இணையத்தள பயன்பாட்டில் 3ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

internet

இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகத்தில் அதிகமாக இணையதளம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்து தற்போது 73.9 மில்லியன் பயன்பாட்டாளர்கள் என்ற அளவை எட்டியுள்ளது.

இணையதள பயன்பாட்டில் சீனா 348.2 மில்லியன் என்ற எண்ணிக்கையோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 191.4 மில்லியன் என்ற எண்ணிக்கையை பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இணையதள பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில், பிரேசில் 37சதவீதமாக முதல் இடத்திலும், இந்தியா 31 சதவீதம் என்ற நிலையில் 2வது இடத்திலும் உள்ளது.

விண்வெளியிலிருந்து முதல் முறையாக நிலவுக்கு செயற்கைக்கோள்..!

GPS_Satellite_NASA_art-iif

பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் அறியும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோள் ஒன்றை ஏவ நாசா முடிவெடுத்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை (ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் செப்டம்பர் 6ம் திகதி அமெரிக்க விமானப்படை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கைகோளானது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் உள்ள நாசாவின் விர்ஜினியா விண்வெளி கடற்கரை ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நிலாவை சென்றடையும்.

விண்ணிலிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலத்தில் அனுப்பிவைக்கப்படும் ஆய்வுக்கருவியானது நிலாவை சுற்றி வளிமண்டலம் மற்றும் தூசு மண்டலம் பற்றிய விவரமான செய்திகளை அனுப்பும்.

எமக்கு அருகிலுள்ள இந்த துணைக்கோளை பற்றி அறிந்துகொள்வது சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள், விண்பாறைகள் பற்றி அறிய உதவும். இந்த விண்கலம் ஏவப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு அதிலுள்ள
ஆய்வுக்கருவியானது 40 நாட்களுக்கு செயல்படும். 30 நாட்களுக்கு நிலாவின் மேற்பரப்பு பற்றி அது ஆராயும்.

அதி நவீன லேசர் கருவிகளுடன் செயல்படும் இந்த ஆய்வுக்கருவியானது பூமியில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு அறிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

A/L 2013 மாணவர்களின் அடுத்த கட்டம்?? வவுனியாவில் வழி காட்டல் கருத்தரங்கு!!

AL

வவுனியா மாவட்ட மாணவர்களின் கல்வியில் , அவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் நோக்குடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் சங்கம், க.பொ.த உயர தர பரீட்சையில் இந்த வருடம்(2013) தோற்றிய மாணவர்களிற்கு ஏற்ப்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் இலங்கயின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கு பற்றுகின்றன.

உயர்தரம் முடித்த மாணவர்கள் அடுத்த கட்டம் நோக்கி பயணிப்பது தொடர்பில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். இலங்கையில் உயர் கல்வி நோக்கிச் செல்ல பல வழிகள் இருந்தும் மாணவர்களிற்கு அது சரியாக சென்றடைவதில்லை. கொழும்பில் உள்ள மாணவர்கள் ஓரளவு இந்த அறிவை கொண்டு இருக்கின்றார்கள்.

வவுனியா போன்ற இடங்களில் உள்ள மாணவர்களிற்கு ஆசை இருக்கின்ற போதும் இது கஷ்டம், மிகப் பெரிய செலவு என பல விடயங்களை கற்பனை செய்து இவ்வாறன கல்வி நடவடிக்ககைகளில் ஈடுபடுவதில்லை. பல்கலைக்கழக கல்வி ஒப்பீட்டளவில் ஒரு சிறிய தொகையினருக்கே கிடைக்கின்றது.

மற்றவர்கள் அதை எப்படி பெறுவது? இப்படி பல கேள்விகள் பல சிக்கல்கள் அங்குள்ள மாணவர்களிற்கு உள்ளது. இதேவேளை வேலையுடன் கல்வி என்பதை மாணவர்கள் நினைத்து பார்ப்பது குறைவு. வேலை கிடைத்தால் கல்வியை மாணவர்கள் மறந்து விடுகின்றனர். இது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றது. இவற்றிக்கு காரணம் அவர்களுக்கு சரியான வழி காட்டுதல்கள் இல்லாமையே.

இதற்க்கு தீர்வாக இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களாக திகழும் IDM City Campus நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கற்கை நெறியினை வழங்கும் Wisdom Business academy நிறுவனம், BCAS கல்வி நிறுவனம், KBBS நிறுவனம், ஆகியன இந்த கருத்தரங்கில் பங்கு பற்றுகின்றன.

