சூடுவெந்தபுலவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு ..!

வவுனியா மாவட்டத்தில் சூடுவெந்தபுலவு  மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால் நேற்றுமுன்தினம்  நாட்டி வைக்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இதற்கான நிதியினை பெற்றுக் கொடுத்திருந்தார்,வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன்,அமைச்சரின்வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி,வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கருத்துரைக்கையில்-

வன்னி மாவட்டத்தில் கற்ற சமூகத்தினை உருவாக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பணி இம்மாவட்ட மாணவ சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

இனம்,மதம் என்பவைகள் கடந்து ஆற்றப்படும் பணிக்கு சகலரும் முழுமையான ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும்.மாணவர்களின் இலட்சியம் கல்வியிலேயே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஒத்தாசைாயக இருக்க வேண்டுமே அன்றி,உபத்திரோகமாக இருக்க கூடாது.கற்கின்ற வேண்டும் என்ற ஆசையும்,வேட்கையுமே மாணவர்களின் கண் முன் தோன்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

vavuniya

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத்தண்டனை – சீன அரசு அதிரடி நடவடிக்கை..!

வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும், என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில், கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 60 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 17 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, வரும் 2030ல் இருமடங்காக, அதாவது, 34 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது, வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு, தங்கள் குடும்பம், பணி என்று இருக்கும் கலாசாரம் வெகுவாக பரவி வருகிறது.இதைத் தடுக்கவும், முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சீன அரசு முடிவு செய்துள்ளது.

பிள்ளைகள், பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும்; அல்லது அடிக்கடி சென்று அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், பெற்றோரை கண்டிக்கக்கூடாது. மீறினால், சிறைத் தண்டனை அளிக்கப்படும். இவ்வாறு, சீன அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்த தகவல்கள், அந்நாட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வயதான பெற்றோரை மதிப்பதாக கூறும் அந்நாட்டு மக்கள், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்.மேலும், இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகாமல், உணர்வுபூர்வமாக அணுக வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.

விஸ்வரூபம் 2 புதிய செய்திகள்..

viswaroopam

விஸ்வரூபம் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டே படத்தினை வெளியிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் கமல். செப்டம்பரில் படத்தினை வெளியிட அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறாராம் கமல். கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்தினை தயாரித்து வருகிறது ஓஸ்கர் நிறுவனம்.

விஸ்வரூபம் படத்தில் இல்லாத 2 பேரை விஸ்வரூபம் 2வில் இணைத்து இருக்கிறார் கமல். வாஹாதே ரஹ்மான் மற்றும் ஆனந்த் மஹாதேவன் ஆகிய இருவரும் விஸ்வரூபம் 2வில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி விஸ்வரூபம் படம் 2:20 மணி நேரப் படம். ஆனால் விஸ்வரூபம் படத்தின் நீளத்தினை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

சென்னையில் நடைபெற்ற விஸ்வரூபம் 2 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. சுமார் 90% படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில காட்சிகளை டெல்லி, புனேவில் படமாக்க இருக்கிறார்கள்.

விஸ்வரூபம் 2 படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல்.

 

 

மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!

Director Selvaraghavan Photos Pictures Stills

இயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.

ஆர்யா நடித்துள்ள “இரண்டாம் உலகம்” பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு முன்பு “இரண்டாம் உலகம்” படப்பணிகளில் இருந்த போது நெஞ்சுவலிப்பதாகக் கூற, பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறி உள்ளனர். அதோடு வயிறு தொடர்பான தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருக்கின்றனர்.

இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள செல்வராகவன் மனைவி, “மிகப்பெரிய அபாயம் எதுவும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

மது, சிகரெட் இரண்டையும் தொடவே கூடாது என மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். “மதுவும், சிகரெட்டும் இல்லாமல் எப்படி அருமையாக இருக்கிறேன் என்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை” என டுவிட்டரில் தட்டியிருக்கிறார் செல்வராகவன்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள செல்வராகவன், மறுபடியும் “இரண்டாம் உலகம்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஓகஸ்ட்டில் ரிலீஸ் செய்யும் வகையில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் yahoo??

yahoo

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports, Webplayer, FoxyTunes, RSS Alerts மற்றும் AltaVista போன்ற தேடுபொறி ஆகியவற்றினை நிரந்தரமாக நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டம்ளர் தளத்தினை கொள்வனவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவை யாகூ நிறுவனம் எடுத்துள்ளது.

இதேபோன்று கூகுள் நிறுவனமானது நேற்றைய தினத்துடன் தனது கூகுள் றீடர்(Google Reader) சேவைக்கு விடைகொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா?

நீங்கள் பயன்படுத்தும் நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா? கீழே உள்ள காணொளியை பாருங்கள்..

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

Salman Khurshid
இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.
தமிழர்கள் அதிகமாக வாழும் வட மாகாணத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் இந்த கூற்று வந்திருக்கிறது.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துள்ளார். அப்போது இலங்கையின் வட மாகாணத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயத்தை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பசில் ராஜபக்ஷ தெரிவித்த போதே, இந்தியாவின் இந்தக் கருத்தை குர்சித் அவர்கள் இலங்கை அமைச்சரிடம் கூறியுள்ளார்.

