கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நோர்வே பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியது துபாய் நீதிமன்றம்!!

norway

சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.

துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நோர்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா.

அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நோர்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது.

தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும் தான் மீண்டும் நோர்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது .

கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை – வவுனியாவில் அதிசயம்..!

வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

mullanki

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி இன்று..!

uniஇவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

எந்தவொரு காரணத்திற்காகவும் இன்றை நாளின் பின்னர் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

ஜஸ்வர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்..!

aishwaryaஅர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அர்ஜீன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து நல்ல கருத்துகள் பரவியிருப்பதால், முதல் படத்திலேயே எதிர்ப்பார்ப்புக்குரிய நாயகியாகிவிட்டார் ஐஸ்வர்யா.

இதில் படத்தின் ப்ளஸ் பாய்ண்டாக ஐஸ்வர்யாவின் அழகும் நடிப்பும் முக்கியமானவை என்று கூறப்படுவதால் அவரை ஒப்பந்தம் செய்ய இரு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

ஆனால் அர்ஜீனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜீனின் நெருக்கமான நண்பர்கள் உள்ள தெலுங்குப் பட உலகிலும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ள இந்த முக்கியத்துவமானது கொலிவுட்டின் மற்ற நாயகிகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஐஸ்வர்யா நடித்துள்ள பட்டத்து யானை வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகின்றது.

தாய்லாந்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து 19 பேர் கருகி சாவு

thailandதாய்லாந்தில் லொறி  மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாங்காக் நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட 2 அடுக்கு பஸ் இன்று அதிகாலை மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

எதிர்முனையில் படுவேகமாக வந்த சீமெந்து லொறி  கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்குள் பாய்ந்தது. லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது. மளமளவென்று பரவிய தீ பஸ் முழுவதும் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் அரை தூக்கத்தில் இருந்த பயணிகள், என்ன நடக்கிறது? என்பதை யூகிப்பதற்குள் வேகமாக பரவிய தீயில் சிலர் சிக்கிக் கொண்டனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சினுள் இருந்து 18 பிணங்களை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்த 20 பயணிகளை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போகும் வழியில் ஒரு பயணி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய பஸ் முழுமையாக எரிந்து அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்துவிட்டது.

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்..!

mandelaநெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் இருந்துவரும் இவர், சென்ற வாரம் தனது 95ஆவது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடினார்.

மக்களின் அன்பிற்குரிய தலைவனாக இருக்கும் மண்டேலாவை அவரது மனைவி அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கின்றார். தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவும் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று மண்டேலாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றார்.

ஜனாதிபதி ஜுமா நேற்றும் மண்டேலாவை பார்வையிட்டு வந்தார். மண்டேலா தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும், உடல்நிலையில் நீடித்த முன்னேற்றம் காணப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க மக்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் மண்டேலாவிற்கு இருக்கும் என்றும் அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அனல் காற்று வீசலாம் – சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை..!

swissசுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் அனல் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சியோன் பகுதியில் கடந்த 19ம் திகதி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 20ம் திகதி 37 டகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டுள்ளது.

ஜெனீவாவின் வெப்பநிலையானது தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்துவரும் தினங்களில் முதியவர்கள், குழந்தைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா காலமானார்..!

manjulaநடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர்.

இணைய விளம்பரங்க​ள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு..!

Computer-Virus

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையத் தளங்களை பயன்படுத்தும்போது தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.

இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு கிளிக் செய்க.

 

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று..!

slஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.

இதன்படி இன்று இரண்டாவது போட்டியில் இரு அணிகளிலும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இன்றைய போட்டியிலும் இலங்கை அணையை சந்திமல் தலைமை தாங்குகிறார். கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாது இருந்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா இன்றைய போட்டியில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சிலதினங்களாக கொழும்பில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இன்றும் கூட அதிகாலை முதல் மழை பெய்து வருவதினால் இன்றைய போட்டிக்கு மழை சவால் விடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனை கண்டுபிடிப்பு..!

thaveethuபைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது. ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் மற்றும் இஸ்ரேலின் பழங்கால நினைவு சின்னங்களின் நிபுணர்கள் அடங்கிய குழு இங்கு ஏழு ஆண்டுகள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அங்கு பழங்கால கட்டிடம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. இந்த கட்டிடம் பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீது மன்னரின் அரண்மனை என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிர்பெட் குயாபா நகரம் தாவீது மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நகரமாகும்.

எனவே, இங்கு தாவீது மன்னர் தனது அரண்மனையை நிறுவியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய பொருட்களான முள்கரண்டிகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவை தாவீது மன்னர் உபயோகித்த பொருட்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால் இந்த கட்டிடம் தாவீது மன்னரின் அரண்மனை அல்ல என எதிர்ப்பாளர்கள் விவாதிக்கின்றனர். இது தாவீது மன்னருக்கு பின் வந்த மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஷேன் வோன் ஓய்வு..!

warneஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் வோன் தொடர்ந்து விளையாடி வந்தார். அந்த போட்டியில் இருந்து விடைபெறுவதாக ஷேன் வோன் நேற்று அறிவித்துள்ளார்.

தான் விடைபெற இதுவே சரியான தருணம் என்று தெரிவித்துள்ள அவர் தொழில் மற்றும் வர்ணனையாளர் பணியை கவனித்து கொண்டு விளையாடுவது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

43 வயதான ஷேன் வோன் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டும், 194 ஒருநாள் போட்டியில் ஆடி 293 விக்கெட்டும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்..!

ukஇலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இலங்​கையில் தங்கியிருப்பர்.

இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.

முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை..!

Munneswaramசிலாபம் – முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும்.

இவ்வாலய உற்சவம் 29 தினங்களாகக் கொண்டாடப்படும். இக்காலங்களில் நாட்டிலிருந்து வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவைகள் சுகாதார வசதிகள் குடிதண்ணீர் ஏற்பாடுகள் புதிய மின் இணைப்புக்கள் கழிவறைகள் என்பனவற்றுடன் புதிய வாகன தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

அத்துடன் பாதுகாப்பை முன்னிட்டு விசேட தற்காலிக பொலிஸ் நிலையமும் வழமை போல் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களான எதிர்வரும் 2013.08.15 ஆம் திகதி தீமிதிப்பு உற்சவமும் அதைத் தொடர்த்து 63 சிவனடியார்களின் விழாவும், 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிச்சாடன உற்சவமும், 17 ஆம் திகதி நடேசர் உற்சவமும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை5.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 19 ஆம் திகதி திங்கள் தேர் உலாவும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிலாபம் மாயவன் ஆற்றில் தீர்த்த உற்சவமும் கொண்டாடப்படும்.

ஆனையிறவில் 15 மில்லியனில் புதிய ரயில் நிலையம்!

ainaiyiravu15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வ மாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வட மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார்23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கிழக்கு உட்பட எட்டு மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 15மில்லியன் ரூபா செலவிலேயே இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, பாடசாலை மாணவர்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் பிரதிபலிப்பாகவே கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிதி சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் ஆணையிறவு ரயில் நிலையம் அமைந்திருந்த அதே இடத்திலேயே புதிய ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது என்றார்.

ஏனைய எட்டு மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பாடசாலை மாணவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சுமார் 1000 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்தோற்சவம் நாளை..!

thanthamalaiமட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும்.

பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.

கடந்த 3ம் திகதி ஆரம்பமாகி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாலயத்தின் மகோற்சவம் நாளை காலை 6மணியளவில் நடைபெற இருக்கும் புண்ணிய தீர்தோற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இத் தீர்தோற்சவம் காரணமாக நாளை நடைபெற இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.