கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க கதையின் கருவுக்கு ஏற்றவாறு தற்போது ‘ஆரம்பம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.








வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.



தன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் – இந்த மூன்று கொள்கைகளையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


