உடல் முழுவதும் முடி : 16 குழந்தைகள் ஓநாயாக மாறும் கோரம்!!

உடல் முழுவதும் முடி

ஸ்பெயினில் 16 குழந்தைகள் உடல் முழுவதும் முடி வளரும் ஓநாய் நோய் தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினின் Costa Del Sol பகுதியை சோர்ந்த 16 குழந்தைகளே இந்நோய் தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலி மருந்தை உட்கொண்ட பின்னர் சுமார் 16 குழந்தைகளுக்கு ஓநாய் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Costa Del Sol-வில் அஜீரண மருந்துகளின் போலியான சில மருந்துகள் வழங்கப்பட்டதன் விளைவாக குழந்தைகளுக்கு உடல் முழுவதும் முடி உருவாக்கியுள்ளது. அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு மருந்தான omeprazole என்ற மருந்தின் போலியை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

alopecia நோயாளிகளுக்கு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் minoxidil என்ற மருந்து குழந்தைகள் உட்கொள்ளும் ம ருந்தில் கலக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினில் இப்போது போலி பொருட்களை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொண்டதாக நாட்டின் மருந்து நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Malaga-வை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான Farma-Quimica Sur SL இந்தியாவில் இருந்து போலி மருந்துகளை வாங்கியதாக நம்பப்படுகிறது. மேலும், 30 மருந்தகங்கள் வரை மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலி omeprazole-வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான omeprazole பிரச்னை கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இது மருந்துகளின் மாத்திரை வடிவத்தை பாதிக்காது என்று ஸ்பெயின் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், குழந்தைகள் மருந்து உட்கொள்வதை நிறுத்தும்போது ஏற்படும் திடீர் முடி வளர்ச்சி நிற்கும் என்று கூறப்படுகிறது.

அன்று விபத்தில் துண்டான கால் : இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்!!

மானசி ஜோஷி

பேட்மிண்டன் உலக சம்பியனில் தங்கம் வென்ற முதல் இந்தியரான பி.வி.சிந்துவுடன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷியும் பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

சுவிஸ்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இறுதிப்போட்டியில் 30 வயதான மானசி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பருல் பர்மரை எதிர்கொண்டார். இதில், 21-12, 21-7 என்ற புள்ளிகளுடன் தோற்கடித்து தனது முதல் தங்கத்தை வென்றார்.

2011 ஆம் ஆண்டு, மும்பையில் சாலை விபத்தில் சிக்கிய மானசி அவரது இடது காலை இழந்தார். மேலும், அவருக்கு கைகள் உடைந்து பல காயங்கள் ஏற்பட்டது நினைவுக் கூரதக்கது.

அத்தகைய கடினமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள மானசி, இன்று பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, அனைவருக்கு ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார்.

வெற்றிக்கு பின் பேட்டியளித்த மானசி, நான் மிகவும் கடினமாக பயிற்சி பெற்றேன், ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி செய்தேன். எனது உடற்தகுதி மீது கவனம் செலுத்தினேன். எனவே கொஞ்சம் எடை இழந்து அதிக தசையைப் பெற்றேன். ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டேன், வாரத்தில் ஆறு முறை பயற்சி செய்தேன்.

இதற்காக பயிற்சியாளர் கோபி -சார்க்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன், சிறந்த அங்கீகாரம் மற்றும் ஆதரவின் அடிப்படையில் இந்த பொன்னான தருணத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தபின்,

குறிப்பாக பாராலிம்பிக்ஸ் மற்றும் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவைத் துரத்த உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களைப் பெறுவது போன்றது இது என மானசி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய பாரா அணி 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.

அடுத்தடுத்து மூன்று வாகனங்களுடன் மோதிய வேன்!!

விபத்து

கலேவெல – மொரகொல்ல பிரதான வீதியின் ஹொம்பாவ பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 8 பெண்களும் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற போது முச்சக்கர வண்டி ஒன்றில் ஏழு பேர் பயணித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்!!

