60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஆரம்பப் பாடசாலை : 87 வயதான பாட்டியும் கற்கிறார்!!

 
இந்­திய கிரா­ம­மொன்றில் 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்­கான ஆரம்பப் பாட­சா­லை­யொன்று இயங்­கு­கி­றது. 90 வய­தா­னோரும் இப்­பா­ட­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

ஒரே நிறத்­தி­லான சேலையை சீருடையாக அணிந்­து­கொண்டு, முதுகில் புத்­தகப் பையை சுமந்­த­வாறு இப்­ பெண்கள் பாட­சா­லைக்குச் செல்­கின்­றனர். வாசிக்கவும் எழு­தவும் கணக்­குக்­கூட்­டவும் பழ­கு­வ­துடன், சிறார்கள் போன்று நேர்­சரி பாடல்­க­ளையும் இவர்கள் உற்­சா­க­மாகப் பாடு­கின்­றனர்.

மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தின் “தானே” மாவட்­டத்­தி­லுள்ள பன்­கனே எனும் கிரா­மத்தில் வயோதிப் பெண்­க­ளுக்­கான இந்த ஆரம்பப் பாட­சாலை உள்­ளது. “அஜி பாய்ன்ச்சி ஷாலா” என இப் பா­ட­சா­லைக்குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

யோகேந்­திர பான்கர் என்­பவர் கடந்த வருடம் சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு இப்­பா­ட­சா­லையை ஆரம்­பித்தார். 45 வய­தான யோகேந்­திர பான்கர், பங்­கனே ஸீலா பிரசாத் ஆரம்பப் பாட­சா­லையின் ஆசி­ரியர் ஆவார். தனது வீட்­டி­லி­ருந்து தினமும் 75 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்து, அஜி பாய்ன்ச்சி ஷாலா பாட­சா­லைக்குச் செல்­கிறார் இவர்.

“மோட்­ரியம் சரிட்­டபிள் ட்ரஸ்ட்” எனும் தொண்டு நிறு­வ­ன அமைப்­புடன் இணைந்து இப் ­பா­ட­சா­லையை யோகேந்­திர பான்கர் ஆரம்­பித்தார். இந் ­நி­று­வனம் இப்­ பா­ட­சாலை மாண­வி­க­ளான பெண்­க­ளுக்கு மென்­சி­வப்பு வர்ண சேலை சீருடை, பாட­சாலைப் பை, ஸ்லேற், சோக், மற்றும் கரும்­ப­லகை ஆகி­ய­வற்றை வழங்­கி­யுள்­ளது.

30 பெண்கள் இப் ­பா­ட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். சிறார்­க­ளுக்­கான பாலர் பாட­சா­லை­களில் கடை­ப்பி­டிக்­கப்­படும் ஏறத்­தாழ அனைத்து நடை­மு­றை­களும் இப்­ பாட­சா­லை­யிலும் பின்­பற்­றப்­ப­டுகின்றனவாம்.

மராத்­திய மொழி அரிச்­சு­வடி, ஆரம்பக் கணிதம், பாலர் பாடல்கள் முத­லா­னவை இப்­ பா­ட­சா­லையில் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. 60 வய­தான மாணவி காந்தா என்­பவர் கருத்துத் தெரி­விக்­கையில், இப்­ பா­ட­சா­லையில் சேர்­வ­தற்கு ஆரம்­பத்தில் தான் மிகவும் தயங்­கி­ய­தா­கவும் ஆனால், தனது வய­தை­யொத்த மற்­றொ­ருவர் இப்­ பா­ட­சா­லைக்கு செல்­வதைக் கண்டு தானும் இணைந்­து­கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இப்­போது என்னால் எனது தாய் மொழியில் எழு­தவும் வாசிக்­கவும் முடி­கி­றது. கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை நான் உணர்ந்­து­கொண்­டுள்ளேன். எனது தன்­னம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. வங்கி ஆவ­ணங்­களில் நான் முன்னர் கைவிரல் அடை­யா­ளத்­தையே இடுவேன். இப்­போது என்னால் கையெ­ழுத்­திட முடியும்.

