினையால் திண்டாட நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய தீவு!!

iland

ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்த நதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாண எல்லையை ஒட்டி அமுர் நதி ஓடுகிறது.

இந்த நதியின் நடுவே அமைந்துள்ள ஹிஜியாசி என்ற தீவுக்கு கடந்த 2008ம் ஆண்டிலிருந்து சீனாவும் ரஷ்யாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. 335 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள இந்த தீவை இருநாடுகளும் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் சீனாவில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அமுர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஹிஜியாசி தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மேலும் அங்கிருந்த நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்!!

Shikhar-Dhawanஇந்தியா- தென் ஆப்ரிக்க A அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரர்கள் ஷிகார் தவான், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் 14 ஓவர்களில் 100 ஓட்டங்களை தொட்டனர்.

37 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்த முரளி விஜய் ஹென்ட்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் புஜாராவும், ஷிகார் தவானும் தென்ஆபிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 86 பந்துகளில் சதம் கடந்த தவான், அதே வேகத்தில் இரட்டைச் சதத்தையும் கடந்தார். 132 பந்துகளில் 24 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த சாதனையை அவர் எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச அளவில் A அணியில் அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஷிகார் தவான் பெற்றார்.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு லண்டனில் நடந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் உபுல் தரங்கா 173 ஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இப்போது தவான் முறியடித்துள்ளார்.