இவற்றின் மூலமாக தங்களுக்கு தேவையான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் தெரிவுகளை செய்ய முடியும். இதேவேளை தனி தனியாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தங்களுக்கு தேவையான கல்வி நிறுவனங்களுடன் கதைத்து, கேட்டறிந்து நிவர்த்தி செய்து தேவையான கல்வி நடவடிக்கைகளை தெரிவு செய்ய முடியும்.

உயர்தரம் முடித்த மாணவர்கள் பலகலை கழகத்திற்கு தெரிவாகிவிட்டால் அதற்க்கு எவ்வாறு தங்களை தயார் செய்ய வேண்டும்? அதற்க்கு முன்னர் எவ்வாறான கல்வி நடவடிக்கைகளில் ஈடு பட வேண்டும் என்பது தொடர்பிலும் இந்த கருத்தரங்கு மூலம் தெளிவாக்கல் செய்யப்படவுள்ளது. பல்கலைகழகத்தில் உள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் முழுமையாக இந்த செயற் திட்டத்தை செய்யவுள்ளனர்.

இந்த கருத்தரங்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தங்கள் பாடசாலையில் எதிர்வரும் செபடம்பர் மாதம் 08 ஆம் திகதி இந்த கருத்தரங்கை நடாத்துகின்றனர். தனியாக தங்கள் பாடசாலை மாணவர்களிற்கு என மட்டுப்படுத்தாமல் வவுனியா மாவட்ட மாணவர்கள் முழுமையாக பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாணவர்களிற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோரினது பங்கும் நிறையவே இருப்பதனால் இந்த கருத்தரங்கிற்கு பெற்றோர்கள் விரும்பினால் வர முடியும்.

இந்த கருத்தரங்கு முழுமையாக இலவசமாக நடைபெறவிருப்பதனால் மாணவர்களிற்கு பயன் தரக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறான அரிய வாய்ப்பு இலகுவில் வவுனியா மாவட்ட மாணவர்களிற்கு கிடைக்காது என்பதனால் இந்த கருத்தரங்கில் அனைவரையும் பங்கு பற்றுமாறு கருத்தரங்கு ஏற்ப்பட்டளர்கள் அழைக்கின்றனர்.

இந்த கருத்தரங்கிற்கு வீரகேசரி பத்திரிக்கை, ஜீனியஸ் பத்திரிக்கை என்பன ஊடக அனுசரணை வழங்கும் அதேவேளை ஸ்போர்ட்ஸ்களம் இணையமும் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த பாடசாலை வேன் டிரைவர்!!

child-abuse-2இந்திய உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் 3 வயது பள்ளிக்குழந்தையை வேன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லக்னௌவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் உள்ள தர்ஹா செரீப் பகுதியில் இருந்து ஆரம்ப பள்ளிக்கு செல்லும் மூன்று வயது குழந்தையை தினசரி அனில்குமார் பெரியா என்ற 19 வயது டிரைவர் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விடாமல் குழந்தை பலாத்காரம் செய்துள்ளான் அந்த டிரைவர். நடந்த சம்பவத்தை அழுது கொண்டே குழந்தை வீட்டில் தெரிவித்ததை அடுத்து டிரைவர் மீது பெற்றோர்கள் பொலீசில் புகார் தெரிவித்தனர்.

பொலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். குழந்தைக்கு மருத்துவபரிசோதனை செய்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்தால் பிரச்சினை : விஷால்!!

vishal

விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடிக்கும் மத கஜ ராஜா படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படம் குறித்து விஷால் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத கஜ ராஜா படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினியின் ராஜாதி ராஜா, கமலின் சகலகலா வல்லவன் படங்கள் மாதிரி நல்ல படமாக இருக்கும். ஹீரோயிசம் உள்ள படம். நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இந்த படம் மேல் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். இது என்னை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று நம்புகிறேன். எனது சொந்த கம்பெனி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. என்று அவர் கூறினார்.

மேலும், சிக்ஸ் பேக்ஆல் கிட்னி பாதிப்பு ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது..

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யக்கூடாது. ஒருமுறை சிக்ஸ் பேக் வருதற்காக உடற்பயிற்சி செய்துவிட்டு மீண்டும் நம் இயல்பான உடல்நிலைக்கு மாறிட வேண்டும். அப்படி மாறாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் பிரச்சனைதான்.

