T20 தொடரை 2-0 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

Australia's players pose after winning the final T20 international cricket match between Sri Lanka and Australia at the R. Premadasa Cricket Stadium in Colombo on September 9, 2016. / AFP / ISHARA S.KODIKARA (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது.

இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது.

அந்த அணி சார்பாக மெக்ஸ்வெல் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இறுதியாக 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை இந்தப் போட்டி இலங்கை அணி வீரர் டீ.எம் தில்ஷான் விளையாடிய இறுதிப் போட்டி என்பதும் இங்கு கூறத்தக்கது.

அதன்படி தனது இறுதிப் போட்டியில் டீ.எம்.தில்ஷான் 08 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்துவிட்டு வருமாறு சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு!!

sampanthan_sangaree

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலையை உணராமல் கூட்டமைப்பு உறுப்பினர் காலம் கடத்தி வருவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைப் பறைசாற்றி, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி சில நோக்கங்களை அடைவதற்கு எத்தகைய கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற தலைப்பில் ஆறு விடயங்களை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதில் முதலாவதாக, இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி செயற்படுவதாகவும் இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிகை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எதுவித விசாரணைகளுமின்றி பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துததல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

100 நுளம்புகளைப் போத்தலில் அடைத்து பாராளுமன்றம் கொண்டுசென்ற பாராளுமன்ற உறுப்பினர்!!

mosquito

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 100 நுளம்புகளை போத்தலொன்றில் அடைத்து பாராளுமன்றத்திற்கு எடுத்துச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் ஸிக்கா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் இதுவரையில் அரசு சார்பில் நோய் பரவலைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாததைத் தாம் கண்டிப்பதாகவும் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டேவிட் ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

ஸிக்கா வைரஸைப் பரப்பும் 100 நுளம்புகளைப் பிடித்து போத்தலில் அடைத்து பாராளுமன்றம் சென்ற டேவிட் ஜோலி, நிலைமையின் தீவிரத்தையும் அச்சுறுத்தலையும் உணர்த்தவே தாம் இந்த வழிமுறையைக் கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் பாலத்திலிருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து : 21 பேர் பலி!!

bus

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள மனித்ரி பகுதியில் பஸ் ஒன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 50 அடி கால்வாயில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே 14 பேரும், காயத்தினால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்களில் தெரியவந்துள்ளது.

சுமார் 50 பேருடன் பாலத்தில் பயணித்த போது நெரிசல் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் பஸ்ஸினை மோதியுள்ளார்.

இதன்போது, பஸ் சுவற்றை உடைத்துக் கொண்டு கால்வாயில் வீழ்ந்துள்ளது.

இணைந்த நேர அட்டவணை பக்கசார்பானது : ஒத்துழைக்கப்போவதில்லை : வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை!!

img_0281

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இன்றைய தினம் (09.09.2016) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லையென இ.போ.ச இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வடமாகாண சபையினால் ஒரு பாதையில் தனியார் பேரூந்துக்கு 60 வீத சேவையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 வீத சேவையும் வழங்கியிருப்பதுடன் இன்று இலங்கை போக்குவரத்துசபை சிறந்த சேவையை வழங்கிவரும் வவுனியா – யாழ்ப்பாணம், வவுனியா – மன்னார், மன்னார் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு போன்ற சில பாதைகளுக்கு மட்டுமே பாதை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அட்டவனையினால் எமது சாலைக்கு வருமான வீழ்ச்சி ஏற்படும்போது 2500 மேற்பட்ட எமது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகின்றது. அத்துடன் பருவகால சீட்டு பெற்று உரிய நேரத்துக்கு செல்லவேண்டிய மாணவர்கள், உத்தியோகத்தர்களின் பயணங்களிலும் தாமதம் ஏற்படும்.

அத்துடன் எம்மால் பணியாற்றி வந்த முக்கிய நேரங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேரூந்துகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களுக்கு நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை. எனவே ஏனைய இடங்களைப்போல் 50 இற்கு 50 இற்கு என்ற வீதத்தில் சேவையில் ஈடுபடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டால் மாத்திரமே நாம் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம்.

