
1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.
2. உடலைக் குளிரவைக்கும்.
3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி.
4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர்சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசிஅதிகரிக்கும்.
6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.
7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும்.
8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
9. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும்,மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும்
12. சமீபத்திய ஆய்வுகளின் படி வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது
13. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.
14. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சைசாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம்பெறும்.
15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறியபின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.
16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.
17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.
18. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
19. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.
20. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.
21. தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.
22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.
23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.
24. வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.
25. வெள்ளரிக்காயைத்தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்
26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள்,நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம் மறையும்.
28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.
30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.
31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.
32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது
ஒரு முக்கிய குறிப்பு :
நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச்சாப்பிடுவது நல்லதல்ல.


தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் களவாடிய பொழுதுகள்.
அரபு நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. அப்போது அவர் கொல்லப்பட்டார். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள புத்த கோவிலில் ஜன்னல் கதவு அருகில் பதுக்கி வைத்திருந்த குண்டு திடீரென்று வெடித்தது. சற்று நேரத்தில் மற்றொரு குண்டில் இருந்து புகை கிளம்பியது. ஆனால் அது வெடிக்கவில்லை.
பிதிர் தர்ப்பணம் செய்யும் புனித ஆடி அமாவாசை தினம் இன்றாகும். இன்று ஆடி மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.



புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன்.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
