மகளின் அறையில் பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமான பிடித்த தாய்..!

teacher

தனது மகளின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த தாய் ஒருவர், கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது 16. கணித ஆசிரியரின் வயது 35. கடந்த சில நாட்களாக தனது மகள் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருவதைப் பார்த்தார் தாயார். இதனால் அவருக்கு மகள் மீது சந்தேகம் வந்தது.

ஒரு நாள் மகளுக்காக காத்திருந்தார் தாயார். மகளும் வழக்கம் போல தாமதமாக வந்தார். மகளுக்குத் தெரியாமல் காத்திருந்த தாயார், தடாலடியாக மகளின் அறைக்குள் புகுந்தார். அறை முழுவதும் தேடினார். கட்டிலுக்குக் கீழே குணிந்து பார்த்தபோது அதிர்ந்தார். அங்கு மகளின் கணித ஆசிரியர் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். பொலிஸார் வந்து வாத்தியாரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர். தினசரி தாயாருக்குத் தெரியாமல் தனது ஆசிரியரை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளார் அந்த மாணவி. இது தனது தாயாருக்குத் தெரியாது என்றும் நினைத்துள்ளார்.

ஆனால் மகள் மீது சந்தேகமடைந்த தாயாரின் அதிரடி நடவடிக்கையால் இருவரும் சிக்கினார்கள். அந்த ஆசிரியர் மீது தற்போது பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆக்ரோஷம் கூடாது : கோஹ்லிக்கு அசாருதீன் அறிவுறை..!

kohli

களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக செயல்படுவதை விராத் கோஹ்லி தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இந்தியாவின் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்தில் இருந்த நடுவர்களிடம் வீணாக வாக்குவாத்தில் ஈடுபட்டார். இது குறித்து அசாருதீன் கூறியது..

இந்திய அணியின் எதிர்கால தலைவராக விராத் கோஹ்லி கருதப்படுகிறார். மிகச் சிறந்த வீரரான இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. இதற்கேற்ப இவர் நடந்து கொள்ள வேண்டும். ஆக்ரோஷமாக இருப்பது நல்லது தான். இது மனதிற்குள் இருக்க வேண்டும். மாறாக அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையாக காட்டுவது தேவையில்லாதது.

நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு நடுவர்கள் அச்சத்துடன் உள்ளனர். என்னை பொறுத்தவரை களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு தான் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அசாருதீன் கூறினார்.

ஆர்யாவின் காதல் வலையில் அனுஷ்கா?

aaryaஇரண்டாம் உலகம் படத்தில் இணைந்து நடித்துள்ள ஆர்யா, அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கிசுகிசு.

ஆர்யா, அனுஷ்கா இருவருமே இணைந்து நடித்துள்ள முதல் படம் இரண்டாம் உலகம். ஜோர்ஜியா நாட்டில் சுமார் 45 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. அதிலிருந்தே இருவரும் நெருக்கம் காட்டி வருகிறார்களாம்.

சமீபத்தில் நடைபெற்ற சூர்யாவின் சிங்கம்-2 விருந்தில் கலந்து கொள்ள இருவருமே ஒன்றாக ஹைதராபாத்தில் இருந்து இணைந்தே வந்தார்களாம். அந்த விருந்தில் அனைவருமே ஆச்சர்யப்படும் வகையில் இருவருமே மிகவும் நெருக்கம் காட்டினார்களாம்.

எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.  அதுமட்டுமன்றி ஆர்யாவோ பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன் மற்றும் தற்போது நயன்தாரா என அனைவரோடும் கிசுகிசுக்கப்பட்டவர்.

அந்த வரிசையில் தற்போது அனுஷ்காவும் இணைந்து இருக்கிறாராம்.
ஹைதராபாத்தில் ராணி ருத்ரமாதேவி, பாஹுபாலி ஆகிய படங்களுக்காக தீவிரமான வாள் சண்டை, குதிரை ஏற்றப் பயிற்சிகளில் இருக்கும் அனுஷ்காவோடு தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கலந்து கொண்டு வருகிறாராம் ஆர்யா.

பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன், ஸ்ரேயா, நயன்தாராவைத் தொடர்ந்து கழற்றி விடப்பட்டவர்கள் பட்டியலில் அனுஷ்காவின் பெயரும் இடம்பெறாமல் இருந்தால் சரிதான் என்பது தான் இப்போதைய கோடம்பாக்க பேச்சு.

கனகா உயிருடன் இருக்கின்றார் : சித்தப்பா திடீர் தகவல்..!

kanaka

பிரபல தமிழ் நடிகை கனகா இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார்.

கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா தகவல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகை கனகா, மரணமடைந்து விட்டதாக சற்று முன்னர் தகவல் வெளியான நிலையில், அதனை அவரது சித்தப்பா மறுத்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும், எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர மறுப்பதாகவும் அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்துள்ளனர்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை..விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் : ஸ்ரீசாந்த்..!!

sreesanth

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆட்டநிர்ணய புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார் ஸ்ரீசாந்த். இந்த நிலையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி..

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன். தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்யப் போகிறேன். காத்திருக்கப் போகிறேன். கடவுள் மகத்தானவர்” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

தற்போது கேரளாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீசாந்த். இந்திய அணியில் தனக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

ஸ்ரீசாந்த் விடுத்துள்ள இன்னொரு ட்விட்டில் “எப்போதுமே நான் சிறந்ததையே கொடுத்துள்ளேன். அதைத் தொடருவேன். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்திருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

ஆட்டநிர்ணய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், நல்லவர்கள், ஒன்றுமே செய்யாதவர்கள் என பிசிசிஐ விசாரணைக் குழு ஏற்கனவே கூறியுள்ளது. அதே வழியில் ஸ்ரீசாந்த்தும் விடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகை கனகா புற்றுநோயால் காலமானார்..!

kanaka

பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.

அது அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகும். இங்கு புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை கனகாவும் சிகிச்சை பெறுவதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து, விஷயத்தை வெளியில் சொன்னார்.

அதன் பிறகுதான் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. இந்தநிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கரகாட்டக்காரன் படம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஓடி வெற்றிவாகை சூடியது. இந்தப் படத்திற்குப் பிறகு, கனகா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் பிஸியானார்.

தமிழில் ரஜினியுடன் அதிசயபிரவி, விஜயகாந்த்துடன் கோயில்காளை, பிரபு, கார்த்திக், ராம்கி உட்பட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். கனகா முகேஷ்யுடன் இணைந்து நடித்த காட்பாதர் என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

கனகா கடைசியாக நடித்தது ஒரு மலையாளப் படத்தில். அது 2004ல் வெளியானது. அதன் பிறகு கனகா பற்றிய எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்..!

BoilingWater

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் நீது ஜெய்சிங்கானி 21 என்ற பெண்ணை வீதி ஓரத்தில் சாப்பாடு கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார்.

தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமும் தெரிவித்தார். முதலில், திருமணத்திற்கு சம்மதித்த அந்தப் பெண் பின், தன் மனதை மாற்றிக் கொண்டார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அமீத் தல்ரேஜா, கடந்த சனியன்று இரவு நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று அவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.

பலத்த காயமடைந்த நீது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான, தல்ரேஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் பொலிஸ் மாதிரி நடித்து 300 கைதிகளை விடுவித்த தாலிபான் தீவிரவாதிகள்..!

taliban

பாகிஸ்தானில் பொலிஸ் சீருடையில் சென்று சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு மின்மாற்றியை தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர்.

அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு பொலிஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு ராணுவத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால், இறுதியில் சிறையில் இருந்த 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது தாலிபன் குழு.

இக்கொடூரத்தாக்குதல் சம்பவத்திற்கு டெஹ்ரீக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிகப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரியான ஷாஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதை சிறைத்துறையின் ஆலோசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார். மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் முன்யோசனையாக சிறைக்கு மின்சாரம் அளிக்கும் இரண்டு மின்மாற்றிகளையும் குண்டு வீசித் தாக்கி சிறைச்சாலையை இருட்டாக்கியுள்ளனர். தப்பிச்செல்லும் போது காவலர்கள் தங்களை துரத்தி வர இயலாதவாறு வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

16 வயது சிறுமியை 58 முறை குத்திக் கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!

rape

இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.

லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன். இவர்தான் இந்தக் கொடுமைக்குள்ளாகி பரிதாபமாக உயிரைப் பறி கொடுத்துள்ளார். குற்றவாளியின் பெயர் டேவிட் மின்டோ.

23 வயதான இந்த நபர் பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியுள்ளார். பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்தார். அதை நம்பி சாஷாவும் வந்துள்ளார். வந்த சிறுமியை ஹோட்டலுக்குக் கூட்டிப் போனார் டேவிட் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

ஆனால் சாஷா அனுமதிக்கவில்லை. இதையடுத்து கத்தியை எடுத்து சாஷாவை குத்த ஆரம்பித்தார். சாதாரணமா இல்லை, தலையில் மட்டும் 58 முறை கொடூரமாக குத்தினார். இதில் சாஷா உயிரிழந்தார். அதன் பின்னர் தனது வெறி அடங்காமல் சாஷாவின் இறந்த உடலுடன் உறவு கொண்டார்.

பின்னர் சாஷாவின் உடலில் தீவைத்தார். அதில் சாஷாவின் உடல் பாதி எரிந்து போனது. அதன் பின்னர் எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி கிராப்டன் ஹோட்டல் அருகே போட்டு விட்டார்.

அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை நடத்தி டேவிட்டைக் கைது செய்தனர். தற்போது விசாரணை முடிந்து டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது அவர் சிறையில் கிட்டத்தட்ட 35 வருடங்களைக் கழிக்க வேண்டியிருக்கும்.

இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு..!

ilavarasan

தமிழகத்தின் தர்மபுரி இளவரசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணைகுழு முன்பு ஆஜராக திவ்யா மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நத்தம் கொலனியை சேர்ந்த இளவரசன் – திவ்யா இருவரும் கடந்த ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 4ம் திகதி இளவரசன் அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை இளங்கோ நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன் பேரில் தர்மபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசன் உடலை, டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

இதற்கிடையில் இளவரசன் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவை கொண்ட ஒரு நபர் ஆணைகுழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணைகுழு விசாரணை நடத்தி வருகிறது. இப்போது திவ்யா, இளவரசனின் தந்தை இளங்கோவுக்கும் நேற்று சம்மன் வழங்கப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிஷன் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது : ஜே.வி.பி..!

Somawansa

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் துண்டுப் பிரசுர விநியோக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நகரை ஏனைய பகுதி மக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் எதிர்காலத்தை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் தூங்கினால் உடல் குண்டாகுமா??

Sleep-Better

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர்.

இதனால் இரத்த அழுத்தம் , சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் குண்டாவதை தடுக்க உணவு கட்டுப்பாட்டு முறையை கையாள வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயல் இழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

40 000 ரூபாயில் ஹெலிகப்டர்..இந்திய மெக்கானிக் சாதனை..!

heli

இந்திய மாநிலம் ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் என்னும் 40 வயது மெக்கானிக் தனியாளாக ஒரு ஹெலிகப்டரை உருவாக்கியுள்ளார்.

இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ள இவர் இதற்காக செலவு செய்தது வெறும் 40 000 இந்திய ரூபாய்கள் மட்டுமே.

இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் எஞ்சினை பயன்படுத்தி இந்த அபூர்வ ஹெலிகப்டரை வடிவமைத்துள்ளார். இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லீட்டர் ஆகும். இந்த ஹெலிகப்டர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.

இவரது இந்த அபூர்வ தயாரிப்பை கேள்விப்பட்ட மக்கள் திரளாக வந்து பார்வையிடுவதுடன் இவரை பாராட்டிச் செல்கின்றனர்.

டோனி உட்பட இந்திய வீரர்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்: பிசிசிஐ அதிரடி உத்தரவு..!

BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா ஜடேஜா, ஓஜா ஆகியோரை விளம்பரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒப்பந்தம் செய்துள்ள Rhiti Sports நிறுவனத்தில் டோனிக்கு 15% பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால தலைவர் டால்மியா இந்திய வீரர்கள் தங்களது சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

நிறுவனங்களுடான ஒப்பந்தங்கள் குறித்து விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று டால்மியா தெரிவித்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விரைவில் விசாரணையை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.. சின்னப் படங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும்!

thalaiva

விஜயின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9ம் திகதி ரம்லான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நகரங்களில் அதிகபட்ச மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களும், கிராமம் சார்ந்த நகரங்களில் இருப்பதிலேயே நல்ல தியேட்டர்களையும் ஒதுக்கியுள்ளனர்.

அதிகபட்ச அரங்குகளை ஒதுக்கு முதல் வாரத்திலேயே வசூல் பார்க்க இந்த யுத்தி (படம் குறித்து எதிர்மறை பேச்சு நிலவுவதால்). தலைவா அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது.

பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை.

எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன. தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.

தேவதாசிகளைப் புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை.!!

sornamalya

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று கல்லூரி விழாவில் தேவதாசிகளுக்கு ஆதரவாக பேசி நடிகையும் நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை நடத்திய விழாவொன்றில் இரு நாட்களுக்கு முன்பு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா பெண்ணியத்தின் கண்ணியம் தகர்த்த தேவதாசி முறைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று அந்த விழாவில் பேசியுள்ள நடிகை தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் இலாபம் கருதியே இதனை என்று விமர்சித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி தேவதாசி முறை ஒழிப்புக்கு எதிராக வாதித்த கருத்துகளையும் நினைவு கூர்ந்த ஸ்வர்ணமால்யா தேவதாசி முறையை மிகவும் மெச்சியபடி கொண்டாடினார்.

அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்றும் தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றும் நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக “தேவதாசி முறைமையும் பரதநாட்டியமும்” (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக “பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்” (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்த உதவியதும் மேலாதிக்க சாதி மனப்பான்மையின் கொடூர வடிவாகவும் திகழ்ந்த பெருந்தீமை ஒன்றை ஒரு பெண்ணாக இருக்கும் நடிகையே ஆதரித்து வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.