வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை  தேர்த்திருவிழா இடம்பெற்றது .

அதிகாலை   கிரியைகள்  மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்  ஆரம்பமாகி  காலை 9.00   மணியளவில் வசந்த மண்டப பூஜையை  தொடர்ந்து  ரதோற்சவம்  இடம்பெற்றது .

மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது. இரதோற்சவ  நிகழ்வில்  பிரதேசவாசிகள் மாணவர்கள்   ஆசிரியர்கள் என  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து  கொண்டனர்.

படங்கள் :திவாகரன்

 14188216_1749627715292063_8172801533499443912_o 14188317_1749627391958762_9221862299229389908_o 14206226_1749626915292143_5373375597935605298_o 14224908_1749627585292076_3140391477354804786_n 14225573_1749627315292103_2589633230755210152_n 14231381_1749642251957276_8415542010453322565_o

.

காதலனை திருமணம் செய்த மகள் : ஆணவக் கொலை செய்ய பெற்றோர் முடிவு?

Lovers

திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்ய ஊர் கூட்டத்தில் முடிவு செய்து கொலை செய்ய போவதாக மிரட்டல் விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகள் உமா(23).

இவர் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, நான் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டயபடிப்பு (M.com) முதலாமாண்டு படித்து வருகிறேன்.

நானும் மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.

இந்நிலையில், எனது காதலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் வீட்டில் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி நானும் எனது காதலரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவை மருதமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.

இதையறிந்த எனது பெற்றோர் ஊர் கூட்டம் நடத்தி எங்களை கொலை செய்து விட ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், எங்களை ஆணவக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே எனது ஊர் காரர்களிடமிருந்தும், எனது பெற்றோரிடமிருந்தும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு குறித்து அவதூறு பரப்பிய திலீபன் சிறையில்!!

Dileepan

சுவாதி கொலை வழக்கில் சிலரை தமிழக போலீஸார் திட்டமிட்டு தப்பிக்க வைப்பதாகவும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன்.

கடந்த சில மாதங்களுக்கு முன், தேசியக் கொடியை எரித்த சர்ச்சையில் சிக்கிய திலீபன், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக இயக்குனரும், பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவருமான கருப்பு முருகானந்தம் மீது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக திருவாரூர் போலீஸார், கடந்த 25-ம் தேதி, திலீபன் மகேந்திரனை கைதுசெய்தனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்ட திலீபன் மகேந்திரனை, வரும் செப்டம்பர் 9 வரை திருச்சி மத்திய சிறையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே திருவாரூர் நீதிமன்றத்தில் திலீபனுக்கு ஜாமீன் கிடைத்தும்கூட சில சட்ட நடைமுறைகளால் அவர் வெளியே வருவதில் தாமதம் ஆகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் கம்ருதீன், ‘‘சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே திலீபன் மகேந்திரன், தமிழச்சி போன்றவர்கள் போலீஸார் உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

திலீபன் தனது பேஸ்புக் பக்கத்தில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, சுவாதி கொலையில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.

கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 25 மதியம், சென்னை அம்பத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் திலீபன்.

ஆனால், போலீஸார் அவரை வேளாங்கண்ணியில் கைது செய்ததாகச் சொல்லி வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சிறையில் இருக்கும் அவருக்கு, சட்ட உதவிகள் வழங்குமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை கடந்த சனிக்கிழமை சிறையில் சந்தித்து விட்டு வந்தேன்.

அப்போது அவர், ‘என்னை கைதுசெய்வதற்கு சில நாட்களுக்கு முன் ராம்குமார், தாயார் புஷ்பம், வழக்கறிஞர்களை சந்தித்து சில தகவல்களை விளக்கி கூறியதோடு இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என சொல்லிவிட்டு வந்தேன்.

அதன்பிறகுதான் ராம்குமார் தாயார் தரப்பில் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில்தான் என்னையும் கைது செய்துள்ளார்கள்’ எனக் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை மாலை, சிறையில் திலீபனை சந்தித்தேன். அப்போது, அவர், ‘கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து தன்னை மனநிலை சரியில்லாதவர்களை அடைக்கும் பிளாக்கில் அடைத்து வைத்திருப்பதாகவும் இராத்திரி பகலாக தனிமைச் சிறையில் வைத்திருப்பதாகவும் அங்கே காற்று வசதியோ, மின் விசிறியோ, மின் விளக்கோ இல்லை எனவும் போர்த்திக்கொள்ள போர்வை கூட கொடுக்கவில்லை எனவும் திலீபன் கூறினார்.

