மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து தவிர மற்ற அணிகள் அனைத்தும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை வென்றுள்ளன.
இந்தப் போட்டிதான் கடைசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியாகும். 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி 2017-ம் ஆண்டு முதல் டெஸ்ட் சம்பியன்ஸ் நடைபெறவிருப்பதன் காரணமாக இந்த ஆண்டோடு நிறுத்தப்படுகிறது.
கார்டிஃப் நகரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.15 மாதங்களுக்குப் பிறகு ஆசியாவுக்கு வெளியில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது இந்திய அணி.
சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ் சிங் போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது டோணி தலைமையிலான இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் , முரளி விஜய் ஆகியோர் சரியாக விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும். எனினும் மதிய வரிசையில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரைனா, தினேஷ் கார்த்திக், அணித்தலைவர் டோணி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் மூத்த வீரர்களான ஜக்ஸ் கலிஸ், ஸ்மித் ஆகியோர் இடம்பெறாத நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சுழற்பந்துவீச்சாளர் ரொபின் பீட்டர்சன் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது பின்னடைவாக அமைந்துள்ளது.
அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், டேவிட் மில்லர் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.
வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், சோட்சோபி, கிளெய்ன்வெல்ட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரொபின் பீட்டர்சன் இடம்பெறாத பட்சத்தில் அரோன் பங்கிசோ இடம்பெறலாம்.
இன்றைய போட்டியில் சம பலம் உள்ள இரு அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை..
லண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை விதித்தது. லண்டனில் நெட்வெஸ்ட்( Natwest) வங்கியின் முன் தினசரி 37 வயதான சைமன் ரைட் என்ற பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.
இதன்மூலம் அவருக்கு தினசரி £300 வரை வருமானம் கிடைத்தது. மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தில் இருந்த் சென்று Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மிகவும் வசதியாக இருந்து கொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்ற வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பிச்சைக்காரர் யாசகம் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நியுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக டெங்கு அழிப்பு தொடர்பில் கொழும்பு நகரசபை மற்றும் கொழும்பு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, மேல் மாகாணசபை, கொழும்பு நகரசபை, பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
தற்போதுள்ள டெங்கு நோயாளர்களில் 46 வீதமானவர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் 152இல் டெங்கு நுளம்பு குடும்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 52 பாடசாலைகள் அறுவுறுத்தப்பட்டுள்ளதுடன் 12 பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.
அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.
அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து “பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்” என்றான்.
இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.
வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே “ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? ” என்று கேட்டார்.
இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக “இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!” என்றான்.
வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக “வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.
மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.
மன்னர் இராமனிடம் “இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!” என்றார்.
இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.
இராமன், “அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்” என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 25 வயது துரைசாமி சரோஜா 25 என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சரோஜாவை காதலித்துத் திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்தவரெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மே மாதம் 24ஆம் திகதியன்று, மாங்குளம் பனித்தம்குளம் பிரதேசத்திலுள்ள கிணற்றுக்குள்ளிருந்து இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கல்லொன்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தை உறவினர்கள் இனங்கண்டதற்கமைய அவர்களது வாக்குமூலங்கள் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் :-
மேற்படி யுவதியை காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞன் அவரையே திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கி குறித்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். யுவதி அங்கு சென்றதையடுத்து, தனது நண்பனுடன் வந்திருந்த காதலன் பாழடைந்த வீட்டுக்கு யுவதியை அழைத்துச் சென்ற பின் தனது நண்பனுடன் இணைந்து காதலியை வல்லுறவுப்படுத்த முயன்றுள்ளார்.
இதற்கு குறித்த யுவதி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே இளைஞர்கள் இருவருமாக சேர்ந்து யுவதியை அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தை கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை அவர்கள் நாளை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை மேற்படி யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மன்னார் தாராபுரம் – எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி வீதியூடாக தாராபுரம் கிராமத்திற்கு உழவு இயந்திரத்தை வேகமாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் சென்றுள்ளது.
இதன்போது உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரத்தில் இருந்த முஹம்மது லதீப் சதாத் (வயது-20) என்ற இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா: எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் மற்றும் திறன் விருத்தி கலாசார மேம்பாடு தொடர்பான விழா, வவுனியா நாகரசபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அதிகாரசபையின் அதிகாரி திரு த.செல்வகுமார் அவர்கள்,இன் நிகழ்விலே போர் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட பாடசாலைச் சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நடைபெறுவதோடு சிறுவர் உரிமைகள், வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்சபையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் விருதை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றமைக்காக முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் மோகனால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறுவதற்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த கால எல்லை வரை (கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை) இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.
தரப்படுத்தலின் அடிப்படையில் இந்திய அணி 119 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 113 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா மூன்றாம் இடத்ததையும் பிடித்துள்ளன.
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது.
‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.
‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.
இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன.
இதனால் உடனடியாக பலன் போன்ற தோற்றம் தோன்றினாலும் பிற்காலத்தில் தோல் நோய்களையும் தோல் சுருக்கத்தையும் தந்து விடுகின்றன.
இதை தவிர்க்க இயற்கை மருத்துவத்தில் மிக எளிமையான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து முல்தானி மிட்டி ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை அரை மணி நேரம் காயவிட்டு பின்னர் விரல்களை ஈரப்படுத்தி லேசாகத் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்.
பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை இளஞ்சூடான எண்ணெயால் மசாஜ் செய்து தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும்.
பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்புவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.
ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது.
இதேபோல் 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சீனி சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.
செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.
சீரகம் அரை மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – சிறிது,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை
பாசிப்பருப்பை வெறும் பாத்திரத்தில் வாசனை வரும் வரை வறுத்து, துவரம்பருப்புடன் சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதைவிட, சாதாரண பாத்திரத்தில் வேக வைத்தால் ருசி கூடும். அரிசியை வெறும் பாத்திரத்தில் பொரியும் வரை வறுக்கவும். பிறகு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, தேங்காய் தவிர்த்து வெறும் பாத்திரத்தில் வறுக்கவும். கடைசியில் மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி, அரைக்கவும். எடுக்கும் போது, வறுத்து வைத்துள்ள அரிசியைச் சேர்த்து, ஒரே ஒரு சுற்று சுற்றி, மணல் மாதிரி அரைக்கவும்.
அரிசியைச் சேர்த்ததும் வாசனை வருவதை உணரலாம். பின் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, இரண்டே நொடிகள் சுற்றி எடுக்கவும் (வெங்காயம் முழுவதும் அரைபடக் கூடாது). அவிந்த பருப்பில் முருங்கைக்கீரையை குறுக்கும், நெடுக்குமாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் துருவல் சேர்த்து, இன்னும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சேர்த்து இறக்கவும். மொத்தமாக 5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்கக் கூடாது. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துக் கீரையில் கொட்டவும்.
இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
அரைத்த பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படி செய்வது?
இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீருடன், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். வடிகட்டிய பின் ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.
பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை வறுத்த அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும் பின் அதில் தக்காளி, உள்ளி மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி..
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது.
மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தினால் விமானத்திற்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
விமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரான போது சுமார் 50 மீற்றர் உயரத்தில் பறவை விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.