அத்துடன் பிராந்திய முகாமையாளர் பிராந்திய செயலாற்று முகாமையாளர், சாலை முகாமையாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புவதாவது ‘உங்கள் பதவிக்காகவோ வேறு பதவிக்காகவோ தொழிற்சங்கத்தின் அனுமதி இன்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்க முடியாது என்பதுடன் வட மாகாணத்தில் எந்த சாலையிலும் நீங்கள் பணியாற்ற நாம் அனுமதிக்கப் போவதில்லை.

இணைந்த நேர அட்டவணை பக்கச்சார்பானதாக காணப்படுவதனால் நாம் இதற்கு தயாராகவில்லையென வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் மோதி ஒருவர் பலி!!

bike

அம்பேபுஸ்ஸ – குருணாகல் வீதியில் நான்கல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலவ்வ, புஜ்ஜொமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தந்தை மகன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை!!

hummer

நபர் ஒருவரை கொலை செய்த குற்றவாளிகள் மூன்று பேருக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

13 வருடங்களுக்கு முன்றர் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவுக்கார மகன் ஆகிய மூவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி தலவாக்கலை, டயகம பிரதேசத்தில் 37 வயதுடைய ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மூன்று நபர்களுக்கும் எதிராக நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்ப்பளித்தார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 60 வயது, 37 வயது மற்றும் 32 வயதுடைய மூவர் என்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிசேகம்!!(படங்கள்,வீடியோ)

ஈழவள  நாட்டில் வடபால்  யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும்  விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும்  நேற்று 08.09.2016 வியாழகிழமை காலை  இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி ஆலய கும்பாபிசேகத்தில்  வேலணை பிரதேசத்தை  சேர்ந்த உள்ளூர்  மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விநாயகபெருமானின் அடியவர்கள்   நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்!

ஆலயத்தின்  கும்பாபிசேகத்தை  முன்னிட்டு கண்டியிலிருந்து  வருகை தந்த 22  வயதுடைய  காஞ்சனா என்கிற பெண்யானை  கும்பாபிசேக கிரியை நிகழ்வுகள்  முழுவதிலும்  நான்கு  நாட்களும் பங்குபற்றியதுடன் வேலணை பிரதேத்தில் உள்ள ஆலயங்களிலும்  வழிபாட்டினை மேற்கொண்டது.

படங்கள் :கஜன்

 

dsc07017 dsc07039 dsc07174 dsc07188 dsc07189 dsc07200 dsc07218 dsc07221 dsc07226 dsc07231 dsc07232 dsc07238 dsc07239 dsc07249 dsc07261 dsc07263 dsc07264 dsc07265 dsc07268 dsc07269 dsc07271 dsc07273 dsc07275 dsc07276 dsc07278 dsc07280 dsc07284 dsc07287 dsc07299 dsc07304 dsc07306 dsc07308 dsc07313 dsc07315 dsc07317 dsc07318 dsc07325 dsc07327 dsc07328 dsc07330 dsc07334 dsc07336 dsc07339 dsc07341 dsc07348 dsc07357 dsc07360 dsc07363

வவுனியாவில் முன்பள்ளிக்கு முன்பாக கனரக வாகனம் நிறுத்தப்படுவதாக பெற்றோர் விசனம்!!

 
வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு முன்பாக முன்பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் கனரக வாகனம் தரித்து நிற்பதாகவும் குறிப்பாக பாடசாலை நேரத்தில் காலை பிற்பகல் போன்ற நேரத்தில் தரித்து நிற்பதால் மாணவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் அவ்விடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாதகவும் சில சமயங்கள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முன்பள்ளி பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்தில் வாகனங்கள் தரித்து நின்று பொருட்களை ஏற்றி இறக்கிச் செல்வதால் அப்பகுதியில் விபத்து ஏற்படவாய்ப்புக்கள் இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வவுனியா வர்த்தக சங்க செயலாளரிடம் முறையிட்டபோது சாரதிகளின் அசமந்தப் போக்கு காரணமாகவே இச் செயற்பாடு இடம்பெற்று வருவதாதகவும் சாரதிகளுக்கு வாகனங்கள் எங்கே நிறுத்துவது என்று தெரிவதில்லை, சாரிதிகள் வழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

முன்பள்ளியின் இயக்குநரும் பல தடவைகள் சாரதிகளிடமும் அப்பகுதியில் இயங்கும் தனியார் நிலையத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரியவருகின்றது.

