இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
நேற்று மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.


தனுஷ் – பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்த்தை வைத்து எடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரீஷ் இயக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.
மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன்இ கருத்தரங்குகளை நிறுத்தல்
சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சனஅடர்த்தி மிக்க கன்சூ மாகாணத்தில் தையான்சூயி பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என நேற்று காலை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் கூட்டு கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்வது குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.சிக்கலில் இருந்த யாழ். மாவட்டத்தில் போட்டியிட கூட்டுக் கட்சிகளுக்கு ஆசனங்கள் இணக்கப்பாட்டுடன் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர்.






