20 வயது காதலனின் செயலால் பதின்ம வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!

பதுளையில்..

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,மாணவியின் தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாய் வெளிநாடு சென்ற நிலையில் மாணவி, தனது 70 வயதுடைய பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் 20 வயதுடைய காதலனுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது காதலனால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட குறித்த மாணவி வீட்டிற்கு வந்து தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பதுளை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்!!

தென்கொரியாவில்..

தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 3ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி. கே. ஷெனித் துலாஜ் சதுரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சதுரங்காவை கத்தியால் குத்திய நபர் உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை அடுத்த அறையில் இருந்த மற்றுமொரு இலங்கையரால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிறப்பிலேயே கால்களை இழந்த மாணவி : சாதாரணதர பரீட்சையில் சாதனை!!

காலியில்..

காலி உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய கனிஷ்ட கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவானி வசனா என்ற மாணவி பிறக்கும்போதே இரண்டு கால்களையும் இழந்த நிலையில் வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 7A B C சிறந்த பெறுபேறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது பெறுபேறு தொடர்பில் ருவானி வாசனா கூறியதாவது, எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் கடுமையாக உழைத்தேன். உங்கள் கவலைகளை மறந்து வேலை செய்யுங்கள். அப்போதுதான் அனைவரும் வெற்றி பெற முடியும்.பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் எனக்கு நிறைய உதவினர்.

நண்பர்கள் என் சகோதர சகோதரிகளைப் போல எனக்கு உதவினார்கள். எங்கள் பாடசாலை இந்த ஆண்டு தேர்வில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது என்றார்.

தெற்காசியாவின் அதிசயம் : கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்!!

கொழும்பில்..

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.

இந்த உணவகம் நாளை மறுதினம் மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த உணவகம் பகல் மற்றும் இரவு உணவிற்காக திறந்திருக்கும், அதற்கமைய, சுழலும் உணவகம் மதிய உணவிற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இரவு உணவிற்காக மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 1025.9 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!!

எரிபொருள்..

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருளள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே போட்டித்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் இதனால் சிறந்த பலன் கிடைக்கும்.

காரணம் எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது.பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும், ஐ.ஓ.சி.யும் மாத்திரம் எரிபொருட்களை இறக்குமதி செய்த போது, ஒரு கட்டத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டொலர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதனால் முழு நாட்டிலும் எரிபொருள் அற்ற நிலைமை கூட ஏற்பட்டது.

இவ்வாறான நிலைமை இனி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே 3 நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது .எவ்வாறிருப்பினும் எரிபொருட்களின் விலைகளை இவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது.

உலக சந்தை நிலவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால் சென்று எரிபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை!!

நீர்கொழும்பில்..

நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியனகே முல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென காணமல் போன ஆசிரியர்.. ரத்தக்க்கறை படிந்த காரால் அதிர்ச்சி!!

பெரம்பலூரில்..

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆசிரியை தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த வெங்கடேசன் தீபாவிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால் தீபா பணத்தை ஆசிரியர் வெங்கடேசனிடமே திருப்பி கொடுத்துவிட்டு கோபமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதை வகுப்பறையிலிருந்த மாணவ – மாணவிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அன்று மாலை பள்ளி விட்டு தனது காரில் வீடு திரும்பிய ஆசிரியை தீபா மாயமாகியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மனைவியைக் காணவில்லை என்பதால் பாலமுருகன் தனது உறவினர்கள் மற்றும் தீபாவின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

தீபா மாயமான அதே நாளில் அவருடன் பணிபுரிந்து வந்த வெங்கடேசனும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாலமுருகன் தனது மனைவி தீபாவை காணவில்லை என வி-களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதே போல குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி தனது கணவரைக் காணவில்லை எனப் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே தீபாவின் கணவர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இயங்கும் CCTV கேமிரா பதிவுகளைச் சோதனை செய்துள்ளனர்.

