மகளின் ச டலத்தை

ஆந்திராவில் ஏற்கனவே திருமணமானவர் என தெரியாமலேயே இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தாரை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சித்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா (20). இவர் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹீம் (23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் இப்ராஹீமுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது பாத்திமாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாத்திமா, இப்ராஹீமிடம், ஏன் திருமணமானதை மறைத்து என்னை காதலித்து ஏமாற்றினாய் என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர்களிடையே கடும் த கராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் பாத்திமா ம னமுடைந்து காணப்பட்ட நிலையில் கல்லூரிக்கும் செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 13ம் திகதி இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் திடீரென தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

இதனைபார்த்து அ திர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பொலிசார் விசாரித்த நிலையில் இப்ராஹீம் த லைமறை வானார். இந்நிலையில் பாத்திமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இப்ராஹீமை விரைவாக கைது செய்யக்கோரி பாத்திமா சடலத்துடன் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த பொலிசார் இம்ராஹீமை கைது செய்வதாக கூறி சமாதானத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து அவர்கள் பாத்திமா ச டலத்தை எடுத்து கொண்டு கலைந்து சென்றார்கள்.































































