இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, அவுஸ்திரேலியா 280 ஓட்டங்களுக்கு தனது இன்னிங்சை முடித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. தலைவர் அலஸ்டயர் குக் 50 ஓட்டங்களும், கெவின் பீட்டர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணிக்கு நம்பிக்கையூட்டிய இயான் பெல் 95 ஓட்டங்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்டில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பெல், இந்த மைல்கல்லை கடந்த 14-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
இங்கிலாந்து அணி இதுவரை 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில் சுற்றி வளைத்தனர்.
ஆத்தூர் அடுத்த, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கைநாதன் சிவலிங்கம், அவரது மனைவி அன்றன்ரெஜினா ஆகியோர், முகாமில் உள்ள கவிதா, 35, யாழினி, 28, நிர்மலா, 25, சசிகலா, 38, ஆனந்த், 27, உள்பட ஆறு பேரிடம், கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்தனர். அதேபோல், தாரமங்கலம், கோவை, கும்முடிப்பூண்டி, வேலூர், செந்தாரப்பட்டி போன்ற இடங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 210 பேரிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
கடந்த, 2011ல், 200 இலங்கை தமிழர்களை, ஆந்திர மாநில கடற்கரை தென்னந்தோப்பில் தங்க வைத்திருந்த போது, 200 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முயன்ற இலங்கைநாதனை, மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை தமிழர்களிடம் வசூல் செய்த தொகையை, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாக, இலங்கைநாதன் மனைவி அன்றன்ரெஜினா, சில மாதங்களுக்கு முன், தம்மம்பட்டி போலீஸாரிடம், எழுதி கொடுத்தார். அதன் பின், பணம் தராமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், அன்றன்ரெஜினா, அவரது தோழி உள்பட, நான்கு பேர், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று, ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்தனர்.
தகவலறிந்த, நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கவிதா, யாழினி, நிர்மலா உள்ளிட்டோர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அன்றன்ரெஜினாவை முற்றுகையிட்டு, பணம் கேட்டனர்.
அப்போது, அன்றன்ரெஜினாவுடன் வந்தவர்கள், தகராறில் ஈடுப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள், கற்களை வீசி தாக்க முயன்றனர். அதனால், இரு பெண்களும், நீதிமன்றத்துக்குள் ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த ஆத்தூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் உள்ளிட்ட பொலிஸார், பணம் பறிகொடுத்தவர்கள் மற்றும் அன்றன்ரெஜினா ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அன்றன்ரெஜினா கூறியதாவது: ஜெயபாலன் என்பவர், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, எங்களிடம் பணம் வாங்கினார். அவரை காணதததால், பணத்தை பெற்று தரமுடியவில்லை, எனக் கூறினார்.
திருச்சி கே.கே.நகரில் இலங்கை பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக திருச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஐய்யப்ப நகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தேன் மலர்.
இவர்கள் இலங்கை அகதிகள் ஆவர். இவர்களுக்கு தனுசியா (19) என்ற மகள் உள்ளார். தனுசியா 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு அங்குள்ள ஒரு கடைக்கு தனுசியா வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10–ந் திகதி தனுசியா கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து தாய் தேன் மலர் கே.கே.நகர் பொலிசில் புகார் செய்தார். தனுசியா கடத்தப்பட்டாரா? அல்லது மாயமாக வேறு காரணம் உள்ளதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அந்தப் படம் தொடர்பான புரொமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எல்லாவற்றிலும் காசு பார்க்கத் துடிக்கும் மும்பைப் பட உலகம், இதிலும் காசு பார்க்க ஆசைப்பட்டது.
அதன்படி படத்திற்கான சம்பளப் பத்திரத்தில் கையெழுத்து போடும்போதே, புரொமோஷன் விழாக்களுக்கு வருவதென்றால் தனியாக இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். இந்த டெக்னிக்கை கோலிவுட்டிலும் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் “சிங்கம்-2” படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனுஷ்கா. சம்பளம் போக புரொமோஷன் விழாக்களுக்கு வரவேண்டுமானால், தனியாக ஒரு தொகை தரவேண்டும் என அடம்பிடித்தாராம் இவர்.
இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ கெஞ்சியும் மனம் இறங்கவே இல்லையாம் அனுஷ்கா. பிறகு வேறுவழியில்லாமல் தருவதாக ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர்.
