
தலைவர் பதவியை இழப்பதில் தாம் வருத்தமடையப் போவதில்லை என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பியன்ஸ் 20-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய அவர் லாஹூரில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனினும் தேசிய அணியின் தலைவராக தொடர்ந்தும் சேவையாற்ற தாம் தயராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடைந்த தோல்விகளை அடுத்து மிஸ்பா உல் ஹக் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தலைவர் பதவியை தாம் கோரவில்லை எனவும், அதனை பெறுவதற்கு வற்புறுத்தவில்லை எனவும் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைவர் விவகாரம் தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையே தற்போதும் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.



கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,










