பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளுக்கு பெற்றோரெ காரணம் – இலியானா ஆவேசம்..!

ileanaநண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, பெண்களின் சுதந்திரத்தை பெற்றோரே பறிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பேசுகின்றனர்.

ஆனால் வீடுகளில் பெற்றோர்களோ பெண்களை சுதந்திரமாக வளர விடாமல் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.

ஆண்களிடம் பேசக்கூடாது. ஆண்கள் கேலி பேசினால் அதனை எதிர்க்காமல் தலை குணிந்து போய்விட வேண்டும்.

சிரிக்க கூடாது, முகத்துக்கு நேர் பார்க்க கூடாது என்றெல்லாம் பெற்றோர்கள் பெண்களை நிர்பந்தம் செய்கின்றனர்.

இதனால் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மானபங்கம், பாலியல் பலாத்காரம் என நடக்கிறது.

பெண்களை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைக்காமல் தைரியசாலியாகவும், சுதந்திரமாகவும் வளர விடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து..!

aussieஇங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய, அவுஸ்திரேலியா 280 ஓட்டங்களுக்கு தனது இன்னிங்சை முடித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. தலைவர் அலஸ்டயர் குக் 50 ஓட்டங்களும், கெவின் பீட்டர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இயான் பெல் 95 ஓட்டங்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்டில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பெல், இந்த மைல்கல்லை கடந்த 14-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இங்கிலாந்து அணி இதுவரை 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கனடா அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது..!

arrest1கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில் சுற்றி வளைத்தனர்.

ஆத்தூர் அடுத்த, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கைநாதன் சிவலிங்கம், அவரது மனைவி அன்றன்ரெஜினா ஆகியோர், முகாமில் உள்ள கவிதா, 35, யாழினி, 28, நிர்மலா, 25, சசிகலா, 38, ஆனந்த், 27, உள்பட ஆறு பேரிடம், கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்தனர். அதேபோல், தாரமங்கலம், கோவை, கும்முடிப்பூண்டி, வேலூர், செந்தாரப்பட்டி போன்ற இடங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 210 பேரிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.

கடந்த, 2011ல், 200 இலங்கை தமிழர்களை, ஆந்திர மாநில கடற்கரை தென்னந்தோப்பில் தங்க வைத்திருந்த போது, 200 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முயன்ற இலங்கைநாதனை, மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழர்களிடம் வசூல் செய்த தொகையை, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாக, இலங்கைநாதன் மனைவி அன்றன்ரெஜினா, சில மாதங்களுக்கு முன், தம்மம்பட்டி போலீஸாரிடம், எழுதி கொடுத்தார். அதன் பின், பணம் தராமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், அன்றன்ரெஜினா, அவரது தோழி உள்பட, நான்கு பேர், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று, ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்தனர்.

தகவலறிந்த, நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கவிதா, யாழினி, நிர்மலா உள்ளிட்டோர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அன்றன்ரெஜினாவை முற்றுகையிட்டு, பணம் கேட்டனர்.

அப்போது, அன்றன்ரெஜினாவுடன் வந்தவர்கள், தகராறில் ஈடுப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள், கற்களை வீசி தாக்க முயன்றனர். அதனால், இரு பெண்களும், நீதிமன்றத்துக்குள் ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த ஆத்தூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் உள்ளிட்ட பொலிஸார், பணம் பறிகொடுத்தவர்கள் மற்றும் அன்றன்ரெஜினா ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, அன்றன்ரெஜினா கூறியதாவது: ஜெயபாலன் என்பவர், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, எங்களிடம் பணம் வாங்கினார். அவரை காணதததால், பணத்தை பெற்று தரமுடியவில்லை, எனக் கூறினார்.

திருச்சியில் இலங்கை அகதிப் பெண் திடீர் மாயம்..!

Missingதிருச்சி கே.கே.நகரில் இலங்கை பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக திருச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஐய்யப்ப நகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தேன் மலர்.

