காதலியை கல்லாலேயே அடித்துக் கொன்ற வாலிபர்..!!

dead

இந்திய தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவர் கல்லால் தாக்கி கொன்றுள்ளார்.  கடந்த 25ம் திகதி தமிழகத்தின் சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

சூளைமேடு பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரச பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் பற்றி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை பற்றி எந்தவித தகவலும் தெரியாமல் இருந்தது. இதனால் கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை பொலிசார் திக்கு தெரியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் பொலிசாரின் தீவிர விசாரணையில் கூவம் ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பூந்தமல்லி ஏரிக்கரையை சேர்ந்த 20 வயதான நீலாவதி என்பது உறுதி செய்யப்பட்டது.

அவரை கொலை செய்தது யார் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நீலாவதியின் கையடக்கத் தொலைபேசியில் பதிவான இலக்கங்களை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.

நீலாவதியிடம் கடைசியாக பேசிய 10 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள லேத்பட்டறையில் வேலை செய்து வந்த அருண் என்ற 25 வயது நபர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வெளியூரில் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சொந்த ஊரான விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நீலாவதியை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அருணை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நீலாவதியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி அருண் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சூளைமேடு சுப்பாராவ் நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அங்கு வாடகைக்கு குடியிருந்த நீலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பார்த்த முதல் நாளே நெருக்கம் ஏற்பட்டது. இரண்டு நாட்களில் காதலர்களாக மாறினோம். எனது வேலையை நான் மறந்தேன். தொடர்ந்து இருவரும் விடிய விடிய பேச ஆரம்பித்தோம்.

3வது நாளிலேயே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் 4 நாட்கள் தொடர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம். ஒருவாரம் இது தொடர்ந்தது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி நீலாவதி என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். ஒரே வாரத்தில் நம்முடன் நெருக்கமாக பழகியவர் வேறு வாலிபருடன் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகித்தேன்.

எனவே அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் நீலாவதி எனது வீட்டிற்கே வர ஆரம்பித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே தீர்த்துக்கட்டி விடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். சம்பவத்தன்று கத்தி ஒன்றை கடையில் வாங்கிக் கொண்டேன். திருமணம் பற்றி பேச வேண்டும். சூளைமேடு கூவம் ஆறு அருகில் வரும்படி அவரிடம் தொலைபேசியில் கூறினேன். அவரும் ஆற்றங்கரைக்கு வந்தார்.

நைசாக அவருடன் பேச்சு கொடுத்தேன். குத்தி கொலை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், நீலாவதி சுதாரித்து விடக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டு இருந்தபோதே அருகில் கிடந்த கல்லால் அவர் முகத்தில் மின்னல் வேகத்தில் தாக்கினேன்.

நிலை குலைந்த அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டு கொன்றேன். பின்னர், கூவத்திலேயே சடலத்தை வீசி விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் சென்று விட்டேன்.

இறுதியில் பொலிசாரின் வலையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அருண் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பாடசாலை கூரையின் மீது ஏறி றோயல் கல்லூரி ஆசிரியை போராட்டம்..!!

sri lankan school teachers

கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே தனக்கு கடந்த 17ம் திகதி வழங்கப்பட்ட இமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.!!

tsunami

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.!!

ICC_World_Cup_2015

11வது உலக கிண்ண ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் இணைந்து நடாத்தவிருகின்றன. இந்தப் போட்டிகள் 2015ம் ஆண்டில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நொக்-அவுட் ஆட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல் அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம் ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் இன்று கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.

குழு  A

இங்கிலாந்து
அவுஸ்திரேலியா
இலங்கை
பங்களாதேஷ்
நியூசிலாந்து
மற்றும் தகுதிகான் போட்டிகளில் 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடிக்கும் அணிகள்.

குழு  B

தென்னாபிரிக்கா
இந்தியா
பாகிஸ்தான்
மேற்கிந்திய தீவுகள்
அயர்லாந்து
மற்றும் தகுதிகான் போட்டியில் 4ம் இடத்தை பிடிக்கும் அணி.

ICC Cricket World Cup 2015 Official Launch In Melbourne

 

தீவிரவாதிகளின் கொலை சதி முயற்சியிலிருந்து விபத்து என்னை காப்பாற்றியது : இம்ரான்கான்..!

imran khan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்– இ–இன்சாப் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
அக் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் மே 7ம் திகதி தேர்தல் பிரசாரத்தின் போது கராச்சியில் 24 அடி உயர மேடையில் லிப்ட் மூலம் ஏறிய இம்ரான்கான் விபத்துக்குள்ளானார். அதில் அவர் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து கடும் போராட்டத்துக்கு பின் உயிர் தப்பினார்.

குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ள அவர் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது “விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் தங்கியிருந்த போது என்னை அப்போதைய உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் என்னை சந்தித்தார்.
அப்போது விபத்து நடந்த மறுநாள் என்னை கொல்ல தீவிரவாதிகள் சதி செய்து இருந்ததாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தலிபான்கள் உள்ளிட்ட 25 தீவிரவாத அமைப்புகள் உள்ளன. அவர்களில் ஒது சிலர் மூலம் எனக்கு கொலை மிரட்டல்கள் இருந்து வந்தது.

இது குறித்து எச்சரிக்கை விடுத்த அரசு தேர்தல் பிரசாரத்தின் போது எனக்கு மிக அதிகளவில் பாதுகாப்பு கொடுத்தது. அதனால்தான் மேடை ஏறி தீவிரவாதிகள் தாக்க முடியாத அளவுக்கு 24 அடி உயர மேடையை எனது கட்சியினர் அமைத்து இருந்தனர்.

அதன் மீது ஏற அமைக்கப்பட்டிருந்த லிப்ட் அறுந்ததால் கீழே விழுந்து நான் படுகாயம் அடைந்தேன். அந்த விபத்து தான் தீவிரவாதிகளின் கொலை சதியில் இருந்து என்னை காப்பாற்றியுள்து” என்று கூறினார்.

சாதனை படைத்த உலகின் மிக வயதான மூதாட்டி.!(படங்கள்)

பொதுவாக அனைவரும் தங்கள் வயதை குறைத்து சொல்லத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், சமீபகாலமா நிறைய தாத்தா, பாட்டிகள் நாங்கள் தான் உலகிலேயே வயதானவர்கள் என்று முன்வந்து சொல்கின்றார்கள்.

இதுவரைக்கும் ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர் ஒக்காவா தான் உலகிலேயே அதிக வயதானவர் என்று சாதனைப் புத்தகமான கின்னஸ்சில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இல்லை இவர் தான் உலகிலேயே மிகவும் வயதானவர் என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மூதாட்டியை காட்டுகிறது அந்நாட்டு அரசு.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பேக் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவருபவர் ஜொஹன்னா மசிபுகோ. தற்போது இவருக்கு 119 வயதாவதால் இவரே உலகில் அதிக வயதானவர் என அறியப்பட்டுள்ளாராம்.

ஜோஹன்னாவின் சான்றிதழ்களில் அவர் மே 11ம் திகதி 1894ம் ஆண்டு பிறந்தவராகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவே, இவரது வயது மூப்புக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.

ஜோஹன்னேயின் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். ஆனால், இவரே அனைவருக்கும் மூத்தவராம். இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஐவர் இறந்து விட இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது 77 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும் தானே சமைத்து, துவைத்து என தனக்கான வேலைகளை தானே கவனித்துக் கொள்கிறாராம். இன்னும் கண் பார்வை தெளிவாக இருப்பதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நன்கு ரசித்துப் பார்க்கிறாராம் ஜோஹன்னே. ஆனால் நீண்ட நேரம் நிற்க மட்டும் முடிவதில்லையாம்

தென்னாப்பிரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக இவரது சான்றிதழ்களை இன்னும் சரிபார்க்காத போதும் பத்திரிக்கைகள் இவர் தான் வயது முதிர்ந்த மூதாட்டி என அடித்துக் கூறுகின்றன்.

இதற்கு முன்னர் அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122வது வயதில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி காலமானார்.

சமீபத்தில் இந்திய காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்பவர் தனக்கு 141 வயதாவதாகவும் தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

p1

p3

p2

இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் பரவும் கணணி வைரஸ்!!

baby

இங்கிலாந்து இளவரசர் ஜோர்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்து வாரிசு பற்றிய செய்தியை படிக்க, புகைப்படங்களை பார்க்க உலக மக்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த ஆவல் எப்படி வினையாக முடிகிறது என்று தெரியுமா ஃபேஸ்புக்கில் ராஜ குழந்தை பற்றிய வீடியோ குறித்த இணையதள இணைப்பு போஸ்ட் செய்யப்படுகிறது.

அந்த லிங்கை கிளிக் செய்தால் வீடியோ பிளேயரை அப்டேட் செய்ய கேட்கிறது. நீங்கள் ஓகே என கிளிக் செய்தால் வைரஸ் உங்கள் கணனியில் தரவிறங்கி கணனியில் உள்ள தகவல்கள், வங்கி தொடர்பான தகவல் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்துவிடுகிறது. அதனால் அரச குழந்தை பற்றிய லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்துவிடாதீர்கள்.