மற்­ற­வர்­களின் உதவி எனக்குத் தேவை­யில்லை” எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். இப் ­பா­ட­சா­லை­யி­லேயே மிகவும் வய­தான மாணவியாக 87 வய­தான ரமாபாய். தனக்கு முறை­யாக காது கேட்­காத போதிலும், ஆரம்பக் கல்வி கற்­ப­தற்கு ஆர்வம் காட்­டு­கிறார்.

சிறு வயதில் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை நான் உணர்ந்­தி­ருக்­க­வில்லை. இப்­போது என்னால் வாசிக்­கவும் எழு­தவும் முடி­கி­றது” என்­கிறார் ரமாபாய் பாட்டி.

இந்த முதியோர் கல்வித் திட்­டத்தின் மூலம், மேற்­படி கிராம மக்­களின் எழுத்­த­றிவு ஏறத்­தாழ 100 சத­வீ­தத்தை நெருங்­கி­யுள்­ள­தாக யோகேந்­திரா பான்கர் தெரி­வித்­துள்ளார்.

அது மாத்­தி­மல்­லாமல், இக்­ கல்­வித்­திட்­டத்தின் காரணமாக, இக்கிராமத்தின் சுகாதார துறையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. திறந்த வெளியில் மலம்கழிக்கும் வழக்கம் இப்போது அங்கு இல்லை.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிவறை உள்ளது” எனவும் அவர் கூறுகிறார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை பன்கனே கிராம பாட்டிமார்கள் உணர்த்தியுள்ளனர்.

பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவே​ளை!!

பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவேளை வருமென பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ரிகோட் என்ற இதழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் போன்று இனி பேஸ்புக் லைவ் வீடியோக்களின் நடுவிலும் விளம்பரங்கள் காட்டப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையானது முதலில் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடையே பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம், பயனாளர் மற்றும் பேஸ்புக் நிர்வாகத்திற்கு இடையே, 55:45 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவேற்றம் செய்யும் பயனாளர்களுக்கு வருமானம் ஈட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்தின் கொள்கையின் படி வீடியோ ஆரம்பித்து 20 நொடிகளுக்கு பிறகுதான் விளம்பரங்கள் தோன்றும். இரண்டு விளம்பரங்களுக்கு இடையே குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் இருக்கும்.

பயனாளர் குறைந்தபட்சம் நான்கு நிமிட லைவ் வீடியோவைப் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விளம்பர இடைவேளைகளைப் பெற முடியும்.

அதே நேரத்தில், அவரது வீடியோவுக்கு ஒரே நேரத்தில் 300 பார்வையாளர்களாவது இருக்க வேண்டும்.

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்!!

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேஸ்புக்கின் கிளை நிறுவனமாக வட்ஸ் எப் நிறுவனம் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை வட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி புகைப்படங்கள் , ஜுப் மற்றும் வீடியோக்களை வைக்கும் வசதியை வட்ஸ் எப் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்தில் தானாக மறையுமாறு செய்யலாம் . ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் மாற்றிக்கொள்ளவும் வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் கரையொதுங்கிய விசித்திர கடல்வாழ் உயிரினம்!!

 
மயிர்கள் நிறைந்த மாபெரும் விசித்திர கடல்வாழ் உயிரினம் ஒன்று தாய்லாந்துக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதைக் காண பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் தாய்லாந்தின் தினாகத் தீவின் கக்டய்னோ கடற்கரைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று, தாய்லாந்துக்கு அருகாமையில் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தையடுத்து வெவ்வேறு வகையான உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தாய்லாந்துக் கடற்கரைகளில் கரையொதுங்கிவருகின்றன.