இவர்கள் இலங்கை அகதிகள் ஆவர். இவர்களுக்கு தனுசியா (19) என்ற மகள் உள்ளார். தனுசியா 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு அங்குள்ள ஒரு கடைக்கு தனுசியா வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10–ந் திகதி தனுசியா கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து தாய் தேன் மலர் கே.கே.நகர் பொலிசில் புகார் செய்தார். தனுசியா கடத்தப்பட்டாரா? அல்லது மாயமாக வேறு காரணம் உள்ளதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படியும் காசு புடுங்குறாங்களே.. அலறும் தயாரிப்பாளர்கள்!

Anushka

ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அந்தப் படம் தொடர்பான புரொமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எல்லாவற்றிலும் காசு பார்க்கத் துடிக்கும் மும்பைப் பட உலகம், இதிலும் காசு பார்க்க ஆசைப்பட்டது.

அதன்படி படத்திற்கான சம்பளப் பத்திரத்தில் கையெழுத்து போடும்போதே, புரொமோஷன் விழாக்களுக்கு வருவதென்றால் தனியாக இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். இந்த டெக்னிக்கை கோலிவுட்டிலும் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் “சிங்கம்-2” படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனுஷ்கா. சம்பளம் போக புரொமோஷன் விழாக்களுக்கு வரவேண்டுமானால், தனியாக ஒரு தொகை தரவேண்டும் என அடம்பிடித்தாராம் இவர்.

இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ கெஞ்சியும் மனம் இறங்கவே இல்லையாம் அனுஷ்கா. பிறகு வேறுவழியில்லாமல் தருவதாக ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர்.

அனுஷ்கா விமானத்தில் வந்து போனது, சொகுசு ஹோட்டலில் தங்கிய செலவு போக பெரும்தொகையை அழுதாராம் தயாரிப்பாளர். இதைப் பார்த்து சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இப்படி நாமும் கேட்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்திருக்கிறார்களாம்.

 

இணையம் மூலம் கார் வாங்கிய ஒரு வயது கில்லாடி குழந்தை!!

car

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரை சேர்ந்தவர் போல் ஸ்டவுட். இவருக்கு ஒரு கார் விற்பனை கம்பனியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

அதில் நீங்கள் இணைய டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காரை வாங்கவில்லை என மறுத்தார். பின்னர் தனது கையடக்க தொலைபேசியை பார்த்த போது அதில் இணையம் மூலம் கார் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர் தனது ஒரு வயது மகளிடம் கையடக்க தொலைபேசியை விளையாட கொடுத்து இருந்தார். அப்போது அவர் தவறுதலாக அழுத்தி உபயோகித்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அந்த காரை அவர் வாங்கி விட்டார். தற்போது அதில் தனது மனைவி குழந்தையுடன் வலம் வருகிறார். இவரது குழந்தையின் இணைய விளையாட்டு மூலம் வாங்கிய கார் 1962–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட “ஒஸ்டின்–ஹீலே ஸ்பரிட்” ரக கார் ஆகும்.

இது குறித்து போல் ஸ்டூயட் கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது’’ என சிரித்தபடியே கூறினார்.

வவுனியாவில் பிறந்த குழந்தையை புதைத்த தாய் தலைமறைவு!

Sri_Lanka_Vavuniya_Districtவவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்கு வெட்டி புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் இன்று (12.07) குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

இவ்விடயம் அயலவாகளினால் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் மேற்படி தாய்க்கு 7 வயதுடைய மகன் உள்ள நிலையில் தற்போது அத் தாய் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனின் சொப்பன சுந்தரி!

Siva-Karthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு “சொப்பன சுந்தரி” எனத் தலைப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.

“கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்து வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை “எதிர்நீச்சல்” படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். “பட்டத்து யானை” ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்கு “சொப்பன சுந்தரி” என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக் “சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா?”. புகழ்பெற்ற இந்த டயலாக்கை மனதில் வைத்துதான் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்களாம்.

