சவுதி அரேபிய அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது.
இந்நிலையில் வட்ஸ் அப்-க்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வட்ஸ் அப் மூலம் மக்கள் செலவின்றி தகவல்களை பரிமாறிக் கொள்வதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது.
இதனால் சவுதி அரசு இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க முயல்கின்றது. வைபர், வட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் உள்நாட்டு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எப்படி விதிகள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சவுதி தொலைத்தொடர்பு விதிகளுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு வட்ஸ் அப்-க்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து வட்ஸ் அப் பதில் அளிக்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 9ம் திகதிக்குள் அதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.
2012.08.13ம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், தற்போது அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை எற்படுத்தி உள்ளது. இந்த திருத்தங்களுடன் வழங்கப்படும் தற்காலிக விஸாவானது தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில் ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர்.
2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இடம்பெயர்வோரைக் கடத்துவதற்கெதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்திரேலிய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான சட்ட அமைப்புக்களில் உள்ள குறைபாடுகளை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆட்களைக் கடத்துவதற்கெதிரான சட்டவரைபுகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவென அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையிலும் ஆட்கடத்தல் நடைமுறைகள் அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அந்தக்காலம்.பெண் என்றால் பாம்பும் மயங்கும் என்பது இந்தக்காலம் என்று பழமொழியை மாற்றும் அளவுக்கு பாம்புக்கும் பெண்களுக்குமுள்ள உறவு வலுப்பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
இங்கே மலைப்பாம்புடன் கடற்கரையிலே உல்லாசமாக போஸ் கொடுப்பவர் வேறு யாருமல்ல. நம்நாட்டு நங்கையான பிரியங்கா என்ற மொடல் அழகி தான்.
பேருவளை கடற்கரையில் உள்ளுர் புகைப்பட பிடிப்பாளர் ஒருவரின் கெமராவில் “கிளிக்”செய்யப்பட்டவை தான் இந்த மங்கையும் மலைப்பாம்பும்.
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காடிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது. கடந்த 2011 உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு பின் இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன.
இந்திய அணி இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு, பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இலங்கை அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் அனுபவ வீரர்களான சங்ககார, ஜெயவர்தன இருவரும் முதுகெலும்பாக உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 333 ரன்கள் சேர்க்க உதவிய துவக்க வீரர்கள் பெரேரா, தில்ஷன் நல்ல நிலையில் உள்ளனர். பின்வரிசையில் கைகொடுக்க அணித் தலைவர் மத்யூஸ், சண்டிமால், திரிமான உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் மிரட்டுவதற்கு மலிங்க காத்திருக்கின்றார். தவிர, குலசேகரவும் சிறப்பாக பந்து வீசுகின்றார்.
இந்திய அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு இரண்டிலும் சிறந்த நிலையில் உள்ளது. எனவே இரு சமபல அணிகள் மோதும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாகவும் விறுவிறுப்பு நிறைந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்று போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கை அணி வெளியேறும்.
முக்கிய புள்ளிவிபரங்கள்..
**இலங்கைக்கு எதிராக சாஜாவில் 2000ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சமாக 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
**1984ல் இலங்கை அணி 96 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு எதிராக குறைந்த ஓட்டங்களை பதிவு செய்தது.
**இலங்கை, இந்தியா அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 75 ல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 52ல் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளுக்கு முடிவில்லை.
**இரு அணிகள் மோதிய போட்டிகளில், இந்திய அணி அதிகபட்சமாக 414/7 ஓட்டங்களையும் (ராஜ்கோட், 2009) எடுத்தது. இதே போட்டியில இலங்கை அணி அதிகமாக 411/8 ரன்கள் எடுத்தது.
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருவிழா 11ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம்(19.06) தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்திருவிழாவில் கலந்துகொண்டனர்.நாளையதினம் தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் தென் ஆப்பிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 38.4 ஓவர்களில் 175 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 37.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறவுள்ள இலங்கை, இந்திய அணிகளுகிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.
ஹன்சிகா தான்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார். இன்றைய திகதியில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.
தமிழின் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அவர் சூர்யாவுடன் நடித்துள்ள சிங்கம் 2 விரைவில் வெளியாகவுள்ளது. பிரியாணி பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இந்தநிலையில் அவர் தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி கூறுகையில்,
தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா. சூர்யா எப்படி என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிங்கம் என்றார். எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி குறும்புத்தனம் என்று தெரிவித்துள்ளார்.
சிம்பு எப்படிப்பட்டவர் என்று கேட்டதற்கு வாலு என்று பதில் கூறினார் ஹன்சிகா. அப்ப சேட்டை நாயகன் ஆர்யா என்று கேட்டதற்கு வேடிக்கையானவர் என்று ஹன்சிகா தெரிவித்தார்.
ஹன்சிகாவின் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானம் பற்றி கேட்டதற்கு அய்யய்யோ… அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் என்றார்.
