பழைய நண்பரை மறக்காத விஜய்!!

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தனது நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தற்போது தலைவா படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுப்பட இயக்குனர் நேசன் இயக்குகிறார். காஜர் அகர்வால், மோகன்லால், மகத், பூர்ணிமா மற்றும் பலர் நடிக்கிறார்.

இதில் வில்லனாக ரவி மரியா நடிக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற குஷி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அப்போது விஜயும் இவரும் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இருவரும் நண்பர்களானார்கள்.

தற்போது ஜில்லா படத்தில் நடிப்பதன் மூலம் இவர்கள் சூட்டிங் இடைவேளையில் நீண்ட நேரம் பேசிக்கொள்கிறார்களாம். இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் விஜய் தனது நண்பரை மறக்காமல் அதேபோல் பேசி பழகுகிறார் என்று சூட்டிங் வட்டாரங்களில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதி : அதிர்ச்சி தகவல்!!

imagessd

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.

அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி தொன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.

அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் 55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.

உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன.

இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

படம் தயாரிக்க பயமாக இருக்கிறது : பிரபு தேவா!!

prabu deva

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. தென்னிந்தியாவில் மைக்கேல் ஜக்சன் என்று அழைக்கப்பட்டார். தற்போது இந்தியில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார்.

எல்லாத்துறையிலும் முத்திரை பதிக்கும் இவருக்கு சில நாட்களுக்கு முன் மும்பையில் மெழுகு சிலை திறந்து அசத்தினர்.

அவரிடம் சினிமா தயாரிப்பு பற்றி கேட்டபோது படம் தயாரிக்க அதிக தைரியம் வேண்டும். அது என்னிடம் இல்லை. படம் தயாரிக்க பயமாக இருக்கிறது என்று கூறினார்.

வைத்தியசாலை உணவில் செத்த குட்டி பாம்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

dead

கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவை திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார். இது தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் புகார் செய்தார்.

தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த உணவு விடுதி முன்பாக கூடி போராட்டம் நடத்தினர். உடனே பொலிஸாருக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வைத்தியசாலை நிர்வாகம் புகார் செய்தது. அவர்கள் விரைந்து வந்தனர்.

பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி சம்பந்தப்பட்ட உணவு விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

அதைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது. அங்கிருந்து சர்ச்சைக்குள்ளான உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

லண்டனில் இலங்கை தமிழர் மீது முகமூடிக் கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்!!(வீடியோ)

UK

லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழரான கனகசபை சிறிதரன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பாரிய இரும்பு சங்கிலியுடன் புகுந்துள்ளனர்.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களைத் தடுத்த மில்டனை பாரிய இரும்பு சங்கிலியால் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தடுக்க அவர்களுடன் ஆயுதங்கள் இன்றி மில்டன் தர்மலிங்கம் சண்டையிட்டுள்ளார். கடையில் இருந்த பாதுகாப்பு கெமராக்களில் அவர் கொள்ளையர்களுடன் சண்டையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தர்மலிங்கம் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தலையில்10 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவு­தியில் ஒருவருக்கு தலையை வெட்டி மர­ண­தண்­டனை!!

off-with

சவு­தி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவு­தி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாலெம் பின் ஹஸன் அல் – எஸ்ஸி என்ற மேற்படி நபர் தனது சகாவான ஓமர் பின் ஷமி அல் – ஷர்டி என்பவரை சுட்டுக் கொன்றமைக்காக மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு குன்பன்டாஹ் நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது மரணதண்டனையுடன் சவு­தி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 66 ஆக உயர்ந்துள்ளது.

உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 10 அணிகள் தகுதி!!

brasil

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து திருவிழாவான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

2010ம் ஆண்டு உலக கிண்ண போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் சம்பியன் பட்டம் பெற்றது. 2014ம் ஆண்டுக்கான உலக கிண்ணம் கால்பந்து போட்டி பிரேசிலில் ஜூன் 12ம் திகதி முதல் ஜூலை 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. மீதியுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தகுதி பெறும். ஒவ்வொரு கண்டம் வாரியாக அணிகள் தேர்வு செய்யப்படும்.