இதுகுறித்து சிறை அலுவலரிடம் கேட்டபோது, ‘மனநல ஆலோசகரின் அறிக்கைப்படிதான், திலீபனின் பாதுகாப்புக்காக இப்படி அடைத்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.

இவர்கள் செயல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தனிமைச் சிறையில் அடைத்திருப்பது மிக மோசமான மனித உரிமை மீறல்.திலீபன் போட்ட பதிவுகள் குறித்து தமிழக போலீஸாரோ, விசாரணை அதிகாரிகளோ ஏதும் மறுப்பு சொல்லாத நிலையில் குற்றச்சாட்டு எழுப்பிய ஒருவரை கைதுசெய்து சிறையில் அடைப்பதை பார்த்தால் போலீஸார் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது என்றார்.

திலீபன் மகேந்திரன் சிறையில் மனநோயாளிகள் செல்லில் அடைக்கப்பட்டிருக்கிறார் என எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனிடம் கேட்டோம்.

வழக்கமாக சிறைக்குள் கொண்டுவரப்படும் எந்த கைதிக்கும் சிறையில் இருக்கும் மனநல ஆலோசகர் பரிசோதனை செய்வார். அவர்கள் அறிக்கைப்படி, பதற்றமான சூழலில் உள்ளவர்களைத் தனிமை சிறையில் வைத்திருப்போம். அடுத்தடுத்த கண்காணிப்புகளுக்குப் பிறகு அவர்களை வழக்கமான பிளாக்குக்கு மாற்றுவோம். இதுதான் நடைமுறை.

எப்போதும் அந்த பிளாக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். அப்படித்தான் திலீபன் மகேந்திரனை ஆய்வு செய்த டாக்டர், அவர் இயல்பான நிலையில் இல்லை. பதற்றமாக இருந்தார். வார்த்தைகள் இயல்பான நிலையில் இல்லை. அதனால் அவரை அப்படி தங்க வைக்க வேண்டியது அவசியமானது’ எனச் சான்றளித்தார்.

இப்போது திலீபன் இயல்பாக இருக்கிறார். பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.

மரணத்திலும் இணை பிரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள் அடக்கத்திலும் ஒன்றாக!!

5 friend dead in UK

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை இந்த இறுதிக் கிரியையில் கலந்து கொண்டு இறந்த இளைஞர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறு இறுதிக்கிரியை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நல்லூரில் பிரமாண்டமாக மணலில் வடிவமைக்கப்பட்ட நல்லூர் கந்தன்!!

 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24ஆம் நாளாகிய நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றதுடன், தீர்த்தோற்சவத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிலையில், மணல் சிற்ப கலைஞர் ஒருவர் இன்று நல்லூர் ஆலய முன்றலில் நல்லூர் கந்தனை பிரமாண்டமான முறையில் வடிவமைத்திருந்தார். இதனை இங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடத்தக்கது.

N N2

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

Kirakam

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது.

இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது.

இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து Extraterrestrial Intelligence நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.

சூரியன் அழியபோகின்றதா? அதிர்ச்சித் தகவல்!!

Sun

நாம் இன்று இப்புவியில் வாழ்வதற்கு சூரியனை தவிர வேறு எந்த சக்தியும் பிரதானம் இல்லை என்று பயமில்லாமல் கூறலாம். (கடவுளை தவிர) காரணம் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே,

ஆனால் இச்சூரியன் அழியப் போகின்றது என கூறினால் நம்பமுடிகின்றதா? ஆம் இந்த சூரியனின் அளவும் வெப்பமும் கூடிகொண்டே போகின்றது. இதனால் சூரியன் ஓர் சிவப்பு அரக்கனாக மாறும்.

இவ்விளைவினால் முதலாவதாக உலக வெப்பமாயமாதல் கூடி தாவரங்கள் அழியும். மேலும் தாவரத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் இறப்பதோடு மட்டுமல்லாமல் பிராண வாயு அதாவது “ஓட்சிசனும்” தடைப்படும்.

மேலும் இதன் பின் மனிதர்கள் அனைவருமே இறந்துவிடுவர் என்பதிலும் எவ்விதமான சந்தேகமும் இல்லை ஆனால் இது அனைத்தும் கட்டாயம் நிகழும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.