சந்திரனில் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற்கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்ல எட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பெண்கள். செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தீவிர பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று 19 பிற்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளரே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியரான சிவஞானசுந்தரம் சுரேந்திரன், விரிவுரையாளர் குறிப்பிட்ட தினத்திற்குள் பாடம் தொடர்பான செயற்றிட்டத்தை சமர்ப்பிக்க தவறியுள்ளார்.
இந்நிலையில் பிறிதொரு நாளில் அவரால் வழங்கப்பட்ட செயற்றிட்டத்தை விரிவுரையாளர் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் மகேள ஜெயவர்தன கூறியுள்ளார்.
கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, காடிப் மைதானத்தில் நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இந்த போட்டி குறித்து ஜெயவர்தன நேற்று தெரிவிக்கும் போது
அரை இறுதியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலாக உள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்றது பற்றி கவலைப்படவில்லை. இது மிகப் பெரிய தொடர். அரை இறுதி ஆட்டம் மிக முக்கியமானது. அதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.
இந்திய அணி தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் துடுப்பாட்ட வரிசை மிக வலுவானதாக உள்ளது. அதை கவனத்தில் வைத்து வியூகம் அமைப்போம்.
ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன் கடந்ததில் திருப்தி அடைகிறேன். மற்றபடி அதை பெரிதாக நினைக்கவில்லை. அணி வெற்றி பெற எனது ஆட்டம் உதவியது என்பதே முக்கியம்.
அரை இறுதியோ, இறுதியோ எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறேன். அந்த முனைப்புடன் ஒருங்கிணைந்து விளையாடினால் இலங்கை அணியால் நிச்சயம் சாதிக்க முடியும். இவ்வாறு ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி சென்று இருந்தார். புகழ் பெற்ற குருத்வாராவில் வழிபாடு நடத்தி விட்டு அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில், சமோலியில் அலகாநந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் இருந்த கட்டிடங்கள், ஹோட்டல்களை வெள்ளம் சூழ்ந்தது.
ஹர்பஜன்சிங் தங்கி இருந்த விடுதியையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதில் ஹர்பஜன்சிங் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.
துணை இராணுவப் படையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் சென்று அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட ஹர்பஜன் சிங் கூறியதாவது…
வெள்ளத்தில் தவித்த எங்களை துணை இராணுவப் படையினர் திறமையாக செயல்பட்டு மீட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. பாபாவின் அருளால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம்.
எங்களைப் போல் ஏராளமானோரை அவர்கள் மீட்டுள்ளனர். அவர்களது பணி பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.
கடந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் வன்னி பெரு நிலப்பரப்பில் வவுனியா சைவ பிரகாச கல்லூரி முதலாம் இடத்தை பெற்றிருந்தது.
முதலாம் இடத்தை பெறுவதற்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபரான செல்வி உமா இராசையா அவர்களின் ஏற்பாட்டில் மதியபோசன நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்வி பணிப்பாளர் செல்வி அன்னமலர் முத்துசாமி, வவுனியா நகரகோட்டகல்வி பணிப்பாளர் திரு M.P நடராஜா, நகர கிராம சேவையாளர் திரு .வீ.ஜெகசோதினாதன், மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கணித பாட செயற், திட்டபொறுப்பாசிரியர், ஏனைய பாட ஆசிரியர்கள் பிரதி அதிபர்களும் கலந்து கொண்டனர்.
தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும்.
கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.
இது மிகவும் மோசமான நிலைமை என்றும் சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறிகின்றது.
அனைத்து 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சிரியா மற்றும் சுடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
நீண்ட கால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த அதிகரிப்புக்கள் காண்பிப்பதாகவும் ஐநா கூறுகிறது.
கோச்சடையான் படம் வெளிவருவதற்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும், இதுகுறித்த ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது கோச்சடையான். இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோன் நடிக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் ட்ரைலரே இன்னும் வெளியாகவில்லை. காரணம், ரஜினி எதிர்ப்பார்த்த சர்வதேச தரத்துக்கு ஏற்ப படத்தை மெருகேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான படம் தொடர்ந்து தள்ளிப் போவதுதால் இரசிகர்கள் சோர்ந்து போகாமலிருக்கவே இந்த முடிவு என்கிறார்கள்.
இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அண்மையில் இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் அழைத்து பேசிய ரஜினி, முத்து, படையப்பா பாணியில் நகைச்சுவை, அதிரடி கலந்த கதையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.
மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போது நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
ஏற்கனவே இருவரும் இணைந்த படங்களான ஜக்குபாய், ராணா ஆகிய இரண்டு படங்களும் பூஜையுடன் நின்றுவிட்டன. அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்களாம்.
நாம் தினசரி நிறைய பொருட்களை பயன்படுத்துகிறோம் ஆனால் அவற்றிள் ஒரு கலைநயம் என்பது நிச்சயம் இருக்காது. இங்கு சில பொருட்கள் உள்ளன அவற்றை ஒரு முறை பாருங்கள் இவை வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. எவ்வளவு வித்தியாசமாக அது உள்ளது என்று பாருங்கள்.