அதேபோல் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” தலைப்பும் “வின்னர்” படத்தில் வடிவேலு சொன்னதுதான். காமெடியாகப் பேசும் சிவகார்த்திகேயனுக்கு காமெடி நடிகர்களின் டயலாக்கில் இருந்து படத்தலைப்பு கிடைப்பது பொருத்தமான விஷயம்தான்.

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

 

1தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள்.

ஆனால் தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு “மைக்” எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. பின்னர் “அதி­சய சேவல் மைக்” என அழைக்­கப்­பட்­டது.

1945 செப்­டெம்பர் 10 ஆம் திகதி, புருட்­டிடா நகர விவ­சா­யி­யான லொய்ட் ஒல்சென் என்­ப­வரின் வீட்­டுக்கு அவரின் மாமியார் சென்­றி­ருந்தார். அவ­ருக்கு விருந்­த­ளிப்­ப­தற்­காக கோழி­யி­றைச்சி கொண்டு வரு­மாறு ஒல்­செனை அவரின் மனைவி கோரினார். ஐந்­தரை மாத வய­து­டைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரி­வு­செய்தார்.

அச்­சே­வலை அவர் தலையின் ஓர­மாக வெட்­ட­மு­யன்­ற­போது, ஒல்­செனின் கைக்­கோ­டரி நழு­வி­யதால் சேவலின் கழுத்­துக்­கூ­டாக செல்லும் நாடி தப்­பி­யது.

அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒரு­ப­குதி ஆகி­யன பாதிக்­கப்­ப­டாமல் இருந்­தன. (குரு­திக்­கு­ழாயில் ஏற்­பட்ட அடைப்­பொன்றின் கார­ண­மாக அதற்கு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.

அதனால் அச்­சேவல் தடு­மாறி நடக்கத் தொடங்­கி­யது. அது கூவு­வ­தற்கும் முயன்­றது. ஆனால் அது முடி­ய­வில்லை. எனினும், சேவல் உயி­ரி­ழக்­கா­ததால் வியப்­ப­டைந்த ஒஸ்லென் அதனை கவ­ன­மாக பரா­ம­ரிக்கத் தீர்­மா­னித்தார்.

2

கழுத்­துப்­ப­கு­தி­யி­லுள்ள உண­வுக்­கு­ழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகி­ய­வற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்­தினார். சிறி­த­ளவு அரைத்த சோளத்­தையும் அவர் கழுத்­தி­லுள்ள உண­வுக்­குழாய் வழி­யாக ஊட்­டினார். இதனால் அச்­சேவல் மேலும் வளரத் தொடங்­கி­யது. ஏனைய கோழிகள், சேவல்­க­ளுடன் வளர்க்­கப்­பட்ட அச்­சேவல் அதி­கா­லையில் கூவவும் செய்­தது. அதன் தொண்­டை­யி­லி­ருந்து சத்தம் எழுந்­தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்­க­வில்லை.

சில மாதங்­களில் இச்­சேவல் குறித்த தக­வல்கள் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவத் தொடங்­கின. பெரும்­பா­லானோர் அவற்றை கட்­டுக்­க­தைகள் எனக் கூறி நம்ப மறுத்­தனர்.

அதை­ய­டுத்து, உண்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அச்­சே­வலின் உரி­மை­யா­ள­ரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நக­ரி­லுள்ள உட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு கொண்டு சென்றார். இச்­சேவல் குறித்த தக­வல்கள் உண்­மை­யென நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் இரண்டு தலை­யு­டைய கன்­றுக்­குட்டி போன்ற விநோத மிரு­கங்கள், பிரா­ணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்­டு­செல்­லப்­பட்­டது.

0.25 டொலர் கட்­டணம் செலுத்தி இச்­சே­வலை பார்க்க மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் புகழ் உச்­சத்­தி­லி­ருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்­டி­யது. தற்­போ­தைய பெறு­ம­தி­யுடன் ஒப்­பிட்டால் அது 48,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 60 இலட்சம் இலங்கை ரூபா) சம­னாகும்.

