15 நிமிடத்தில் மடிக்கணணியை கழற்றி மாற்றி சாதனை படைத்த 8 வயது சிறுமி!!

lap

தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.

கோவை சாய்பாபா கொலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி.8 வயதான இவர் 4ம் வகுப்பு படிக்கிறார்.

கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா பழுதுபார்ப்பதை உன்னிப்பாக பார்த்தார். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.

அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினார். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் அரியானா “இந்தியா புக் ஒப் ரெக்கொட்ஸ்” நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் பள்ளி அதிபர் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.

அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் “இந்தியா புக் ஒப் ரெக்கொட்ஸ்”ல் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.

இது குறித்து சிறுமி கூறுகையில் கணினியை அப்பா பழுது பார்ப்பதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.

தற்போது செய்த சாதனையை விட மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம்!!

TNA-logo

வடமாகாண சபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை வேட்பாளர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளது.

வேட்பாளர் விவரம்,

யாழ். மாவட்டம்

சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்
எம்.கே.சிவாஜிலிங்கம்
பாஷையுரைச் சேர்ந்த இ.ஆனல்ட்
சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ச.சயந்தன்
வடமராட்சியைச் சேர்ந்த பொறியிலாளர் சிவயோகன்
யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்
யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி
யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப்
பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் ஆனந்தி
தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்
காரைநகரைச் சேர்ந்த தம்பிராசா
கரவெட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்
என்.வி.சுப்பிரமணியம்
வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர்
சர்வேஸ்வரன்
சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன்
வடமராட்சியைச் சேர்ந்த ச.சுகிர்தன்

வவுனியா மாவட்டம்

எம்.எம்.ரதன்
செந்தில்நாதன் மயூரன்
எஸ்.தியாகராஜா எம்.பி.நடராஜா எஸ்.ரவி
ஜி.ரி.லிங்கநாதன்
எஸ்.மோகன்
ஆர்.இந்திரராஜா
வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்

மன்னார் மாவட்டம்

அந்தோணி சூசைரட்ணம் சிறிமோ சாய்வா சு.சிவகரன்
ஞானசீலன் குணசீலன்
இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்
திரிசோத்திரம் நிமலசேகரம்
ஜோசப் ஆனந்த குரூஸ்
பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
அய்யும் அஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டம்

ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்
க.சிவநேசன் (பவான்)
ஜு.கனகசுந்தரசுவாமி
வைத்தியர் சிவமோகன்,
கமலேஸ்வரன்
திருமதி குணசீலன் மேரிகமலா
உடையார் கட்டைச் சேர்ந்த ஆண்டிஐயா புவனேஸ்வரன்

கிளிநொச்சி மாவட்டம்

வீ.ஆனந்த சங்கரி,
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,
பசுபதி அரியரத்தினம்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,
திருலோகமூர்த்தி,
பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,
திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

யாழ். மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத் தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வர் என கட்சி அறிவித்துள்ளது.

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

youtube

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் மீண்டும் Play செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு Play செய்யும்போது வீடியோவானது மீண்டும் Load ஆகிதான் திறக்கும். வீடியோவானது அதிகநேரம் ஓடக்கூடியது என்றால் வீடியோ திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும் பார்த்த வீடியோவை மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் ஒரு வழி உள்ளது.

அதற்கு நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் URL-ல் Repeat என்ற வார்த்தையைச் சேர்த்தால் போதும். உதாரணம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின்
URL http://www.youtube.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp

இப்படி இருக்கும். அந்த URL-ல் youtube என்று முடியும் இடத்தில் repeat என்ற வார்த்தையை தட்டச்சிட்டு என்டர் செய்யுங்கள்.

http://www.youtuberepeat.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp என்ற வார்த்தையை சேர்த்தால் போதும்.

உடனே அந்த URL  இந்த தளத்திற்கு ( http://www.listenonrepeat.com/watch/?v=-Gq1oPg3LT4&feature=plcp) redirect ஆகிவிடும். இப்போது இந்த வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்வையிடலாம். நீங்கள் நிறுத்தும் வரை வீடியோவானது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இப்பதிவை வீடியோவாகவும் நீங்கள் காணலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமெனில் இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.

