வவுனியாவில் மாணவி தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் இடம்பெறுகின்றது : வலயக்கல்வி அலுவலகம்!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்தது.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் மாணவி மீது அதே பாடசாலையினை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன், இருதரப்பும் உடன்பட்டுக்கொண்டமையால் விடயம் சுமூகமாக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையினை எடுத்த வலயக்கல்வி அலுவலகம் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றத்தினை வழங்கியது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது. இதேவேளை தற்போது அந்த ஆசிரியர் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றயதினம் குறித்த மாணவி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மாணவி உறவினர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா வடக்கு கல்விவலயத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த 56 வயது தாய்.. அமெரிக்காவில் நெகிழ்ச்சி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில், 56 வயதாகும் தாய் ஒருவர் மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக, ஒரு குடும்பம் என்றாலே அதில் தாத்தா, பாட்டியின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதில், குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால், இங்கு ஒரு குடும்பத்தில் பாட்டியின் பங்களிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு வசிக்கும் நான்சி என்ற 56 வயதாகும் பெண் ஹேக் வெப் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் நான்சி, மகனின் குழந்தைக்கு வாடகைத்தாயாக மாறியுள்ளார்.

மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் நான்சி வாடகைத் தாயாக மாறியுள்ளார். அவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்னா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது, தனது மகன் மற்றும் மருமகளுடன் நான்சி மகிழ்ச்சியாக உள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நான்சி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனாலும் தற்போது இது கவனத்தை பெற்றுள்ளது.

வேறு சாதி நபரை காதலித்த அக்காவை கொலை செய்த 17 வயது தம்பி!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு தங்கத்தாய்(20) என்ற மகள், மகன் (17) உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது, அங்கு பணிபுரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதல் விவகாரம் தங்கத்தாயின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தங்கத்தாயின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது காதலில் தங்கத்தாய் உறுதியாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று காலையும் காதல் விவகாரம் தொடர்பாக தங்கத்தாய் வீட்டில் பிரச்சினை வந்துள்ளது.

பின்னர் சண்டை முற்றிய நிலையில் நேற்று இரவு தங்கத்தாயின் சகோதரர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கத்தாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை குலைந்து தடுமாறி ரத்த வெள்ளத்தில் தங்கத்தாய் கீழே விழுந்துள்ளார்.

மேலும் தங்கத்தாயின் சகோதரர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தங்கத்தாய் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தாயின் சகோதரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் நடக்க இருந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பைடராயனபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள நியூ டிம்பர் லேஅவுட்டில் 24 வயது ஆட்டோ டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கூரிய ஆயுதங்களால் 20-க்கும் மேற்பட்ட முறை குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இதுக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு தாக்குதல் வழக்கில் அருண் 2021ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அறிக்கையின்படி, அருணின் திருமணம் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது.

“அருண் என் அண்ணன் மகன். அவரது தந்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் எனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக இரவு 9:30 மணியளவில் எனக்கு அழைப்பு வந்தது,” என்று அருணின் மாமா குமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பைதரனபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது

மன உளைச்சலில் இருந்த மருத்துவர்.. குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, குடும்பம் வசித்து வந்த அரசு குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்து வரும் நிலையில், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மருத்துவர் லால்கஞ்சில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் DMO ஆக பணிபுரிந்தார். அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் படுக்கையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த மருத்துவர் டாக்டர் அருண் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது மனைவி அர்ச்சனா, மகள் அதிவா மற்றும் மகன் ஆரவ் ஆகியோருடன் தொழிற்சாலையின் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

மயங்கி விழுந்த மனைவி, மகன் மற்றும் மகளுக்கு மருத்துவர் முதலில் ஊசி போட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலோக் பிரியதர்ஷி தெரிவித்தார். பின்னர், சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு தெரியவில்லை. மேலும், “இறந்த உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார். டாக்டர் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டார், அதன்பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் வளாகத்தில் வசிக்கும் எவரும் பார்க்கவில்லை.

புதன்கிழமை, அவரது சகாக்கள் அவரைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்று வீடு பூட்டியிருப்பதைக் கண்டனர். அவர்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது, ​​உடல்களை பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உடலை கைப்பற்றினர்.

கல்யாணத்துக்கு மறுப்பு சொன்ன காதலி.. மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூருவில்..

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் கல்லுபாலு கிராமம் கெங்கேரியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இஞினியர் வேலை செய்து வருகிறார்.

இவர் ஹெம்மிகேபுரவை சேர்ந்த பெண்ணை சந்தித்து நட்பாய் பழகினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராகேஷ் விரும்பினார்.