இதன்படி இதுவரை உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆசிய கண்டத்தில் இருந்து 4 அல்லது 5 நாடுகள் தகுதி பெற வேண்டும். ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, ஈரான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

வடக்கு, மத்திய அமெரிக்க மற்றும் கரிபீயனில் இருந்து 3 அல்லது 4 நாடுகள் தகுதி பெறவேண்டும். அமெரிக்கா, கோஸ்டாரிகள் அணிகள் தகுதி பெற்று உள்ளன.

ஐரோப்பா கண்டத்தில் இருந்து இத்தாலி, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 11 அணிகள் தகுதி பெற வேண்டும்.

தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 2 முறை சம்பியனான அர்ஜென்டினா மட்டும் தகுதி பெற்று உள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

ஆபிரிக்க கண்டத்தில் இருந்து ஒரு நாடு கூட தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்காவில் இருந்து 5 அணிகள் தேர்வாகும். உலக கிண்ண போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவது ஏன்?

hanuman

அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.

அன்னையிடம் விடைபெறும் சமயம் அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார்.

இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் : பிரியா மணி!!

priyamaniபருத்தி வீரன் படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் நவநாகரிக வேடங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் ப்ரியா மணி. இவர் சமீப காலமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே நடித்து வருகின்றார்.

இது ஏதாவது உணர்வுபூர்வமான முடிவா என்று அவரிடம் கேட்டபோது என்னை வைத்துப் படம் பண்ணும் இயக்குனர்களிடம் தான் அதனைக் கேட்கவேண்டும் என்று கூறி சிரித்தார். பெரிய ஹீரோக்களுடனும், மசாலாப் படங்களிலும் நடித்துள்ளதாகத் தெரிவித்த ப்ரியா மணி கதையம்சம் பிடித்திருந்தால் தான் தேர்வு செய்வதாகக் கூறினார்.

ஆயினும், தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், மாறுதலான மசாலாப் படங்களிலும் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது இன்னும் இரண்டு வருடங்களில் தனக்குத் திருமணம் நடக்கலாம் என்று ப்ரியா மணி கூறினார்.

ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும் என்கிறார். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்ற ப்ரியாமணி திருமணம் என்பது பெரிய முடிவாகும், அதை எளிதாகத் தீர்மானிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

மீண்டும் அணு உலையை இயக்கியது வட கொரியா : அமெரிக்கா பரபரப்பு தகவல்!!

US

வட கொரியா தனது அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கான ஆதரமாக செயற்கை கோள் புகைப்படத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் எனப்படும் நவீன சர்வதேச ஆய்வு கழகம் கூறுகையில் ஆகஸ்ட் 31ம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரியவந்தது.

எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும் அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து சர்வதேச அணு சக்தி முகாமை இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்திற்கான செய்தி தொடர்பாளர் சர்வதேச விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் வடகொரியாவின் அணு சக்தி திட்டம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 3 அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே யாங்பியான் அணு உலையை மீண்டும் இயக்கப் போவதாக வட கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்த ஆட்கடத்தல் வர்த்தகர்..!

ausகிரிபத்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகர், கடந்த மூன்று ஆண்டுகளில் 6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அனுப்பி வைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில், 2008ம் ஆண்டு மற்றும் கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குறித்த நபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று கோடி ரூபா செலவிட்டதாகவும் இந்தப் பணம் மக்களை அவுஸ்திரேலியா அனுப்புவதாகத் தெரிவித்து பெற்றுக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக் காதலியை பார்க்கச் சென்ற போது குறித்த நபரை கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு திருகோணமலை, கிரிபத்கொட மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் வீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

865,000 டொலருக்கு விற்பனையான ஜேம்ஸ்பொண்ட் நீர்மூழ்கிக் கார்!!

car

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் மூர் என்ற பிரபல நடிகர் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ்பொண்டாக நடித்த பல திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. அவற்றுள் 1977ல் படமாக்கப்பட்ட தி ஸ்பை ஹூ லவ்ட் மீ என்ற படமும் ஒன்றாகும்.