சுமார் 20 அடி நீளமும், 2,000 கிலோ எடையும் கொண்ட வெள்ளை நிறத்தினாலான இந்த விசித்திர மிருகமும் இதே காரணத்தினாலேயே கரையொதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, 1924ம் ஆண்டும் இதேபோன்றதொரு உயிரினம் தென்னாபிரிக்கக் கடற்கரையொன்றில் கரையொதுங்கியதாகவும், அது திமிங்கிலம் மற்றும் துருவக் கரடியின் இணை உயிரியாகக் கருதப்பட்டதென்றும், அதற்கு ‘ட்ரங்க்கோ’ என்று பெயரிடப்பட்டதாகவும், இதுவும் ட்ரங்கோவின் வழி வந்த உயிரினமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது ஒரு திமிங்கிலமாக இருக்கலாம் என்றும் கப்பலில் மோதி உயிரிழந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியிருப்பதனால் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம் என்றும் கடல்வாழ் உயிரின விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வவுனியாவில் நெல் மூடைகளை திருடிய உயரதிகாரியை தேடி பொலிஸார் வலைவீச்சு : இருவர் சிக்கினர்!!

 
வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் சிலவற்றை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் தொடர்பில் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் உள்ளிட்ட இருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரச அதிகாரி தப்பியோடியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் வயல் செய்த விவசாயி ஒருவர் கடும் வரட்சிகாரணமாக தனது நெற் பயிர்கள் அழிவடைந்த நிலையில் கிணற்றின் மூலம் நீர் இறைத்துஅவற்றை பாதுகாத்து தற்போது அறுவடை செய்து வருகின்றார்.

அறுவடை செய்த நெல் மூடைகளை வயல் அருகில் A9 வீதியில் அமைந்திருந்த கோவில் ஒன்றில் அடுக்கிவிட்டுவயலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த வவுனியா மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவரும் வெளிநாட்டில் இருந்து வந்த அவரது சகோதரன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரும் இணைந்து அங்கிருந்த நெல் மூடைகள் சிலவற்றைதிருடி முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த விவசாயி உடனடியாக வேறு நபர்களுக்கும் தகவல் வழங்கியதையடுத்துகுறித்த முச்சக்கர வண்டியை குறித்த விவசாயியும், வேறு நபர்களும் இணைந்துவிரட்டி பிடித்துள்ளனர்.

இதன்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தநபரும், முச்சக்கர வண்டி சாரதியும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இது தொடர்பில்வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபொலிசார் குறித்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். தப்பியோடிய அதிகாரியை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

 

வவுனியாவில் இரவிலும் எவ்வித ஒளியுமின்றி தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

 
வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இரவு வேளையில் எவ்வித ஒளியுமின்றி இருளிலும் தமது காணாமற்போன உறவுகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் : பாவனா!!

சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை ஓட்டுனர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பாவனா கடத்தலில் பிடிபட்டவர்களின் தொலைபேசி எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு பிரபல நடிகரும், அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி அவர்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் இந்த கடத்தலுக்காக 50 லட்சம் பேரம் நடந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

நடிகர் திலீப் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால் அவர் பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேவை இல்லாமல் தனது பெயரை இதில் இழுத்து இருப்பதாவும் மறுத்து இருக்கின்றார்.

பாவனாவுக்கும், திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. திலீப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது குடும்ப வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த சங்கடங்களை பாவனாவிடம் மஞ்சு வாரியர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகின்றது. பாவனா இந்த பிரச்சினையை முக்கிய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவித்து மஞ்சுவாரியருக்கு நியாயம் கிடைக்க போராடினார்.