இதனால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து பேசியதற்கு அவர்களும் மகன் காதல் திருமணம் செய்வதற்கு வரவேற்பளித்துள்ளனர். இதனால் பெண்ணின் வீட்டிற்கு ராகேஷ் பெண் கேட்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் ராகேஷ் மீது தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்தோர்கள் காதல் கல்யாணத்திற்கு முழுக்கு போட்டதால் பெண்ணும் காதலை முறித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராகேஷ், தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் படுகாயமடைந்த அவர், விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராகேஷ் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தங்களது மகன் மரணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் தான் காரணம் என ராகேஷின் குடும்பத்தினர் கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண், அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணைக்கு நகை, பணம் இல்லை.. மன உளைச்சலில் பெண் மருத்துவர் விபரீத முடிவு!!

கேரளாவில்..

கேரளாவில் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாததால் பெண் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தார்.

ஷஹ்னா, தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நன்கு படித்த, வேலையில் இருக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியது இருக்கும். அவ்வளவு பணமோ, நகையோ பெற்றோரிடம் இல்லை. இதனால் ஷஹ்னா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஷஹ்னாவுக்கு இரவு பணி இருந்தது. பணிக்கு செல்லாததால் சக மருத்துவர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஷஹ்னா பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது செலுத்தும் மயக்க ஊசியை போட்டு ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் மருத்துவக்கல்லூரிக்கு போலீசார் விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஷஹ்னா தங்கி இருந்த அறையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய் விட்டார்.

திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த டாக்டர் ஷஹ்னா, தன்னுடன் படித்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு அவரும் சம்மதித்துள்ளார். ஆனால் வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என காதலன் வீட்டார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதற்கு ஷஹ்னாவின் வீட்டினரோ, ‘அவ்வளவு நகை, பணம் எங்களால் கொடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால் காதலனோ, ‘எனது பெற்றோர் கேட்ட வரதட்சணையை கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது’ என்று கூறிவிட்டாராம். இது ஷஹ்னாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்!!

சீன மருத்துவ முறை..

கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது.

பைதா லஜின் (Paida Lajin) எனக் கூறப்படும் இந்த சிகிச்சை சீன மருத்துவ முறை ஆகும். இந்த மருத்துவ முறையால் நோயாளியின் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற முடியும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், 71 வயதான டேனியல் கார் என்ற பெண் 2014ல் உடலில் அறையும் சிகிச்சை வகுப்பை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்ததும் உயிரிழந்துள்ளார்.இவர், டைப்-1 டயாபடீஸ் நோய்க்கு மாற்று சிகிச்சை தேடி இதனை செய்துள்ளார்.குறித்த சிகிச்சையின் பயன்களையும், ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றி ரத்த ஓட்டத்தை எப்படி அதிகரிக்கலாம் எனவும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையில் நோயாளிகள் தோல் சிவந்து போகும் அளவிற்கு அல்லது சிராய்ப்பு ஏற்படும் அளவிற்கு அடிக்க வேண்டும்.இவரது சிகிச்சைக்கு அறிவியல் ரீதியாகவோ மருத்துவ ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை. பல மருத்துவர்கள் அவரை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

7ம் வகுப்பு மாணவனை உடும்பு பிடிப்பதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்று நண்பன் செய்த கொடூரம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களது 2வது மகன் அரவிந்த் (12). 7ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அரவிந்த், மாலை 6 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது தாய் அம்பிகா விசாரித்தபோது அரவிந்தை அதே ஊரை சேர்ந்த இளவரசன் (28) என்பவர் உடும்பு பிடிப்பதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றது தெரிந்தது.

இதையடுத்து அங்குள்ள திருமலைராஜன் ஆற்றங்கரைக்கு தேடி சென்ற போது, அங்கு புதர் ஒன்றில் மகன் அரவிந்த் சீருடை முழுவதும் நனைந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். அருகில் இளவரசன் ஆற்றில் குளித்துவிட்டு தனது கைலி, சட்டைகளை காய வைத்து கொண்டிருந்தார்.

தகலறிந்து வந்த போலீசார் இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் படித்துள்ள இளவரசன், தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதும் தெரிய வந்தது. கொலையான அரவிந்தை எதற்காக ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றார் என்று விசாரித்து வருகின்றனர்.

கணவர் உழுது கொண்டிருந்த டிராக்டரில் சிக்கி மனைவிக்கு நேர்ந்த சோகம்.!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொள்ளப்பள்ளி கிராமத்தில், கணவர் உழுது கொண்டிருந்த டிராக்டரில், எதிர்பாராத விதத்தில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி புஷ்பா (33) . இந்த தம்பதியருக்கு ஜோசிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, தனது விளை நிலத்தில் மாற்று பயிரிட கஜேந்திரன், அவரது சொந்த டிராக்டரில் உழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தோட்டத்திற்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா, எதிர்பாராமல் டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்களும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கிய நண்பனைக் காப்பாற்றச் சென்ற அண்ணன் தம்பி இருவருக்கும் நேர்ந்த சோகம்!!

