மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா..!

nakmaநடிகை நக்மா மீண்டும் திரையுலகில் தனது நடிப்புத் திறமையினை நிரூபிக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1990களில் பாட்ஷா, பிஸ்தா, மேட்டுக்குடி போன்ற பல படங்களில் நடித்தவர் நக்மா.

பின்பு நடிப்பை குறைத்துக்கொண்டு அரசியல் பக்கம் தலைகாட்டினார். ஆனால் அரசியல் பெரிய அளவில் கைகொடுக்காததால் மீண்டும் சினிமா பக்கம் தலை நீட்டுகிறார்.

தற்போது டோலிவுட் இயக்குனர் தேஜா தன் படத்தில் நடிக்க நக்மாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம்.

அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டாலும் நடிப்பதற்கான பச்சை கொடி காட்டியுள்ளாராம்.

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

railwayபம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் எனத் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்!!

barath

நடிகர் பரத்தும் நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடிகர் பரத் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார்.

எனவே, பரத்துடன் இரண்டு படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்த அமெரிக்கா வாழ் தமிழ் நடிகையான ஷம்முவைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
நடிகை ஷம்மு பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த காஞ்சிவரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார்.

இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம். இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, பரத்தின் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, அண்ணி என்றுதான் அழைப்பார்களாம். ஆகையால் இருவீட்டாரும் கூட, சீக்கிரமாகவே பரத்துக்கும், ஷம்முவுக்கு இடையிலான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண திகதியை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு..!

votingமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது.

சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

10 மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

நேற்று நண்பகல்வரை அரசியல் கட்சிகள் சார்பில் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன், 49 சுயேச்சைக்குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல்வரை 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதோடு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனசெத பெரமுன, ஐக்கிய இலங்கை மகாசபை, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி என்பன சார்பாக 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதோடு, ஐ.ம.சு.மு, ஐ.தே.க போன்ற கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் திகதி நாளை நண்பகல் தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

எந்த பந்தாக இருந்தாலும் விரட்டி அடிப்பேன்: டில்ஷான்!!

dilshan

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் புதிய நடைமுறைகளின் படி ஒவ்வொரு இனிங்ஸிலும் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதோடு, பவர் பிளே அல்லாத ஓவர்களின் போது 4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் எல்லைக்கோட்டில் களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டும் என டில்ஷான் குறிப்பிட்டார்.

4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடும் போது பந்து பழையதாக இருக்கும் பட்சத்தில் இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்த முடியுமென டில்ஷான் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் ஆரம்ப ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடியிருந்தனர் எனக் குறிப்பிட்ட டில்ஷான் தற்போது இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் ஆரம்ப ஓவர்களில் அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் அதிரடியாக ஆட முடியுமென அவர் தெரிவித்தார்.

எனினும் தன்னைப் பொறுத்தவரை ஒரு பந்து அடித்தாடக் கூடியதாகக் காணப்பட்டால் அது போட்டியின் முதலாவது பந்தாக இருந்தாலும் அதை அடித்தாடவே செய்வேன் எனவும் டில்ஷான் தெரிவித்தார்.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் டில்ஷான் தனது 17வது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பில்லாவைவிட “ஆரம்பம்” விறுவிறுப்பாக இருக்கும் : இயக்குனர் விஷ்ணுவர்தன்!!

aarambam-movie

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் “ஆரம்பம்” திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில் முதல்முறையாக இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு..

“ஆரம்பம்” என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

மங்காத்தா படத்தில் நடித்தது போன்றே இந்த படத்திலும் அஜீத் நரை கலந்த தலை முடியுடன்தான் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு முன்னரே அஜீத்திடம் என் படத்துக்கு இந்த கெட்டப்தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன் ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார்.

இந்த ஸ்டைல் அவர் .அளவுக்கு வேறு யாருக்காவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே. இது விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்

உங்கள் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு !!

computer

இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.

இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.

இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.

 

பூமியை விண்கற்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி??

earth

விண்கற்கள் மோதாமல் தடுக்க நாசா விஞ்ஞானி 402 யோசனைகளை முன்வைத்துள்ளனர். விண்வெளியில் சுற்றி திரியும் எரிகல் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள் புகுந்து பூமியை தாக்குகின்றன.