புளூடூத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!!

bluetooth_logo

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எதற்காக புளூ டூத் என்று பெயரை வைத்தார்கள் எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கன்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நோர்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரல்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம். புளூடூத் குறியீட்டை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான்.

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா கேட்ஸ் அளவு.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பக்கெட் பேஸ்ட் புரோடோகோல் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பக்கெட் பக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செக்கன் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை.

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ரொபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ரொபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது. சீட்டு குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செக்கன் இடைவெளி இருக்கும்.

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர் கொம், கார் ஓடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு சுவீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் பதிப்பு 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா தொழில்நுட்பங்களையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது. அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று. இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள்.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு விசேட போர்முலா அல்லது அல்கோரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்கோரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை.

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் காட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற இலத்திரனியல் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி!!

karthi-hari

ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது. சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்து சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தை அடுத்து கார்த்தியின் அருவா எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4 மாதங்களில் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தியின் பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள பிணைத் தொகை வைப்புச் செய்ய நேரிடும்!

UK-visasa

பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவாகள் பிணைத் தொகையொன்றை வைப்புச் செய்ய நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் விசா விண்ணப்பங்களின் போது பிணைத் தொகைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனைத்து வகையிலான விசாக்களுக்கும் இவ்வாறு பிணைத் தொகை அறவீடு செய்யப்பட மாட்டாது.

விசிட் விசாவிற்காக விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து 3000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் பிணையாக அறவீடு செய்யப்பட உள்ளது. இந்தப் பிணைத் தொகை மீள அளிக்க்க் கூடிய வகையில் அறவீடு செய்யப்படுகின்றது.

விசா வழங்கப்பட்ட குறித்த காலப்பகுதிக்குள் நாடு திரும்பினால் பிணைத் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்ப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறைக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஆட்டநிர்ணய வழக்கு.. குற்றப்பத்திரிகையில் தாவூத், ஸ்ரீசாந்த் பெயர்கள்!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகாரத்தில் இன்று டெல்லி போலீசார் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, சவான் உள்ளிட்ட 30 பேர் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

6வது ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகாரத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோருடன் ஏராளமான சூதாட்ட தரகர்கள் சிக்கி கைதாகினர். இதில் ஸ்ரீசாந்த், சவான் உட்பட 21 பேருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் கமிஷனரின் பதவிக் காலம் வருகிற 31ம் திகதி முடிவடடய உள்ள நிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இக் குற்றப்பத்திரிகையில் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோருடன் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராஹீம், சோட்டா ஷகீல் என மொத்தம் 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கல் குழந்தையைப் பெற்றெடுத்த அற்புதத் தாய்!!

stonebaby

இப்போது சொல்லப்போகும் ஒரு கதை நம்பமுடியாதது தான். ஆனால் இது ஒரு உண்மைக் கதை. கடந்த 400 ஆண்டுகளில், இது போன்ற 300 நிகழ்வுகள் மருத்துவ இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் இப்போது ஒரு நிகழ்வைப் பார்க்கப் போகிறோம்.

அது என்னவென்றால் 50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து பெற்றெடுத்த ஒரு பெண்ணின் கதை. அதாவது 1955 ஆம் ஆண்டு காஸாபிளான்கா என்னும் சிறிய கிராமத்தில் ஒரு இளம் பெண் பிரசவ வலியில் துடித்தாள். 48 மணிநேரமாகியும் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை.

அதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவர்களால் அந்த பெண்ணுக்கு எதற்கு குழந்தை பிறக்கவில்லை என்று தெரியவில்லை. வலியால் மயக்கமடைந்த அப்பெண்ணை அவளை ஒப்ரேஷன் தியட்டரில் வைத்திருந்தனர். மயக்கம் தெளிந்த பின்னர் அப்பெண் மாயமானார்.

பல நாட்களுக்கு வலி தொடர்ந்த நிலையில் அப்பெண்ணுக்கு திடீரென்று வலியானது நின்றுவிட்டது. அதனால் அப்பெண்ணும் குழந்தை பிறந்த சில நாட்கள் ஆகுமென்று, கர்ப்பமாக இருப்பதை மறந்து அப்படியே விட்டுவிட்டார்.

சஹ்ரா மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து பாட்டி ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 75 வயதாகிறது. இந்த நிலையில் திடீரென்று அவருக்கு கடுமையான வலியானது ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்றார். எந்த ஒரு மருத்துவராலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் வலிக்கு காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை.

