மீண்டும் இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

தங்கம்..

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 672,445.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,400 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பளையில் பயங்கர விபத்து சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

பளையில்..

பளையில் உள்ள புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இன்றைய தினம் (29-11-2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,பளை நகர பகுதியிலிருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இச்சம்பவத்தில் பளை நகரம் பளையை சேர்ந்த 20 வயதான குணம் கணேசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தம்பதிகள் வெட்டிக்கொலை : பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30.11.2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் இரத்த வெள்ளத்தில் இருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் (வயது 72) என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவி!!

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான இரண்டாம் மொழி (சிங்களம்) தரம்-6 எழுத்தாக்கப் போட்டியில் கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை மாணவி ரவிக்குமார் சதுர்சிகா இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

இம் மாணவி வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமையுடன் இந்நிலையை அடைய வழிப்படுத்திய ஆசிரியர் நிரஞ்சலா ஶ்ரீநவதீபன், அதிபர் புனிதவதி கிருபராசா, இரண்டாம்மொழி (சிங்களம்)ஆசிரிய ஆலோசகர் யோ.முகுந்தன் ஆகியோரை பாடசாலை சமூகம் பாராட்டி மகிழ்கின்றது.

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவான முதல் மாணவி என்ற பெயரையும் தனதாக்கி கொண்டுள்ளார் மாணவி ரவிக்குமார் சதுர்சிகா.

மரண அறிவித்தல் : சண்முகம் மனோன்மணி!!

மட்டக்களப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மனோன்மணி அவர்கள் இன்று 2023.11.29 இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும் கணேசமூர்த்தி (கொழும்பு), சாந்தா (கொழும்பு), கனகசுந்தரம் (சன்சிகா ஜீவலறி- வவுனியா), உதயஇந்திராணி (நோர்வே), ஆனந்தராசா (உதயா ஜீவலறி- வவுனியா), கென்சனா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேணுகா, மேகநாதன், யசோதா, வனிதா, நிர்மலன், பாலா ஆகியோரின் மாமியாரும்,அஜிந்திரா, இந்துஜா, மோனலோயன், சன்சிகா, திவினேஸ்வரன், கேசாகினி, கீர்த்திகா, சதுஸ்ரிகா, சானுகா, சஸ்விகா, டினேஸ்கர், உமேஷ்கர் (நேர்வே), அக்ஷதா, ரமிஸ்கா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடன் அவரது இல்லத்தில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை (02.12) காலை எடுத்துச் செல்லப்பட்டு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8 தொடக்கம் மாலை 10 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிறுக் கிழமை (03.12) தகனக் கிரியைகள் இடம்பெற்று பொரளை மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
ராஜன்
உதயா ஜீவலறி
வவுனியா

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு : அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு!!

பாபா வங்கா..

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

அந்த வகையில், பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளன.ரஷ்ய அதிபர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம், மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.

அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும் புவி, அரசியல் பதற்றங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை ஏற்படும். பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.

கேன்சர், அல்சைமர் போன்ற பெரிய மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்தை எட்டும்.2024ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும். ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.பாபா வங்காவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம்.ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம்.

இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.பாபா வங்காவின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போகும் என்றும், அதிக வெள்ள பெருக்குகள் ஏற்படும் என்றும், பஞ்சம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளார்.சீனாவுடன் கடற்படை மோதல் ஏற்படும். அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார். போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.

நண்பனின் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்!!

சிகிரியாவில்..

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை தாக்கியதில் அது இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அவிந்த இஷான் சமரநாயக்க என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞன் சிகிரியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பகுதியிள்ள நெல் வயலை சேதப்படுத்திய யானை பின்னர் இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் சுவரை தாக்கியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச் சேர்ந்த சாருஜன் வயது 22 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறு வயதில் தந்தை பிரிந்த சென்ற நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்த்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இளைஞர் உயிரழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமியால் அதிர்ச்சி!!

பாணந்துறையில்..

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி ஒருவரை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பிரிவு அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர் நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கொஸ்பலான, பொல்பிதிமுகலான பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியே இவ்வாறு கடலில் அடித்து செல்லப்பட்டார்.

உயிரைக் காப்பாற்றிய சிறுமியை தாயிடம் ஒப்படைத்ததில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் குதித்திருப்பது தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு பெருமை தேடிக்கொடுத்த 19 மாணவர்கள்!!

மலேசியாவில்..

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனக்கணித போட்டி எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள மலேசியாவில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடொன்றில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியில்..

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன இத்தாலியில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின் உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.அதேவேளை உயிரிழந்தவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும் தெரிய வருகிறது.

யாழில் துயரத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் உயிரிழந்த இளம் தாயாருக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா (Pneumonia) ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.

தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா (Pneumonia) ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.மேலும் பெண்னின் உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஓமானில் உயிரிழந்த இலங்கைப் பெண் : மர்மம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!!

ஓமானில்..

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் புத்தளம் – ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது தாய், தந்தையருக்கு உதவியாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.இருப்பினும், திருமணமாகாத குறித்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் கூறுகையில், அவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் வலிமை இல்லை என தெரிவித்தனர்.

போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நிகவெரட்டிய கொட்டாஹெர ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் மற்றும் ஒருவர் ஊடாக சுற்றுலா விசா பெற்றுக்கொடுத்து இந்த பெண் மோசடியான முறையில் கடந்த (20.07.2023) ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓமானில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய பெண் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பின் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், அவர் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

மரண அறிவித்தல் : ஜினதாசா தேவராசா!!

மடத்தடி அல்வாய் கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜினதாசா தேவராசா (ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மன்னார் முல்லைத்தீவு வட்டாரக்கணக்காளரும் முல்லைத்தீவு சாலை முகாமையாளரும்) அவர்கள் 28.11.2023 செவ்வாயக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஜினதாசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ,ராசேந்திரம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னபூரணாதேவி (பவானி) அவர்களின் அன்புக் கணவரும், தர்சனின் (இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை உத்தியோகத்தர்) பாசமிகு தந்தையும் ஆவார்.

காலஞ்சென்ற,ராஜகருணா,பாக்கியராசா,மற்றும் ஜவீராசா,சாந்தரூபினியின் (ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மல்லிகாதேவி, பாக்கியம், காலஞ்சென்ற சாந்தாதேவி, காலஞ்சென்ற ஞானச்சந்திரன், ரஞ்சினி (கனடா), ரஞ்சன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் சங்கீதா (சுவிஸ்), ரகுபதி (கனடா), ஆகியோரின் சகலனும்,நிலாந்தினி,சுஜேந்திரன்,ஜான்சி,விஜிதா,காலஞ்சென்ற விஜிந்தன், சபேசன், தர்சினி ஆகியோரின் சித்தப்பாவும், பிரவீன், கிரி (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும், மகிந்தன் (லண்டன்), பிரகாஸ்,பிரசாத் (கனடா), மேசி, டெய்சி, அக்சயா (சுவிஸ்), பவித்திரா (சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ,இறுதிக்கிரியைகள் 30.11.2023 வியாழக்கிழமை 10.00 மணிக்கு பண்டாரிக்குளம், வவுனியா, அவரது ,இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்வதற்காக தட்சனாங்குளம் ,இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

தகவல்
தர்சன் (மகன்)
0778606660

6 வயது சிறுமி கடத்தல்… சகோதரனுடன் டியூசன் சென்ற போது நடந்த விபரீதம்!!

கொல்லத்தில்..

கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜியின் மகள் என தெரிய வந்துள்ளது. காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி சிறுமியை கடத்தியவர்கள் வெள்ளை நிற ஹோண்டா அமேஸ் காரில் வந்தனர்.

திங்கட்கிழமை மாலை சிறுமி தனது மூத்த சகோதரன் ஜோனத்தனுடன் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் இருந்ததாக சிறுமியின் அண்ணன் ஜோனத்தன் காவல்துறையினரிடம் கூறினார். காரில் இருந்தவர்கள் தாயிடம் கொடுக்கச் சொல்லி தன்னிடம் ஒரு பேப்பரைத் தந்துவிட்டு, சகோதரியைக் கடத்திச் சென்று விட்டதாக கூறினார்.

ஜோனத்தன் கடத்தல்காரர்களைத் தடுக்க முயற்சித்தார். அவரை தள்ளிவிட்டு கார் நகர ஆரம்பித்து விட்டதாக சகோதரர் கூறியுள்ளார். கார் தட்டி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் தெளிவாக இல்லை. கார் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டது . ஒரு வேளை அந்த காரின் நம்பர் போலியானதாகவும் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

பின்னர், கடத்தல் கும்பல் குழந்தையின் தாயை அழைத்து சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். கொல்லம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற சிறுமியைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்நிலையத்துக்கு தெரிவிக்கலாம் என கிராமப் பஞ்சாயத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவி எண்கள் 9946923282, 9495578999

கர்ப்பிணி மனைவியும் கணவனும் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் அரவிந்தன். இவர் கர்நாடக மாநிலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அபிநயாவும் காதலித்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. இதன் அடையாளமாக தற்போது அபிநயா நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊர் செல்லலாம் என முடிவு செய்து இருவரும் நேற்று இரவு பைக்கில் அரவிந்தனும், அபிநயாவும் தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டேம் கூட்ரோட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்தத். இதனால் பைக் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தடுப்பில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.

இதில் அரவிந்தனும் அபிநயாவும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலியே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.