அதை தடுக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் 402 விதமான யோசனைகள் வைத்துள்ளனர். அவற்றில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி பூமியின் அருகே சுற்றிதிரியும் சிறிய விண்கற்களை வேறு இடத்தில் நகர்த்தி வைக்கும் எதிர்கால திட்டமும் உள்ளது.

இந்த தகவலை நாசாவின் நிர்வாகி பில் கிரஸ்டன்மேர் தெரிவித்தார்.
பூமிக்கு அருகில் சுற்றி ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களை கண்டுபிடிப்பது மற்றும் மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கும் விண் கற்களை கண்டுபிடிப்பது போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்த கருத்தரங்கு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி..!!

fire

தமிழ்நாடு அரியலூரில் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பள்ளக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சாந்தினி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பி இருக்கிறார்.

வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த சாந்தினி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்னையை தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோரும் அருகில் இருந்தவர்களும் எவ்வளவோ காப்பாற்ற முயற்சி செய்தும் சாந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சாந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாந்தினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் நான் நேற்று பள்ளியில் இருந்தபோது வகுப்பு ஆசிரியை என்னை சக மாணவியர்கள் முன் அவமானப்படும்படி திட்டிவிட்டார். அதேபோல் தலைமை ஆசிரியையும் என்னை திட்டியதோடு நீ நாளை பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று கூறினார்கள்.

இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கடிதத்தை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

6 கிலோ எடையுடன் பிறந்த மிகப்பெரிய குழந்தை!!

germany-heavy-newborn

ஜேர்மன் நாட்டில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்னுக்கு 6 கிலா எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜேர்மனியின் கிழக்கு நகரமான லேய்பிஜிக்(Leipzig) பகுதியில் ஏராளமான குழந்தைகள் சுகப்பிரசவ முறையில் பிறக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து லேய்பிஜிக் பல்கழைக்கழக மருத்துவமனையில் ஜேஸ்லின் என்ற பெண்னுக்கு 57.7 நீளமும் 6.11 கிலோ எடையுடன் கூடிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது ஜேர்மனியில் பிறந்த மிகப்பெரிய குழந்தையாக கருதப்படுகின்றது.

இது குறித்து மகப்பேறு மருத்துவர் ஹோல்கர் ஸ்டீபன் கூறுகையில், அப்பெண்மணி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலையில் தான் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்தவுடன் இன்சுலின் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2011ம் ஆண்டில் பெர்லின் நகரில் ஜிகாத்(Jihad) என்ற குழந்தையானது 6 கிலோ எடையுடன் சுகப்பிரசவ முறையில் பிறந்துள்ளது என கூறியுள்ளார். தற்போது பிறந்துள்ள இக்குழந்தையானது எதிர்காலத்தில் அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

இந்தியாவின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா!!

Telangana

இந்திய நாட்டின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், தெலுங்கானாவுக்கும் ஆந்திர மாநிலத்துக்கும் பொதுதலைநகராக 10 ஆண்டுகாலத்துக்கு ஹைதராபாத் நீடிக்கும் என்றார்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி ஒப்புதல் தெரிவிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1200 பேர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 1000 பேரை கொண்ட துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஆயுதப் படை பொலிசார், தமிழக ஆயுதப் படை பொலிசார் ஆகியோரும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றுவோம் : டோனி நம்பிக்கை!!

dhonicup

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்றும் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில், உலக கிண்ணத் தொடரை சந்திக்க ஆவலாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். இந்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி, கிண்ணத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரை இந்தியா வென்ற விதம் அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கையும் அனுபவங்களும் கிண்ணத்தை வெல்ல பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தஞ்சம் கோரிய பலர் போர் குற்றவாளிகள்..!

vavuniyaபிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் பலர், ஏற்கனவே பிரிட்டனில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

போர் குற்றவாளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடாக பிரிட்டன் மாறக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் போர் குற்றங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுபவர்களை வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

பல சமயங்களில, திருப்பி அனுப்பப்படும் நபர்கள் சித்ரவதைக்குள்ளாகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை நிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், சந்தேக நபர்கள் மீது பிரிட்டனிலேயே வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோருகின்றனர்.

கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டில் இருந்து 15 மாதங்களுக்கு, போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 800 பேர் குறித்து உள்துறை அமைச்சு ஆய்வு நடத்தியது.

இதில் பிரிட்டிஷ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த 99 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையே போர் குற்றத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 700 பேர் பிரிட்டனின் குடிவரவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஐக்கிய ராஜ்ஜியதக்தில் இருக்கும் போர் குற்றவாளிகள் தொடர்பில் அரசு இன்னமும் தகவல்களைத் தரவேண்டும் என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துவதாக இனப் படுகொலையை தடுப்பதற்கான பாராளுன்றக் குழுவின் தலைவரான மைக்கேல் மெக்கான் கூறியுள்ளார்.

அதே நேரம் போர் குற்றம் தொடர்பிலான வழக்குகளை விசாரிக்க தமக்கு கூடுதல் வளங்கள் தேவை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ருவாண்டாவில் வழக்கு விசாரணைக்காக அனுப்பப்படவிருந்த 4 பேரை, உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. அவர்கள் அங்கே போனால், நியாயமான விசாரணை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றம் கூறியது.

இது போன்ற வழக்குகளில் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தோற்றால், சந்தேக நபர்களுக்கு எதிராக ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழக்குகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் ஏஜிஸ் அமைப்பின் ஜேம்ஸ் ஸ்மித் கேட்டுள்ளார்.

பிரியாணி படத்திற்கு பாடல் அமைத்த 5 இசையமைப்பாளர்கள்!!

briyani

மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா மொத்வானி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படமாகும்.

யுவனின் 100வது படத்திற்கு மெருகூட்டும் விதமாக ஐந்து இசைமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து இப்படத்தில் ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்களாம். அதன்படி விஜய் அண்டனி, இமான், ஜீ.வி.பிரகாஷ், தமன் ஆகியோர் யுவனுடன் சேர்ந்து ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிலேயே முதன்முதலாக ஒரு பாடலுக்கு ஐந்து முன்னணி இசைமையப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு பாடலை அமைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இசைஞானி இளையராஜா குடும்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரைத் தொடர்ந்து 100 படங்களுக்கு இசையமைத்த பெருமையும் இந்த படத்தின் மூலம் யுவனுக்கு கிடைத்துள்ளது.

இதுபோன்று இசையமைப்பாளர்கள் கூட்டு முயற்சியுடன் இணைந்து செயல்படுவது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

காயங்கள் குறித்து அவதானம் தேவை : அஸ்வின்..!

aswin

விளையாட்டு மருத்துவத்துக்கான சென்னை ராயப்பேட்டையில் ஆர்தோமெட் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான இலவச மருத்துவ திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

விளையாட்டு வீரர்கள் காயத்தை எளிதாக நினைக்காமல் உடனடியாக அதற்கு சிகிச்சை பெற வேண்டும். மேலும் காயத்துக்கு வைத்தியர்களின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை சாப்பிட்டால் ஊக்க மருந்து பிரச்சினைக்கு உள்ளாக நேரிடும்.

விளையாட்டுச் சங்கங்கள் தொழில்முறை ரீதியாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதால் தான் வெளிநாடுகளில் திறமையான வீரர்கள் அதிக அளவில் உருவாகிறார்கள் என்று தெரிவித்தார்.

ரஜினி விரும்பி ரசித்த மரியான் திரைப்படம்..!

Actor Rajini at Kumki Audio Release Functionஎப்போதுமே ஒரு படத்தினை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால், ரஜினிக்கு திரையிட்டுக் காட்டிவிட்டு உடனே ரஜினி பாராட்டி விட்டார் என்று விளம்பரப்படுத்துவார்கள்.

இதனால் ஒருகட்டத்தில் படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார் ரஜினி. எப்போதாவது படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே பார்த்து வந்தார்.

போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்குப் பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு சிறிய அளவில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு திரையரங்கம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறாராம் ரஜினி.

QUBE தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கிறது அந்த திரையரங்கம்.
சமீபத்தில் அவர் பார்த்த படம் மரியான். ஏ.ஆர்.ரஹ்மான், பரத்பாலா, மாப்பிள்ளை தனுஷ் என மூவர் கூட்டணியில் வெளியான படம் அது.