பாரதிராஜாவுடன் போட்டி போடும் தனுஷ்..!

தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட தயாராகி வருகிறது பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும்.

தனுஷ்- சோனம் கபூரின் நடிப்பில் உருவாகியுள்ள அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படம் வருகிற 28ம் திகதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படமும் 28ம் திகதி வெளியாக உள்ளது.

அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்த படத்திற்கும் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும்..!

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீள்வட்ட கோளத்தில் பூமியை நிலா சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும்.

அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா, பூமிக்கு மிக அருகில் வருகிறது.

அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவீதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் என்கின்றனர்.

இதேவேளை, பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிக பெரிய நிலா இன்று காலை 7 மணிக்கே தெரிந்ததை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீதேவியுடன் நடனமாடும் பிரபுதேவா..!

இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது இந்த ஆண்டு மக்காவுவில் நடைபெற இருக்கிறது.
வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது இந்த ஆண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெற இருக்கிறது.

இந்தி நடிகைகள் பலர் நடனமாடும் இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும்.

இதற்கான ஒத்திகையில் ஸ்ரீதேவியும், பிரபுதேவாவும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வெள்ளப் பெருக்கு அழிவுகளுக்கு ‘மனிதச் செயல்களே’ காரணம்..!

வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ‘இயற்கையின் சீற்றம்’ என்று அரசாங்கம் தனக்கு வசதியாக வர்ணிப்பதாக நாளிதழ்கள் பலவும் விமர்சித்துள்ளன.

விளைவுகளை சிந்திக்காத, தூரநோக்கற்ற மனித நடவடிக்கைகள் தான் வெள்ள அழிவுக்கு காரணம் என்று ஹிந்து நாளிதழ் கூறுகிறது.

பாரியளவிலான நீர்மின்சாரத் திட்டங்களும் ஆறு குளங்கள் சட்டவிரோதமாக குடிமனைகளாக மாறுகின்றமையும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்க்கின்றமையுமே மலைப் பிரதேச மாநிலங்களில் இந்த வெள்ள அழிவு ஏற்படக்காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் பல அறுகள் வற்றிவிட்டதாகவும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு தரவுகளையும் முன்வைத்து ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

உயிர்ப் பலி 200-ஐ தாண்டிவிட்டது
இதற்கிடையே, இந்த வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200-ஐ தாண்டி விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பெருமளவான வீடுகளும் சாலைகளும் சேதமடைய, சுமார் ஐம்பதாயிரம் பேர் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவர்கள் வாகனப் பேரணி..!

இலங்கை அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.

தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை துவக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

vehicle-rally.jpg222

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி மழை காரணமாக தாமதம்..!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, கூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.

இதன்படி நாணய சுழற்சியை வசப்படுத்திய இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வீதியை விட்டு விலகிய பஸ்: இரு சிறுவர்கள் பரிதாப பலி..!

கேகாலை, ரம்புக்கன பிரதான வீதியில் தளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

பெண் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் இருவரே பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (22) இடம்பெற்ற இவ் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த பெண் ரம்புக்கன பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் ரம்புகன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன் குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்..!

ACCIDENT_logo

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் 16ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு சைக்கிளொன்றில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர் திருவிழா காணொளி..!

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்பாள் மற்றும் அம்பாள் தேரில் இருந்து பச்சை சாத்தி வரும் காட்சிகள்.

காட்டுத் தீ பரவ காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் சட்ட நடவடிக்கை..!

இந்தோனேசியாவில் காட்டுத் தீயை உண்டுபண்ணி தமது காற்றுமண்டலத்தை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கபூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தக் காடுகளை எரித்து அங்கு பால்ம் எண்ணெய் பண்ணைகளை அங்கு உருவாக்கிவருவதாக கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.

தேவைப்பட்டால், இதில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களை இலக்குவைத்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

எல்லா நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு இந்தோனேசியாவிடமே இருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் சிங்கப்பூரில் மாசுமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி வானத்தில் நீலம் தென்படத் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளியன்று 401 பிஎஸ்ஐ வரை சென்ற மாசு மண்டலத்தின் அளவு, இன்று காலை 73 பிஎஸ்ஐ வரை குறைந்திருந்தது.

காற்று மாசடைந்துள்ளதால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் அவசர கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (23) காலை முதல் அணைக்கட்டின் 12 வான் கதவுகளையும் மேவி நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிகழ்வு சுமார் 43 வருடங்களுக்கு முதல் இடம்பெற்றதாக இதற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் களனி ஆற்றை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்களை அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்து நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

fall

வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை உண்டா?

 

banana

வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

அதில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வாமை(Allergy)

ஒவ்வாமையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ அமிலங்கள் நிறைந்திருப்பதால் இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்கும்.

இரத்த சோகை

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தலைபாரம்

மது அருந்தியதால் ஏற்படும் தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி உடலை சீராக இயங்க வைக்கும்.

புகைப்பிடித்தலை நிறுத்த

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

மன அழுத்தம்

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம்  மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தைப் போக்கி மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

குடல் கோளாறு

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால் புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் சமிபாடும் சீராக நடைபெறும்.

மூளை செயல்பாடு

பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால் மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும்.எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு அன்றைய நாளை தொடங்குங்கள்.

எடை குறைய

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால் உடல் எடை குறையும்.

 

பேஸ்புக் ஆபத்தானதா?

facebook

இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைத் தளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் மிகவும் பிரபலமாக உள்ளது.

நண்பர்களிடையே தகவல் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள அரட்டை அடிக்க என பல பயன்பாடுகள் இதில் உள்ளன. உலக அளவில் உள்ள பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் அன்றாட நிகழ்ச்சிகளை பற்றி அறியவும் இது உதவுகிறது. இத்தனை சிறப்புகள் உடைய பேஸ்புக் பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பதே உண்மை.

ஆம் கடந்த ஆண்டு வரை பேஸ்புக் தனது 6 மில்லியன் பயனீட்டாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் இ-மெயில் களை அதிகாரமற்ற பார்வையைளர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பேஸ்புக் நிறுவனமே நேற்று வெளியிட்டது.

இதற்க்கு காரணம் “டேட்டா லீக்கேஜ்” தான் என்றும் இந்த பிரச்சனை 2012 முதலே உள்ளதாகவும் உலக அளவில் உள்ள தனது 1.1 பில்லியின் பயனீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இதை தெரிவிப்பதாகவும் கூறியது. பேஸ்புக் பயனீட்டாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பற்றிய தகவல்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தேவையற்ற மற்றவர்களின் பற்றிய தகவல்களும் வருவதாக கூறியள்ளனர்.

இதை பற்றி அறிந்த பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் தனது பாதுகாப்பு குழுமத்திடம் 24 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்யும்மாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால் தனது பயனீட்டாளர்களுக்கு இதை பற்றிய தகவலை நேற்று தான் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை பூதாகாரமாக இருப்பதற்க்கான ஆதாரம் இல்லை என்றும் ஆனால் இது போன்ற பிரச்சனைகள் திரும்பவும் வராமல் இருக்க நாங்கள் இரு மடங்காக உழைப்போம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தனது பிலொக் இல் தெரிவித்துள்ளது. பேஸ்புக்,கூகுள்,யாஹூ,மைக்கிரோசொப்ட் மற்றும் அப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேட்டாகளை பாதுகாப்பிற்காக யு.எஸ் இண்டலிஜன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளது.

 

விளம்பர நிறுவனங்களை போட்டி போட வைத்த தவான்!!

dhawan

சர்வதேச கிரிக்கெட்டில் ஹட்ரிக் சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மொகாலி டெஸ்டில் இந்தியாவின் ஷிகர் தவான் சதம் (187) அடித்தார்.

அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் தென் ஆப்ரிக்கா (114), மேற்கிந்திய தீவுகள் (102) அணிகளுக்கெதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். இப்படி ஹட்ரிக் சதம் அடித்ததால் இவரது மதிப்பு உயர்ந்து விட்டது. பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை மொடலாக ஒப்பந்தம் செய்ய துடிக்கின்றன.

வீராட் கோஹ்லி, ரோகித் சர்மா, முரளி விஜய் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ள கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பன்ட்டி சாய்தே கூறுகையில், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷிகர் தவான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது தான் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பது உறுதி. இவரை எங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறோம்.

இவரது கிரிக்கெட் பயணம் அடுத்த ஆறு மாதத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஏனெனில் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

இதற்குள் அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எங்களைத் தவிர மூன்று முதல் நான்கு நிறுவனங்கள் ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றன எனவும் கூறினார்.

ஷிகர் தவானை விட பெரியளவில் முறுக்கு மீசை வைத்திருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஸ் கூறுகையில், ஷிகர் தவானின் மீசை அவரது ஆளுமைத் தன்மையை உணர்த்தலாம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு சோறு போடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போதுள்ள நிலையில், இவரது மீசைக்கு பணம் தர எதாவது நிறுவனங்கள் வந்தால், அதை வரவேற்க வேண்டும் என்றார்.

 

சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!

சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வீசா இல்லாது அந்நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13,000 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் சவுதியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சவுதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு: ஹக்கீம் கடும் கண்டனம்

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி, சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.

அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.