1 p1210296 p1210299 p1210300

எனது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது கூட தெரியாது : துமிந்த சில்வா!!

duminda-silva

எனது தலையில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார். எனக்கு எதுவும் தெரியாது.

எனது தலைக்கு துப்பாக்கிச் சூடு பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் அறிந்துகொண்டேன். நான் எந்தவொரு விடயத்துடனும் தொடர்புபடவில்லை. என்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யவும் என கூறியிருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட முன்னதாக ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்ல முடியும் என நீதிபதிகள் துமிந்தவிடம் கூறிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கரவண்டி!!

auto

இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை வைத்திருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டை பார்க்கிலும், இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிர் ஆபத்தக்களை குறைக்கும் நோக்கில் சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் உலக அமைப்பு 2010 தொடக்கம் 2020ஆம் ஆண்டுகளை வீதி விபத்துக்களை குறைக்கும் ஆண்டாக பெயரிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாத இலங்கை மாணவி : இணையத்தளம் மூலம் திரட்டப்பட்ட 21 லட்சம் ரூபா நிதி!!

student

அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர், பல்கலைக்க­ழக கட்­ட­ணங்­களை செலுத்த முடி­யா­ததால் நாடு கடத்­தப்­படும் நிலையை எதிர்நோக்கி­ய­போது, அவரின் நண்பி ஒரு­வரின் ஏற்­பாட்டில் அம்­மா­ண­விக்­காக “கிர­வுட்ஃபண்ட்ஸ்” மூலம் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து சுமார் 19,000 அவுஸ்­தி­ரே­லிய டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­துனி சுலோச்­சனா எனும் இம்மா­ணவி அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல் பேர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளா­தாத்­ து­றையில் கல்வி கற்­கிறார். ஆனால், சந்துனி சுலோச்­ச­னாவின் பெற்­றோரால் பல்கலைக்­க­ழக கட்­ட­ணங்­களை செலுத்த முடி­யாமல் அவர் பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்டார்.

பகுதி நேர­மாக சந்­துனி தொழில்­ பு­ரிந்­த­ போ­திலும் அவ­ரால்செ­ல­வு­களை சமா­ளிக்க முடியவில்லை. முந்­தைய அரை­யாண்­டுக்­கான கட்­டணம் பாக்கி மற்றும் புதிய அரை­யாண்டுக் கட்ட­ண­மாக அவர் 20,549 அவுஸ்­தி­ரே­லிய டொலர்களாக செலுத்த வேண்­டி­யி­ருந்­ததாம்.

முந்­தைய அரை­யாண்டு கட்­ட­ண­மான 4549 டொலர்­களை ஓகஸ்ட் இறு­திக்குள் செலுத்­தா­விட்டால் அவரின் விஸா ரத்துச் செய்­யப்­பட்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­படும் நிலையை எதிர்­நோக்­கி­னாராம்.

இந்­நி­லையில், சந்­துனி சுலோச்­ச­னா­வுக்­காக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி திரட்­டு­வ­தற்கு அவரின் நெருங்­கிய நண்­பி­யான மற்­றொரு மாணவி தவீஷா ரம்­புக்­வெல முன்­வந்தார்.  இதன்­படி, பொதுமக்க­ளி­ட­மி­ருந்து நிதி சேக­ரிப்­ப­தற்கு உதவும் GoFundMe (கோஃபண்ட்மீ) எனும் இணையத்தளத்தில் சந்­தி­னிக்கு உத­வு­மாறு கோரிக்கை விடுத்தார் தவீஷா ரம்­புக்­வெல்ல.

ஆகஸ்ட் 26 ஆம் திகதி மேற்­படி இணை­யத்­த­ளத்தில் தவீஷா வெளி­யிட்ட தக­வலில், “சந்­துனி மெல்பேர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது இறுதி அரை­யாண்டில் உள்­ளார். அவர் தற்­போது தொழில் புரி­கிறார்.