அவதானம்: குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் சந்தையில்!!

bottle

குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்வோரை தேடும்பணி நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் வெற்று போத்தல்களில் முறையற்ற வகையில் நீரை நிரப்பி முக்கியமான இடங்களில் விற்பனை செய்வதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமையவே, நேற்று முதல் இதற்கான தேடுதல்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்கள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வியாபாரிகள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ளார்களா என்பது பரிசீலிக்கப்படவுள்ளது.
இதேவேளை குடிநீர் மாதிரிகள் சோதனைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவு தொடரில் சூதாட்டமா?

West Indies v Pakistan: Group B - ICC Champions Trophy

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இதில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இப்போட்டிகளில் பெருமளவு சூதாட்டம் நடந்ததாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட கிரிக்கெட் ஊழல் ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.

எனவே போட்டிகள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது!!

sutha rahunathan

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது மியூசிக் அக்கடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான, அக்கடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி தொடங்கவுள்ள அக்கடமியின் 87வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில் சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.

இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக்கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு ஜனவரி மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள நாட்டிய விழாவில் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை மியூசிக் அக்கடமியின் தலைவர் என்.ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

 

பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்.!

baby

இந்தோனேஷியாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு லட்சக்கணக்கில் கும்பலொன்று திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலொன்று புகுந்தது. வீட்டிற்குள் இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் கயிற்றில் கட்டிப் போட்டு விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை திருடுவதில் தீவிரமாக இருந்தனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை பசியால் அழத் தொடங்கியது. உடனே செய்வதறியாக நின்ற கொள்ளையர்கள் தாயிடம் சென்று அழுகையை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என கேட்க 2 கரண்டி பாலுடன் சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கும்படி கூறினார்.

அதன்படியே அவன் செய்ய பாலை பருகியதும் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது. படுக்கையில் கொண்டு குழந்தையை வைத்து விட்டு சுமார் 2½ லட்சம் பெறுமான பொருட்களை சுருட்டிக் கொண்டு கும்பல் தப்பி ஓடியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொலிசாரிடம் புகார் அளிக்கவே கொள்ளை கும்பல் தலைவன் உட்பட 4 பேரை பிடித்தனர் ஒருவன் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டான். பயங்கர ஆயுதங்களுடன் சென்று கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்துக் கொன்ற விவசாயி!!

snake

இந்திய மாநிலம் போபாலில் தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து துண்டங்களாக்கிய விவசாயியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

போபால் அருகே மச்சி போர்கான் என்ற கிராமத்தில் வசித்து வரும் 30 வயது நிலாப் துர்பே என்ற விவசாயி தனது மாடுகளை மேய்த்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.

தன்னைக் கடித்தப் பாம்பை திருப்பிக் கடிக்காது என முன்னோர் கூறிய அறிவுரை ஞாபகத்திற்கு வர உடனடியாக பாம்பை கையில் எடுத்து அதனை துண்டங்களாக கடித்துத் துப்பியுள்ளார் நிலாப். நிலாப்பை பாம்பு கடித்த விபரம் அறிந்த அவரது ஊர்க்காரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருக்கு விஷ மருந்து கொடுத்த வைத்தியர் ராகுல் இது குறித்து கூறுகையில் தான் இந்த மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ஹீரோக்கள்!!

jeeva_son_001

என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், தமிழ் ஹீரோக்கள் குடும்ப பொறுப்புகளை கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்களாம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித், இளைய தளபதி விஜய், சூர்யா, ஜீவா உட்பட பல முண்ணனி ஹீரோக்கள் பலரும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் உள்ளூரில் ஷூட்டிங் நடந்தால் குழந்தைகளுடன் அதிகளவு பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை காரிலோ அல்லது பைக்கிலோ அழைத்து சென்று பள்ளியில் விட்டு வருகின்றனராம்.

அத்துடன் அவர்கள் விரும்பி பார்க்கும் படங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். சமீபத்தில் ஜீவா தன் குழந்தையை பசிபிக் ரிம் என்ற ஹாலிவுட் படத்துக்கு அழைத்து சென்றாராம் ஜீவா. அவரைவிட குழந்தைதான் படத்தை ரொம்பவே ரசித்ததாம்.

இதேபோன்று ஐஸ்வர்யா ராயும் தன்னுடைய மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறாராம்.

கூட்டமைப்பின் சார்பில் வடக்கு தேர்தலில் 3 பெண் வேட்பாளர்கள்!!

TNA-logoநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளிநொச்சி கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லைத்தீவு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உப அதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.

இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.