மாங்காட்டில்..

சென்னை: மாங்காடு, வடக்கு ரகுநாதபுரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்பிரசாத் (22) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இளைய மகன் யுவன் சங்கர் ராஜா (20) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (டிச.03) மாலை யுவன் சங்கர் ராஜாவின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் மனோஜ் (20), யுவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் கதவை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக அந்த வழியாகச் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மனோஜ் கை பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி அலறிய மனோஜின் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றுவதற்காக வந்த மதன் பிரசாத் மற்றும் யுவன் சங்கர் ராஜா மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று பேரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, தாய் ஈஸ்வரி காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கிய நிலையில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் இருந்த நான்கு பேரையும் மீட்டு உடனடியாக வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நால்வரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதன்பிரசாத், யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.மேலும் ஈஸ்வரி, மனோஜ் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன அண்ணன், தம்பி உடல்களை மீட்டு உடற்கூராய்விற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இரண்டாவது மாடியில் வசித்து வருவதாகவும், சம்பவம் நடந்தது முதல் மாடி என்பதால் எதற்காக கீழே வந்தார்கள் என்பது குறித்தும், எதிர்பாராத விதமாக கை நீட்டியபோது மின்சாரக் கம்பியில் கைப்பட்டு மின்சாரம் பாய்ந்ததா அல்லது குடும்ப பிரச்சனையில் சென்று மின்சாரக் கம்பியில் கை வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி அண்ணன், தம்பி பலியானதும் தாய், நண்பன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலி உயிரிழந்த சோகம்.. இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி கஞ்சமநாதன் பேட்டையில் வசித்து வருபவர் ஜோதி மகன் அசோக்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும், தூக்கணாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் நவம்பர் 29ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அசோக் குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை தம்பி பேட்டையில் உள்ள விவசாய கிணற்றில் அசோக்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், அந்த விளைநிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நிறுத்திவிட்டு, தனது கை, கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அசோக்குமாரின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் பல இலட்சம் பேருக்கு உரையாற்றி உலக சாதனை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு விரிவுரை நடத்திய விரிவுரையாளர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.இந்தியாவின் பிரபல விரிவுரையாளர் பிரேம் ராவட் என்பவரே இவ்வாறு கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.

இவர் ஒரே நேரத்தில் 3,75603 பேருக்கு விரிவுரை நடத்தியுள்ளார். இந்தியாவின் புத்தகாயாவின் ஆவுரா கிராமத்தின் அன்னபூர்ணா அரிசி ஆலைக்கு அருகாமையில் அமைந்துள்ள ராஜ் வித்தியா கேந்தர் என்னும் இடத்தில் இந்த விரிவுரை நடத்தப்பட்டுள்ளது.

“உலகில் தன்னை தெரிந்து கொண்டு எவ்வாறு வாழ்வது” என்பது குறித்து இவர் விரிவுரை நடத்தியுள்ளார். மேலும் “அனைவரும் தங்களை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது எனவும், வெளியே நடப்பவற்றை விடவும் எமக்கு உள்ளே நடப்பவை மிகவும் முக்கியமானது” என பிரேம் ராவட் தனது விரிவுரையில் தெரிவித்துள்ளார்.

அவரது விரிவுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே,”உங்கள் வாழ்க்கையில் முக்கியமானது நீங்கள் தான். உங்கள் வாழ்க்கையில் நீங்களே மிக முக்கியமான விடயம். வெளியே என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்.

அதற்கு நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் ஏற்றிய விளக்கால் மட்டுமே மற்றொரு விளக்கை ஏற்ற முடியும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கைத் தேடுங்கள். இந்த மூச்சு வருவதும் போவதும் அவருடைய வரம். அந்த தெய்வீகம் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கின்றது.

ஒவ்வொரு மூச்சையும் நீங்கள் பாராட்டத் தொடங்கும் போது, அந்த தெய்வீகத்தை அனுபவிக்கும் போது, உங்கள் வாழ்வில் அமைதியை உணர முடியும்.அறியாமை குழப்பத்தை உருவாக்குகின்றது, அதேசமயம் அறிவு மனநிறைவையும் திருப்தியையும் உருவாக்குகின்றது.

சுயத்தைப் புரிந்துகொள்வதற்குப் பின்னால் உள்ள மற்றொரு முக்கிய நோக்கம் என்னவென்றால், வாழ்க்கையில் நாம் நம்மீது மட்டுமே, கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம், அதுவே நம் மகிழ்ச்சியையும் அமைதியையும் தீர்மானிக்கின்றது.எனவே, சுயத்தை அறிவது எமது வாழ்வின் எம்மை ஓட்டுநர் இருக்கையில் அமர வைக்கின்றது. நாம் கடவுளை நம்பினாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு யோசனை, கருத்து மற்றும் நம்பிக்கைகளுக்கு அப்பால், நமக்கு இந்த வாழ்க்கை இருக்கிறது.