மூடப்படவுள்ள பாடசாலைகள்

இலங்கையில் 12 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் வினாத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு – ரோயல் கல்லூரி, கொழும்பு – நலந்தா கல்லூரி, பம்பலபிட்டி இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதய, இரத்தினபுரி மிஹிந்து கல்லூரி, குருநாகல் புனித ஆனா, கண்டி கிங்ஸ்வுட், கண்டி விஹாரமாதேவி மகளிர் மஹா வித்தியாலயம், கண்டி சீதாதேவி மகளிர் கல்லூரி, காலி வித்தியாலோக, பதுளை விஹாரமாதேவி மகளிர் கல்லூரி மற்றும் பதுளை – ஊவா மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

குறித்த பாடசாலைகளை தவிர்த்து ஏனைய அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் இரண்டாம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா மற்றும் விமான டிக்கெட் என்பனவற்றை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவு செல்வதாக கூறிய இந்த இளைஞன் டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. அவர் நேற்று காலை 10 மணிக்கு எம்ரேட்ஸ் ஈ.கே – 650 ரக விமானத்தில் டுபாய் சென்று, அங்கிருந்து பிரான்ஸ் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும் நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தி அவரது ஆவணங்கள் சோதனைக்கு இடப்பட்டுள்ளது. இதன்போது பாரிய மோசடி அம்பலமாகி உள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச இளைஞனின் பிரான்ஸ் ஊடாக ஸ்பெயின் செல்வதற்கான சட்டரீதியான விசா தகவலைகளை மறைத்து இந்த இளைஞனின் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இளைஞன் முதலில் மாலைதீவிற்கு செல்வதாக விமான நிலையத்தின் உள்ளே சற்று தூரம் சென்று பிரான்ஸ் செல்லும் எமிரேட்ஸ் விமானத்திற்கு செல்ல முயற்சித்துள்ளார். அதன் போது அவர் சிக்கியுள்ளார்.

கழிவறையால் உயிரைவிட்ட இளம்பெண்!!

இளம்பெண்

தமிழகத்தில் கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொ லை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலியில் உள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஷாலினிக்கும் சசிகுமாருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்த நாள் முதலே வீட்டில் கழிவறை கட்டித் தர வேண்டும் என கணவன் சசிக்குமாரிடம் ஷாலினி வற்புறுத்தி வந்தார். ஆனால் 7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி கழிவறை கட்டி தராமல் சசிகுமார் காலம் தாழ்த்தி வந்தார்.

இது தொடர்பாக சசிகுமாருடனும், மாமனார் பால்பாண்டியுடனும் அடிக்கடி ஷாலினி ச ண்டை போட்டு வந்த நிலையில் பதிலுக்கு அவர்களும் ஷாலினியை தி ட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கழிவறை தொடர்பாக மீண்டும் பி ரச்னை எழுந்து வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ம னமுடைந்த ஷாலினி அறைக்குள் சென்று தூ க்கிட்டுத் தற்கொ லை செய்துகொண்டதாக சசிகுமார் மற்றும் பால்பாண்டியும் அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டார், ஷாலினியை கணவரும் மாமனாரும் அ டித்துக் கொ ன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து இது கொ லையா அல்லது த ற்கொ லையா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே கேள்வியால் கோடியை இழந்து லட்சாதிபதியான பெண்!!

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில், பெண்ணொருவர் 50 லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளார்.

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை, நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு பரிசுத் தொகைக்கும் ஏற்றவாறு கேள்விகள் கேட்கப்படும். எனினும், போட்டியாளர்களில் பெரும்பாலானோர் சில லட்சங்களுடனேயே ஆட்டத்தை விட்டு வெளியேறிவிடுவர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்னா குப்தா என்ற பெண் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து சரியான பதில்களை அளித்து வந்த அவர், படிபடியாக 50 லட்சம் ரூபாய் வரை வென்றார்.

அதன்பின்னர், ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வி கேட்கப்பட்டது. 1944ஆம் ஆண்டில், காங்லா டோங்பி போர் இன்றைய எந்த இந்திய மாநில தலைநகருக்கு அருகில் நடந்தது? என்பதே அந்த கேள்வி. ஆனால், அந்த கேள்விக்கு சர்னா குப்தாவுக்கு பதில் தெரியாததால், அவர் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டியில் இருந்து விடைபெற்றார்.

அந்த கேள்விக்கு இட்டாநகர், இம்பால், கவுகாத்தி, கொஹிமா என நான்கு விடைகள் தரப்பட்டன. அதில் இம்பால் என்பதே சரியான விடை ஆகும்.

எனினும் லட்சாதிபதியான சர்னா குப்தா, மத்திய பிரதேசத்தில் தொழிலாளர் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று சீ ரழித்த மந்திரவாதி : தந்தையின் மூடநம்பிக்கையால் நடந்த சம்பவம்!!