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியின்போது உடலில் தண்ணியோட அளவு குறைவாக இருக்கணும். ஒரு படத்துக்கு 5 நாட்கள் ஷூட்டிங் எடுத்தாங்கன்னா அந்த 5 நாட்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் உடம்போடு இருக்கனும். ஆனா அதையே தொடர்ச்சியாக பண்ணக்கூடாது. நான் இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் முடிஞ்ச உடனே வழக்கமான உடல்நிலைக்கு மாறிவிட்டேன்.

அதையே நாம் கண்டினியூவ் பண்ணினா உடல்ரீதியாக பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாம அந்த பாதிப்புகள் முகத்துல கூட தெரியும். சிக்ஸ் பேக் என்பது விலை உயர்ந்த பென்ஸ் கார் மாதிரி. கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம்தான். அதனால் அதை கொஞ்சம் பார்த்துதான் ட்ரை பண்ணனும் என்று விஷால் கூறினார். இந்த விழாவில் வரலட்சுமி, சுந்தர் சி. மனோபாலா கலந்து கொண்டனர்.

கஞ்சா கருப்புக்கு வந்த வாழ்வ பாருங்களேன்!!

கஞ்சா கருப்பை பல வேடங்களில் பார்த்து இருப்பீர்கள். அனால் இப்படி அட்டகாசமாக பார்த்து இருக்க மாட்டீர்கள்..

அவுஸ்திரேலியாவின் பின்னடைவுக்கு யார் காரணம் : மேத்யூ ஹைடன்!!

hyden

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து அவுஸ்திரேலிய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை அந்நாட்டு முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அவுஸ்திரேலிய அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையே காரணம். இதுவே அவுஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அணிக்கு மிகச் சிறந்த வலுவான தலைமையை உருவாக்க கிரிக்கெட் சபை தவறிவிட்டது. குறிப்பாக மைக்கல் கிளார்க்கை அணித் தலைவராக்கியது மிகப்பெரிய தவறாகும்.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் கோடிக்கணக்கில் வருவாய் இழந்த இந்திய வீரர்கள்!!

rs

அமெரிக்க டொலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. மே மாதம் 54 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது 65ஐ எட்டிவிட்டது. இது 70ஐ தொடும் நாள் தொலைவிலும் இல்லை.

சரி இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இழப்பு எப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி இயல்பானதுதான். ஐ.பி.எல். மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு தனியே ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கின்றனர்.

2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய வீரர்களுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 என்ற அடிப்படையில் ஏலத் தொகையை வழங்குவது என்பதாகும்.

அடுத்த ஏலத்தின் போது தான் இந்த ரூபாயின் மதிப்பு மாற்றி அமைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.பி.எல். வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருப்பதால், இப்போது அவர்களுக்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது 2011ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் 24 லட்சம் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்திய மதிப்பில் அவரது ஊதியம் ரூ.11.04 கோடியாகும். ஆனால் தற்போது ரூ.15.5 கோடி கொடுக்க வேண்டி இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனிக்கும் சுமார் ரூ.6 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக ஒவ்வொரு இந்திய ரூபாய் மதிப்பு சரிவதன் விளைவு, அது எங்களுக்கு குறைந்தது ரூ.15 லட்சம் கூடுதல் செலவை கொண்டு வந்து விடுகிறது.

ஏனெனில் வெளிநாட்டு வீரர்களுக்கு நாங்கள் இன்னும் 35% பாக்கித் தொகை கொடுக்க வேண்டி இருக்கிறது என்று கூறினார். ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பானது பேட்மிண்டன், ஹொக்கி வீரர்களுக்கும்தான் என்கின்றனர் விளையாட்டு வீரர்கள்

நடிகர் விஜய் டுவிட்டரில் இல்லை ஆனால் ரசிகர் மன்ற அறிக்கை வந்தது எப்படி??

vijay

விஜயின் பெயரில் வெளியான அறிக்கை எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை என விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் எனவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரில் டுவிட்டரில் அறிக்கை வந்துள்ளது.

விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அவற்றை நிர்வகித்து வருபவர் எஸ்.ஏ சந்திரசேகரன்தான். சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

விஜய் பிறந்த நாள் விழாவைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த தலைவா படப் பிரச்சினையில் விஜய் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். திரையுலகமும் அவருக்குக் கைக் கொடுக்கவில்லை.

ஒரு வழியாக படம் வெளியான பிறகு நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற விஜய் அறிக்கை வெளியானது.

அதில் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன் என்றும் ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன்.

