
ஒரு படத்துக்கு 40, 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்து வாங்கும் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் நடிகைகள் பெற்றுவிடுகிறார்கள்.
படமே இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகள் இப்படிச் செய்வதில்லை மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் தான் ஒற்றைப் பாட்டுக்கு ஆடுகிறார்கள். காரணம், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்களாம்.
சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆடினார் நயன்தாரா. லம்ப்பாக ஒரு தொகை கிடைத்ததும் சிவாஜி யில் ரஜினி, எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் – சிவகார்த்திகேயன் என அப்படியே தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
அஞ்சலியும் சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டார். இதைப் பார்த்த மற்ற இயக்குநர்களும் ஒரு பாட்டுக்கு ஆட அஞ்சலியிடம் கேட்டனர்.
ஆனால், பெரிய நடிகர், பெரிய தொகை என்றால் தான் நான் ஆடுவேன் எனச் சொல்லி வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார்.
இப்படித்தான் பிரியாமணியும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கஹானி இந்திப் படத்தின் ரீமேக்கான அனாமிகா படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்ற தகவல் பரவியது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.
தற்போது தமிழில் கைவசம் எந்த படமுமே இல்லாததால், தமிழிலும் ஒரு பாட்டுக்கு ஆட ரெடி என்று இயக்குநர்களுக்கு ரகசிய தூது விட்டிருக்கிறாராம் பிரியாமணி.
அதேநேரம் இந்த நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டையும் சரியவிடாமல் கவனத்தோடு இருக்கிறார்கள். அதை வைத்துத்தானே ஒரு பாட்டுக்கு ஆட லம்ப்பாக வாங்க முடியும்.


பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம் மூலம் அறிமுகமானவர் விமல். அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் இவர் நடித்த களவாணி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் அவுஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.






இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப் & ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான். ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன. இதை மனதில் வைத்து சினிமா நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.அந்த விழாவில் 4 மொழிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் 50 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



