பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை..!

williamஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நேற்று  மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.

15 பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.

பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.

என் காதலி போலவே..

Kaathali

உன்னால் நொந்துதான்
காலணி செய்தார்கள்
உன்னை நீக்கியே
மீனினை உண்பார்கள்..

உன்மேல் அழகுறும்
மலர்தனைக் கொய்வார்கள்
உன்னைப் பிரித்துதான்
சுளைதனை சுவைப்பார்கள்..

உன்னை விலக்கியே
எலுமிச்சம் கனிதனைப்
பறிப்பார்கள்
தாகம் நீக்கிடும்
பானமும் செய்வார்கள்..

உன்னை கிளையுடன்
வெட்டி வேலி அமைப்பார்கள்
பயிர்களைக் காத்துதான்
பயன் பல பெறுவார்கள்..

நீ
இருக்கும் இடமெலாம்
இன்பமும் இனிமையும்
இருக்கும் இருந்தும்
நீ முள்ளு
என் காதலி போலவே..

திசா.ஞானசந்திரன்

சீண்டிய இளைஞனை கொலை வெறியோடு துரத்தும் யானை!(வீடியோ)

சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..

ஆணியே புடுங்க வேண்டாம் – ஒஸ்கர் முடிவு!

mariyanதனுஷ் – பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.

சூடான் நாட்டில் வேலை செய்த ஒரு இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது.

எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் கற்றுக் கொண்டு தனுஷ் இப்படத்தில் நடித்தார். 50 அடி ஆழ்கடலில் ஒட்சிசன் இல்லாமல் உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மாக் கோனிக்ஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ்பெற்றவர். எனவே மரியான் படத்தின் இந்தி உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று 5 கோடி ரூபாய்க்கு விலைபேசி உள்ளது. ஒஸ்கர் ரவிச்சந்திரனும் இதற்கு ஒப்புக் கொண்டார்.

இதை அறிந்த தனுஷ் தனக்கு அதில் இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்றாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் தனக்கு இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

தனக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே வரும் என்று தெரிந்ததும், “ஆணியே புடுங்க வேணாம்” என ரீமேக் உரிமையை விற்க மறுத்துவிட்டாராம் ஒஸ்கர் ரவிச்சந்திரன்.

தமன்னா வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்..!

shrutiஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்த்தை வைத்து எடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரீஷ் இயக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

தமிழில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷகுமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக முதலில் பேசப்பட்டது.

ஆனால் தமன்னாவை விட தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகையை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு.

இதனையடுத்து ரமணா இந்தி ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இதன் மூலம் தமன்னாவுக்கு வந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசன் பக்கம் திரும்பியுள்ளது.

அண்மையில் இந்தியில் இவர் நடிப்பில் வெளியான டி-டே மற்றும் ராமையா வாத்சாவய்யா ஆகிய படங்கள் பரவலான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

4வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி..!

CRICKET-WIS-PAKமேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்

49 ஓவா்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸாமுவேல்ஸ் 106 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து மலை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவா்களில் 189 என்கின்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் மிஸ்பாஹ், ஹபிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை அடைந்தது. மிஸ்பாஹ் 53 ஆ.மி, ஹபிஸ் 59.

போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய அணியின் ஸாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சிம்புவுக்கு போட்டியாக களம் இறங்கும் சிவகார்த்திகேயன்..!

sivaசின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றார்.
சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட்டுள்ளதால் இப்பாடலானது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பல பாடங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா கதாநாயகர்களுக்கும் பாடுகின்றார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகின்றார்கள்.

எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!

ashesஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா128 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 233 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு333 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 178ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோ 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பேர்ஸ்டோ20 ஓட்டங்களுடன் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழநதார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மேற்கொண்டு 2 ஓட்டம் மட்டுமே சேர்த்த நிலையில், ரையான் ஹாரிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 180 ஓட்டங்களுடன் (338 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அத்துடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு583 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே சேசிங் செய்திராத இமாலய இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. இந்த முறையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ‘பிடி’யில் சிக்கி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிதறி போனார்கள்.

அவுஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 347ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது டெஸ்ட் போட்டி வருகின்ற1–ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் டியூசன் வகுப்புக்கள் தடை..!

seminarபரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன்இ கருத்தரங்குகளை நிறுத்தல்
வர்த்தமானி நேற்று வெளியானது

க.பொ.த சாதாரண தரம்- உயர்தரம்- 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட் சைகள் சட்டத்தின் 22வது பந்தியின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி மூன்று பரீட்சைகளும் ஆரம்பமாகும் தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து பரீட்சைகள் முடிவடையும் திகதிவரை டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள்- மீட்டல் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது.

