நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்..

simbu

நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சாமியார்கோலத்தில் ஊர் சுற்றுகிறார். இமயமலைக்குப் போகிறார். அதேசமயம் நடிகை ஹன்சிகாவையும் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் சிம்பு. அதிலிருந்து சில பகுதிகள்…

யாருடனும் காதல் இல்லை..
எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.

ஹன்சிகாவை விமான நிலையம் வரை…
ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நான் வழியனுப்புவதாக சொல்வது கேட்பதற்கு காமெடியாக இருக்கிறது.

யார் வந்தாலும் ஏற்பேன்..
ஹன்சிகா மட்டுமல்ல எந்த பெண்ணாக இருந்தாலும் சரி என்னுள் இருக்கும் ஆத்மா சரி என்று சொன்னால் அவரது காதலை ஏற்றுக்கொள்வேன்.

மண்டை சொல்வதைக் கேட்பதில்லை..
சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும் மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன்.

திருமணம் எப்போது..
எனது திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை.

சாமியார் ஆனால் ஆகட்டுமே..
ஆன்மிகத்துக்கு போனால் சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.

வாலு எப்போது ?
வாலு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார் சிம்பு.

 

 

சிவாவுக்காக கெட்டப்பை மாற்றிய அஜித்

கொலிவுட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் தல அஜித்.
சாதாரணமாக கதாநாயகர்கள் வயதானாலும் தலைக்கு டை அடித்து கருப்பு முடியுடன் தான் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்களும் அதைத் தான் விரும்புகிறார்கள். ஆனால் ஹாலிவுட் கதாநாயகர்கள் வெள்ளை முடியுடன் நடித்து பெயர் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அஜித் மங்காத்தா படத்திலும், தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும் நரை முடியுடனேயே வருகிறார்.

மங்காத்தா படத்தில் அஜித்தின் நரை முடி கெட்டப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அது பிரபலமுமானது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜமுந்திரியில் உள்ள பிரபல திரையரங்கில் நடந்தது.

இதில் அஜித், தமன்னா, சந்தானம் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது அஜித் முடிக்கு கருப்பு டை அடித்து வேட்டி சட்டை அணிந்து மாஸ் கெட்டப்பில் இருந்ததாகவும், தமன்னா சேலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith-new-look

உலகின் மிக வயதானவர் மரணம்

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 116.

1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.

தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

2012-ம் ஆண்டு இவரை உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் கழித்த கிமுரா இன்று மரணமடைந்தார்.

அவருக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

oldestman

சருமத்தை பொலிவாக்க எலுமிச்சை..

How-to-make-lemon-face-mask

எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் சருமம் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது.

எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

குறிப்பாக எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால் அழகாக சருமத்தை பெறலாம்.

எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

 

வவுனியாவில் 13 வயது சிறுமி அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரம்..

child abuse

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி அவருடைய சகோதரியின் கணவரால் பல நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

எனினும், குறித்த சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் நேற்று முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வங்கியில் தூங்கியதால் விளையாடிய விதி! கோடிக்கணக்கில் பணம் இழப்பு..

sleep

ஜேர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பணியின்போது சோர்வடைந்து அப்படியே கம்ப்யூட்டர் கீ போர்டின் மீது கைகளை வைத்துப் படுத்துத் தூங்கி விட்டார்.ஆனால் அதன் விளைவு தவறான நபருக்கு பெருமளவிலான பணத்தை மாற்றி இப்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

ஒரு குட்டித் தூக்கம் இப்போது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கிலும் சிக்கி விட்டார். பணியின்போது அசட்டையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த ஊழியரைத்தான் தற்போது ஜேர்மனியில் அனைவரும் உதாரணமாக கூறிக் கொண்டிருக்கின்றனராம்.

சற்றே கண்ணயர்ந்தார்
ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பணியில் இருந்த போது சற்று கண்ணயர்ந்து விட்டார். ஓய்வு பெற்ற ஊழியர் சம்பந்தமான கணக்குகளை வரவு வைக்கும் போது உறங்க ஆரம்பித்த ஊழியர் தலையை கம்யூட்டர் கீபோர்டில் வைத்து விட்டார். இதனால் இரண்டு என்ற எண் 11 முறை பதிவாகிவிட்டது.