இதற்கான ஒரே வழி நாம் இவ்வுலகை விட்டுவிட்டு வேறு ஓரு வேற்றுகிரகத்தை தேடிச்செல்வது தான்.

இறுதியாக ஓரே ஓரு சுவாரசியமான விடயத்தை கூறிக் கொள்கின்றேன். இவ் அனைத்தும் நிகழ இன்னும் 500 கோடி வருடங்கள் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் படுகொலை : முக்கிய தகவல்கள் அம்பலம்!!

Sulaiman

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலையுடன் பலர் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகத்திற்குரியவர்கள் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி.சி.டி.வி காணொளிகளின் காட்சிகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி இரவு அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டார்.

இந்நிலையில், மாவனெல்ல, ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து கடந்த 24ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனமா? இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

Dog

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது இயல்பான ஒன்று. பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் பாசமாக இருக்கின்ற விலங்காகும். இரவில் நாம எல்லோரும் தூங்கிய பின்பு நாய்கள் தனியாக இருக்கின்ற நினைப்பில் கவலை படுகிறதாம்.

ஆதலால் நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் செய்கிறதாம். அவ்வாறு நாய்கள் ஊளையிடும் நேரத்தில் நாம் சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடுமாம்.

அதுமட்டுமின்றி நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும் என்று பொதுவாக மூடநம்பிக்கை நம்மில் இருந்து வருகிறது. டெக்னாலஜி இவ்ளோ வளர்ந்த இந்த காலத்துல இன்னும் இதெல்லாம் நம்பிட்டு, விழிப்புணர்வு இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டம் தான்.

40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள்!!

Men

சொந்தக் காலில் நில்

அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.

நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

உலகம் சுற்றும் வாலிபன்

குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியாவாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

பேரார்வம்

பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

தோல்வி

தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.

ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

முதலீடு

சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

தீய பழக்கம்

ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

உண்மையான நட்பு

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பிடிக்காவிடில் பிரிவு

ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

சேமிப்பு

பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

கைதேர்ந்தவர்

நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.

ஆராய்ந்து செயல்படுதல்

கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

நேரம் பொன் போன்றது

நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.

 

நீங்களாக இருங்கள்

மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.

படிப்பில் உயரம்

உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.

வவுனியாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு இந்தியாவில் 7வது முறையாகவும் விளக்கமறியல்!!


Cople

தமிழக அகதிகள் முகாமில் இருந்து கடல் வழியாக சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதிக்கு 7வது முறையாகவும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வரை குறித்த தம்பதியினரை விளக்கமறியலில் வைக்குமாறு வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷ்வந்த் மற்றும் இவரது மனைவி துவாரகா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சகிதா.

குறித்த மூவரும் கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் கண்ணாடி இழைப் படகு ஒன்றில் தவித்தபோது மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் படையினர் குறித்த தம்பதியினரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த தம்பதி கோவை மாவட்டம், கோட்டூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து தப்பி, சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றமை தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் மீது இந்திய கடவுச் சீட்டு சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன், கோட்டூர் பகுதியில் இடம்பெற்ற சில குற்றச் செயல்கள் மற்றும் விபத்து வழக்களில் துஷ்வந்த்துக்கு தொடர்பு இருப்பதாகத் தனிப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த தம்பதியினருக்கு ஏற்கனவே 6 முறை விளக்கமறியல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 7வது முறையாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் பற்றி தெரியுமா?

Vinayakar

விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

* ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது.

* தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது.

* அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

* மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.

* தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

தீயினால் லண்டன் அழிந்ததை விளக்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டு கால லண்டனை பிரதி பலிக்கும் சிற்பம்!!

 
லண்டன் நகரில் 120 மீற்றர் நீளத்தில், பலகைகளால் பாரிய சிற்பமொன்று உருவாக்கப் பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் லண்டன் நகர தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

1666 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய தீயினால் லண்டனின் பெரும் பகுதி அழிந் ததை விளக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

L1 L2 L3

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு தற்­கொ­லை செய்துகொண்ட இளை­ஞன்!!

Murder

தன்னை காத­லிக்க மறுத்த இளம் பெண்ணை அரி­வாளால் சர­மா­ரி­யாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்பெற்­றுள்­ளது.

இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தூத்­துக்­குடி இந்­திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்­ஸினா (24). இவர் சண்­மு­கா­பு­ரத்தில் உள்ள ஒரு தனியார் மழ­லையர் பாட­சா­லையில் 3-ஆம் வகுப்பு ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து வரு­கிறார்.