டைம், லைவ் உட்­பட புகழ்பெற்ற சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கை­களில் இச்­சே­வலின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின.

மைக்கின் புகழ் வெகு­வாக பர­வி­யி­ருந்ததால், வேறு பலர் சேவல்­களின் தலையை அரை­கு­றை­யாக வெட்டி மைக் போன்ற தலை­யில்லா சேவல்­களை உரு­வாக்க முயன்­றனர். ஆனால் அவை ஓரிரு நாட்­க­ளுக்கு மேல் தாக்­குப்­பி­டிக்­க­வில்லை.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சுற்­று­லா­வொன்றின் பின்னர் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது நள்­ளி­ரவில் அச்­சேவல் சுவா­சிப்­ப­தற்குத் திண­றி­யது. அதே­வேளை, அச்­சே­வ­லுக்கு உணவூட்டும் மற்றும் தூய்­மைக்கும் ஸ்ரிஞ்­சர்­களை கண்­காட்­சிக்­கூ­ட­மொன்­றி­லேயே மற­தி­யாக விட்­டு­விட்டு வந்­தி­ருந்தார் ஒல்சென். அதனால் அச்­சே­வலை காப்­பாற்ற முடி­ய­வில்லை.

எனினும் தான் அச்­சே­வலை விற்­று­விட்­ட­தாக மற்­ற­வர்­க­ளிடம் ஒல்சென் கூறினார். அதனால் அச்சேவல் சுற்றுலாக்களில் பங்குபற்றிக்கொண்டிருப்பதாக 1949 ஆம் ஆண்டுவரை பலர் நம்பினர்.

கொலராடோ மாநிலத்தின் புரூட்டிடா நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே 3 ஆவது வார இறுதிநாள் “மைக் தலையற்ற சேவல் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. தலையற்ற கோழிகள் போன்று ஓடுதல் உட்பட பல்வேறு விநோத விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

என்னவொரு அதிசயம் – வீடியோ இணைப்பு

இவர் செய்யும் அதிசயத்தை கொஞ்சம் பாருங்கள்..

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டியிடும் மூவர்!!

Rajinikanth

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான போட்டி ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி தந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முதல் போட்டியை தொடங்கினார். அதன் பிறகு பல பேர். கார் ரேஸிலிருந்து திரும்பி சினிமாவில் முழுக்கவனம் செலுத்திய காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று அஜீத் சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

தனது கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த அவர் சொன்ன வார்த்தை பலரை கோபப்படுத்தியது. சிலர் கிண்டலடித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் குறித்து அஜீத் இதுவரை வாயே திறந்ததில்லை.

விஜய் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை. அவர் சம்பந்தப்பட்ட மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கோஷம் இடம்பெறாமல் இருந்ததுமில்லை. விஜய் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், விலையும், குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் வரவேற்பையும் வைத்து அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தகுதி அவரிடமிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

தயாரிப்பாளர் தாணு அதில் முக்கியமானவர். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிடுவார். விஜய் விருது வழங்கும் விழாவில் துப்பாக்கிக்காக விருது வாங்கும் போது இதனை சற்று அழுத்தியே சொன்னார். ஆளவந்தானில் தன்னை நஷ்டப்படுத்திய எதிரி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் இப்படிப் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை தாணு நிச்சயம் தவறவிட மாட்டார்.

ரஜினியைப் போலவே அடக்கம், ஓபனிங் கிங், ஆன்மீகத்தில் ஈடுபாடு, தனது படங்களையே ப்ரமோட் செய்யாதவர் என அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவரா இவரா என்ற போட்டியில் இப்போது புதிதாக சூர்யாவையும் கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.

சிங்கம் 2 வெற்றிவிழா நிகழ்ச்சியில் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று சொல்லி சூர்யாவுக்கே அதிர்ச்சி தந்தனர். நன்றாக காமெடி செய்கிறார், ரஜினி மாதிரியே பேசுகிறார், கறுப்பாக இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சிவ கார்த்திகேயனை முன்னிறுத்துகிற முயற்சிகளும் நடக்கிறது. ஆக, சூப்பர் ஸ்டார் நாற்காலி ஏலத்துக்கு வந்திருக்கிறது.

நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைஞானி என்று வகைதொகையில்லாமல் பட்டங்கள் இருந்தும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஏன் இந்த அடிதடி. ரஜினி வைத்திருப்பதாலா?

ஓரளவு அது உண்மை. சூப்பர் ஸ்டார் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழி. இசைத்துறையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார், கால்பந்தில் சூப்பர் ஸ்டார் என சினிமா தாண்டியும் சூப்பர் ஸ்டார் என்பது பயன்படுத்தப்படுகிறது. மக்கள் திலகம், கலைஞானி போல அது யுனிக்கானது அல்ல. ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, இந்தியில் அமிதாப் தொடங்கி ஷாரூக்வரை பல பேர். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது தியாகராஜ பாகவதர். வடஇந்திய ஊடகங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார், தமிழ் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றன.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி – ஹன்சிகாவுக்கு ஒரு கோடி!

maan“மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, ஒரு கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ள படம் “மான் கராத்தே”. ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட நாட்களாக உதவியாளராக இருந்து வரும் திருக்குமரன் இயக்கி வருகிறார்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பூஜை போட்டு பட வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும்போது லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிவந்த ஹன்சிகா, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

முதலில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்கு மறுத்தாராம் ஹன்சிகா. சம்பளம் பெரிய தொகை என்றதும், உடனே ஒப்புக் கொண்டாராம். கேட்பவர்களிடம், “இளம் நடிகர்களின் படங்கள் தான் இப்போது ஓரளவுக்காவது ஓடுகின்றன.

யாருடன் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, படம் ஓடுதா என்பதுதான் முக்கியம்” என்பவர், சம்பள விஷயத்தை மட்டும் மறைத்துவிடுகிறாராம்.

விமானத்தை பல்லால் இழுத்த நபர் – வீடியோ இணைப்பு

f1

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய விமானம் ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை இழுக்க ஆரம்பித்துள்ளார் சிங்கா. இதன்போது அருகில் இருந்த நடன மங்கைகள் அவரை உற்சாகமூட்டினர்.

இதற்கு முதல் லக்ஷ்சம் பேர்க்கை சேர்ந்த ஜோர்ஜ் என்பவர் பஸ் ஒன்றை பல்லினால் இழுத்ததே சாதனையாக இருந்தது.

பழைய டைப்ரைட்டர் பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா..!

typeரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்கள் கணினி மூலமாகவே கசியவிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, அதிபர் புட்டீனுக்காக தயாரிக்கப்படும் சில முக்கிய அறிக்கைகள் டைப்ரைட்டர்கள் மூலமே எழுதப்பட்டுவருவதாகவும் இஸ்வேஸ்டியா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

(BBC)

துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!

new clock

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ரம் ஒன்றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.

உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே இந்த சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்ளார். “கிளொக்கி” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள 2 டயர்­களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடிகாரமானது 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடி­யது.

ஒரு முறை மட்­டுமே ஸ்னஸ் செய்ய அனு­ம­திக்கும் இந்த கடி­கா­ரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்­தத்­துடன் அறை முழு­வதும் சுற்றி ஓட ஆடம்­பித்­து­விடும். இதனால் ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்கள் விரட்டிப் பிடித்து கடி­கா­ரத்தின் சத்­தத்தை நிறுத்­தி­யே­யாக வேண்­டிய கட்­டா­யத்தில் எழும்­பி­வி­டு­வார்கள்.

அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை..!

mathewsஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் உரிய நேரத்திற்குள் பந்து வீச தவறியமையின் காரணமாகவே இப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் படி எதிர்வரும் தென்னாபிரிக்க தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை அஞ்சலோ மத்தியூஸ் இழந்துள்ளார்.