ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – மகரம்!!

makaram

தோற்றத்தில் நலிந்தவர்போல காணப்பட்டாலும் உள்ளூர உடல் வலிமையும், உறுதியும் பெற்றவராக இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பொருள் சேர்க்கை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும்.

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பலவகையிலும் உங்களுக்கு நன்மை தரும். வியாபாரத்தில் நிலுவையிலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். ஒக்டோபர் 15ற்கு பிறகு உங்களுக்கு எல்லா தொல்லையும் நீங்கி நன்மை ஏற்படும்.

வீண் செலவுகளையும் மன சஞ்சலங்களையும், உடல் உழைப்பையும் தரும் சனிபகவான் காரியத் தடைகளையும் ஏற்படுத்தி வருகிறார். ஆறாமிடத்து குருவால் அவதிப்படுகிறோமே என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம். எனினும், குரு ராஜயோகத்தை தருவார் என்றே சொல்ல வேண்டும்.

தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். முயற்சிகள் கைகூடும். தற்போது தொழில் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் வீண் பிரச்னைகளை தருவார்கள்.

காரணம் கண்டுபிடிக்க முடியாத கவலைகளையும் குடும்பத்தில் குழப்பத்தையும், கணவன் – மனைவி இடையே கருத்து வேற்றுமையும் வந்து நீங்கி விடும். ஆனாலும், எதிர்ப்புகளை தவிடு பொடியாக்கி விடுவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 2, 3, 4, 29, 30 திகதிகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம் : சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கப் பெறுவீர்கள்.

சிறப்பு பரிகாரம் : அத்தி இலையைப் பறித்து சிவனுக்கு பிரதோஷத்தன்று அர்ச்சனைக்குக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – தனுசு!!

thanusu

தன்னடக்கம் மிகுந்த நீங்கள் எதையும் மறைத்துப் பேசமாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்யோக மாற்றம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செலவும் அதிகரிக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கும். தன தைரியாதிபதியின் உச்சபலத்தால் பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் உள்ள நிலுவைகள் வந்துசேரும். திருமணத் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பண விஷயத்தில் கூடுமான வரையிலும் அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. குருவின் பார்வையால் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்.

தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது. சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்யோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.

அடிக்கடி கோபமாகப் பேசநேரிடும். சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடக்கூடும். அன்னியர் மூலம் செலவும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மனைவியின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். எனவே வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் மிகவும் கவனமாகப் படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது. கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும்.

பரிகாரம் : ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சந்திராஷ்டமம் : 1, 27, 28 திகதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து வர மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

சிறப்பு பரிகாரம் : நாரத்தங்காய் சாறு பிழிந்து பிரதோஷத்தன்று அபிஷேகத்திற்கு கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – விருச்சிகம்!!

viruchikam

ஆன்மிக சிந்தனை மிக்கவர்களாக இருக்கும் நீங்கள், துணிச்சலாக எதையும் செய்வீர்கள். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வீண் செலவுகள் காரியத் தடையை தந்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் இந்த நிலை மாறும். செல்வச் சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிலும் வேகம் காட்டுவீர்கள்.

உத்யோக நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையைத் தரும். ஆனால், குருவின் தன ஸ்தான பார்வையால் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். தற்போது சனியின் சஞ்சாரம் ராசிக்கு 12ல் இருப்பதால் உத்யோகத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் ராகுவும், 6ல் சஞ்சரிக்கும் கேதுவும் பல நன்மைகளை தருவார்கள்.

சகோதர வழியில் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் 17ம் திகதிக்கு பிறகு திடீரென்று அடிக்கடி கோபம் வந்துபோகும். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை தரும்.

