அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாயி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒயிட் ராக் கடற்பகுதியாகும். நேற்று இந்தப் பகுதியில் கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவரை சுறாமீன் தாக்கியதில் அவரது வலது கையை இழந்துள்ளார். விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு அவசரகால உதவியாளர்கள் வந்தபோது அவர் மயக்க நிலையை அடைந்திருந்தார்.
கடலிலிருந்து அவரை மீட்ட உதவியாளர்கள் அவரை மாயியில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு புறமும் ஒரு மைல் தூரத்திற்கு கடற்கரை மூடப்பட்டுள்ளது. இன்று அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்த பின்னரே கடற்கரையை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள்.
இதே இடத்தில் கடந்த பிப்ரவரியில் ஒரே நாளில் இரண்டு பேரும், ஜூலை மாத இறுதியில் ஒருவரும் ஆக இதுவரை நான்கு பேர் சுறாமீனின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சமீப காலங்களில் சுறா மீன்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆயினும், புளோரிடா பல்கலைக்கழக கணக்கீடுகளின்படி, இதனால் ஏற்படும் இறப்பு சதவிகிதம் இரண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.





எதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகள் பகைமையை மறந்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம்ட நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



அமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி.
வவுனியா மாவட்டத்தில் 2013 சிறுபோக நெற்செய்கை அறுவடையானது 40% முடிவடைந்துள்ள நிலையில், சற்று தாமதமாக பயிர் ஸ்தாபிக்கப்பட்ட பாவற்குளம் பகுதியில் நெல் வயல்களில் கபில நிற தத்தியின் தாக்கம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றம் கல்விக்கான நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.