TNA

மீண்டும் BCCI தலைவராகிறார் சீனிவாசன்!!

Srinivasan

குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான ஆட்ட நிர்ணய குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது இந்திய கிரிக்கெட் சபை நியமித்த விசாரணைக் குழு.

இதையடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் திரும்புகிறார் சீனிவாசன். சீனியின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இணை நிறுவனர் ராஜ் குந்த்ரா. இவர்கள் மீதான சூதாட்டத்தில் தொடர்பு என்ற புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட குழு தற்போது இவர்களுக்கும் அந்த புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது.

இந்த நிலையில் விசாரணையில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள் அவர்களுக்கும் இந்தப் புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளதாம். விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் 2ம் திகதி கூடும் கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கவுள்ளது. அன்றயை தினமே ஐபிஎல் நிர்வாகக் கூட்டமும் கூடுகிறது.

அறிக்கையில் தனது மருமகன் நல்லவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளாராம்.

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா புற்றுநோய்க்கு சிகிச்சையா?

kanaka

நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படு பிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாக செய்திகள் வந்தன.

பின்பு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற அங்கு சென்றார்.

அந்த மருத்துவமனையில் அனாதைகள் மற்றும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அங்கு புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் கனகா சிகிச்சை பெறுவதைப் பார்த்த அந்த பிரமுகர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் கூற விஷயம் அப்படியே பரவியது. கனகா புற்றுநோய்க்கு தான் சிகிச்சை பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இப்படி கவனிக்கக் கூட ஆளில்லாமல் தன்னந்தனியாக கனகா சிகிச்சை பெறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இறந்து விட்டதாக கருதப்பட்ட மாணவர் உயிருடன் வந்த அதிசயம்!!

body

இந்திய ஒரிசா மாநிலம் காகிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது மாணவன் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 8ம் திகதி முதல் காணவில்லை.

எனவே அவரது தந்தை பொலிஸில் புகார் தெரிவித்ததையடுத்து பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது ஊர் அருகே உள்ள காட்டில், அழுகிய சடலமொன்று கிடந்துள்ளது.

அந்த சடலம் லோசன் காடிதாவாக இருக்கலாம் என்று சந்தேகித்த பொலிசார், அவரது தந்தையை அடையாளம் காட்ட அழைத்து வரவே, அவரும் இது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டிருப்பது லோசன் காடிதா என தெரிய வந்ததையடுத்து, அவரின் உடலை அவரது தந்தை எடுத்து சென்று இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து லோசனை அவரது நண்பர்கள் 6 பேர் கொலை செய்து இருக்கலாம் என்று தந்தை பொலிஸில் புகார் தெரிவிக்கவே அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட லோசன் காடிதா திடீரென வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவை பார்க்க சென்றதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து காட்டில் கிடந்த பிணம் யாருடையது என பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

Tillakaratne Dilshan

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை அணி.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக அம்லா 77 ஓட்டங்களையும் டுமினி 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்டுகளையும் மலிங்க 3 விக்கெட்டுகளையும் டில்ஷான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் தனது 17வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். டில்ஷான் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் சங்ககார 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி வரும் 31ம் திகதி ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

சிம்பாவே அணியுடனான தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

india

இந்திய சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராத் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 46 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிம்பாவே அணி சார்பாக அணித்தலைவர் டெய்லர் 23 ஓட்டங்களையும், மசகாட்சா 38 ஓட்டங்களையும், வில்லியம்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா 14 ஓட்டங்களையும் , தவான் 35 ஓட்டங்களையும், அம்பதி ராயுடு 33 ஓட்டங்களையும் கோலி 68 ஓட்டங்களையும், ரெய்னா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது மட்டுமன்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கின்றது.

 

காதலில் சிக்கிய 5 நடிகைகள்..!

kathal

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இந்த நிலையல் சிம்புவுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார் என்கின்றனர். ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

சமந்தாவும், சித்தார்த்தும் காதல் வயப்பட்டு உள்ளனர். இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார்.

லட்சுமி ராயும் காதலில் விழுந்துள்ளார். அவர் கூறும் போது நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார்.

அமலாபாலும் முன்னணி டைரக்டர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கூறுகின்றனர்.

காஜல் அகர்வாலுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சமீபத்தில் புறக்கணித்து விட்டார். தயாரிப்பாளரை மணப்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை குறைப்பதாக கூறப்படுகிறது.