நாம் இந்த பிரபஞ்சத்தில் கவனிக்கக் கூடிய விடயங்களை மாத்திரமே கவனிக்க முடியும், இந்த படைப்பு தெளிவாகின்றது. இயற்கையில் உள்ள அதே சக்தி தான் அனைத்தையும் உருவாக்கி நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.அதன் எல்லையற்ற தன்மையை நம்மால் அறிய முடியாது, ஆனால் படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சுயத்தை நாம் புரிந்து கொண்டால் அது அந்த எல்லையற்றதைப் புரிந்துகொள்வதற்குச் சமம்.

அதற்கு அவர் ஒரு உதாரணமாக, “நாம் கடலை சுவைக்க விரும்பினால், அதன் முழு நீரையும் நம்மால் குடிக்க முடியாது, ஆனால் ஒரு துளியை சுவைப்பது கடலை முழுவதுமாக சுவைப்பதைப் போன்றது.எல்லாவற்றையும் உருவாக்கி நிலைநிறுத்தும் அந்த எல்லையற்ற சக்தியின் அந்தத் துளியே நாம், எனவே அதை அறிந்து புரிந்துகொள்வதே மேன்மையான அறிவு” என தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு பூனையால் தந்தையும் மகனும் உயிரிழந்த சோகம்.. எச்சரிக்கை செய்தி!!

உத்தரபிரதேசத்தில்..

சிலருக்கு தூங்கும் போதும், படுக்கையில் அருகிலேயே தங்களது செல்ல வளர்ப்பு பிராணிகள் படுக்க வேண்டும். அது நாயோ, பூனையோ.. ஒரே படுக்கை என்பதில் துவங்கி, உரசியபடியே தான் எப்போதும் இருப்பார்கள்.

காலை அலுவலகத்தில் கிளம்பி செல்ல கூட இந்த செல்லப் பிராணிகள், தங்களுக்கு பிரிமானவர்களை அனுமதிப்பதில்லை. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியால் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தந்தை, மகன் என இருவரும் செல்லமாக பூனையை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது செல்ல பூனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.

அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருந்துள்ளது. இதன் மூலமாக பூனைக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தந்தையும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசம் கான்பூர் தேஹாட்டின் அக்பர்பூர் நகரை சேர்ந்தவர் தேஜாஸ் இவரது மகன் அங்கத் இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூனையுடன் விளையாடுவதும் அதற்கு உணவளிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தெருநாய் ஒன்று பூனையை கடித்ததால் அடுத்த சில நாட்களில் வெறிநாய்க்கடியின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

இதனை குடும்பத்தினர் யாரு கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பூனையுடன் அங்கத் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பூனை கீறியுள்ளது. இந்த நிலையில் அந்த அங்கத்தின் உடல் நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியுள்ளது.

பூனையின் அறிகுறிகள் அந்த அங்கத்திடம் தோன்றத் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார். அவருக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயால் தந்தை மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்.!!

தமிழகத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர்.

இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று இளையராஜா நினைத்தார்.

இதனால், பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டி அவரது உருவச்சிலையை நிறுவினார். அதுமட்டுமல்லாமல், தினமும் மனைவியின் சிலையை வணங்கி வருகிறார். மேலும், சிவன் கோயிலையும் உருவாக்கி இஷ்ட தெய்வங்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இது குறித்து கணவர் இளையராஜா கூறுகையில், “பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் செய்து வந்த கலைச்செல்வி கடவுளிடம் தஞ்சம் அடைந்து விட்டார். அதனால், மனைவியின் நினைவாக கோயில் கட்டி வருவதாகவும், கார்த்திகை, பௌர்ணமி போன்ற முக்கியமான நாள்களில் அன்னதானம் வழங்குவதாகவும்” கூறியுள்ளார்.

நிறைவேறிய பாபா வங்காவின் கணிப்பு : 2024 இல் வரவுள்ள பேரழிவு!!

பாபா வங்காவின்..

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.

இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

1996ல் பாபா வாங்கா மரணமடைந்திருந்தாலும், அவர் 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. அந்த வகையில், பாபா வங்காவின் புயல் கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளன.

2023 இல் சூரிய புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள நிலையில் அந்த தகவல் தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சூரியப் புயலானது டிசம்பர் 1 ஆம் திகதி நண்பகலில் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.

சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் பாபா வங்கா கணித்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆனால் 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணிப்பு மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார்.பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும்.ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம்.

ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம்.இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். 2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.