என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து நேற்று விஜய்யின் மக்கள் தொடர்பாளர் மற்றும் மேலாளர் பி.டி.செல்வகுமாரிடம் கேள்வி எழுப்புகையில் விஜய் ட்விட்டரில் இல்லை.

நானும் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை. அப்படி இருக்கும் போது விஜய் பெயரில் இந்தச் செய்தி எப்படி வெளியானதென்று தெரியவில்லை என்றும் இந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வேகத்தை குறைக்க மாட்டேன்: உமேஷ் யாதவ்!!

umesh

காயம் போன்ற எந்த காரணத்துக்காகவும் பந்துவீச்சில் வேகத்தை குறைத்துக் கொள்ளமாட்டேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் (32), 26 ஒருநாள் (29) போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 62 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்குப் பின்பு சிறிய ஓய்வில் இருந்த இவர் சில வாரங்களாக மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார். 25 வயதான உமேஷ் யாதவ் பந்துவீச்சு குறித்து கூறுகையில், மேற்கிந்திய தீவுகளிலிருந்து திரும்பியதும் இரு வாரங்கள் மட்டும் ஓய்வு எடுத்தேன். அடுத்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.

விதர்பா கிரிக்கெட் சங்கத்திலுள்ள உள்ளரங்கில் அதிகமாக பயிற்சியில் ஈடுபடுகிறேன். இது அடுத்து வரும் சம்பியன்ஸ் கிண்ணம், அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கு கை கொடுக்கும்.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற முறையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். தொடர்ந்து ஒரே வேகத்துடன் பந்துவீசுவது தான் எனது பலம். தேசிய அணிக்காக விளையாடும் போது இது தான் எப்போதும் எனது நோக்கம்.

ஒருவேளை மூன்று விதமான இந்திய அணிக்கும் தெரிவு செய்யப்பட்டாலும் எந்த காரணத்துக்காகவும் வேகத்தை குறைக்க மாட்டேன். 2011-12ல் அவுஸ்திரேலியா சென்ற போது மெக்ராத்தை சந்தித்தேன்.

அப்போது அவர் வேகம் அல்லது மிக வேகம் என்று எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு நீளம் மற்றும் வேகத்தில் பந்துவீசுவார். ஆனால், எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிந்து செயல்பட்டால் சாதிக்கலாம் என்றார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம். போட்டியின் 40 அல்லது 42வது ஓவர் என்றாலும் இரண்டு பந்து என்பதால், அது 20 ஓவர்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதனால், நன்கு சுவிங் செய்ய உதவும்.

இந்திய அணியில் தற்போதுள்ள இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமாருடன் இணைந்து பந்துவீசுவது மகிழ்ச்சி என்று கூறினார்.

பெண் புகைப்பட நிரூபர் பலாத்காரத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் மக்கள்!!

ind

ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் புகைப்பட நிரூபரின் பாலியல் பலாத்காரத்தைத் தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியைப் ஏற்படுத்திள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் டெய்னிக் ஆஜ் நாளேட்டில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் ஷர்மா(வயது 50).
இவர் தனது பணியை முடித்து வீடு திரும்பிய பின்னர் தொலைபேசி அழைப்பு வந்ததால் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் புறப்படத் தயாரானார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவாகியது. இதைத் தொடர்ந்து ராகேஷ் ஷர்மா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ராகேஷ் ஷர்மா ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரை சுட்டது யார் என்பது குறித்து உத்தரப்பிரதேச பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை பெண் புகைப்பட நிரூபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் மற்றொரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெற்றோரை எரித்து கொலை செய்ய முயற்சித்த மகன் பொலிஸாரினால் கைது!!

Fire-Hands-Screensaver_1

தாய் மற்றும் தந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு எரித்து கொலை செய்த முயற்சித்த 23 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற மகன் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பிறகு பெற்றோரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மகன் வீட்டுக்கு தீ வைத்துள்ளார்.

வீடு எரிவதை கண்ட கிராமத்து மக்கள் உடனடியாக செயற்பட்டு, தீயணைப்பு படையினரை வரவழைத்து தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய சீகிரிய பொலிஸார் மகனை கைதுசெய்துள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நவிபிள்ளையிடம் முறையிடுவோம் : முஸ்லிம் காங்கிரஸ்!!