இந்தப் படத்தில் நாயகன் மூரும் பெண் ஜேம்ஸ்பொண்ட் பார்பரா பாக்கும் ஒரு ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீர்மூழ்கிக் கார் ஒன்றினை உபயோகப்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டு.

இதற்காக வெள்ளை நிற எஸ்பிரித் கார் ஒன்று நீருக்கடியில் இயங்கும் வகையில் அப்போது மாற்றியமைக்கப்பட்டது. தற்போதும் இயங்கும் நிலைமையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் அந்தக் கார், கடந்த திங்கட்கிழமை அன்று லண்டனில் உள்ள ஆர்எஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது.

அந்தக் காருக்கான விற்பனை மதிப்பீடு 650 000 பவுண்டுகள் என்று ஏல நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் 550 000 (865,000 டொலர்) பவுண்டிற்கு அந்தக் கார் விற்பனையாகியுள்ளது.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் போதைப் பொருள்!!!

kar

கர்ப்பிணியாக நாடகமாடி போதைப் பொருளை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் உள்ள போகோடோ விமான நிலையத்தில் வைத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

றொரண்டோவை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண், கர்ப்பிணி போன்று நாடகமாடி 2 கிலோகிராம் உடைய போதைப் பொருளை கடத்த முயன்றார்.

ஏர் கனடா விமானத்தில் ஏற முயன்ற போது பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகமடைந்து குறித்த பெண்ணை சோதனையிட்ட போது தான் உண்மை தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் கடந்த மாதம் 6ம் திகதி கொலம்பியாவுக்கு வந்துள்ளார் என்றும், சமூக ஆர்வலர் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று 874 வெளிநாட்டவர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக உயரத்தில் உள்ள விமான நிலையம் இம்மாத இறுதியில் திறப்பு!!

heigh

உலகின் மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் சீனாவில் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தில் ஏற்கனவே ஐந்து விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது திபெத்தில் டாவுசெங் யாடிங் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4411 மீற்றர் உயரத்தில் புதிய விமான நிலையம், கட்டப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் இந்த விமான நிலையம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம் என்ற பெருமையை இந்த விமான நிலையம் பெறவுள்ளது.

இதனிடையே அதே பகுதியில் 3780 மீற்றர் உயரத்தில் மற்றொரு புதிய விமான நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக 76000 சதுர கிலோ மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உயரமான இடத்தில் ஏழு விமான நிலையங்களை கொண்டுள்ள ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது

மூவரின் உயிரைக் காத்த மூளைச்சாவு அடைந்த பெண்மணி!!

ind

சென்னை ஹோட்டல் அதிபர் ரகுபதி. இவரது மனைவி மல்லீஸ்வரி (57). வட மாநில திருக்கோவில்களுக்கு புனித யாத்திரை சென்று திரும்பினார்.

திடீரென்று மல்லீசுவரிக்கு வலிப்பு வந்தது. இதனால் அவரை ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

அவரது தலைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் பலவீனம் அடைந்து வெடித்ததால் மூளையில் இரத்தம் உறைந்தது. இதனால் அவரது மூளை செயலிழந்தது.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் எடுத்தனர்.

பின்னர் அவற்றை உயிருக்கு போராடிய 3 பேருக்கு பொருத்தினார்கள். மல்லீசுவரி இறந்தாலும் அவரால் 3 பேர் உயிர் வாழ்கிறார்கள்.

மனைவியை இழந்த ரகுபதி எல்லா சமூக சேவைகளையும் விட உடல் உறுப்புதானம் சிறந்தது என்று உணர்ச்சி ததும்ப கூறினார். மேலும் இந்த உறுப்புகள் தானத்தின் மூலம் தனது மனைவியின் இலட்சியம் நிறைவேறி இருப்பதாகவும் கூறினார்.

வவுனியா மாங்குளம் விபத்தில் ஒருவர் பலி!!

accident

வவுனியா மாங்குளம் பொலிஸ் பிரிவின் வவுனியா – யாழ்ப்பாணம் வீதி இந்துப்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் ஒன்று அதை செலுத்தியவரின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வில்வராயன்கட்டு தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான க.மயூரன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.