மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் பலப் பரீட்சை..

 sl

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில்நேற்று முந்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று போட்டி தொடரப்பட்டது. இதன்போதும் மழை குறுக்கிட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு 230 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இத்தொடரின் இறுதி லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன..

இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
 

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்..!

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார்.

இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம் தயாராகிறது.

இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய கதை என சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கதாபாத்திரம் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது.

ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி இருந்தாராம்.

கதை கேட்டு நடிக்க சம்மதித்த பிரகாஷ் ராஜ், தான் இளையராஜா கேரக்டரில் நடிப்பதாக வெளியே தகவல் கசிந்ததும் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.

சர்ச்சைக்கு பயந்தே அவர் விலகியதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கதையை கூறியுள்ளார் சூர்யா.

ஆனால் யாரும் நடிக்க முன்வராத இந்நிலையில் இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொர்ஸி ஆதரவாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு..!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ முகாமொன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மொர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவக் கட்டடத்துக்கு முன்பாகவே, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி காவல்துறையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மொர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், 35 பேர்வரையில் பலியானதாகக் கூறுகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இராணுவத் தரப்போ,பயங்கரவாதக் கும்பலொன்று முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகக் கூறுகிறது.

இதற்கிடையே, மொர்ஸியை பதிவியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை ஆதரித்திருந்த இஸ்லாமிய வாத அல்- நூர் கட்சி,இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

இன்றைய தாக்குதல் சம்பவம் உண்மையில் ஒரு படுகொலை நடவடிக்கை என்று அக்கட்சி வர்ணித்துள்ளது.

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

வவுனியா மரக்கறிச் சந்தை வியாபாரிகள் சந்தைக்கு வெளியில் இடம்பெறும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர சபையினால் மரக்கறி வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கென கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டு தினமும் நில வாடகையாக 50 ரூபா அறவிடப்பட்டு வரப்படும் நிலையில், சிலர் வேறு தேவைகளுக்கு வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தங்களது தொழில் பாதிப்படைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நகரசபை கட்டளைச் சட்டத்தை மதித்து மரக்கறிச் சந்தை உள்ள இடத்தில் இருந்து 500 மீற்றருக்குள் உள்ள அனைத்து மரக்கறிக் கடைகளையும் அகற்றுமாறு கோரி நகரசபைத் தலைவர், பிரதி பொலிஸ் மா அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

vavuniya

கார்த்திகாவுக்கு பிடித்த ஹீரோ..!

தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த கதாநாயகியாலும் பிடிக்க முடியாது என கார்த்திகா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பாரதிராஜாவின் அன்னக்கொடி அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், கார்த்திகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவர் தற்போது பிருந்தாவனம் என்ற கன்னட படத்திலும், தமிழில் டீல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பிற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிக்கவே கார்த்திகா விருப்பமாக உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அம்மா ராதா, பெரியம்மா அம்பிகாவின் இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது.

அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். சூப்பர்ஸ்டார்களைப் போன்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது அப்படி இல்லை, ஏராளமான புதுமுக நடிகைகள் வருவதால் போட்டி அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும் என்றும், பணத்திற்காக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா..!

அம்பிகா- ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகள் தான் தமிழில் கொடி கட்டி பறக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையிலும், அவர்கள் தான் சினிமாவை முழுதாக ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.

அப்படி வரும் நடிகைகள் யாரும் இதுவரையிலும் தமிழ் சினிமாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டது இல்லை.

திருமணம் என்ற பட்சத்தில், கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றனர்.

ஆனால் நஸ்ரியா நசீமோ, நான் எதிர்காலத்தில் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

மலையாளிகளுக்கு எந்த வகையிலும் தமிழர்கள் குறைந்தவர்கள் இல்லை என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற குருசேத்திரம்..!

வடமாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்பாட்டில் மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட கலைஞர்களின் ‘குருசேத்திரம்’ நாட்டிய நாடக நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

அவை நிறைந்திருந்த இந் நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி, கல்வி பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண கலாசார திணைக்கள அதிகாரி சிறிதேவி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதேவேளை, இந் நிகழ்வில் கலந்து கொண்டவட மாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களை கௌரவித்தார்.

guru1 guru2 guru3 guru4

வவுனியா பாராதிபுரத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு வன இலாகா அறிவுறுத்தல்

vavuniya

வவுனியா, பாராதிபுரம் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களாக வசித்து வரும் மக்களை வன இலாகா திணைக்களம் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதற்கு அப்பிரதேச மக்கள் தமது எதிர்பபை தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரம் கிராம பிரதேசத்தில் வசித்து வரும் இம் மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்னதாக மலையகத்திலிருந்து சென்று இங்கு குடியேறியவர்கள்.

இவ்வாறாக 240 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் குடியேறியுள்ள பிரதேசம் வன இலாக்காவுக்குரியது என குறிப்பிட்டு அம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதிபுர பிரதேசத்தில் 200 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு புத்தளத்தைச் சேர்ந்த 400 குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினதும் அமைச்சர் றிசாட் பதியூதீனதும் திட்டத்திற்கு அமைய இந்த பக்கச்சார்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஒற்றுமையாக வாழும் இருசமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களை முட்டி மோத வைக்கும் முகமாக அரசாங்கமும் அமைச்சரும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்..

refugee

அவுஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த டி. தினேஸ் என்ற 26 வயது இளைஞன் இறுதியாக தாங்கள் 11 பேர் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியதாக கூறுகின்றார்.

அந்நாட்டிலுள்ள 50 தொடக்கம் 60 முகாம்களில் பெண்கள், குழந்தைகள் அடங்கலாக இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தாலும் சரியான எண்ணிக்கை தெரியாது என்கின்றார் அவர்.

மலேசியாவில் 15 மாதங்கள் தொழில் செய்து கொண்டிருந்தவேளை நிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தீர்மானித்ததாக கூறும் அவா், இந்தோனேசியாவிலிருந்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி படகில் ஏறும்போது தன்னுடன் 89 பேர் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கைதானவர்களில் 31 பேர் இலங்கையர்கள், ஏனையோர் பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் நாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-BBC தமிழ்-

ராணுவம் – தீவிரவாதிகள் தாக்குதலில் 78 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் தினசரி தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாசில்அகமது தலைமையில் சமாதான உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதில்80உறுப்பினர்கள் உள்ளனர்.

நேற்று காஷ்னி மாகாணத்தில் சமாதான உயர்மட்ட கவுன்சில் தலைவர் பாசில் அகமது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரம் மறைத்து வைத்திருந்த குண்டுகளை தலிபான் தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

அதில், பாசில்அகமது படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் அவரது கார் டிரைவர் உயிரிழந்தார்.

நேற்று இது போன்று பல இடங்களில் ரோட்டோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர். மற்ற இடங்களில் நடந்த தாக்குதல்களில் 7வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் தலிபான் தீவிரவாதிகள் 64 பேர் கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களில் 14ராணுவ வீரர்களும், 64 தலிபான் தீவிரவாதிளும் ஆக மொத்தம் 78 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தகவலை ஆப்கானிஸ் தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன வவுனியா மாணவனை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

வவுனியாவில் கடந்த 26 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவன் ஒருவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பாடசாலை முடிவடைந்து சென்ற வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனான சிவசூரியன் சனராஜ் (வயது 17) என்பவர் காணாமல் போயுள்ளார்.

இம்மாணவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த இம்மாணவன் பாடசாலையில் மாலை நேர வகுப்புகள் நிறைவடைந்த பின்னர் வீடு நோக்கிச் சென்றபோதே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாணவன் காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸில் மாணவனின் பெற்றோரும் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி அதிபரும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இருப்பினும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவன் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் குறித்த மாணவன் காணாமல் போன விடயம் பற்றி கேட்டறிந்துகொண்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவனை கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்தனர்.

vavuniya2

vavuniya1

சிவ்சங்கர் மேனன் இன்றிரவு இலங்கை வருகிறார்!

shivshankar_menon

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு வருகின்றார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையினை கொழும்பில் நடத்த பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இந்த பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்ளவிருப்பதாக வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் உறுதியளித்துள்ளன.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ளும் முகமாக மாலைத்தீவு நாட்டின் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பல அதிகாரிகள் இலங்கை வரவிருப்பதாகவும் மேற்படி அமைச்சுக்கள் தெரிவித்தன.

இளையதளபதியை ஏமாற்றிய அமலாபால்..!

கொலிவுட்டில் தலைவா படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் தலைவா படத்தை ஒகஸ்ட் 9ம் திகதி திரையிட திட்டமிட்டு உள்ள நிலையில், படம் குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தலைவா படத்தில் நடனம் மட்டுமே தனது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய், இந்தியாவிற்கு வந்து எதிர்பாராத சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்.

இதில் குறிப்பிடத்ததக்க விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் இருக்கும் விஜய்யை ஏமாற்றி இந்தியாவிற்கு அழைத்து வர அனுப்பப்பட்டவர் தானாம் அமலாபால்.

அப்படி விஜய்யை ஏமாற்றும் போது, வழக்கமான கதாநாயகி போன்று அமலாபாலும் விஜய் மீது காதலில் விழுந்து விடுகிறாராம்.

தலைவா படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாக, இந்தப் படத்தின் புக்கிங் ரகசியமாக பல இடங்களில் நடைபெற்று வருகின்றதாம்.

மேலும் திரைப்படத்தை எங்கள் திரையரங்குகளில் தான் வெளியிடுகிறோம் எனக் கூறி பல திரையரங்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்பகுதி மீவர்களை வெளியேற்ற கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..

வாழை இலை நீர்
விரும்பும் கிளிகள்..

அதைவிட்டு
உன் வாய் வழி நீர்
விரும்புகின்றது..

காலை எழு கதிரவன்
கதிர்களும் உன்
தோள் தொட்டு
குளிர்கின்றது..

சோலை மலரும்
மலர்களும் உன்
வாசம் நுகர்கின்றது..

மாலை வருகின்ற
மேகம் உன்
செவ்விதழ்
குழைகின்றது..

சேலை இணைகின்ற
நுாலும்
என் சாலை ஆகின்றது..

ஆலை இடுகின்ற
கரும்பும் உன்னில்
ஆசைப்படுகின்றது..

வேலை ஏதுமின்றி
எனக்கும் உன்னைக்
காதலிப்பதே
வேலையாகிறது..

பாலையாய் உன்
ஈரமில்லா
இதயம் அறிந்த பின்பு..

-திசா.ஞானசந்திரன்-

விமான விபத்து – விமானி உள்பட 10 பேர் பலி..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் பாதையில் குறுக்கிடும் பெரும் மலைத் தொடர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அலாஸ்கா மக்கள் வான்வழிப் போக்குவரத்தை தொடர்ந்துக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில், அலாஸ்காவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் ஓடு பாதையை விட்டு உயர எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் பெரும் தீப்பிழம்பாக மாறிய விமானத்தை தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை. இந்த விபத்தில் விமானத்தினுள் இருந்த 9 பயணிகள் மற்றும் விமானி உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.