மரணம் தொடும்போது..

எட்டு வயது காதலும் எட்டாத நேசமும்
பட்டு மாமியும் சிட்டு சிலுமிசமும்..

கொட்டும் அருவியும் கூவும் குயிலும்
கொடுத்த கடனும்கொடுக்காத முத்தங்களும்
கெடுத்த குடியும் கேட்டவன் சொல்லும்..

பள்ளியின் கடைசி நாளும் பட்டத்தின் பாராட்டும்
வள்ளி திருமணமும் வடிவேலன் தீர்த்தமும்
அம்மா அன்பும் ஆச்சி கொளுக்கட்டையும்..

எட்டிய வெற்றிகளும் எட்டா முடிவுகளும்
கட்டிய மனைவியும் கட்டில் அனுபவமும்
தொட்டில் தரு சுகமும் வாழ மகளும்..

தேடா உறவும் நிலையா
வாழ்வும் நில்லா உயிரும்
மூத்தவள் திருமணமும் பேத்தியின் பிறந்தநாளும்..

அப்பா சாவும்அடுத்தநாள் பாலுாற்றும்
அடுத்து கடா வெட்டும் அந்தியேட்டி அழைப்பும்..
அரையாண்டு மாசியமும் பறையும் சங்கும்..

பாடைப் பவணியும் எரியும் நெருப்பும்
உருகும் ஊனமும் கூடும் ஊரும்
கூத்தாடும் கும்பலும்
இவையெல்லாம் நினைவோடும்
மரணம் தொடும்போது..

-திசா.ஞானசந்திரன்-

 

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!

திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது. 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்துக் கொண்டனர்.

இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.

கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

miss srilanka
Miss-Srilanka22Miss SriLanka-11

12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்!

Sivakarthikeyan

சினிமா உலகில் படங்களின் வியாபாரத்தைப் பொறுத்துதான் நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான முதல் படமாகும். இதனால், கொலரை தூக்கிவிட்டபடி நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

மேலும், சம்பள விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே படாதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் அவர், இப்போது இன்னும் எகிறிப் பேசி வருகிறாராம். அதனால் சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு வட்டம் போட்டு வந்த பட்ஜெட் படாதிபதிகள், அவர் மேல்தட்டு ஹீரோவாகி விட்டார் என்று முடிவு செய்து டிராக்கை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனும் இனி தான் நடிக்கும் படங்களில் பிரபல ஹீரோயினிகள்தான் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று புதிய கண்டிசன் போட்டு வருபவர், தன்னை இயக்கும் இயக்குனர்களும் ஹிட் கொடுத்தவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். சிவாவின் இந்த தாறுமாறான கண்டிசனால் சிலர் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

 

சுவாரஸ்யமான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்..

பேய்ப் பெண்ணை பார்த்ததுண்டா நீங்கள்??

பெண்ணெண்றால் பேயும் இரங்கும் என்பார்கள் ஆனால் ஒரு பெண்ணே பேய் உருவத்தில் மாறிய விநோதம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது. பொதுவாக அழகு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள் தங்கள் அழகைக் கூட்டிக் கொள்ளத்தான் அதிக சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள் என நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அழகான உருவத்தை சிதைத்து அவலட்சணமான பேயாக தன்னை மாற்றிக் கொள்ள சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார் இப்பெண். அதுவும் ஒன்றிரண்டு சத்திரசிகிச்சை அல்ல..

பேய்ப் பெண்..

மெக்சிகோவைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டினா என்ற 37 வயதான பெண்ணே இப்படி சத்திரசிகிச்சை மூலம் தன்னை பேயாக்கியவர். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டட்டூஸ் பிரியை..

மரியா ஜோஸ்ன் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிக அளவில் டட்டூஸ் விதவிதமாக குத்தப்பட்டுள்ளது. மேலும் உடலின் பல பாகங்களை சத்திரசிகிச்சை மூலம் விகாரமாக மாற்றியுள்ளார்.

நீ உண்மையில் ரத்தக் காட்டேறியா??

தான் செல்லும் இடங்களிலெல்லாம் அவரை வழி மறித்து மக்கள் நீங்கள் ஒரு நிஜ ரத்தக் காட்டேறியா? எனக் கேட்பது இவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஆனால் இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவருடன் வெளியில் செல்லவே அஞ்சுகிறார்களாம். காரணம் வளைந்து கட்டி ரசிகர்கள் ஓட்டோகிராப் மற்ரும் போட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுக்கிறார்களாம்.