அனுப்ப வேண்டியது 62.40 யூரோ தான்
அந்த ஊழியர் ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குக்கு 62.40 யூரோ பணத்தை ஒன்லைனில் மாற்ற வேண்டும்.தூங்கியதால் வந்த வினை ஆனால் பணியின்போது சோர்வு காரணமாக அவர் அப்படியே கீபோர்டிலேயே படுத்துத் தூங்கி விட்டார். அங்குதான் அவருக்கு விதி விளையாடி விட்டது.

293 மில்லியன் யூரோ
இதனால், அந்த வாடிக்கையாளரின் கணக்கில் 62.40 யூரோக்கள் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக 222,222,222,22 யூரோக்களாக பதிவானது. அவரின் மேலதிகாரியும் இந்தத் தவறைக் கவனிக்காமல் கையெழுத்திட்டு விட்டார். பின்னர் தவறு வேறு துறையினரால் கவனிக்கப்பட்டதால் சரி செய்யப்பட்டது.

போடுங்கப்பா வழக்கை
தற்போது இந்த ஊழியர் மீது வங்கி சார்பில் தொழிலாளர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர். அதேபோல வேலையை விட்டும் தூக்கி விட்டனர். தூங்காதே தம்பி தூங்காதே என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்..

 

ராஜினாமாவை திரும்பப் பெற்றார் அத்வானி

பாரதிய ஜனதா கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியின் தேர்தல் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து தான் வகித்த அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறியிருந்த கட்சியின் நிறுனர்களில் ஒருவரான எல் கே அத்வானி, 24 மணி நேரத்துக்குள் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார்.

கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோரிக்கையின்படி அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக எல் கே அத்வானியின் வீட்டில் அவரின்றி நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

“அத்வானி அவர்கள் கட்சி தொடர்பாக எழுப்பிய கரிசனைகள் கவனிக்கப்படும் என்று நான் கட்சியின் சார்பாக தெரிவித்தேன். இது குறித்து அவரோடு இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினேன். இன்று மதியம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேசிய நலனை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து கட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக் கொண்டார். மோகன் பகவத்தின் ஆலோசனையை ஏற்க அத்வானி முடிவு செய்துள்ளார்” என்றார் ராஜ்நாத் சிங்.

கட்சியின் தலைவர்கள் தமது சுய விருப்புக்களின் அடிப்படையில் செயல்படுவதாகவும் கட்சி போகும் பாதை தனக்கு ஏற்புடையாதாக இல்லை என்றும் எல் கே அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் குஜராத் முதல்வருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் விரும்பாத்தாலேயே பதவி விலக முன்வந்ததாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவத்தவர்களில் ஒருவரான அத்வானி, அக் கட்சி தலைமையிலான கட்சி, நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதன் செல்வாக்கு உயர முக்கிய காரண கர்த்தா ஆவார்.

தற்போது 85 வயதான அத்வானி பிரதமராக வேண்டும் என்ற ஆசையோடிருப்பதாக கூறப்படுகிறது. மோடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அடுத்த தேர்தலில் அத்வானி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படக் கூடிய வாய்ப்பை பெருமளவு மட்டுப்படுத்திவிட்டது.

ஜில்லாவுக்கு16 கோடி இந்திய ரூபாய் வாங்கிய விஜய்

vijay-jilla

நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் 16 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான கேரளாவிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தெரிவித்துள்ளார். விஜய் நடித்த காவலன் படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் நடித்த படங்களும் ஹிட் தான்.

தொடர் ஹிட்ஸ்

காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

வருகிறார் தலைவா

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதில் விஜய் பாடியுள்ள பாடல் சூப்பர் ஹிட்டாகப் போகிறது என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

ஜில்லாவுக்கு ரூ.16 கோடி

தொடர்ந்து ஹிட் படங்கள்கொடுத்து வரும் விஜய் சம்பளத்தை உயர்த்தி வருகின்றார். இந்நிலையில் நேசன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜில்லா படத்திற்கு ரூ. 16 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.

 

உங்கள் மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்..

 

virus

வங்கி கணக்குகள் மற்றும் கடவுச்சொல்(Password) உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என்று இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Team India (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தான் நுழைந்த கணனிகளில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய கோப்புகளை(File) கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.