அப்போது திருச்சி சமயபுரம் டோல், மற்றும் மதுரை, தேனி, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளில் தீபாவின் காரில் வெங்கடேசன் மட்டும் தனியாகப் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன கார் கோவை, உக்கடம் பகுதியில் 3 நாட்களாகக் கிடப்பதாகத் நிற்பதாக தீபாவின் கணவர் பாலமுருகனுக்குத் தகவல் வந்துள்ளது. பின்னர் நேரில் சென்று பார்த்தபோது காரில் ரத்தக் கறைகள் படிந்து இருந்ததை பார்த்தனர். ஆனால் தீபாவோ அல்லது வெங்கடேசனோ காரில் இல்லை.

இதனைப் பார்த்த போலீசார் ஒரு வேளை தீபா கொல்லப்பட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் சம்பவ இடத்தை சோதனை செய்தனர். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவிக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து வெங்கடேசன் மற்றும் தீபா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபா கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேக்கப் போடுவதற்காகத் தங்க நகைகளை திருடிய இளம்பெண்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகவத்சிங் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா [37]. இவர்களுடைய வீட்டில் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், இவரது மனைவி பத்மபிரியா [27] ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர்.

சுரேஷ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மப்பிரியா மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பத்மபிரியா சசிகலா வீட்டிலிருந்த ஏழு சவரன் தங்க நகையைத் திருடிவிட்டுத் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இது குறித்து சசிகலா மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நடந்து ஆறு மாதம் கழித்து பத்மப்பிரியா மறைமலைநகர் அருகே உள்ள கீழக்கரணை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவது சசிகலாவிற்குத் தெரியவந்தது.

பின்னர் உடனடியாக சசிகலா மறைமலைநகர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பத்மப்பிரியாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சசிகலா வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்வதால் அந்த நிறுவனத்திற்கு ஏற்றார் போல் உடை மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் 7 சவரன் தங்க நகையைத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பத்மபிரியாவை கைது செய்து அவரிடம் இருந்த ஏழு சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். இவர் விவசாயம் செய்து வருகின்றனர். இவருடைய மனைவி ஹர்சிகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக ஹர்சிகா கர்ப்பமான நிலையில் அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மாதம் தோறும் சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து ஹர்சிகா பிரசவத்திற்காக கடந்த 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக உள்ளது. அதனால் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனால் அவர் அங்கிருந்து மேல் சிகச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 20ம் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி மாலை அறுவை சிகிச்சையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு கர்ப்பபையிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் கர்ப்பபையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.அதற்கு அவருடைய தாயாரிடம் கையெழுத்து வாங்கி கர்ப்பபையையும் அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி உறவினர்களை பார்க்க அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி மாலை ஹர்சிகா இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரிடம் உடனடியாக உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்தியுள்ளனார்.

பின்னர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியும் அனுப்பியுள்ளனர். மருத்துவர்களின் நெருக்கடியால் வீடு திரும்பிய உறவினர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனையடுத்து ஹர்சிகா கணவர் பிரசாத் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தவறாக சிகிச்சை அளித்ததால் மனைவி உயிரிழந்ததாகவும்,

இதற்கு அரசு மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணம் என்றும் புகார் அளித்தனர். இதுக்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா – 2023

வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா – 2023

வவுனியா பாரதி முன்பள்ளியின் பாரதி கலைவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் முன்பள்ளி அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது

மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் ,இரசாயனவியல் துறை ஆகியவற்றின் துணைத்தலைவரான குகமூர்த்தி வேலாயுதமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டதுடன்,

சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் பிரபாகர் , ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் தவேந்திரன் , வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாணிக்கம் அரிபூரணநாதன் , வவுனியா விபுலானந்த கல்லூரி அதிபர் மோகனதாஸ் ஞானமதி அவர்கள் கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் , பாடசாலை சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உக்ரைன் ஆயுதப்படையில் இணைந்து போரிட்ட இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு!!

ரஷ்யா – உக்ரைன் போரில்..

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைன் ஆயுதப்படையின் முதலாவது சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய இலங்கையர் கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கையின் 3 முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 04-12-2023 ஆம் திகதியன்று உக்ரைன் முன்னோக்கிப் பாதையில் ரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட தாக்குதலில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை காலாட்படை மற்றும் கமாண்டோ படையில் பயிற்சி பெற்ற ரனிஷ் ஹெவகே, சட்டப்பூர்வமாக வெளியேறி உக்ரைன் இராணுவத்தில் 2022 மார்ச்சில் உறுப்பினராக சேர்ந்தார்.