பெண்களுக்கு இந்த மாதம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது வந்து நீங்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம் : துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

சந்திராஷ்டமம் : 25, 26 திகதிகளில் இரவு நேரப் பயணத்தின்போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீஅங்காரகாய நமஹ” என்ற மந்திரத்தை 9 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : முருகன் கோயிலில் உள்ள நாகருக்கு நெய் தீபம் ஏற்றவும். வேலுக்கு பாலபிஷேகம் செய்வதும் நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை : திங்கள், வியாழன்.
.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – துலாம்!!

thula

நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் கொண்ட நீங்கள், எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நற்பலன் தரும் மாதமாக இருக்கும். ராசிநாதனின் சஞ்சாரமும், ராசியில் உச்சமாக இருக்கும் சுகாதிபதி சனி, ராகுவும், குருவின் பஞ்சம பார்வையும் இருப்பதால் மனதில் மனத் துணிவு அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனவருத்தங்கள் குறையும். அதே நேரத்தில் எதிலும் அவசர முடிவுகள் எடுக்கத் தோன்றும். . ஒக்டோபர் 15ற்கு பின் எதிலும் நன்மை உண்டாகும். சொத்து சம்பந்தமான எதிலும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

காரியங்களில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிலுமே சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் உண்டாகும். செய்யும் தொழிலில் பின்னடைவு ஏற்படலாம். வேலைப்பளுவும் மேலதிகாரிகளுடன் கருத்து வேற்றுமையும் ஏற்பட்டு நீங்கும். கவனமாகச் செயல்படுவது நல்லது.

சனியால் சமூக அந்தஸ்து உயரும். எந்த ஒரு பணியையும் விரைவாகவும், லாபகரமாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உடல்நலக் கோளாறு உண்டாகலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். தேவையற்ற வழிகளில் வீண் செலவு உண்டாகும்.

ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சொந்தங்களால் எல்லா நற்பலன்களும் உண்டாகும். தன வரவும், மனோ தைரியமும் இருக்கும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் தவிர்ப்பதும் நன்மை தரும். பெண்களுக்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் காரிய அனுகூலமும், பணவரத்தும் இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பிற்பகுதியில் வீண் அலைச்சல் வேலைப் பளுவால் உடல் சோர்வும் உண்டாகலாம்.

மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படாமல் இருக்க நன்கு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவினிலும் சாதகமான பலன்களே கிடைக்கும். கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

பரிகாரம் : குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 22, 23, 24 திகதிகளில் யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீமங்களரூபிணே நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை கூறுங்கள்.

சிறப்பு பரிகாரம் : வெண் சுண்டல் செய்து சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமையன்று விநியோகம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.
தேய்பிறை : திங்கள், வெள்ளி.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – கன்னி!!

kanni

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வீர்கள். இந்த மாதம் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணத் தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். எனவே கவனமாகப் பேசுவது நல்லது. முயற்சிகளில் தடை உண்டாகலாம். பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும். பத்தில் இருக்கும் குருவால் தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தன ஸ்தானத்திலுள்ள சனியால் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம்.

அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலோடு மன சங்கடமும் இருக்கும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண்பகை வராமலும், உடல் ஆரோக்யம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது.

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும்.

பெண்களுக்கு இந்த மாதம் இழுபறியாக இருந்தாலும் சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

பரிகாரம் : ரங்கநாதரை தரிசிப்பதால் சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 19, 20, 21 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ மதுசூதனாய நமஹ” என்ற மந்திரத்தை 23 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : விநாயகப் பெருமானுக்கு தேங்காய் மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தடை பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன்.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – சிம்மம்!!

simmam

எவ்வளவு சிக்கலான விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று முடிவெடுப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் மாதமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

ஒக்டோபர் 15ற்கு பிறகு தொழிலிலும் வியாபாரத்திலும் இருந்த பிரச்னைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். பழைய கடன்களும் வந்துசேரும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் உண்டாகலாம். குருவின் பார்வையால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும்.

மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். சனியுடன் சஞ்சரிக்கும் ராகுவின் மூன்றாம் பார்வையால் மற்றவர்களுடன் விரோதம், கௌரவபங்கம், வீண் அலைச்சல் ஆகியவை இருக்கும். ஆனாலும் சூரியனின் சஞ்சாரத்தால் மனக்கஷ்டம் குறையும்.

ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. லாபஸ்தான குரு, தன ஸ்தான சூரியன் செல்வத்தை தருவார்கள்.

ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். பெண்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றங்களை தரும் ஆண்டாக இருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால், வீண் அலைச்சல் இருக்கும்.

மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மந்த நிலை மாறும்.

பரிகாரம் : ஞாயிற்றுக் கிழமையில் சிவனை வில்வார்ச்சனை செய்து வணங்குவதும் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கப் பெறும்.

சந்திராஷ்டமம் : 17, 18 திகதிகளில் சுயமாக இரவு நேரங்களில் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ மஹாசிவாய நமஹ” என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : பிரதோஷத்திற்கு சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகத்திற்குப் பால் வழங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை  : புதன், வியாழன்.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – கடகம்!!

katakam

வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பங்கு தாரர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும்.

தனஸ்தானாதிபதியின் சஞ்சாரம் பணவரத்தை அதிகரிக்கும். முன்னேற்றங்களை தரும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் இயந்திரங்களை கையாளும் போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. குருவின் சஞ்சாரம் திடீர் பணச் சிக்கலை ஏற்படுத்தும்.

பணமிருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும். குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.

குருபார்வையின் பலனாக கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். சனியின் 10ம் பார்வை பேச்சில் கோபத்தையும், குடும்பத்தில் சிறு குழப்பங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு வசதியான வீடு அமையும்.

இருப்பினும் குருவின் பார்வை சனியின் மீது விழுவதால் எல்லா பிரச்னைகளும் நீங்கி சுமுகமான நிலை உண்டாகும். எதிரிகளின் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இந்த மாதம் பெண்களுக்கு பல நன்மைகளை தரும் மாதமாக இருக்கும்.

மாதத்தின் பிற்பகுதியில் மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டி, பந்தயங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 15, 16 திகதிகளில் யாருக்கும் பிணை கையெழுத்து இட வேண்டாம்.

பரிகாரம் : அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ஸ்ரீ லலிதா திரிசதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.

சிறப்பு பரிகாரம் : திங்கள்தோறும் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வியாழன்.
தேய்பிறை  : ஞாயிறு, திங்கள், வெள்ளி.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

mithunam

வாக்குவாதத்தில் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன்வசப்படுத்தும் திறமையைப் பெற்றவர்கள். அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மாதத்தின் தொடக்கத்தில் ராசியாதிபதி புதனின் சஞ்சாரம் சுக சௌக்கியத்தை தரும்.

உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

தொழில் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும். வேலைப்பளு, வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். உங்களின் ஆலோசனையைக் கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள்.

இருப்பினும் வேலை விஷயத்தில் எதிலும் மிகவும் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை.

பெண்கள் இந்த மாத இறுதியில் சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 13, 14 திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம் : சிவன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ கோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை 14 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : துளசியை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். துளசியின் மகிமையால் எல்லாவித நன்மைகளும் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன், வியாழன்.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

rishabam

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்றிருப்பீர்கள். நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ராசியாதிபதியான சுக்கிரனின் சஞ்சாரம் தடைபட்ட பணம் கைக்கு கிடைக்கும்படிச் செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.

தன ஸ்தானத்தில் இருக்கும் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம்.

பணவரத்து அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளை செய்வார். வெளிநாட்டிற்குச் செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.

சந்திராஷ்டம தினங்கள் : 11, 12 திகதிகளில் சுபகாரியங்கள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடவும். 11 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் ஸ்ரீப்ரக்ருத்யே நமஹ என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : அரளி மலரை அம்பாளின் அர்ச்சனைக்கு கொடுக்கவும். அவளின் அருட்பார்வையால் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். துன்பங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வெள்ளி.

