வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது.
பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.
“ஊரைக் காக்க உண்டான சங்கம்…
உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை…இது இல்லை….
நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை”…..
இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.
யூடியூப்பில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
வவுனியாவிலுள்ள 3 பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, பூவரசன்குளம் மகாவித்தியாலயம், வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டன.
இந்நிகழ்வுகளில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.முகைதீன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாமையின் காரணமாக நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த கூட்டம் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அக் கட்சியின் விசேட கூட்டம் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெறுகிறது.
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனது தீவிரமான முயற்சியின் விளைவாக வடக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
சிடிலின் அபாரமான பந்து வீச்சால் தடுமாறிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இறுதியாக இங்கிலாந்து 215 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இங்கிலாந்து சார்பில் சற்று நிதானமாக ஆடிய டிராட், அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்தார்.
சிறப்பாக பந்து வீசிய ஆஸி. வீரர் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி. வீரர்களை பதம் பார்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், அந்த அணியை 280 ஓட்டங்களுக்குள் மடக்கினர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
65 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 375 ஓட்டங்களை குவித்தது. பெல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை விட 310 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
இதனால் 311 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது.
இந்த போட்டியின் நேற்றைய 5-வது மற்றும் இறுதியுமான ஆட்டம் தொடங்கிய போது, 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க அவுஸ்ரேலியா வெற்றி பெற வேண்டுமாயின் 137 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து வந்த ஸ்டார்க் 1 ஓட்டத்துடனும், சிடில் 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
அப்போது, அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களை எடுத்திருந்தது.
10-வது விக்கெட்டுக்கு ஹடின் உடன் பேட்டின்சன் ஜோடி சேர்ந்தார். அப்போது அவுஸ்திரேலியா அணிக்கு 80 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஹடின் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அத்துடன் அணியை வெற்றிநோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பேட்டின்சன் உறுதுணையாக இருந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு 20 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
பின்னர் போட்டி தொடங்கிய போது, ஹடின் 71 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி வரை நின்ற அவரால் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.
இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் அன்டர்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்தின் ஆன்டர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
சோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ள இன்னொரு மீன்பிடி கப்பலுக்கு இவர்கள் கடைசிநேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.
கப்பலில் இருந்துள்ள 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று கூறிய ஜோன் ஸ்டீட், காணாமல்போன 4 பேருமே இலங்கையர்கள் என்றும் கூறினார்.
எல்பேடோ என்ற இந்தக் கப்பல் மூழ்கியபோது அதிலிருந்து வெளிப்பட்ட அவசர உதவி உயிர்காப்பு படகுகள் பல நீண்டதூரம் கடந்து கரையொதுங்கியுள்ளதை ஐரோப்பிய கடற்படையினர் உறுதிசெய்துள்ளனர்.
அந்தப் படகுகள் மூலம் கடற்கொள்ளையர்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மூழ்கிய எல்படோ வர்த்தகக் கப்பலில் இருந்து 11 பணியாளர்கள் நாய்ஹம்-3 என்ற மீன்பிடிக் கப்பலுக்கு மாற்றப்பட்டநிலையில், ஏற்கனவே 29 பேருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த நாய்ஹம்-3 கப்பலும் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும், பணையம் வைக்கப்பட்டுள்ள சில கப்பல் பணியாளர்களை குடும்பத்தினருடன் பேச கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாகவும் கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் மேலும் கூறினார்.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அந்த சிரிப்பு மனிதரின் ஓவியம் நன்கு அறிமுகமானதாகும். மற்றவர்களின் தகவல், கருத்துகளை வேடிக்கையாக மறுதலிக்கும் சந்தர்ப்பங்களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறியீடாக பயன்படுத்தப்படுவதுண்டு.
ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்பனை ஓவியமல்ல. உண்மையாக வாழும் ஒருவரின் முகத்தேற்றமே அது. உலகின் முன்னணி கூடைப்பந்தாட்ட வீரர் முகத்தோற்றத்தில் வரையப்பட்டதுதான் அந்த ஓவியம்.