அதன் பின்னர் சிலரது தூண்டுதலால் மலையாள திரை உலகில் இருந்து பாவனா ஓரம் கட்டப்பட்டார். 2014ம் ஆண்டில் இருந்து ஒரு வருடம் அவருக்கு மலையாள பட வாய்ப்புகளே இல்லை. இதனால் கன்னட பட உலகுக்கு சென்று அங்கு படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். அப்போதுதான் பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தற்போது பாவனாவுக்கு மலையாள படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்துள்ளன. பிருதிவிராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை பாவனா சந்திக்க நேர்ந்துள்ளது. பாவனாவை ஆபாசமாக வீடியோ படம் எடுத்தவர்கள் அதை வெளியிடாமல் இருக்க 30 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் சிறு சிறு வேலைகள் செய்த நபர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பாவனா அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் பிருதிவிராஜ் கூறும்போது, “பாவனாவும் நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளோம். தற்போது பாவனா, தன்னிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது வரை கமரா முன்னால் வரமாட்டேன் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்தார்.

தலைக்கவசம் அணிவது தொடர்பாக 10 விதிகள் வெளியானது : மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களே அவதானம்!!

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலே 10 விதிகளுடன் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு,

நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை : பொலிஸ் கண்முன்னே நடந்த கொடூரம்!!

தூத்துக்குடியின் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இவர் மீது பல்வேறு கொலை வழக்கு, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகள் உள்ளன, இந்நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த சிங்காரவேலன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இன்று கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தூத்துக்குடி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனைச்சாவடியை கடக்க முயன்ற போது, 15 பேர் கொண்ட கும்பலொன்று பொலிஸ் வாகனத்தை நோக்கி ஓடிவந்தது.

அரிவாள், உருட்டுகட்டையுடன் வந்த கும்பல் பொலிஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன் பொலிஸ் மீது மிளகாய் பொடிகளை தூவியுள்ளனர்.

இந்த நேரத்தில் ரவுடியை வெட்டிக் கொலை செய்துள்ளனர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிங்காரவேலனை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிங்காரவேலன் பரிதாபமாய் உயிரிழந்தார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்து புதைக்கப்பட்ட இளம் பெண் : ஒரு மாதத்திற்கு பின் சடலம் மீட்பு!!

கண்டி மாவட்டத்தில் ஹெவாஹெட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பாழடைந்த வீடு ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹெவாஹெட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தாயான 22 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கொலை செய்து விட்டு ஒரு பாழடைந்த வீட்டில் புதைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண்ணுக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாகவும், குறித்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்ணின் சடலத்தை பார்க்கும்போது இந்த கொலை ஜனவரி மாதமளவில் நடந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொலை குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

48 பந்துகளில் கடைசி 7 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!!

முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணி 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்த்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அந்த அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது.

40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. அதிலும் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியா

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் மீண்டும் காணாமற்போனோரின் உறவினர்களின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!!

 
வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (24.02.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக வீதி சென்று அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம்!!

 
வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்பட்டமையினையடுத்து தற்போது வடக்கு மாகாணத்திலிலும் செயற்படுத்து நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட போக்குவரத்து சேவை!!

 
மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இ.போ.ச பேரூந்துக்கள் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் தனியார் பேரூந்துக்கள் 30 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் வழங்கி வருகின்றன.

இச் சேவைகள் நாளை (25.02.2017) காலை வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

 
வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப்பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் சுமார் 47 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வன இலாகாவினரால் தொந்தரவுக்குள்ளாகுவதாகவும்
இதேவேளை, தமக்கு காணி உறுதிப் பத்திரமோ, வீட்டுத்திட்டமோ இது வரை வழங்கப்படவில்லை எனவும் சுட்டடிக்காட்டியே இத் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 5வயது மதிக்கத்தக்க யானை சுட்டுக்கொலை!!

 
வவுனியா அனுராதபுரம் எல்லைக்கு அருகில் நேற்று (23.02.2017) மாலை 5 வயதுடைய யானை ஒன்று சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா குடாகச்சக்கொடி துட்டுவ பொலிஸ் அரணுக்கு 100 மீற்றர் அப்பால் 5 வயதுடைய யானை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (23.02.2017) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் யானையை பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.