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – மேஷம்!!

mesha

எதையும் சாதிக்கும் ஆற்றலுடைய நீங்கள் காரணமில்லாமல் எதற்கும் சினம் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும் மாதமாக அமையும். மாதத் தொடக்கத்தில் ராசியாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு வட்டம், உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும்.

மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் குருவினால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

பிள்ளைப் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோக மாற்றம் உண்டாகலாம்.

வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். புதிய சொத்துக்களை வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.

தாய், தந்தை, பெரியோரிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மையைத் தரும். பெண்களுக்கு மனக் குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்திலிருந்த பிரச்னைகள் தீரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியது வரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.

சந்திராஷ்டம தினங்கள் : 9, 10 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதீர்கள்.

பரிகாரம் : தினம்தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் சரவணரூபாயை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : செவ்வாய்தோறும் அறுகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.

யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

2

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபை முன்றலில் இன்று காலை 8 மணி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

நாம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம். இதுவரை இரு தடவைகள் எமக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நிரந்தர ஊழியர்காளாக எம்மை உள்வாங்க இல்லை.

தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றார். ஆனால் இதற்கு முன்னர் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை.

தற்போது மூன்றாவது ஆணையாளராக உள்ளவரும் எமக்கு மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2002 ம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது. தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளனர்.

அதேவேளை இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எனவே மூப்பு அடிப்படையில் எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை நாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களைப் பிடித்த வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள்!!(படங்கள்)

தரம் 5 புலமைப்பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின. இதில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.

193 புள்ளிகளைப் பெற்று அருள்ஈசன் அருவி என்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 3ம் இடத்தையும், அதே பாடசாலையைச் சேர்ந்த ரணேஸ் ஆதித்தன் 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இப் பெறுபேறு குறித்து முதலாம் இடம் பெற்ற மாணவி அருவி கூறுகையில் “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலைக்கு வருவதற்கு என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்திய எனது அம்மா, கனடாவில் வசிக்கும் எனது அப்பா மற்றம் எனது ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

சமூகத்தில் எனக்கு ஆதரவுகளும் ஊக்கப்படுத்தல்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நான் வைத்தியராக வரவேண்டும் அதுவே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

vavuniya

vavniya1

திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸார்!!

us-ambulance

அவசர அழைப்பையடுத்து திருடனை பிடிக்கச் சென்ற பொலிஸார் உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.

டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற பொலிஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் அவசரம் உடனடியாக உதவி தேவை என்று கூறினான்.

ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டு உருவிய துப்பாக்கியுடன் அந்த விலாசத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ்காரர் ஜீன் கிம்ப்டன் என்பவரை வரவேற்ற ஒரு சிறுவனை அவரை வீட்டின் உட்புறத்தில் இருந்த குளியலறைக்கு அழைத்து சென்றான்.

உள்ளே குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
சற்றும் தயங்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, தாயையும் சேயையும் பிரித்தெடுத்தார்.

பின்னர் அம்புலன்சை வரவழைத்த அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் வைத்தியசாலையில் அனுமதிக்க உதவினார்.

இச்சம்பவம் தொடர்பாக புல்லரிப்புடன் பேட்டியளித்த ஜீன் கிம்ப்டன், அவசரம் என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என்றார்.

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்டி குழாமில் கிளி­நொச்சி மாணவி!!

judo

இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள உலக சமா­தா­னத்­திற்கும் ஐக்­கி­யத்­திற்­கு­மான 8ஆவது சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டியில் ­இ­லங்­கையைச் சேர்ந்த 28 ஜூடோ வீர, வீராங்­க­னைகள் பங்­கு­ பற்­ற­வுள்­ளனர்.