மூடநம்பிக்கையால் நடந்த சம்பவம்

கேரளாவில் சிறுமிக்கு சூனியம் எடுப்பதாக கூறி நடுக்காட்டிற்கு அழைத்து சென்று பா லியல் தொ ல்லை கொடுத்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகளுக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி தலைவலி வருவது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

தந்தை கூலித் தொழிலாளி என்பதால், பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. தலைவலிக்கு வேறு எதுவும் காரணம் இருக்குமோ என்று பயந்த அவர், அந்த ஊரில் மந்திரவாதி, பில்லி, சூனியம் எடுப்பவர் என்று கூறப்படும் ரூபேஷ்(35) என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவரின் நோய் குறித்து கேட்டறிந்த ரூபேஷ், அவரிடம் சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மகளை ரூபேஷிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரூபேஷ், சிறுமியை பார்த்தவுடன், தனி இடத்தில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.


அங்கு யாருமில்லாத இடத்தில் சிறுமிக்கு பா லியல் தொ ல்லை தர சிறுமி அலறி க த்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று, ரூபேஷை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சிறுமிக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததை ரூபேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்களை கொ ன்று சடலத்துடன்.. கூடா நட்பால் வந்த வினை!!

கூடா நட்பால் வந்த வினை

தமிழகத்தில் ஒரே இரவில் தாய், மகள்களை கொ லை செய்துவிட்டு உ டல்களுடன் தவறாக நடந்து கொண்ட கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் இருக்கும் வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு பொலிசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனால் அங்கு விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ளே 4 பெண்கள் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அ திர்ச்சியடந்தனர். அதன் பின் அந்த உ டல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொ லை செய்யப்பட்டவர்கள் பாண்டியம்மாள், அவரின் மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா எனத் தெரியவந்தது. இந்த கொ லைக்கு முக்கிய காரணம் கூடா நட்பு தான் என்பதை கண்டுபிடித்த பொலிசார், இது தொடர்பாக ஸ்வீட் மாஸ்டர் உதயனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,

பாண்டியம்மாளின் சொந்த ஊர் காரைக்குடி திருப்பத்தூர்- கட்டையாம்பட்டி கிராமம்.
பாண்டியம்மாளின் கணவர் சின்ராஜ். கருத்துவேறுபாடு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் 3 பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பாண்டியம்மாள், காரைக்குடியில் உள்ள ஸ்வீட்ஸ் கடைக்கு வேலைக்குச் சென்றார்.

அங்கு தான் உதையனை அவர் சந்தித்துள்ளார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது உதயன் உன்னை மற்றும் 3 குழந்தைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற, அவரின் பேச்சை நம்பி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாள், அவரின் குழந்தைகள் மற்றும் உதயன் சென்னைக்கு வந்து, ராயப்பேட்டை முத்து தெருவில் கணவன்-மனைவி என்ற அறிமுகத்துடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.


அதன் பின் உதயன், சென்னையிலும் ஸ்வீட்ஸ் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்துவந்துள்ளார். குழந்தைகளின் படிப்பு மற்றும் சில காரணங்களுக்காக உதயன், பாண்டியம்மாளின் கணவரின் பெயரான சின்ராஜ் பெயரில் வாழத் தொடங்கினர்.

இதன் காரணமாகவே சின்ராஜ் என்கிற உதயன் என்ற பெயரில் ஆவணங்கள் இருந்தன. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை எந்த பிரச்னை இல்லாமல் சென்ற நிலையில், திடீரென்று உதயன் பாண்டியம்மாளின் மகள் ஒருவரிடம், என்னை நீ கல்யாணம் செய்துகொள்கிறாயா? என்று கேட்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியம்மாள், அவரை வீட்டு விட்டு துரத்தியுள்ளார்.

இருப்பினும் உதயன் வீட்டிற்கு வெளியிலே தங்கி வந்ததால், அவ்வப்போது குடும்பச் செலவுக்காகப் பணம் கொடுத்து வந்துள்ளார். அப்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரவு நேரம் வாசலில் படுத்திருந்த உதயன் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து, பாண்டியம்மாள், மகள்கள் மூன்று பேரையும் அம்மி கல்லை போட்டு கொ டூரமாக கொ லை செய்துள்ளார்.