SLMC logo 1_CI

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ரி. ஹஸன் அலி நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு இன்னும் ஒரு தினங்களில் இடம்பெறவுள்ளது. இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் கொண்டதான அறிக்கை ஒன்றினை அவரிடம் கையளிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை இந்த அறிக்கையில் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்படும் தடைகள் காணிப் பிரச்சினைகள், நாடாளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களக் கடுங்கோட்பாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பது தொடர்பில் அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி நாட்டை சங்கடமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸும் சதி செய்வதாக சிங்கள அமைச்சர்கள் சில விசனம் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஹஸன் அலி இவ்வாறானவர்களின் விமர்சனங்கள் கருத்துகள் தொடர்பில் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தனித்துவமான செயற்பாட்டையே முன்னெடுப்போம்.

எமது அரசியல் உயர்பீடத்தைச் சேர்ந்த ஐவரை அரசாங்கம் தன்னுடன் இணைத்துக் கொண்ட போது நாம் அவர்களை எமது கட்சியிலிருந்து இடை நிறுத்தினோம். எனவே, அரசாங்கத்தை நாடி பிடித்து அதற்கேற்ப நடக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

அத்துடன் சில அட்டைக் கத்தி வீரர்களான அமைச்சர்களின் கருத்துகளையும் நாங்கள் கருத்தில் கொள்ளப் போவதும் இல்லை. என்று கூறினார்.

திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டார் : தொல்.திருமாளவன் மீது பெண் முறைப்பாடு!!

Thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் சென்ற கவிதா என்ற பெண், பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கவிதா கூறியுள்ளதாவது:

நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.

அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது.

அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.

மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவன் சமீபத்தில்தான் 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரது பெற்றோர்களும், கட்சித்தொண்டர்களும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் வற்புறுத்தினர். அதை மறுத்து வந்த நிலையில் தற்போது கோவையில் இருந்து அவர் மீது திருமண மோசடி புகார் கிளம்பியுள்ளது.

பாலியல் வன்முறையை தடுக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்!!

abuse

பாலியல் வன்முறைகள் நிகழ்வதை நகர சபை அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம், உடனுக்குடன் தெரியப்படுத்தும் நடைமுறை, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், காமுகர்களின் வெறியாட்டம் தொடரவே செய்கிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட பொது இடங்களில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கவும் இதுகுறித்த உடனடி தகவல்களை பெறவும், அந்நாட்டை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது.

இந்த அப்ளிகேஷனை பெண்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதின் மூலம் பாலியல் ரீதியான தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் என, நியூயார்க் நகர சபை உறுப்பினர் கிறிஸ்டியன் குயின் தெரிவித்தார். இதுகுறித்து, கிறிஸ்டியன் குயின் கூறியதாவது:

இந்த புதிய அப்ளிகேஷனை பயன்படுத்துவதின் மூலம் பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது பற்றி தகவல்கள், உடனடியாக நியூயார்க் நகர சபை அலுவலகத்திற்கும் மேயர் அலுவலகத்திற்கும் கிடைக்கும்.

எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிக்னல்கள் அங்கு அனுப்பப்படும். இதன் மூலம், நகரின் எந்த பகுதியில் எந்த நேரத்தில், பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார் என்ற விவரமும் உடனடியாக தெரியப்படுத்தப்படும். சரியான இடம், சரியான நேரம் பற்றி தகவல்கள் மேயருக்கு உடனடியாக தெரியப் படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, பாதிப்புக்குள்ளான பெண்ணை மீட்க முடியும் என கிறிஸ்டியன் குயின் தெரிவித்துள்ளார்.

சேரன் மகள் மனமாற்றத்திற்கு காரணம் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமா?

dhamini

காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் சேரனின் இளைய மகள் காதலித்த விவகாரம் கடந்த சில வாரங்களில் ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக தாமினி சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தார்.

அதில் காதலன் சந்துருவை கொலை செய்வதற்கு சேரன் முயற்சிப்பதாக கூறியிருந்தார். சேரன் மீதான இந்த பரபரப்பான குற்றச்சாட்டை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த புகாரை கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்துரு மீதே தாமினி புகார் கொடுத்திருந்தார்.

அதில் சந்துருவின் நடவடிக்கை பற்றியும் அவர் தனக்கு தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மனம் மாறிய தாமினி சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தாமினி சேரனுடன் சென்றதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் வீட்டில் 15 நாட்கள் தாமினி இருந்தபோது அவருக்கு பல விதங்களில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படமும் போட்டு காண்பிக்கப்பட்டும் அவருக்கு வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மனம் திருந்திய தாமினி பின்னர் பெற்றொருடன் செல்ல ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.