
சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.
துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நோர்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நோர்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது.
தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும் தான் மீண்டும் நோர்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது .


இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.
அர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தாய்லாந்தில் லொறி மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.
சிலாபம் – முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும்.
15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது.