வவுனியா செய்திகள்

வவுனியாவில் வறியவர்களுக்கு உதவிகளை வழங்கும் வெளிச்சம் அறக்கட்டளை!!

  வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் கிராமத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கும் அன்றாடம் தங்களுடைய பணிகளை செய்து வாழ முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பொதி நேற்று முன்தினம் (13.06.2018) வெளிச்சம் அறக்கட்டளையின்...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா நேற்று(14.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 7 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10 மணிக்கு...

வவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை!!

நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் பெறப்பட்ட உழவு இயந்திரத்திற்கு கட்டுப்பணம் செலுத்த தவறிய காரணத்தினால் உரிமையாளரிடம் இருந்து நிதி நிறுவனத்தால் கொண்டு சென்ற உழவு இயந்திரத்தின் பாகங்களை அகற்றி வேறு பழைய...

வவுனியாவில் சுய முயற்சி சேமிப்பு எனும் தொனிப்பொருளில் சிறுவர் சந்தை!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் 'சிறுவர் சந்தை' என்ற நிகழ்வு இன்று (14.06) பாடசாலையின் அதிபர் ரட்ணசிங்கம் நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் சிவலிங்கம்...

வவுனியா இலுப்பையடி வடிகாணில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!

  வவுனியா - இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகாண்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும், அதிக வர்த்தக நிலையங்களை...

வவுனியாவில் பெண்கள் போராட்டம் : “வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வலுவிழந்து நிற்கின்றோம்”!!

நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள்...

வவுனியாவில் பேரூந்து சாரதி செய்த மோசமான செயல் : மடக்கிப்பிடித்த பொலிசார்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நேற்று (13.06.2018) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய விஜயபாலன்...

வவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு!!

வவுனியாவில் அறநெறி கொடி மாதமும் திருஞான சம்பந்தர் குருபூசை தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. தேசிய இந்து அறிநெறி கொடி மாதமும் அறிநெறி விழிப்புணர்வும் இந்து கலாசார திணைக்களத்தால் நாடு முழுவதும் மே 30 தொடக்கம்...

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் அமைச்சரினால் திறந்து வைப்பு!!

  வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நேற்று (12.06.2018) திறந்து வைத்திருந்தார். மாணவர் வள நிலையம் ஒரு கோடியே எழுபத்தியாரு லட்சம் செலவில் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இக்...

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் இப்தார் நிகழ்வு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் நேற்று (12.06.2018) மாலை 6 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின்...

வவுனியாவில் ‘வன்னி முரசம்’ பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது!!

'வன்னி முரசம்' பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு இன்று (13.06) வன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில் இடம்பெற்றது. பத்திரிகையின் முதற் பிரதியை வன்னி...

வவுனியா அந்தோனியார் ஆலய திருவிழாவில் ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு!!

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் ஐந்து பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை திருடிய பெண் ஒருவர் ஆலயத்திலிருந்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (13.06) இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு திருவிழாவிற்கு வந்திருந்த பெண்களிடம் அவர்கள்...

வவுனியாவில் படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து!!

வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகே இன்று (13.06.2018) மதியம் 2.15 மணியளவில் முச்சக்கரவண்டியின் மீது படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா நகரிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மணிக்கூட்டு கோபுரம் ஊடாக குடியிருப்பு பூங்கா...

வவுனியாவில் வீதியால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர் வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த வெள்ளை நாகம்!!

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் காட்சி கொடுத்தமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மண்ணின் புகழ்மிகு புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின்...