அதன் பின் இ றந்து கிடந்த பாண்டியம்மாள் மகள்களிடம் உதயன் தவறாக நடந்து கொண்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், நீதிபதி மஞ்சுளா குற்றவாளி உதயனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அப்படி அபாராத தொகையை கட்டவில்லை என்றா, அதற்கு பதிலாக மேலும் 2 ஆண்டுகள் சிறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அழகுக்கு ஆசைப்படும் இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

அழகினை மெருகூட்ட இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் கிறீம்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அ திர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனடிப்படையில் தற்போது சந்தையில் உள்ள சில கிறீம் வகைகளில் குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொழிநுட்ப நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சருமத்திற்கு பயன்படுத்தக் கூடிய கிறீம் வகைகளில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய உலோகத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, ஒரு கிலோகிராமில் இருக்கக்கூடிய ஆகக்கூடிய இரசாயனத்தின் அளவு ஒரு மில்லிகிராம் ஆகும்.

இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக உள்ள கிறீம் வகைகளில் கிலோகிராம் ஒன்றில் 11 ஆயிரம் மில்லி கிராமுக்கும் மேற்பட்ட இரசாயன கலவை அடங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிக்க பல்வேறு இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு இரசாயன பொருட்களை பயன்படுத்தும் போது அளவுக்கு அதிகமான இரசாயனம் அடங்கிய அழகினை மெருகூட்டும் பொருட்கள் சருமம், கண் உள்ளிட்ட உடலின் பல பாகங்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தப்படலாம் என அழகியல் நிபுணர்கள்

வவுனியா – பாலி ஆற்றின் காணியை சுவீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா!!

காணியை சுவீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்

வவுனியா – பாலி ஆற்றின் ஒருபகுதி காணியை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா சுவீகரித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் றூ.கேதீஸ்வரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காடழித்தல் மற்றும் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரவில் காடழித்து விவசாயம் செய்யப்பட்டு வருவதுடன் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் அடாத்தாக காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்களது 28.06.2019 திகதி முறைப்பாட்டு கடிதத்தின்படி குறிப்பிடப்பட்ட காணியானது, தாங்கள் குறிப்பிட்டது போல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி சுவீகரிக்கப்படவில்லை என்பது அறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் எவ்வாறு காணியை சுவீகரித்தார்? என்பதற்கு அப்பால், சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற்றுக்கொள்ள எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது? என்பது தொடர்பில் அப்பகுதிமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாந்தி சிறிஸ்கந்தராசா பதவியில் இருந்த காலத்தில் சுவீகரித்த காணியை, 18 வயதான அவரின் மகனின் பெயரில் பதிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அது தடுக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தெளிவுபடுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற வேண்டும் எனவும், அல்லது காணி அற்ற ஏழை குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும், வன அழிப்பில் அழிவுக்குள்ளான பெறுமதி மிக்க தாவரங்களிற்கான நட்ட ஈட்டினை பெற்று தர வேண்டும் எனவும் கோருகின்றனர்.

-தமிழ்வின்-

இளம் சகோதரியும் சகோதரனும் கொ டூரமாக கொ லை!!

கொ டூரமாக கொ லை

புத்தளத்தில் இளம் யுவதி ஒருவருவரும் சிறுவன் ஒருவரும் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் கூரிய ஆ யுதமொன்றினால் தா க்கப்பட்டு இவர்கள் கொ லை செய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய யுவதியும் அவரது சகோதரரான 8 வயதுடைய சிறுவனுமே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளனர். கொ லைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொ லைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

18 வயது இளைஞனின் உயிரை பறித்த பேஸ்புக் காதல்!!

பேஸ்புக் காதல்

திருகோணமலை – வான்எல பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக குறித்த இளைஞன் தற்கொ லை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வான் – எல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய என்.டபிள்யூ.அமில நிரோசன் என தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியை இளைஞன் பேஸ்புக் மூலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் குறுந்தகவல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்த இருவருக்குமிடையில் நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த இளைஞன் தனது அறையில் வைத்து தற்கொ லை செய்துள்ளார். உ யிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் ஏற்றப்பட்ட சுதந்திரவான பட்டம்!!