கலை ஆர்வம்..

தன் குழந்தைகளுக்கு சரியான தாயாக இருந்து சரியாக வழி நடத்துவதாக பெருமையுடன் கூறிக் கொள்ளும் மரியா ஜோஸ் தன் ஓய்வு நேரங்களில் தையல், சமையல் மற்றும் கலைப் பொருட்களைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவாராம்.

அம்மா நினைவாக..

உடம்பில் குத்தியுள்ள நட்சத்திர டட்டூஸ் அவரது தாயின் நினைவாக குத்தியதாம். மரியா சிறு வயதாக இருக்கும் போது அவர் தாய் அதிக நட்சத்திரங்களைக் காட்டி கதை சொல்லியுள்ளாராம். அதன் தாக்கமாகத் தான் இந்த நட்சத்திர டட்டூஸ்.

வெற்றி நிச்சயம்..

டட்டூஸ் பார்லர் வைத்து பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என்பது தான் மரியாவின் எதிர்கால லட்சியமாம். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மரியா அத்தொழிலில் தான் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையுடன் பேசுகிறார்.

மறுவாழ்வு ஆலோசகர்..

மதுவுக்கு அடிமையான கணவருடன் பத்தாண்டு காலம் வாழ்ந்த துயர வாழ்க்கையின் பலனாக தான் கற்றுக் கொண்ட பாடத்தை தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மரியா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

230 சத்திரசிகிச்சைகள்..

தன்னை அகோரமாக்கிக் கொள்ள இதுவரை கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகளைச் செய்து கொண்டுள்ள மரியா உடம்பின் பல பகுதிகளை மாற்றி அமைத்து விட்டார். பற்கள் கூட இவரது சத்திரசிகிச்சைக்கு தப்பவில்லை.

1 2 3 4 5 6 7 8 9

 

 

சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்!

santhanam

பொதுவாக சந்தானம்தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் அதிகமாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய வசனங்களைக் கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.

ஆனால், இந்த கலாய்ப்பு விஷயத்தில் சித்தார்த் கொஞ்சம் டீசன்ட் பேர்வழியாம். சந்தானம் பேசினால் பதிலுக்கு அவரும் பேசுவாராம். ஆனால், கதாநாயகிகள் அருகில் இருந்தால் மட்டும், தான் ஹீரோவாச்சே என்று சந்தானம் ஒரு வார்த்தை பேசினால் சித்தார்த்திடமிருந்து ஒன்பது வார்த்தைகள் ஓட்டமாய் வருமாம். இதனால் சில சமயங்களில் போனால் போகட்டும் என்று சித்தார்த்துக்கு விட்டுக்கொடுத்து தான் தோற்றுவிட்டது போல் சரண்டர் ஆகி விடுவாராம் சந்தானம். அதைப்பார்த்து, இவர்களுக்கிடையே என்னதான் டீலிங்கோ, சித்தார்த்துக்காக ரொம்பதான் விட்டுக்கொடுக்கிறார் சந்தானம் என்கிறார்கள் யூனிட்வாசிகள்.

 

விமானம் போல் பறக்கும் மோட்டார் சைக்கிள் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் சாதனை..

flying-bike

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன.

95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.

அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது மோட்டார் சைக்கிளில் பொம்மை மனிதன் உட்கார வைக்கப்பட்டிருந்தான். எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் எந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

முத்தரப்பு தொடரில் இருந்து சேவாக், கம்பீர், யுவராஜ் நீக்கம்..

sehwag-yuvraj-gambhir
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 28-ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11-ம் திகதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருவதால், அதே 15 வீரர்கள் முத்தரப்பு தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர்கான் ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெறவில்லை. சேவாக், கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் மிகவும் மோசமாக விளையாடியதால் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் பாகிஸ்தானுடன் ஒரு போட்டியில் யுவராஜூக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தாததால் தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இதேபோல் காயம் அடைந்துள்ள ஜாகீர்கான் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

21 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் கம்பிருக்கு முத்தரப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஷிகார் தவான்-ரோகித் சர்மா ஜோடி சிறந்த துவக்க வீரர்களாக பிரகாசிப்பதால் காம்பிர் பெயரை பரிசீலிக்கவில்லை.

இந்திய அணி: டோனி, ஷிகார் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா, விராத் கோலி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், இர்பான் பதான், அமித் மிஸ்ரா, வினய் குமார்.

