நடிகர் கமலஹாசன் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே?
தேசப்பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தா விட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது.
நான் காந்தியின் ரசிகன். ஆனால் அவரை மகாத்மா என்று அழைத்து தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பது போல் சித்தரிப்பதை விரும்பவில்லை. சராசரி மனிதராக இருந்து சாதித்தவர் காந்தி. சாமியாராக, முனிவராக பார்க்க கூடாது சாதாரண மனிதராக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தேசத்துக்காக பாடுபட்டார். ஹேராம் படத்தை அதற்காகத்தான் எடுத்தேன். நல்ல மனிதராக இருந்து நிறைய சாதித்தவர் அவர்.
விஸ்வரூபம் படப்பிடிப்பை கஷ்டமான லொக்கேஷன்களில் நடத்தி உள்ளீர்களே?
படப்பிடிப்பு லொக்கேஷன்களுக்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முயன்றோம். ஆனால் சங்கடங்கள் இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் ஜலாலா பாத்தின் 4 ஆயிரம் புகைப்படங்களை பார்த்தேன் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
விஸ்வரூபம் 2 படம் பற்றி?
விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முற்பகுதியாகவோ விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை படம் பார்க்கும் போது விஸ்வரூபம் பட உணர்வுகள் இருக்கும்.
இந்தி படம் பண்ணுவீர்களா?
சில கதைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர் தேடுகிறேன்.
சுருதி ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா?
சுருதி ஹாசன் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. நேரம் அமைந்தால் இணைந்து நடிப்போம்.
வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாளர் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
நாளை இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கூட்டத்தின்போது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இத் தேர்தலின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் அவர்களது தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சாத்திகள் அதிபர்கள் கூடாக பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் பரீட்சை அனுமதிப்பத்திரம் இல்லாத மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனடியாக அறியத்தருமாறு பரீட்சாத்திகளிடம் அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்திற்கான உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதப்படுகிறது. இந்நிலையில் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது.
அந்த குழந்தையை கற்பழித்தவரை பொலிசார் கைது செய்ததாக தெரிவித்தனர். இக்கொடூரதிற்கு ஆளான குழந்தையின் உடல்நலம் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக அக்குழந்தையை மீட்டு அழைத்து சென்றுள்ளனர்.
சிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது.
உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் லஞ்சம் பெருத்து வருவதாக அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிம்பாப்வேயில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வேதனைக்குரிய விஷயமாக பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது அங்கு எழுதப்படாத விதி.
பொலிஸாருக்கு அடுத்தபடியாக லஞ்ச ஊழல் மலிந்த துறையாக 68 சதவீத சிம்பாப்வே மக்கள் மருத்துவ துறையை குறிப்பிடுகின்றனர்.
தென்னாபிரிக்காவின் ஹேப் மாகாணத்தின் புறநகர்ப்பகுதி ஒன்றில் காணப்பட்ட வேற்றுக்கிரகவாசியின் தோற்றத்தை ஒத்த உடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் பின்னர் Magdalena Braum எனப்படும் மிருக வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி அது பபூன் எனப்படும் உயிரினத்தின் இறந்த உடலம் என கண்டறியப்பட்டது.
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா.
ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவனா.
அதன் பின் அவர் காணாமல் போனார். இது குறித்து பாவனா கூறுகையில், சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள்.
மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்து கொண்டிருப்பதால், கன்னட படங்களில் நடிக்க முடிவதில்லை.
இருப்பினும் கன்னட படங்களின் கதைகளை கேட்டு வருகிறேன், நல்ல கதையாக அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.
ஏதோ ஒரு கதையில் நடித்துவிட்டு பின்னர் வருந்துவதைவிட நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதால் அதற்காக காத்திருந்து நடிக்கிறேன்.
சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் என்னை பார்த்திருக்க முடியாது. அங்கு அதிக கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள், அப்படி நடிக்க விரும்பாததால் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சிறந்த அரசியல்வாதிகளை இழந்ததனால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றோம் என முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அ.அமிர்தலிங்கத்தின் சிரார்த்ததினம் இன்று புளொட் அமைப்பினால் நினைவு கூறப்பட்டபோது அங்கு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தமில்லாத பிரதேசத்திலே நாளுக்குநாள் அரசானது தமது படையை பலப்படுத்துவதற்காக கோடி கோடியான பணத்தை செலவிடுகிறது.
ஆனால் எங்களுடைய தேசிய இன விடுதலை போராட்டத்திலே மரணித்த அல்லது வாழ்விழந்த எத்தனையோ போராளிகள் மற்றும் குடும்பங்கள் இன்று சொந்த வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாதுள்ளனர்.
எனவே அரசாங்கமானது அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சிறந்த புனர்வாழ்வை அளிப்பதற்கு முன்வரவேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் திகதி பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.
பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951-ல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1956-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார்.
தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972-ம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார்.
தந்தைச் செல்வ நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977-ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.
இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார். 1970 முதல் 1980 வரை, அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப்போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின.
இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 ஜுலை 13-ம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்.
வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படும் கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக் கத்தரிக்காய் எமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை நாம் பார்ப்போம்..!
1.100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.
2.அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.
3.கொம்ப்ளக்ஸ் வகையான விட்டமின்களான பான்டோதெனிக் அசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
4.கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கு மிகவும் உகந்தவை.
அழகான உங்களது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம்
1. ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.
2. வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து குழைத்து முகத்தில் பூசி வரலாம்.
3. வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.
4. உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி தடவவும்.
5. ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.
6.முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.
7.பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.
8.வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.
9.கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.
தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.
மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார்.
கணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற புதிய சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த2009-ம் ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதானதால் தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்தது.
2010-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72-வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.
எனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3-வது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார்.
2003-ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சாக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும்.
ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர் அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர் அடுத்த எண்களை இதே போல அழைக்கும்.
இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய போமட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது.
3.5 மிமீ ஓடியோ ஜக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போட் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லொக், ஓட்டோ கோல் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. Infibeam, gadgets.in, ebay.in, shopclues.com, and Tradus.com ஆகிய இணைய தளங்கள் வழியாகவும் இதனைப் பெறலாம்.
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை – இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் பூத்கலன் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லலித் சொலங்கி (27 வயது), நிதின் சொக்கின் (27 வயது), பவன் சொலங்கி (30 வயது), மோஹித் குமார் (21 வயது) மற்றும் ஜிட்டேன்டர் குமார் (22 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல், செம்பியன் கிண்ணம் மற்றும் முக்கோண தொடர் என்பவற்றில் இவர்கள் 1.5 கோடி இந்திய ரூபா கிரிக்கெட் பந்தயம் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி கைப்பற்றப்ட்டுள்ளது. இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் 154 பந்தயங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சுமார் 97 புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இருந்து 88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த படகில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமையே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகிக்கின்றார்.
காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.