யோ மிங் (Yao Ming) எனும் இவ்வீரர் சீனாவைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 32 வயது. இதற்கிடையில் பெரும் பணமும் புகழும் சம்பாதிதது விட்டு உபாதைகள் காரணமாக போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பொதுவாக சீனர்கள் குள்ளமானவர்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்குலம் (2.29 மீற்றர்).
யோமிங்கின் தாய் தந்தை இருவரும் தொழிற்சார் கூடைப்பந்தாட்ட போட்டியாளர்கள். தந்தை யோ ஸியுவானின் உயரம் 6 அடி 7 அங்குலம். தூய் பெங் பெங்டியின் உயரம் 6 அடி 3 அங்குலம். இத்தம்பதியின் ஒரே பிள்ளையான யோ மிங் 9 வயதில் கூடைப்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7 அடி 3 அங்குலம் வரை வளர்வார் என எதிர்வுகூறினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தார் யோ மிங்.
fb-man3அவரின் உயரம்போலவே அவரின் கூடைப்பந்தாட்ட ஆற்றலும் உயர்ந்தது. சீனாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்டிகளில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்குபற்றினார்.
காலில் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். அவர் ஓய்வு பெறும்போது என்.பி.ஏ. போட்டிகளில் விளையாடும் வீரர்களில் மிக உயரமானவராக யோ மிங் விளங்கினார்.
சீனாவின் மிகப் பிரபலமான விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான யோ மிங் 2009 வரையான 6 வருடகாலத்தில் 5 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றவர். பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அனுசரணையை அவர் கொண்டிருக்கிறார்.
fb-man2இதெல்லாம் இருக்கட்டும் யோ மிங் எவ்வாறு மேற்படி சிரிப்பு மனிதராக சமூக வலைத்தளங்களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழுகிறதா?
2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்குபற்றினார். அப்போது ரொன் அட்டெஸ்ட் பேசியதை கேட்டு, அடக்க முடியாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்கிய வீடியோ இணையத்தளங்களிலும் வெளியானது.
2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்தளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்வேறு வேடிக்கை ஓவியங்களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவியமும் ஒன்றாகும். மேற்படி செய்தியாளர் மாநாட்டு வீடியோவில் யோ மிங் சிரித்த காட்சியொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்படையாக வைத்தே அந்த ஓவியத்தை வரைந்ததாக டவுடன்லோ ஒப்புக்கொண்டார்.
அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும். அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக எந்த நபராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது.
தமிழ் சினிமா மீதான ஆசையால் சுவிஸ் நாட்டில் இருந்து படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். வந்த வேகத்திலேயே தொடர்ச்சியாக 6 படங்களுக்கு பூஜை போட்டு அதிரடி காட்டினார்.
சினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதலில் ஒரு படம் எடுப்பார்கள். அது ரிலீஸானதும், ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவார்கள். அப்படிச் செய்யாமல், ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு பூஜை போட்டதைப் பார்த்ததும் கோடம்பாக்கமே கொஞ்சம் மிரண்டுதான் போனது.
அவருக்கு நெருக்கமான சிலர், “பொறுமையா இருங்க. ஒவ்வொரு படமா பண்ணலாம்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அவரோ, “நல்ல கதைகள் வரும்போதே நாம ஓ.கே. பண்ணிடணும். கதைகளை மிஸ் பண்ணிட்டு அப்புறமா ஃபீல் பண்றது வேஸ்ட்”னு சொல்லி, தயாரிப்புக்கு புது இலக்கணமே உருவாக்கியிருக்கிறார்.
அப்படியாப்பட்ட மனிதருக்கு வேந்தர் மூவீஸ் வடிவில் வந்திருக்கிறது சோதனை. அவருடைய தயாரிப்பில் உருவான “நளனும் நந்தினியும்”, “சுட்ட கதை” ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸிற்குத் தயார்நிலையில் உள்ளன.
இரண்டு படங்களையும் வாங்கி வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்த வேந்தர் மூவீஸ் நிறுவனம், இதுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் ரவீந்தரின் வேதனைக்குக் காரணம்.