ஆனால் அவர் சம்­பா­திக்கும் பணம் வாட­கைக்கே செல­வா­கி­யது. அவரின் பெற்­றோரால் கட்டணங்களை செலுத்த முடி­ய­வில்லை.  கடி­ன­மான இரு வருட கல்­வியின் பின்னர் அவர் பொருளா­தார ரீதியில் மிக நெருக்­க­டியில் உள்ளார். கடந்த அரை­யாண்­டுக்­கான கட்­ட­ணத்தில் 4549 டொலர்கள் (சுமார் 516,000 ரூபா) நிலு­வை­யாக உள்ளன” எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

“இது தவிர, தற்­போ­தைய அரை­யாண்­டுக்­காக 16,000 டொலர்­களை (சுமார் 18 லட்சம் ரூபா) செலுத்த வேண்டும்.

மாத இறு­திக்குள் கடந்த அரை­யாண்டுக் கட்­டண நிலு­வையை செலுத்­தா­விட்டால் அவரின் விஸா ரத்­துச் ­செய்­யப்­பட்டு திருப்பி அனுப்பப்­படும் நிலை­லய எதிர்­நோக்­கி­யுள்ளார். செப்­டெம்பர் 7 ஆம் திக­திக்கு முன்னர் தற்­போ­தைய அரை­யாண்டின் பாதித் தொகையான 8000 டொலர்­க­ளையும் செலுத்த வேண்டும்.

எனவே, அவரின் கடன்­களை செலுத்தி அவர் பட்­ட­தா­ரி­யா­கு­வ­தற்கு உத­வுங்கள். அவர் அருமையான நபர். மிகக் கடி­ன­மாக பாடு­ப­டு­பவர்” எனவும் தவீஷா ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருந்தார்.

அதை­ய­டுத்து 12 நாட்­களில் 145 பேர் மூலம் 19,069 டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்­டி­ருந்­தது. 10 டொலர்கள் முதல் 300 டொலர்கள் வரை பலர் நன்­கொடை வழங்கியிருந்­தனர்.

எவ்­வா­றெ­னினும், சில­ரிடம் சந்­துனி உதவி கோரி­ய­போ­திலும் எவரும் உதவ முன்­வ­ராத நிலை­யி­லேயே, சந்­து­னிக்­காக பொதுமக்களிடம் பணம் திரட்ட தான் நடவடிக்கை மேற்கொண்டதாக தவீஷா ரம்புக்வெல கூறியுள்ளார்.

“தமது கல்விக் கட்டணங்களை செலுத்த மக்கள் நன்கொடை வழங்கியதால் சந்துனி மிக மகிழ்ச்சியடைந்துள்ளார். தனக்காக மக்கள் ஆதரவு அளித்தமை தொடர்பில் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் என தவீஷா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சம்பூர் 4வயதுச் சிறுமி கொலை தொடர்பில் 16வயது இளைஞன் கைது!!

m1

திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த 16வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதியில் ஒழிந்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

 
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார், சடலத்தை மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

b1 b2

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா, சாதனையாளர் கெளரவிப்பு!!

 
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் அலங்கார நுழைவாயில் திறப்பு விழாவும், சாதனையாளர்கள் கெளரவிப்பும் நேற்று (08.09.2016 வியாழக்கிழமை வித்தியாலய முதல்வர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அலங்கார நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த பாடசாலை மற்றும் அயல் பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமைப்பரிசில், மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட திருநாவற்குளம் கிராம மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய சாரணர் துருப்பில் முதல் ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்ட மாணவனும், வவுனியா மாவட்டத்தின் 44 ஆவது ஜனாதிபதி சாரணனுமான செல்வன் பிரான்சிஸ் கெர்சோன் அவர்களிற்கு புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் அதிதிகள் முன்னிலையில் வைத்து கெளரவிப்பு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களும் கெளரவ அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு மு.இராதாகிருஷ்ணன், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை மேம்பாட்டுத் திட்ட வலய பிரதிநிதி திருமதி உபுல் சுஜாதா ஆகியோருடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 img_8716 img_8719 img_8720 img_8721 img_8744 img_8748 img_8770 img_8774 img_8779 img_8780 img_8782 img_8787 img_8796 img_8803 img_8812 img_8815 img_8818 img_8819 img_8821 img_8838 img_8840 img_8842 img_8845 img_8848 img_8856 img_8880 img_8887

4 வயது சிறுமி சடலமாக மீட்பு : சம்பூரில் சோகம்!!

murder

திருகோணமலை – சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருடையது என, அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று (08.09.2016) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதோடு, சந்தேகநபரான இளைஞரும் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.