சுதந்திரவான பட்டம்

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் மாவட்ட மட்டங்களில் நடாத்தப்படுகின்ற சுதந்திரவானம் எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் பட்டமேற்றும் நிகழ்வு வவுனியா மாவட்ட கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறுவர் கழக சிறுவர்களின் பங்களிப்பில் இன்று (27.08.2019) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதி வவுனியா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பாலகுமார் முதலாவது பட்டத்தினை ஏற்றி வைத்ததுடன் ஏனைய சிறுவர்களும் தங்களது பட்டங்களை ஏற்றினார்கள்.

பட்டமேற்றும் நிகழ்வில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி , கள இயக்க கிளை பிரதம முகாமைத்துவ உதவியாளர் கிருஸ்னதேவா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் தட்சாயினி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டமேற்றும் மரபு தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுவதினால் சிறுவர்கள் மூலம் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாகவே இப் பட்டமேற்றும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்கொ லைக்கு முன் மகளுடன் பாசமாக செல்பி எடுத்துக்கொண்ட தாய்!!

பாசமாக செல்பி எடுத்துக்கொண்ட தாய்

கர்நாடக மாநிலத்தில் தாய்- மகள் இருவரும் ஆற்றில் குதித்து தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா (38) மற்றும் அவருடைய மகள் சௌமியா (19) இருவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, கபிலா ஆற்றில் இரண்டு பெண்களின் ச டலங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற பொலிஸார் தற்கொ லை செய்துகொண்ட இருவரும் மஞ்சுளா மற்றும் அவருடைய மகள் என்பதை அடையாளம் கண்டனர்.

இருவரின் உ டலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், தற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இருவரும் தற்கொ லைக்கு முன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொசு கடித்ததால் மரணத்தை தொட்ட இளம்பெண் : மூன்று நிமிடங்கள் துடிக்க மறந்த இதயம்!!

துடிக்க மறந்த இதயம்

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கொசு கடித்ததால் நோய்த்தொற்று ஏற்பட்டு ம ரணத்தைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார். எஸ்ஸெக்சைச் சேர்ந்த கிம் ராபின்சன் (25), தனது வீட்டின் பின்புறம் துணி காயப்போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.


அப்போது கொசு ஒன்று அவரை கடிக்க, அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது கிம்முக்கு. மறுநாள் கால் பயங்கரமாக வீங்கியதோடு, அவ்வப்போது தலை சுற்றலும் ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.

காலில் கொசு கடித்த கா யத்தின் வழியே பயங்கர கிருமி ஒன்று உடலுக்குள் நுழைந்ததால் கிம்மின் உடல் முழுவதும் ப யங்கரமாக வீங்கிவிட, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலை அகற்ற வேண்டியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். தனது காலை அகற்றினால் தன்னை மீண்டும் மயக்கத்திலிருந்து எழுப்பவே வேண்டாம் என்று கூறியிருக்கிறார் கிம்.

மருத்துவர்கள் அவரது காலில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, உடல் முழுவதும் அந்த கிருமியின் நச்சுத்தொற்று பரவி விட்டதால் கிம்முடைய இதயம் துடிப்பதை நிறுத்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட அவர் இ றந்து போனதையொத்த ஒரு சம்பவத்திற்குப்பிறகு, மூன்று நிமிடங்கள் ஆனதும், மீண்டும் அவரது இதயம் துடிக்கத் தொடங்கியுள்ளது. அவரது காலிலுள்ள பாதிக்கப்பட்ட சதையை அகற்றிய மருத்துவர்கள், கிம்மின் வயிற்றிலிருந்து தோலை எடுத்து காலில் வைத்து தைத்திருக்கிறார்கள்.

பின்னர் மருத்துவ ரீதியிலான கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட கிம், ஐந்து நாட்கள் கோமாவிலேயே இருந்திருக்கிறார். கோமாவிலிருந்து எழுந்தபின், பேசுவது, நடப்பது, கைகளை பயன்படுத்துவது என எல்லாவற்றையும் மறந்து போன கிம்முக்கு, மீண்டும் அடிப்படை செயல்கள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கொசுக்கடியில் தொடங்கிய பிரச்சினை தான் மூன்று நிமிடங்கள் உ யிரிழக்கும் நிலைக்கு தன்னை ஆளாக்கியிருப்பதைக் குறித்து கேள்விப்பட்டதிலிருந்து அச்சத்திலேயே இருப்பதாக கூறியுள்ள கிம், குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிவித்துள்ளாராம். கிம்முடைய கால்களை சரி செய்ய இன்னும் அவருக்கு இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.