தங்க வளையலை திருடி அடகுவைத்து செல்ல நாய்க்கு பிறந்தாள் கொண்டாடிய நபர்!!

மொரட்டுமுல்லவில்..

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய குறித்த சந்தேக நபர், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நபர் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்தியதில் சந்தேகம் கொண்டு இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து , அவரது வீட்டில் இருந்த அடகுக் கடை பற்றுச்சீட்டை கண்டுபிடித்து, நகையைத் திருடியவரின் தந்தையைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்!!

மின்சார வாகனங்கள்..

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கையிலிருந்து சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்தில் பூமியுடன் மோதவுள்ள விண்கல் : நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

விண்கல்..

2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில் பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில், ஒரு விநாடிக்கு 24.64 கிலோமீற்றர் வேகத்தில் இது பயணிப்பதாகவும், 271 நாட்களுக்கு ஒரு தடவை பூமியை சுற்றிவருகிறது எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இவ்விண்கல் பூமியில் மோதுவதற்கான நிகழ்தகவு 625 இற்கு 1 என உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்தகவு 560 : 1 என நாசா தெரிவித்துள்ளது.

பூமியில் விண்பொருட்கள் மோதக்கூடிய சாத்தியங்கள் குறித்து விளக்குவதற்கு டுரீனோ அளவுகோலை நாசா பயன்படுத்துகிறது. 1 முதல் 10 வரையான நிலைகள் இந்த அளவு கோலில் உள்ளன.

தற்போது மேற்படி 2023 DW விண்கல் மாத்திரமே இந்த அளவுகோலின்படி 1 எனும் நிலையில் உள்ளது. ஏனைய அனைத்துப் பொருட்களும் ‘பூச்சியம்’ எனும் நிலையிலேயே உள்ளன.

இந்த அளவுகோலின்படி, 1 என்பது இது பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகும். இது குறித்து பொதுமக்கள் அவதானம் அல்லது கரிசனை கொள்வதற்கு காரணமில்லை என்பதாகும் என நாசா கூறுகிறது.

அதேவேளை, 2023 DW விண்கல்லை தொடர்ந்து அவதானித்து பெறப்படும் தரவுகளின் மூலம், இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான நிகழ்தகவு மாற்றமடையலாம் எனவும் நாசா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய பொருட்கள் முதலில் கண்டுபிடிக்கப்படும் போது, அவற்றின் எதிர்கால சுற்றுப்பாதையை போதுமானளவு எதிர்வுகூறுவதற்கு பல வாரங்களுக்கான தரவுகள் தேவைப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

மலையென குறைந்துவந்த தங்கத்தின் விலையில் ஒரே நாளில் பதிவான சடுதியான அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும்.

நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்றைய தினம் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு செட்டியார்த்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது இன்றைய தினம் 143,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

390 என்ற மோசமான பெறுமதியை அடையவுள்ள இலங்கை ரூபாய்!!

டொலர்..

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது. சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது.

ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பலவீனமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.

டொலரின் உள்வருகையினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. எனினும் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்கும் போது நெருக்கடி நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷிற்கு கடனாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

நாடாளுமன்றில்..

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (10.03.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.

அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும்.

இந்த குறைப்பின் நன்மையினை நுகர்வோர் விரைவில் பெற்றுக் கொள்வார்கள். எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் 39,000 ரூபா குறைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில்..

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.

உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.307.36 பதிவாகியிருந்ததுடன் விற்பனை விலை ரூ.325.52 ஆக பதிவாகியுள்ளது.

வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற கெளசிகன் குடும்பத்தின் இறுதி யாத்திரை!!

இறுதி யாத்திரை..

வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 7 ஆம்திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன்,

அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி, பிள்ளைகள் படுக்கையில் தூங்கும் நிலையிலும் மீட்கப்பட்டிருந்தனர்.

மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்களின் இறுதி நிகழ்வு பலரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு : தொடரும் மர்ம மரணங்கள்!!

மணியர்குளம் பகுதியில்..

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09.03.2023) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்,

சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியா குட்சைட் வீதி பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கருங்கல் அகழ்விற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!!

கதிரவேலர் பூவரசங்குளம்..

வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளம் பகுதியில் கருங்கல் அகழ்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்று ஒன்றில் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தாம் ஆலயமாக வழிபடும் இடத்தில் குறித்த செயற்பாட்டிற்கு வழங்கிய அனுமதியை உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

குறித்த மலையில் நாம் இறைவழிபாட்டில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையில் உள்ள பிள்ளையார் சிலை நேற்றையதினம் சேதமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தபகுதியில் கருங்கல் அகழ்வதால் அருகில் உள்ள குளத்தின் நீர்மட்டமும் குறைவடையும் நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த விடயங்களை கவனமெடுத்து வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுகொள்கின்றோம் என்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மற்றும் பிரதேசசபையின் தவிசாளர் த.யோகராஜா ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த இடத்தில் ஆலயவழிபாடு இடம்பெறுவது தொடர்பான தகவல்களை கேட்டறிந்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்பொருட் திணைக்களம் மற்றும், சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி கைது!!

காசிப்பிள்ளை ஜெயவனிதா..

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (09.03) மாலை வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப் பகுதியில் கொட்டகை அமைத்து நடைபெற்று வருகின்றது. குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து குறித்த போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவிற்கு எதிராக பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த வவுனியா பொலிசார் அவரை கைது செய்து பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் மின்சார சபையின் அனுமதியுடனேயே தாம் மின்சாரத்தை பெற்றதாகவும், திருத்த வேலைகளும் மின்சார சபையாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் சட்டவிரேதமாக மின்சாரம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 

யூடியூப் பார்த்து குழந்தை பெற்று கொலை செய்த 15 வயது சிறுமி : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

மகாராஷ்டிராவில்..

சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட உறவால் தாயான 15 வயது சிறுமி யூடியூப் பார்த்து தான் பெற்றெடுத்த குழந்தையைக் கொன்றுவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அம்பசாரி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அவ்வப்போது நேரில் சந்தித்துக்கொண்டதில் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால், வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தால் கர்ப்பத்தை மறைத்து வந்த சிறுமி, அடிக்கடி தனியாக மருத்துவமனை சென்றுவந்தார்.

பின், வீட்டிலேயே சுயமாக பிரசவம் செய்துகொள்ள முடிவு செய்ததார். அதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்துவந்தார். மார்ச் 2ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டவுடன் வீட்டில் அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு யூடியூப் வீடியோவில் கூறியபடி ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறார்.

குழந்தையையும் மூடி மறைக்க நினைத்த சிறுமி பிறந்த குழுந்தையை உடனே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். பின் குழந்தையின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து வீட்டிலேயே ஒளித்து வைத்திருக்கிறார்.

சிறுமியின் தாய் தனது மகள் பலவீனமாக இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தபோது நடந்ததை எல்லாம் கூறி கதறி அழுதிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, மகளை தகவல் தெரிவித்துவிட்டு சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார்.

காவல்துறையினர் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் அறிக்கை கிடைத்தவுடன் கொலை வழக்கு பதிவ செய்யப்படும் என்றும் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

மற்ற நடிகர்களை வளரவிடாமல் தடுத்த வைகைப் புயல் : ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல நகைச்சுவை நடிகர்!!

வைகைப்புயல்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கிங்-ஆகவும் இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று புகழப்படும் வடிவேலு பலவிதத்தில் பலரால் புகழப்பட்டாலும் சிலரால் சாபத்தையும் கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார்.

அப்படி வடிவேலுவால் தன் வாய்ப்பை இழந்துள்ளேன் என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார் காமெடி நடிகர் சிசர் மனோகர். ராசாவின் மனசிலே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு.

அவர் நடித்ததில் கவுண்டமணிக்கு பிடிக்காமல் போனது. அப்போது வடிவேலுவுக்கு ஆதரவாக தைரியம் கொடுத்தேன். ஆனால் 23 ஆம் புலிகேசி படத்தில் இளவரசன் ரோலில் நடிக்க வேண்டிய என்னை சிறு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் வடிவேலு என்று கூறியுள்ளார்.

மேலும் வடிவேலுக்கு உறுதுணையாக இருந்த என்னை, அவர் வளர்ந்தப்பின் என்னை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்டலாம் என்று நினைத்த போது சீமான் தான் ஆறுதல்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் என் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் வடிவேலுவை உயிரோடு இருந்திருக்க விட்டிருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிசர் மனோகர்.

மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்டவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!!

கனடாவில்..

கனடாவில் லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட நபருக்கு உண்மையிலேயே கனவு நனவானது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் (Lemore Morrison), தனது இருபது வயதிலிருந்து லொட்டரி விளையாடி வருகிறார்.