சென்ற மாதம் தன்னுடைய சொந்தத் தயாரிப்பான “தில்லுமுல்லு”
படவேலைகளில் பிஸியாக இருந்த வேந்தர் மூவீஸ், தற்போது “தலைவா” படத்தை வாங்கியிருக்கிறது.
“தலைவா” ஓகஸ்ட்டில் ரிலீஸ் என்பதால், அது தொடர்பான வேலைகளில் பரபரப்பாக இருக்கின்றனர். இதனால் ரவீந்தரின் படம் குறித்து வாய்திறக்கவே இல்லையாம்.
படம் தயாரான சூட்டோடு சூடாக ரிலீஸ் செய்தால்தான் ஓரளவிற்கு ஓடும். இந்த இரண்டு படங்களுமே ரிலீஸிற்குத் தாமதம் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்.
ரவீந்தர் சந்திரசேகர் தனது ஃபேஸ்புக் இணையத்தில் கூட “ஏண்டா படம் எடுக்க வந்தோம்.. ” என்று புலம்பி தள்ளி இருக்கிறார்.
கட்டிடங்களில் செயற்கை நீரூற்று இருப்பதை பார்த்திருக்க முடியும்; ஆனால், சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் செயற்கையாக கடற்கரையே அமைக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையம் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக இருந்தது. தற்போது துபாயை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனாவில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நியூ செஞ்சரி குளோபல் மையம் என்ற இந்த கட்டிட வளாகத்தில் 1.9 கோடி சதுர அடி பரப்பளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
முழுவதும் எஃகு கம்பிகள், கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் கடைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளன. சூரிய அஸ்தமன வீடியோ காட்சியை காணும் வகையில் மிகப்பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட கட்டிடத்தின் நடுவே மிகப்பெரிய செயற்கை கடற்கரையும், கடற்கரை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
படங்களில் கதாநாயகிகள் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் கதாநாயகர்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம்.
படத்தை பார்க்கும் இரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது.
அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான்.
கேரவனில் கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம்.
என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படலாமா? என்கிறது அவரை அறிந்த நண்பர்கள் குழாம்.
ஊர்த் தடையை மீறி கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த்தற்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவரை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தானில், தேரா காஜி கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர்,ஊராருக்குத் தெரியாமல் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி வந்துள்ளார்.
இது ஒருநாள் ஊராருக்கு தெரிய வந்ததால், உடனடியாக பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. ஊர் விதிமுறைகளை மீறி கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக, இரு குழந்தைகளுக்கு தாய் என்ற இரக்கம் கூட காட்டாமல், அவரை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டனர் பஞ்சாயத்தார்.
அப்பெண்ணின் மாமா மற்றும் உறவினர்களாலேயே அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் இது சம்பந்தமாக அவரது உறவினர்கள் இருவர் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியின் மூலம் இக்கொடூர தண்டனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்தார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். இதனால் அவரது உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
முதலில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை நிபுணர்களான டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார். ரவிக்குமார் ஆகிய 3 பேர் அவரது உடலை பரிசோதனை செய்தனர்.
பின்னர் சென்னை தனியார் கல்லூரி தடயவியல் துறை நிபுணர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகிய 2 பேர் இளவரசன் உடலை ஆய்வு செய்தனர்.
நேற்று டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பணியாற்றும் தடயவியல் துறை மருத்துவம் மற்றும் விஷ முறிவு சிகிச்சை பிரிவு துறையின் தலைமை பேராசிரியர் டாக்டர் டி.என்.பரத்வாஜ், கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் சுதீர்குமார் குப்தா , டாக்டர் மில்லோ டாபின் ஆகியோர் நேற்று மாலை இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது இளவரசனின் பெற்றோர் இளங்கோ–கிருஷ்ணவேணி ,ஊர் கவுண்டர் சின்னசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நந்தன் உள்ளிட்ட 5பேர் மட்டும் உடன் இருந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் மாலை 5–30 மணிக்கு இளவரசன் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இளவரசன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இளவரசன் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
உறவினர்கள், நண்பர்கள் ,நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை இளவரசனின் உடல் அடக்கம் நடக்கிறது. இதற்காக நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.
இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டு சிமிண்டால் கல்லறை வடிவில் கட்டப்பட்டு உள்ளது.
இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதை யொட்டி நத்தம் காலனியில் எஸ்.பிக்கள் அஸ்ரா கார்க் (தர்மபுரி), சக்திவேல் ( கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் பொலிசார் சோதனைச் சாவடிகள் அமைத்து உள்ளனர். தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது.
இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ஓட்டங்களை மட்டுமேபெற்றது.
முதல் இன்னிங்ஸில் 65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 133 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இயான் பெல் 95, ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில் 4-வது நாளான நேற்று (சனிக்கிழமை) தொடர்ந்து ஆடிய அந்த அணியில், இயான் பெல் 237 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் பெல் அடித்த 18-வது சதமாகும்.
ஸ்டூவர்ட் பிராட் 65 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இயான் பெல்லும் (109) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிரீம் ஸ்வான் 9 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் 375 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது.
அவுஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்பிறகு 311 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணிக்கு வாட்சன்-கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.1 ஓவர்களில் 84 ஓட்டங்களை சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.
வாட்சன் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து எட் கோவன் களம்புகுந்தார். மறுமுனையில் கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
மறுமுனையில் 43 பந்துகளைச் சந்தித்த கோவன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 124 ஓட்டங்களை எட்டியபோது கிறிஸ் ரோஜர்ஸ் 52 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதன்பிறகு வந்த தலைவர் கிளார்க் 23 ஓட்டங்களிலும், ஸ்மித் 17 ஓட்டங்களிலும், பில் ஹியூஸ் ஓட்டங்கள் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதன்படி 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை எடுத்துள்ளது. பிராட் ஹாடின் (11), ஆஷ்டன் அகர் (1) களத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் ஆஸி. அணி வெற்றிபெற வேண்டுமாயின் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க இன்னும் 137 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தை தொடரவுள்ளது.
கொலிவுட் படத்தில் நடிக்க உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான ‘நேதன் ஜோன்ஸ்’ சென்னை வந்துள்ளார்.
பூலோகம் பட நாயகன் ஜெயம் ரவியுடன் குத்து சண்டை போட வந்த அவரை படத்தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் வரவேற்றுள்ளார்.
இப்படத்தில் நேதன் ஸ்டீவென் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் இந்தியாவில் எடுக்கப்படும் ‘பூலோகம்’ படத்தில் நாயகன் ஜெயம் ரவியுடன் மோதும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அவருடன் ‘லார்நெல் ச்டோக்கால்’ என்ற ஹாலிவுட் முதல் தர சண்டை இயக்குனர் தன் குழுவினருடன் வந்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
மிகுந்த சிரமத்துக்கிடையே அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குனர் கல்யாண் ஆகியோருடன் ஒருங்கிணைத்து பணியாற்றியுள்ளார் ஹாலிவுட் தமிழர் ஜாக் ராஜசேகர்.
ஒரு மாதம் வரை நடக்க உள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஏராளமான பொருள் செலவில் பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
திரை உலகில் இந்த படப்பிடிப்பு ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் படக்குழு கூறுகிறது.
வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் ‘ஜெயம்’ ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர் நேதன் பிரீன்டன் ஜோன்ஸ் சென்னை வந்துள்ளார்.
இவர் ‘டிராய்’, ஜாக்கிசானுடன் ‘போலீஸ் ஸ்டோரி 4’, டோனி ஜாவுடன் ‘தூம் யூம் கோங்’, ஜெட்லியுடன் ‘பியர்லெஸ்’ ஆகிய படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.
‘பூலோகம்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.
மேலும், 1985-87களில் வழிப்பறிகளில் ஈடுபட்ட நேதன் ஜோன்ஸ் 7 வருடங்களுக்கு மேலாக கடுங்காவல் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.