இதனை முன்­னிட்டு கம்­ப­ளையில் நடத்­தப்­பட்ட 16 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான திறன்காண் போட்­டி­க­ளின்­ மூலம் 56 ஜூடோ வீர, வீராங்­க­னைகள் முன்னோடி குழா­முக்கு தெரிவு செயப்­பட்­டுள்­ள­தாக இலங்கை ஜூடோ சங்­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

முன்­னோடி குழா­முக்கு தெரி­வா­கி­யுள்­ள­வர்­களில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லி­ருந்து கிளி­நொச்சி ஆச்­சி­ரம சைவ சிறுவர் இல்­லத்தைச் சேர்ந்­த­வரும் இந்து கல்­லூ­ரியில் கற்­ப­வ­ரு­மான ரசீந்­திரன் சுஜீ­பாவும் அடங்கு கின்றார். இவர் 16 வய­துக்­கு­பட்­ட­வர்­க­ளுக்­கான 40-44 கிலோ பிரி­வி­லேயே தெரி­வா­கி­யுள்ளார்.

இந்தக் குழாமில் இடம்­பெறும் 56 வீர, வீராங்­க­னை­களில் இறுதி 28 வீரஇ வீராங்­க­னைகள் தெரிவு செயப்­பட்டு லக்­னோவில் அடுத்த மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள போட்­டி­களில் கலந்­து­கொள்ள அனுப்­பி­ வைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இதற்­கான இறுதித் தேர்வுப் போட்­டிகள் அடுத்­த மாதம் இரண்டு கட்­டங்­களில் நடை­பெ­ற­வுள்­ளன. கிளி­நொச்சி மகா­தேவா ஆ­சி­ரம சைவ சிறுவர் இல்ல ஜூடோ வீராங்­க­னை­க­ளுக்கு பி. டபிள்யூ. ஜய­வர்­தன பயிற்சி அளித்து வரு­கின்றார்.

இந்த வீராங்­க­னைகள் இவ் வரு­டமே ஜூடோ விளை­யாட்டில் ஈடு­பட ஆரம்­பித்­த­தா­கவும் அவர்­க­ளுக்கு தீவிர பயிற்­சி­களைத் தொடர்ந்து வழங்­கினால் அவர்­களால் பதக்­கங்கள் வெல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இவ் வருடம் நடை­பெற்ற அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா­வுக்­கான ஜூடோ போட்­டி­க­ளிலும் தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான ஜூடோ போட்­டி­க­ளிலும் சுஜீ­பாவின் மூத்த சகோ­தரி ரசீந்­திரன் தமிழ்­மகள் பதக்­கங்கள் வென்­ற­தையும் அவர் நினை­வு­கூ­றத்­ த­வ­ற­வில்லை.

வட மாகாணம் சார்­பாக ஜூடோவில் முத­லா­வது பதக்­கதை வென்று கொடுத்­தவர் தமிழ்மகள் ஆவார். வருங்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை மகாதேவா ஆசிரம சைவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மூலம் வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பயிற்சிகளை அளிக்கவுள்ளதாக பயிற்றுநர் ஜயவர்தன கூறினார்.

வவுனியா திருநாவற்குளத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை!!(படங்கள்)

வவுனியா திருநாவற்குளம் 3ம் ஒழுங்கை பகுதியில் கடந்த சனிக்கிழமை பகல் வேளையில் மர்ம நபர்கள் சிலர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது..

கடந்த சனிகிழமை நண்பகல் வேளை வீட்டின் உரிமையாளர்கள் தாண்டிக்குளம் முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை மிக தத்துருபமாக உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து உள்ளிருந்த 25 பவுண் தங்க நகைகளையும் ஒரு லட்ச ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பொலிசில் முறையிட்டுள்ளார். வவுனியா போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

vav vav1 vav2 vav3 vav4

ஆளுநரிடம் நியமனக் கடிதம் பெற்றார் சி.வி.விக்னேஸ்வரன்!!

CV.Vigneswaran

வட மாகாண சபையின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநரிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு தான் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

மேலும் நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்றதென ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதில் கடிதம் ஒன்றையும் தான் கையளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் யார் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்வது என்பது தொடர்பில் விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.