லொட்டரியில் 1 மில்லியன் கனேடிய டொலர் வென்றதாக கனவு கண்ட பிறகு, அவர் ஒரு டிக்கெட்டையும் வாங்கலாம் என்று எண்ணினார். ஒரு நாள் இந்த டிக்கெட்டில் எனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்து, அவர் உடனடி டயமண்ட் கிளப்பைத் தேர்வு செய்தார்.

அந்த டிக்கெட்டில் மோரிசனுக்கு விளையாட்டின் சிறந்த பரிசு விழுந்தது. அவர் 250,000 கனேடிய டொலரை பம்பர் பரிசாக வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இது அவரது கனவில் கிடைத்த பரிசில் நான்கில் ஒரு பங்காக இருக்கலாம் ஆனால் மோரிசன் தான் திருப்தி அடைவதாக கூறுகிறார். “இந்த வெற்றிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் $1 மில்லியன் வென்றேன் என்று கனவு கண்டேன்.

ஆனால் $250,000 வெற்றிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று அவர் ரொறண்ரோவில் உள்ள OLG பரிசு மையத்தில் தனது காசோலையை வாங்கும்போது கூறினார்.

இப்போது அவர் கால் மில்லியன் டாலர் பணக்காரராக இருப்பதால், அவர் தனது மனைவியுடன் விடுமுறைக்கு செல்வதாகவும், மீதமுள்ள பணத்தை முதலீடுகளுக்காக வைப்பதாகவும் மோரிசன் கூறினார்.

இளம் பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றிய இளைஞன்.. பெண் எடுத்த அதிரடி முடிவு!!

இந்தியாவில்..

“லிவ்விங் டு கெதர்” வாழ்க்கையில் தன்னுடன் இருந்த காதலன் தனது பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டு மலேசியா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருபவர் ரேணுகோபால் மகள் மகேஸ்வரி (40). இவர், சிங்கப்பூரில் செம்பாவான் வணிக வளாகத்தின் மேற்பார்வையாளராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிறுவனத்திற்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பரம்பூரைச் சேர்ந்த வாசு மகன் பொன் மணிகண்டன் (30) பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து பொன் மணிகண்டன், மகேஸ்வரியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், தனது ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்பியதும் பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற்று, இந்தியாவிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதன்பின் இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக “லிவ்விங் டு கெதர்” வாழ்க்கை முறையில் கணவன்-மனைவி போல வாழந்து வந்துள்ளனர். இந்த ஐந்து வருடங்களில் பல முறை இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் பணத்தை மகேஸ்வரியிடம் பெற்ற பொன் மணிகண்டன் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 20 சவரன் தங்க நகை, ஒரு பழைய கார் வாங்க ரூபாய் 2 லட்சம் மற்றும் ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்று வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரோனா காலத்தில் பொன் மணிகண்டன் இந்தியா திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மகேஸ்வரியிடம் பேசுவதை பொன் மணிகண்டன் குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொன் மணிகண்டன் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி, அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அப்போது அவர்கள், இந்த விவரங்கள் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என்றும் பொன் மணிகண்டனுக்கு நேரம் சரி இல்லை, நல்லநேரம் வந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாக கூறி ஒரு வாரத்தில் மகேஸ்வரியை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் பொன் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியின் செல்போன் என்னை பிளாக் செய்து, முழுமையாக மகேஸ்வரியை தவிர்த்து வந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் பரம்பூருக்கு மகேஸ்வரி வந்துள்ளார்.

அப்போது, குடும்பத்தினர் பொன் மணிகண்டனை, மறைத்து வைத்து சரியான தகவல் தெரிவிக்காததால், ஏமாற்றம் அடைந்த மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன் மணிகண்டனிடம், காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது நடந்ததை ஒப்புக்கொண்ட பொன் மணிகண்டன், பெற்றோருடன் பேசி அழைத்துச் செல்வதாக கூறி சமாதானம் செய்து எழுதிக் கொடுத்துள்ளார்.அதன் பின்னர் காத்திருந்த மகேஸ்வரியை அழைத்து செல்லாமலும், மேலும் ராதிகா என்ற வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகேஸ்வரிக்கு காலக்கெடு முடிவடைந்ததையடுத்து மலேசியா திரும்பிவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி பரம்பூருக்கு வந்த மகேஸ்வரி, பொன் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினரிடம் பேசியபோது, அவரை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், மகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் குடும்பத்தார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்ற மகேஸ்வரி, தனக்கு நடந்தவற்றை கூறி, தன்னிடம் இருந்து மோசடி செய்து பணத்தை பெற்ற மணிகண்டன் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

சொகுசு வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கான செய்தி : விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இலங்கையில்..

சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால்,

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.