வடமாகாண தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து தனது வரவேற்பை தெரிவித்த இந்திய அமைச்சர் குர்சித் அவர்கள், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கும் அப்பாலும் சென்று இலங்கையில் அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எதுவும் செய்யப்படக் கூடாது என்றும் அவர் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது பங்குக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்கள் குறித்து இலங்கை அமைச்சர் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மிகவும் சிறப்பாக செயற்படுவது குறித்து, குறிப்பாக இந்தியாவின் வீடமைப்புத் திட்டம் குறித்து, இலங்கை மக்கள் மத்தியில் பரந்துபட்ட வரவேற்பு இருப்பதாகவும் இலங்கை அமைச்சர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடமாகாண தேர்தலுக்கு முன்னதாக, மாகாணங்களுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக வந்த செய்திகள் பற்றிய கவலைகள் பற்றி அண்மையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் குர்சித் அவர்கள், 13வது திருத்தம் மாற்றப்படாமல் இருப்பதன் தேவை குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தச் சட்டம் தொடர்பாக இலங்கை முன்னதாக தெரிவித்த கரிசனைகளுக்கு மாறாக, இலங்கை எதுவும் செய்யக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

-BBC தமிழ்-

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

sl

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதில் நெருக்கடி அதிகரிக்கும்.

இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இங்கு இன்று மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 வயது பெண்ணை திருமணம் செய்த 92 வயது முதியவர்!!

thaatha

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி. தற்போது 92 வயதை கடந்த இவர், பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார்.

இதே வேளை தன்னை விட 70 வயது குறைவான 22 வயது இளம்பெண்ணை நேற்று மாலை திருமணம் செய்து உள்ளூர் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த தாத்தா.இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்தது என்பதுதான்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது.
எனது பேரன்களுடன் ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொண்ட அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. 20 வயதே ஆன இளைஞனாக என்னை உணர்கிறேன்´ என்று நமட்டு சிரிப்புடம் கூறுகிறார், புது மாப்பிள்ளை முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.

இந்திய புத்தகயா – மகாபோதிக்கு அருகில் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு..

bomb
இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மகாபோதி விகாரைக்கு அருகில் இன்று காலை 6 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை..

பௌத்த மதத்தினரின் முக்கிய விகாரையாக மகாபோதி கோவில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

rasool

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் கிரிக்கெட் அரங்கம் ஒன்றுக்கு வெளியே தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தபோது, பொலிசார் ரஸூலை விசாரித்திருந்தனர். ஆனால் அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

தான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனே ஒழிய பயங்கரவாதி அல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர இளைஞர்களும் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று பரைசாற்றுவதாக ரஸூலின் தேர்வு அமைந்துள்ளது என அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய கடும் மழை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுகிறது. இதனால் கரையோர பிரதேசங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை ஆரம்பித்த இந்த காற்றுடன் கூடிய மழை இன்னும் தொடர்வதாக அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கும் எமது மட்டக்களப்பு செய்தியாளர் சேதவிபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

குவைத்தில் எஜமானின் பணத்தை திருடிய இலங்கையர் கைது..!

குவைத் – ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரிக்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டு ஆடை மாற்றுவதற்கு வீட்டுக்குள் சென்றவேளை தனது பணம் திருடப்பட்டதாக தொழில் தருணர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் வெட்டோரி தற்காலிக ஓய்வு..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான டேனியல் வெட்டோரி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார். சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முடிந்ததும் காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வரும் கிரிக்கட் பருவ காலத்துக்கான நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தை ஏற்க வெட்டோரி திடீரென மறுத்து விட்டார். அது ஏன் என்பது குறித்து நேற்று நிருபர்களிடம் விளக்கி கூறினார்.

´காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து மறுபடியும் எப்போது கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை என்னால் இப்போது உறுதியாக கூற முடியாது. இத்தகைய சூழலில் ஒப்பந்தத்தை நான் ஏற்றுக் கொண்டால், அது தவறானதாக அமைந்து விடும்.

காயத்தில் இருந்து சீராக, அடுத்த 6 மாத காலத்திற்கு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் முழு உடல்தகுதியை எட்டுவதில் கவனம் செலுத்துவேன்.

அதன் பிறகு தான் எனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு செய்ய முடியும். கோடை கால பருவத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதே எனது இலக்காகும்´ என்றார்.

மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி..!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கடந்த 2008ம் ஆண்டிலிருது ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையே இனமோதல்கள் தலைவிரித்தாடுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு இனமோதல் சம்பவங்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 19 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தின் கிரையத் பகுதியில் உள்ள ஹுசைனி அலி பாஷா மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்தபோது திடீரென்று உடலில் கட்டிய குண்டுகளுடன் தற்கொலைப்படை தீவிரவாதி உள்ளே நுழைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குண்டை வெடிக்கச் செய்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 15 ஷியா முஸ்லிம்கள் உடல் சிதறி பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தில் இருந்து 95 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சமாரா அருகே ஷியா பிரிவினர் நடத்திய பேரணிக்குள் சீறிப் பாய்ந்த குண்டுகள் நிரப்பிய வாகனம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர் 8 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றைய தாக்குதல்களில் மட்டும் பாக்தாத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நடிகை ரோஜா 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதையொட்டி விசாகபட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஷர்மிளா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 1 ஆண்டாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அரசியல் வாழ்க்கையில் அவர் தலை தூக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவரை பழிவாங்குகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் உடந்தையாக உள்ளது. அவர் ஜெயிலில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் 16 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.2014-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

ஷர்மிளா 200 நாள் பாதயாத்திரை சென்றதை தொடர்ந்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதியும் நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தேசம்மா கோவில் எனப்படும் சிவசக்தி அம்மன் கோவிலில் 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார்.

2014-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதி வேட்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நடிகை ரோஜா கூறியதாவது:-

ராஜசேகர ரெட்டி 1470 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். அவரது மகள் ஷர்மிளா தந்தையை மிஞ்சி 2664கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஷர்மிளா பாத யாத்திரையின் போது பொது மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டதால் ஜெகன் மோகன் ரெட்டியால் மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.