அனுஷ்கா விமானத்தில் வந்து போனது, சொகுசு ஹோட்டலில் தங்கிய செலவு போக பெரும்தொகையை அழுதாராம் தயாரிப்பாளர். இதைப் பார்த்து சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இப்படி நாமும் கேட்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்திருக்கிறார்களாம்.
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரை சேர்ந்தவர் போல் ஸ்டவுட். இவருக்கு ஒரு கார் விற்பனை கம்பனியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
அதில் நீங்கள் இணைய டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காரை வாங்கவில்லை என மறுத்தார். பின்னர் தனது கையடக்க தொலைபேசியை பார்த்த போது அதில் இணையம் மூலம் கார் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர் தனது ஒரு வயது மகளிடம் கையடக்க தொலைபேசியை விளையாட கொடுத்து இருந்தார். அப்போது அவர் தவறுதலாக அழுத்தி உபயோகித்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அந்த காரை அவர் வாங்கி விட்டார். தற்போது அதில் தனது மனைவி குழந்தையுடன் வலம் வருகிறார். இவரது குழந்தையின் இணைய விளையாட்டு மூலம் வாங்கிய கார் 1962–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட “ஒஸ்டின்–ஹீலே ஸ்பரிட்” ரக கார் ஆகும்.
இது குறித்து போல் ஸ்டூயட் கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது’’ என சிரித்தபடியே கூறினார்.
வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்கு வெட்டி புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் இன்று (12.07) குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.
இவ்விடயம் அயலவாகளினால் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் மேற்படி தாய்க்கு 7 வயதுடைய மகன் உள்ள நிலையில் தற்போது அத் தாய் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு “சொப்பன சுந்தரி” எனத் தலைப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.
“கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்து வருகிறது.
பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.
நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை “எதிர்நீச்சல்” படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். “பட்டத்து யானை” ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்கு “சொப்பன சுந்தரி” என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக் “சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா?”. புகழ்பெற்ற இந்த டயலாக்கை மனதில் வைத்துதான் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்களாம்.
அதேபோல் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” தலைப்பும் “வின்னர்” படத்தில் வடிவேலு சொன்னதுதான். காமெடியாகப் பேசும் சிவகார்த்திகேயனுக்கு காமெடி நடிகர்களின் டயலாக்கில் இருந்து படத்தலைப்பு கிடைப்பது பொருத்தமான விஷயம்தான்.
தலைவெட்டப்பட்ட கோழிகள், சேவல்களுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடிதுடித்தவாறு சிறிதுதூரம் ஓடிச்செல்லவும் கூடும் என்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் தலையை இழந்த சேவலொன்று ஒன்றரை வருடகாலம் உயிர்வாழ்ந்தது என்றால் நம்ப முடியுமா? நம்ப முடிகிறதோ இல்லையோ அப்படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்தமை உண்மை வரலாறாக உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள புரூடிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தது அச்சேவல். அதற்கு “மைக்” எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் “அதிசய சேவல் மைக்” என அழைக்கப்பட்டது.
1945 செப்டெம்பர் 10 ஆம் திகதி, புருட்டிடா நகர விவசாயியான லொய்ட் ஒல்சென் என்பவரின் வீட்டுக்கு அவரின் மாமியார் சென்றிருந்தார். அவருக்கு விருந்தளிப்பதற்காக கோழியிறைச்சி கொண்டு வருமாறு ஒல்செனை அவரின் மனைவி கோரினார். ஐந்தரை மாத வயதுடைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரிவுசெய்தார்.
அச்சேவலை அவர் தலையின் ஓரமாக வெட்டமுயன்றபோது, ஒல்செனின் கைக்கோடரி நழுவியதால் சேவலின் கழுத்துக்கூடாக செல்லும் நாடி தப்பியது.
அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒருபகுதி ஆகியன பாதிக்கப்படாமல் இருந்தன. (குருதிக்குழாயில் ஏற்பட்ட அடைப்பொன்றின் காரணமாக அதற்கு குருதிப்பெருக்கு ஏற்படவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
அதனால் அச்சேவல் தடுமாறி நடக்கத் தொடங்கியது. அது கூவுவதற்கும் முயன்றது. ஆனால் அது முடியவில்லை. எனினும், சேவல் உயிரிழக்காததால் வியப்படைந்த ஒஸ்லென் அதனை கவனமாக பராமரிக்கத் தீர்மானித்தார்.
