தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக எந்த நபராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

தமிழ் சினிமா மீதான ஆசையால் சுவிஸ் நாட்டில் இருந்து படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். வந்த வேகத்திலேயே தொடர்ச்சியாக 6 படங்களுக்கு பூஜை போட்டு அதிரடி காட்டினார்.
படங்களில் கதாநாயகிகள் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் கதாநாயகர்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம்.
ஊர்த் தடையை மீறி கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த்தற்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவரை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
தர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். இதனால் அவரது உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது.

வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.






தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா.