
முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில்நேற்று முந்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று போட்டி தொடரப்பட்டது. இதன்போதும் மழை குறுக்கிட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு 230 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இத்தொடரின் இறுதி லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன..
இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.