பின்னர் இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகோல்(Protocol) எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது.

கணனியில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்(Flash Drive) போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கணனியில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.

இந்த வைரஸ் தன்னை அண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கணனிகளைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கணனியில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் பிரதி செய்கிறது.

அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது. தான் தங்கிய கணனியில் உள்ள EXE , dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

இதன் மூலம் கணனி இணைக்கப்பட்டுள்ள சேவர்கள்(Server) மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன.

இதனால் இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இவற்றைத் தடுக்க CERTIn குழு கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.

** எமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை தரவிறக்கம்(Download)  செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.

** நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.

** டெஸ்க்டொப் (Desktop) கணனிகளில் பயர்வோல் (Firewall) அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத அறிமுகம் இல்லாத போட்களை(Port) செயல் இழக்கச் செய்திட வேண்டும்.

** திருட்டு மென்பொருள் தொகுப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும்.

எனவே எந்தக் காரணத்திற்காகவும் இணையத்திலிருந்து திருட்டு மென்பொருள் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

 

சீரற்ற காலநிலை தொடர்கிறது: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்கில் மணித்தியாலயத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலநிலையானது இன்று (12) மாலைவரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பிரசவத்துக்காக கர்ப்பிணி மனைவியை 40 கி.மீ சுமந்து வந்த கணவர்..

baby

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது கொன்னி மலை வனப் பகுதி. இங்கு அய்யப்பன் என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார். வனப் பகுதியில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து இவர்கள் வாழ்க்கை நடத்தினர்.

கடந்த வாரம் சுதாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து வசதி இல்லை. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கொக்கத்தோடு என்ற இடத்துக்கு வந்தால்தான் ஜீப்பில் பயணம் செய்ய முடியும். எனவே சுதாவை தோளில் சுமந்தபடி கொக்கத்தோடு செல்ல அய்யப்பன் முடிவு செய்தார். கனமழையில் நனைந்த படி சுதாவை தூக்கிக் கொண்டு மலைப்பாதை வழியாக அய்யப்பன் இறங்கினார் .
கொக்கத்தோடு வந்ததும் இருவரும் ஜீப்பில் ஏறி பத்தனம் திட்டா மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் சதைபிடிப்பு மற்றும் அதிகளவில் நீர் சேர்ந்திருந்ததை கண்டுபிடித்தனர். சுதாவை உடனடியாக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அங்கு சுதாவை மகப்பேறு மருத்துவர் சுதாவை பரிசோதித்தார். வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருந்தது.

சுதாவுக்கு பிரசவ வலி மருந்து கொடுத்து, இறந்த குழந்தையை கடந்த வாரம் புதன் கிழமை வெளியேற்றினர். சுதா தீவிர சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருகிறார். இவர்களது சோகத்தை பத்திரிக்கையில் படித்தவர்கள் அய்யப்பன் தம்பதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

 

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் படகை காணவில்லை!

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.

இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர்.

இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது.

தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர் . கைல்ஸ் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். சார்லஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 60 ஓடங்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து வந்த பிராவோ 35 ஓட்டங்களையும்,போலர்ட் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.இறுதிவரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சமி நான்கு ஆறு ஓட்டங்கள் உட்பட 35 பந்துகளில் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

India v West Indies: Group B - ICC Champions Trophy

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களையும், கொஹ்லி 22 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தவான் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது இந்த தொடரில் இவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது 100 ஓட்டங்களாகும்.

இந்திய அணி 39.1 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவு அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இன்றைய போட்டியின் சிறபாட்டகாரராக 5 விக்கெட்டுகளை பெற்ற ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது..

~கேசா~

 

யாழில் சாதித்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர் அணிகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இவ் உடற்பயிற்சி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மானிப்பாய் இந்து கல்லூரி முதலாம் இடத்தினையும் வேம்படி மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

irampai

irampai5

இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர் வரை ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.

அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்ற பின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கையரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலபிட்டிய – மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்று மாலை 4.30 அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ அத தெரணவிடம் தெரிவித்தார்.

மீன்பிடி தொழிலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர்.

அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.