அப்போது ஒரு மருத்துவர் சஹ்ராவின் வீக்கமடைந்த வயிற்றினைப் பார்த்து ஒருவேளை அது கருப்பைக் கட்டியாக இருக்குமோ என்று நினைத்து, ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது ஸ்கேனிங் ரிப்போர்ட்டைப் பார்த்தால், அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

அது என்னவென்றால், சஹ்ராவின் வயிற்றில் காரைபடிந்த குழந்தையானது இருக்கிறது. அத்தகைய குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த குழந்தை கருப்பைக்கு வெளியே, சஹ்ராவின் உள்ளுறுப்புகளுடன் இணைந்து இறந்துள்ளது.

இத்தகைய நிலையில் உள்ள குழந்தையை “லித்தோபீடியான்” (Lithopedion) அதாவது “கல் குழந்தை” என்று சொல்வார்கள். எனவே மருத்துவர்கள் சிசேரியன் மூலம் அந்த கல் குழந்தையை வெளியேற்ற முடிவு செய்தார்கள்.

பொதுவாக இந்த சிசேரியனின் போது, அதிகப்படியான இரத்த வெளியேறும் என்பதால், தாய் இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சஹ்ராவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விவியன் ரிச்சட்ஸின் சாதனையை முறியடிப்பாரா விராத் கோஹ்லி..??

kohli

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது. ரிச்சட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.

தற்போதைய இந்திய அணியில் விராத் கோஹ்லி தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். சிம்பாவே அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து அவர் ரன் குவித்து வருகிறார்.
சிம்பாவே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அவர் 68 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தொடரையும் வெல்ல உதவினார்.

ஒரு அணித் தலைவராக விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ள முதல் ஒரு நாள் தொடர் வெற்றி இது.

ரிச்சட்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 5000 ஓட்டங்களை எடுக்க 114 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது கோஹ்லி 108 போட்டிகளை விளையாடி முடித்துள்ளார்.

அடுத்த ஐந்து போட்டிகளில் அவர் 425 ஓட்டங்களை எடுத்தால் சாதனையை முறியடிக்கலாம். 6 போட்டிகளை எடுத்துக் கொண்டால், ரிச்சட்ஸின் சாதனையை சமன் செய்யலாம்.

இந்தியாவின் கங்குலிதான் இதற்கு முன்பு குறுகிய போட்டிகளில் 5000 ஓட்டங்களை குவித்தவராக இருக்கிறார். அவர் 126 போட்டிகளில் இதைச் செய்துள்ளார்.

அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லாரா, 118 போட்டிகளில் 5000 ஓட்டங்களை எடுத்துள்ளார். அந்த சாதனையையும் கோஹ்லி முறியடிக்கலாம். ஏற்கனவே விரைவாக 15 ஒருநாள் போட்டி சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜில்லாவில் விஜய் சம்பளம் 20 கோடி!!

jilla

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு 20 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது.

ரஜினி, கமல் போன்ற டொப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை. ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.

விஜய்யைப் பொறுத்தவரை பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் 18 கோடி என்றும் அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

சஹிட் அப்ரிடி 400 சிக்சர்கள் அடித்து சாதனை!!

afridi

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சஹிட் அப்ரிடி சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே சனிக்கிழமை T20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதில் அப்ரிடி 2 சிக்சர்களை அடித்திருந்தார்.

இதன் மூலம் 400 சிக்சர்களை அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் அவர். 33 வயதாகும் அப்ரிடி, 359 ஒருநாள் போட்டிகளில் 314 சிக்சர்களையும், 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களையும் 20 T20ல் 61 சிக்சர்களையும் விளாசியிருக்கிறார்.

1996ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். அப்ரிடிக்கு அடுத்ததாக 353 சிக்சர்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல்.

உலகின் அதி பயங்கர மனிதர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது பொதுவான பேச்சு வழக்கு. பொதுவாக மேற்கந்தை நாடுகளில் இருப்பவர்களுக்கு பச்சை குத்துதல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பச்சை குத்துதலில் முன்னிலை வகிப்பவர்கள் யார் என ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் நியூசிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழும் லக்கி டைமன் (Lucky Diamond Rich) என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

100 உதவியாளர்களுடன் 1000 மணித்தியாலங்களுக்கு நேரத்தை விரயம் செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார் இந்த விசித்திர மனிதர். இவர் ஏமாற்று வித்தை மற்றும் வாள்களை விழுங்கி ரசிகர்களை வியக்க வைக்கும் கில்லாடி செயல்களில் ஈடுபடும் மனிதன்.

அத்துடன் பெண்களை ரீதியாக ஜூலியா (Gnuse) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது முகம் உட்பட உடலின் 95 வீதமான பாகங்களில் பச்சை குத்தியுள்ளார்.இப் பெண்மணி கின்னஸ் சாதனை ஒன்றையும் தன் வசம் வைத்துள்ளார்.

4 3 2

1