பிரான்­ஸி­னாவை அதே பகு­தியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்­டுக்கும் மேலாக ஒரு­த­லை­யாக காத­லித்து வந்­துள்ளார். பல­முறை பிரான்­ஸி­னா­விடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்­ள­வில்லை. இருந்தும் தொடர்ந்து தொந்­த­ரவு செய்துள்ளார் கீகன்.

ஒரு­கட்­டத்தில் கீகனின் தொல்லை தாங்­காமல் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார் பிரான்­ஸினா. அந்த முறைப்­பாட்டின் பேரில் கீகனை வர­வ­ழைத்து பொலிஸார் எச்­ச­ரிக்கை செய்துள்­ளனர்.

சிறிது காலம் தொந்­த­ரவு கொடுக்­காமல் இருந்­தி­ருக்­கிறார் கீகன். இந்­நி­லை­யில்தான் பிரான்ஸினாவுக்கு வீட்டில் அவ­ருக்கு திரு­மணம் நிச்­ச­யக்­கப்பட்­டது.

எதிர்­வரும் 8ம் திகதி பிரான்­ஸி­னா­வுக்கு திரு­மணம் நடை­பெ­ற­வி­ருந்­தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வார­மா­கவே பிரான்­ஸினா செல்லும் இட­மெல்லாம் பின் தொடர்ந்­தி­ருக்­கிறார்.

பிரான்­ஸினா ஒவ்­வொரு நாளும் அரு­கி­லி­ருக்கும் தேவா­ல­யத்தில் பிரார்த்­தனை செய்­து­விட்டுச் செல்­வதை வழக்­க­மாக கொண்­டுள்ளார்.  அதேபோல் நேற்றும் அவர் தேவா­ல­யத்­துக்குச் சென்றுள்ளார். காலை 8.30 மணி­ய­ளவில் தேவா­ல­யத்­துக்குள் இருந்த பிரான்­ஸி­னாவை கீகன் அரி­வாளால் சர­மா­ரி­யாக வெட்­டினார்.

இதில் அவ­ரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகு­தி­களில் படு­காயம் ஏற்­பட்­டது. அங்­கி­ருந்து மீட்கப்பட்ட அவர் தூத்­துக்­குடி அரச மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். ஆனால், சிகிச்சை பல­ன­ளிக்­காமல் அடுத்த சில மணி நேரங்­களில் அவ­ரது உயிர் பிரிந்­தது.

தேவாலயத்தில் பிரான்ஸினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது சகோ­தரன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்­ளார்.

பல்கலைக்கழக மாணவிக்கு அந்தரங்கத்தை காட்டிய 70 வயதான நபர் விளக்கமறியலில்!!

Jail

மாத்­த­றை­யி­லி­ருந்து அக்­கு­ரஸ்ஸ நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த பஸ் வண்­டியில் பயணம் செய்த 70 வய­தான வயோ­திபர் ஒருவர் தமக்கு அருகில் அமர்ந்­தி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாண­விக்கு தனது அந்­த­ரங்­கத்தைக் காண்­பித்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு மாத்­தறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் வைத்­திய முகா­முக்குச் சென்று மீண்டும் கொட்­ட­பல பிரதேசத்தை நோக்கிச் செல்ல அக்­கு­ரஸ்ஸ பஸ் வண்­டியில் ஏறிய சந்­தேக நபர் அரு­கி­லி­ருந்த இந்த யுவ­தி­யிடம் தனது அந்­த­ரங்­கத்தை காண்­பித்­துள்ளார்.

அச்­ச­முற்ற யுவதி கூச்­ச­லிட்­டுள்ளார். பின்னர் பஸ் நடத்­து­ன­ரிடம் தெரிவித்ததையடுத்து பஸ் அக்குரஸ்ஸ பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருவரின் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கிய பெண் கைது!!

Lady

திரு­கோ­ண­ம­லை-­ தெ­வ­னி­பி­ய­வர பகு­தியில் இரு­வ­ருக்­கி­டையில் ஏற்­பட்ட சண்­டையின் போது மண்­வெட்­டியால் பெண் ஒரு­வ­ரு­வரைத் தாக்­கி­ய­தாக கூறப்­படும் நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இருவர் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்த போது அதனைப் பார்த்துக் கொண்­டி­ருந்த பெண்ணே மண் வெட்­டியால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்த நிலையில் மஹ­தில்­வெவ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.