கழுத்துப்பகுதியிலுள்ள உணவுக்குழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்தினார். சிறிதளவு அரைத்த சோளத்தையும் அவர் கழுத்திலுள்ள உணவுக்குழாய் வழியாக ஊட்டினார். இதனால் அச்சேவல் மேலும் வளரத் தொடங்கியது. ஏனைய கோழிகள், சேவல்களுடன் வளர்க்கப்பட்ட அச்சேவல் அதிகாலையில் கூவவும் செய்தது. அதன் தொண்டையிலிருந்து சத்தம் எழுந்தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்கவில்லை.
சில மாதங்களில் இச்சேவல் குறித்த தகவல்கள் அமெரிக்காவெங்கும் பரவத் தொடங்கின. பெரும்பாலானோர் அவற்றை கட்டுக்கதைகள் எனக் கூறி நம்ப மறுத்தனர்.
அதையடுத்து, உண்மையை நிரூபிப்பதற்காக அச்சேவலின் உரிமையாளரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நகரிலுள்ள உட்டா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு சென்றார். இச்சேவல் குறித்த தகவல்கள் உண்மையென நிரூபிக்கப்பட்ட பின்னர் இரண்டு தலையுடைய கன்றுக்குட்டி போன்ற விநோத மிருகங்கள், பிராணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்டுசெல்லப்பட்டது.
0.25 டொலர் கட்டணம் செலுத்தி இச்சேவலை பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் புகழ் உச்சத்திலிருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்டியது. தற்போதைய பெறுமதியுடன் ஒப்பிட்டால் அது 48,000 டொலர்களுக்கு (சுமார் 60 இலட்சம் இலங்கை ரூபா) சமனாகும்.
டைம், லைவ் உட்பட புகழ்பெற்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இச்சேவலின் புகைப்படங்கள் வெளியாகின.
மைக்கின் புகழ் வெகுவாக பரவியிருந்ததால், வேறு பலர் சேவல்களின் தலையை அரைகுறையாக வெட்டி மைக் போன்ற தலையில்லா சேவல்களை உருவாக்க முயன்றனர். ஆனால் அவை ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை.
1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சுற்றுலாவொன்றின் பின்னர் திரும்பிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் அச்சேவல் சுவாசிப்பதற்குத் திணறியது. அதேவேளை, அச்சேவலுக்கு உணவூட்டும் மற்றும் தூய்மைக்கும் ஸ்ரிஞ்சர்களை கண்காட்சிக்கூடமொன்றிலேயே மறதியாக விட்டுவிட்டு வந்திருந்தார் ஒல்சென். அதனால் அச்சேவலை காப்பாற்ற முடியவில்லை.
எனினும் தான் அச்சேவலை விற்றுவிட்டதாக மற்றவர்களிடம் ஒல்சென் கூறினார். அதனால் அச்சேவல் சுற்றுலாக்களில் பங்குபற்றிக்கொண்டிருப்பதாக 1949 ஆம் ஆண்டுவரை பலர் நம்பினர்.
கொலராடோ மாநிலத்தின் புரூட்டிடா நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே 3 ஆவது வார இறுதிநாள் “மைக் தலையற்ற சேவல் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. தலையற்ற கோழிகள் போன்று ஓடுதல் உட்பட பல்வேறு விநோத விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான போட்டி ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி தந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முதல் போட்டியை தொடங்கினார். அதன் பிறகு பல பேர். கார் ரேஸிலிருந்து திரும்பி சினிமாவில் முழுக்கவனம் செலுத்திய காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று அஜீத் சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது.
தனது கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த அவர் சொன்ன வார்த்தை பலரை கோபப்படுத்தியது. சிலர் கிண்டலடித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் குறித்து அஜீத் இதுவரை வாயே திறந்ததில்லை.
விஜய் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை. அவர் சம்பந்தப்பட்ட மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கோஷம் இடம்பெறாமல் இருந்ததுமில்லை. விஜய் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், விலையும், குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் வரவேற்பையும் வைத்து அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தகுதி அவரிடமிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
தயாரிப்பாளர் தாணு அதில் முக்கியமானவர். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிடுவார். விஜய் விருது வழங்கும் விழாவில் துப்பாக்கிக்காக விருது வாங்கும் போது இதனை சற்று அழுத்தியே சொன்னார். ஆளவந்தானில் தன்னை நஷ்டப்படுத்திய எதிரி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் இப்படிப் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை தாணு நிச்சயம் தவறவிட மாட்டார்.