 

யாரிடமும் கெஞ்ச மாட்டேன்- நடிகை சிநேகா..

sneha

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது.

சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன். எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள் அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடி எதிர்த்த 500 பேர் கைது..

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிங்டனில் இராணுவ முகாமில் கடந்த 27-ஆம் திகதி முதல் இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ முகாம் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள்.

இன்று மீண்டும் வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் அறிவித்தனர். இதனால் ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் இன்று காலை முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டிருந்தன. இராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குன்னூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதிதமிழர் விடுதலை முன்னணி, தலித் விடுதலை கட்சி, தமிழ் தேசிய இயக்கம், தமிழ் புரட்சி கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வணிகர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டனர்.

வக்கீல்கள், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்று என்று கோஷ மிட்டனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்த ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் சிலர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தனர். இலங்கை கொடியும் எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென வெலிங்டன் இராணுவ முகாம் முன்பு வீதியில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஊட்டி-குன்னூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர்.

 

சந்திரமுகி 2 வெளிவருமா? வராதா?

chandramuki

கடந்த 1993ம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த மணிச்சித்திரத்தாளு என்ற படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது.

இப்படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார்.

கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர். தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை.

ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் சூப்பர் வெற்றிப்படமானது.

இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார்.

கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஷோபனா கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்படி என்றால் சந்திரமுகி இரண்டாம் பாகமும் வருமா? அதிலும் ரஜினிகாந்த் நடிப்பாரா? என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கால்களை இழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் சூ அஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இவரது இரு கால்களும் செயல் இழந்தன. எனினும், நம்பிக்கையை கை விடாத அஸ்டின் தான் கற்றிருந்த நீச்சல் மீது அலாதியான காதல் கொண்டிருந்தார்.

இதனால் மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார். இதன் மூலம் மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின் கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்த நாற்காலியில் விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம் 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும். இதனால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும், ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

s1 s2

சிங்கப்பூர், மலேசியா முழுவதும் திடீர் புகை மண்டலம்..

malaysia

கடந்த சில நாட்களுக்கு முன் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட பயங்கர காடுத்தீயினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

எனவே அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கண் எரிச்சல், மற்றும் மூச்சுவிட திணறி வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வரவும் பெருமளவு குறைந்துவிட்டது.

சுமத்ரா தீவின் காட்டுத்தீயை அணைக்க பெருமுயற்சி செய்தும் கடந்த பத்து நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

 

காகிதத்தில் இப்படியும் சிற்பங்கள் செய்ய முடியுமா??

நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும்.ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல.

இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும்.ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபத்தொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக அவர் கூறியுள்ளார்
தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் இணை ஓவியத்துறை பேராசிரியராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

வெவ்வேறு நிறமுடைய 100 காகித அடுக்குகளை கொண்டு மேற்படி ஒவ்வொரு காகித சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வடிவமைத்து முடிப்பதற்கு ஒவ்வொன்றிற்கும் 80 மணித்தியாலங்கள் எடுத்தனவாம். சுமார் இரண்டு வருடங்களை காகித சிற்பங்களுக்காக அவர் செலவிட்டுள்ளார். சுமார் 134 காகித அடுக்குகள் இக் காகித சிற்பத்திற்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

1 2 3 4 5 6 7 8 9

 

பறவைகளின் அதிசய நடனம்…

 

பறவைகளை ரசிக்காதவர்கள் இந்த உலகில் இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட பறவைகளின் நடனத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்..

 

உலகின் வேகமான கணணியைவெளியிட்டது சீனா!!!

இன்று கணணி இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கணனியின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. கணணியை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம். இன்று அந்த உயரத்தையே தூக்கி சாப்பிடும் விதமாக சீனா புதிய கணணி ஒன்றை வடிவமைத்துள்ளது.

இது ஒரு நிமிடத்தில் 33 செயல்களை செய்யும் திறன் கொண்ட “சுப்பர் கொம்பியூட்டர்” ஆகும். இதன் மூலம் நாம் அடுத்த தலைமுறைக் கணனியில் நாம் முதற் படியை எடுத்து வைத்துள்ளோம். இதன் பெயர் டினாஹே2 என்று வைத்துள்ளனர்.

படங்கள்..

1 2 3 4 5 6 7 8