ரஷ்ய – உக்ரைன் போரின் போது முன்னணியில் இருந்த அவரது வீரம் காரணமாக, அந்நாட்டு அதிபர் அவருக்கு 5 சிறப்பு ஜனாதிபதி விருதுகளை வழங்கியுள்ளார். ரஷ்ய அரசாங்கப் படைகளால் “கருப்பு எதிரி” என்று அழைக்கப்படும் ரஷ்யர்களின் இலக்காக கேப்டன் ரனிஷ் ஹெவேஜ் பெயரிடப்பட்டுள்ளார்.

போர் முனையில் 9 முறை காயமடைந்து உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காகப் போராடிய ரனிஷ் ஹெவகே, அந்நாட்டு ராணுவத்தில் “கேப்டன் பல் மருத்துவர்” என்ற பெயரில் அழைக்கப்படுவதாக கொழும்பில் உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!!

இந்தியாவில்..

இந்தியா – மத்தியப் பிரதேசத்தில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்துள்ளார்.இந்த சம்பவம் ராஜ்கர் பகுதியில் நேற்றைய தினம் (05-12-2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,ராஜ்கரில் உள்ள பிப்லியா ரசோதா கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலேயே குறித்த சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், குறித்த சிறுமியை மீட்கும் நடவடிக்கைகள் 9 மணித்தியாலங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்குள்ளாவதும் இந்தியாவில் தொடர் நிகழ்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம் : பார்வையிட திரண்ட ஏராளமான மக்கள்!!

யாழில்..

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது.குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

 


மேலும், மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கைப் பெண்!!

தாய்லாந்தில்..

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 21 ஆவது ஆசிய திருமணமான அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு எலிகன்ஸ் மேரிட் மிஸ் கிரவுன் ஒவ்(f) ஏசியா பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி அம்புள்தெனிய மகுடத்துடன் நேற்று (05.12.2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சஞ்சீவனி அம்புள்தெனிய இந்த ஆண்டு 2023 இல் திருமணமான மிஸ் ஸ்ரீலங்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்நிலையிலேயே அவர் ஆசிய திருமணமான அழகி போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.

திருமதி சஞ்சீவனி அம்புள்தெனிய தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க அவரது தந்தை ஜயதிலக அம்புள்தெனிய மற்றும் அவரது தாயார் திருமதி மெனிகே அம்புள்தெனிய ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த யாழ். மாணவன்!!

மலேசியாவில்..

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கு பற்றி இருந்தோடு, யாழ்ப்பாணத்தில் இருந்து 24 பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், சுமார் 84 நாடுகளில் இருந்து, 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்த கொண்ட இந்த போட்டியானது, A,B,C,D,E மற்றும் F பிரிவின் கீழ் நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட 24 பேரும் தத்தம் பிரிவில் போட்டியிட்டதில், விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.

மேலும், சுதர்சன் அருணன் (வயது 6) வைஷாலி ரஜீவன் (வயது 8 ) அஷ்வினி அனோஜன் (வயது 8) ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர். ஏனைய 20 மாணவர்களும் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்!!

கொழும்பில்..

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாவார். அவர் இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் என தெரியவந்துள்ளது. இவரது தாயார் சந்தியா பதுளை மாநகர சபையில் பணிபுரிகிறார். இவரது தந்தை காமினி குணசேகர. அவரது மற்றுமொரு சகோதரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். பல்கலைக் கழகக் கல்வியை முடித்து இரண்டு மாதங்களேயான நிலையில் உயிரிழந்துள்ளார்.படிக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்திற்கமைய, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வின் ஆரம்ப பகுதி முடிந்துவிட்டாலும், இன்னொரு கட்ட நேர்முக தேர்வ இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இரண்டு மூன்று நாட்களும் தன் பல்கலைகழக நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, இரவு 10.30 மணியளவில் அவரது நண்பர்கள் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் கடந்த 2ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார். எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடாத நிலையில் உடற்பாகங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.