ரஜினியைப் போலவே அடக்கம், ஓபனிங் கிங், ஆன்மீகத்தில் ஈடுபாடு, தனது படங்களையே ப்ரமோட் செய்யாதவர் என அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவரா இவரா என்ற போட்டியில் இப்போது புதிதாக சூர்யாவையும் கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.
சிங்கம் 2 வெற்றிவிழா நிகழ்ச்சியில் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று சொல்லி சூர்யாவுக்கே அதிர்ச்சி தந்தனர். நன்றாக காமெடி செய்கிறார், ரஜினி மாதிரியே பேசுகிறார், கறுப்பாக இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சிவ கார்த்திகேயனை முன்னிறுத்துகிற முயற்சிகளும் நடக்கிறது. ஆக, சூப்பர் ஸ்டார் நாற்காலி ஏலத்துக்கு வந்திருக்கிறது.
நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைஞானி என்று வகைதொகையில்லாமல் பட்டங்கள் இருந்தும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஏன் இந்த அடிதடி. ரஜினி வைத்திருப்பதாலா?
ஓரளவு அது உண்மை. சூப்பர் ஸ்டார் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழி. இசைத்துறையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார், கால்பந்தில் சூப்பர் ஸ்டார் என சினிமா தாண்டியும் சூப்பர் ஸ்டார் என்பது பயன்படுத்தப்படுகிறது. மக்கள் திலகம், கலைஞானி போல அது யுனிக்கானது அல்ல. ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, இந்தியில் அமிதாப் தொடங்கி ஷாரூக்வரை பல பேர். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது தியாகராஜ பாகவதர். வடஇந்திய ஊடகங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார், தமிழ் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றன.
“மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, ஒரு கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ள படம் “மான் கராத்தே”. ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட நாட்களாக உதவியாளராக இருந்து வரும் திருக்குமரன் இயக்கி வருகிறார்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பூஜை போட்டு பட வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும்போது லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிவந்த ஹன்சிகா, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.
முதலில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்கு மறுத்தாராம் ஹன்சிகா. சம்பளம் பெரிய தொகை என்றதும், உடனே ஒப்புக் கொண்டாராம். கேட்பவர்களிடம், “இளம் நடிகர்களின் படங்கள் தான் இப்போது ஓரளவுக்காவது ஓடுகின்றன.
யாருடன் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, படம் ஓடுதா என்பதுதான் முக்கியம்” என்பவர், சம்பள விஷயத்தை மட்டும் மறைத்துவிடுகிறாராம்.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய விமானம் ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை இழுக்க ஆரம்பித்துள்ளார் சிங்கா. இதன்போது அருகில் இருந்த நடன மங்கைகள் அவரை உற்சாகமூட்டினர்.
இதற்கு முதல் லக்ஷ்சம் பேர்க்கை சேர்ந்த ஜோர்ஜ் என்பவர் பஸ் ஒன்றை பல்லினால் இழுத்ததே சாதனையாக இருந்தது.
ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.
இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்கள் கணினி மூலமாகவே கசியவிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, அதிபர் புட்டீனுக்காக தயாரிக்கப்படும் சில முக்கிய அறிக்கைகள் டைப்ரைட்டர்கள் மூலமே எழுதப்பட்டுவருவதாகவும் இஸ்வேஸ்டியா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவதற்காக துள்ளிக்குதித்து அறையிலிருந்து ஓடும் ரோபோ அலார கடிகாரம் ஒன்றினை இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார்.
உறக்கத்திலிருந்து எழுந்து பல்கலைகழக விரிவுரைகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு தடுமாறிய மாணவன் ஒருவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். “கிளொக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள 2 டயர்களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடிகாரமானது 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடியது.
ஒரு முறை மட்டுமே ஸ்னஸ் செய்ய அனுமதிக்கும் இந்த கடிகாரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்தத்துடன் அறை முழுவதும் சுற்றி ஓட ஆடம்பித்துவிடும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் விரட்டிப் பிடித்து கடிகாரத்தின் சத்தத்தை நிறுத்தியேயாக வேண்டிய கட்டாயத்தில் எழும்பிவிடுவார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் உரிய நேரத்திற்குள் பந்து வீச தவறியமையின் காரணமாகவே இப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் படி எதிர்வரும் தென்னாபிரிக்க தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை அஞ்சலோ மத்தியூஸ் இழந்துள்ளார்.