அதேபோன்று- பரீட்சைகளுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல்- அச்சிடல்- பகிர்ந்தளித்தல்- போஸ்டர்கள்- பனர்கள்- துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்- மின்னஞ்சல்கள் அனுப்புதல் அல்லது இவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

சீனாவில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம்! – 11 பேர் பலி..!

chinaசீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சனஅடர்த்தி மிக்க கன்சூ மாகாணத்தில் தையான்சூயி பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் மரணமானதாகவும், 81 பேர் காயமடைந்ததாகவும், முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.7 மில்லியன் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் செறிவான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சேதங்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மன்னார், வவுனியா ஆசன பங்கீட்டில் குழப்பம்..!

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என நேற்று காலை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் கூட்டு கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்வது குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.சிக்கலில் இருந்த யாழ். மாவட்டத்தில் போட்டியிட கூட்டுக் கட்சிகளுக்கு ஆசனங்கள் இணக்கப்பாட்டுடன் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 33 வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆசன பங்கீடு குறித்து இறுதி முடிவு நேற்று எடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் தமிழர் விடுதலை கூட்டணி இவ்விரு மாவட்டங்களிலும் அதிக ஆசனங்களை கோரி வருவதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மீனவர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்..!

ramesமீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த வர்ணகுல ஜெயபுஷ்பகுமார், 52, வர்ணகுல ஜெலஸ்டின் ஜினோமணி, 34 என்ற இரு மீனவர்களே தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று (21) மாலை, மன்னார் கடற்கரையில் இருந்து, பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு, இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனே, அங்கு மீன்பிடித்த, இராமேஸ்வரம் நாட்டுபடகு மீனவர் உதவியுடன் ராமநாதசுவாமி கோயில் கோபுர மின்விளக்கு வெளிச்சத்தில், இரவு 8.30 மணிக்கு, அக்னி தீர்த்த கடற்கரையில், தஞ்சம் அடைந்தனர்.

மீனவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததால், படகை திருடி வந்திருப்பார்களா குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க இங்கு வந்திருப்பார்களா என பொலிசார் விசாரணை நடத்தினார்.

ஜெலஸ்டின் ஜினோமணி கூறியதாவது: ஒரு வருடமாக மன்னார் கடற்கரையில் தங்கி மீன்பிடித்து வருகிறோம்.

நேற்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மன்னார் கரைக்கு திரும்ப முடியாமல் தமிழக நாட்டுபடகு மீனவர் உதவியுடன் இராமேஸ்வரம் கரைக்கு வந்தோம் என்றார்.

முறிகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சாரசபை வாகனம்!!

muri

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.

வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது,

ஏ-9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது. இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

muri1

muri3 muri2

இந்த அதிசயத்தை உங்களால் நம்ப முடிகின்றதா?(படங்கள்)

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்ணிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரர் என்று சாதனை படைத்துள்ளார்.

கண் இமையில் இவ்வளவு அதிகமான முடிகள் வளர்வதற்கு சாத்தியம் இல்லையொன்றாலும், சில ஹோமோன் மாற்றங்கள் மூலம் தலைமுடி போல கண்ணிமையும் வளரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

1 3 2

தமன்னாவின் வாய்ப்பைப் பறித்த ஸ்ருதி?

thamana-sruthi

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் ஹிட்டான படம் ரமணா. இந்தப் படத்தைத் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

வானம் படத்தின் இயக்குநர் க்ரிஷ், இந்தியில் இயக்கப் போகிறார். விஜயகாந்த் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி தான் நடிக்கப் போகிறார் என தற்போது செய்தி பரவுகிறது.

ஏற்கெனவே அக்‌ஷய் குமாருடன் தமன்னா நடித்துவிட்டதால் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார்கள் என்கிறது படக்குழு.

ஆனால், உண்மை அதுவல்ல. பொலிவுட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என தவித்து வரும் ஸ்ருதி என்ன மந்திரமோ செய்து தமன்னாவின் வாய்ப்பைப் பறித்து விட்டாராம்.

அக்‌ஷய் குமாருடன் நடிப்பதன் மூலம் தனக்கும் பொலிவுட்டில் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறாராம் ஸ்ருதி.

தனுஷூக்கு இரண்டு விருதுகள்!!

danush

தென்னிந்தியத் திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான 60-வது ஃபிலிம்பேர் விருது விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். “3” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதுபோல “3” படத்தில் தனுஷ் பாடிய வை திஸ் கொலவெறி பாடலுக்காக சிறந்த பாடகர் விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9, சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதும், சுந்தரபாண்டியன்´ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்கும் (கும்கி), சிறந்த துணை நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்கும் (நீர்ப்பறவை) வழங்கப்பட்டது.

சிறந்த இசை அமைப்பாளர் விருது டி.இமானுக்கும் (கும்கி), சிறந்த பாடலாசிரியர் விருது யுகபாரதிக்கும் (சொல்லிட்டாலே அவ காதல கும்கி) வழங்கப்பட்டது.

சிறந்த பாடகிக்கான விருது என்.எஸ்.கே.ரம்யாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் கிடைத்தது.