பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ்.
ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தனுஷ் நடிக்கவில்லை. காதலும் நகைச்சுவையும் கொண்ட இந்தக் கதையை்க கேட்ட சிம்பு தானே அதில் நாயகனாக நடிக்க முன்வந்தார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இந்த படத்தில் இசையமைப்பாளராக குறளரசன் அறிமுகமாகிறார். குறளரசன் டியூன்கள் பிடித்துப் போய் இப்படத்துக்கு இசையமைக்க வைத்தாராம் பாண்டிராஜ்.
அடுத்த வாரம் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர்
இலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது இணைகின்றார் மஹேல ஜெயவர்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று விளையாடுகின்றன .
இந்தப் போட்டி ஜெயவர்த்தனவுக்கு 400வது ஒரு நாள் போட்டியாகும். இதன் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் சனத் ஜெயசூர்யாவுடன் இணைகிறார் ஜெயவர்த்தன.
அதிக போட்டிகளில் விளையாடிவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின்தான். அவர் இதுவரை 463 போட்டிகளில் விளையாடியுள்ளார் . சனத் ஜெயசூர்ய 2வது இடத்தில் 445 போட்டிகளுடன் இருக்கிறார்.
ஆனால் இந்த இரண்டு வீரர்களும் ஓய்வு பெற்று விட்டனர். டெண்டுல்கர் கடந்த ஆண்டும், ஜெயசூர்ய 2011ம் ஆண்டும் ஓய்வை அறிவித்தனர்.
1998ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஜெயவர்தன. அவர் 138 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் 11,237 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 10,806 ரன்களும் மகேள ஜெயவர்தன குவித்துள்ளார்.
தற்போது அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் மஹேல ஜெயவர்தனவிற்கு கிடைத்துள்ளது. சாதனை படைப்பாரா மஹேல, பொறுத்திருந்து பார்ப்போம்.
எகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் ஆராய்ந்து வரும்.
இஸ்லாமியவாதத் தலைவரான மோர்சி நீக்கப்பட்டது ஒரு இராணுவ சதிப் புரட்சி என்ற முடிவுக்கு அமெரிக்கா வருமானால், எகிப்துக்கான அமெரிக்காவின் பாரிய இராணுவ உதவிகள் சட்டத்தின் அடிப்படையில் வெட்டுக்கு உள்ளாகும்.
மோர்சியை மீண்டும் அதிபராக நியமிக்க வேண்டும் என்று அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி போராடி வருகின்றது.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் கெய்ரோவில் உள்ள இராணுவ குடியிருப்பு பகுதியில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திங்களன்று இராணுவத்துடன் நடந்த மோதல்களில் 50க்கும் அதிகமான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலி குணமடையும்
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.
நீரிழிவு நோய்க்கு
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்
சீதபேதிக்கு அருமருந்து
மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.
மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.
மூலநோய் குணமடையும்
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்
கொசுத்தொல்லை நீங்க
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.
மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை வைத்தியர்கள் எடுக்க முயன்றபோது, அந்த பெண் கண் திறந்து, வைத்தியர்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
இதனால் தவறாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான கொல்லின் பேர்ன்ஸ். இவர் கடந்த 2009 ஒக்டோபரில் அதிகளவில் மருந்துகளை சாப்பிட்டதால் நினைவிழந்தார்.
பின்னர் நியூயோர்க்கில் உள்ள சென்ட் ஜோசப் மருத்துவமனையில் பேர்ன்ஸ் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு வைத்தியர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவர் சாப்பிட்ட மருந்தால் அவரது வயிறு, குடல் பகுதிகள் பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அவரது வயிற்றில் மருந்து தங்கியுள்ளதா என சோதனையிடவில்லை. மூளை செயல்படுகிறதா என்று ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், நீண்ட நாளாகியும் அவர் நினைவு திரும்பாததால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் முடிவெடுத்து விட்டனர்.
பேர்ன்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டார் என்று அவரது உறவினர்களிடம் வைத்தியர்கள் கூறவே அவர்களும் பேர்ன்ஸ் உயிரை காப்பாற்ற வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை அகற்ற சம்மதித்தனர்.
மேலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பேர்ன்ஸ் உறுப்புகளை எடுக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர். உடலை வெட்டி உறுப்புகளை எடுப்பதற்கு முன் சில சோதனைகளை மருத்துவ தாதி செய்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது.
சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றபோது அவரது உதடு, நாக்கு அசைந்ததை அந்த மருத்துவ தாதி கவனித்துள்ளார்.
ஆனால், தாதி கூறியதை வைத்தியர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பேர்ன்ஸ்க்கு நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அவர் திடீரென கண் விழித்தார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், சென்ட் ஜோசப் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதியானதால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்ய ஆலோசகரை நியமிக்கவும், மூளைச்சாவு அடைந்ததை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் மூலம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் இரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்யாவுடன் “மதராச பட்டணம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் “தாண்டவம்” படத்திலும் நடித்தார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “ஐ” படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கும் எமி, இப்போது ராம்சரண், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் “யவடு” படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடந்தது.
எமிஜாக்சன் காரில் பயணம் செய்வது போன்ற காட்சியொன்றை படமாக்கினர். காரை சாரதி வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு காருடன் பயங்கரமாக மோதியது.
இதில் காருக்குள் இருந்த எமிஜாக்சனுக்கு பலத்த அடிபட்டது. உடலில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் விரைந்து சென்று எமி ஜாக்சனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “விடியல் கல்வி அறக்கட்டளை” அமைப்பினால் தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது.
இதன்முதலாவது சேவையாக, வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழிகாட்டி புத்தகங்களை வழங்கியிருந்தது.
இன் நிகழ்வினை பாடசாலை பிரதி அதிபர் திருமதி. த. யூகராஜா ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. சு. வஸ்தியாம் பிள்ளை இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதி அதிபர், அதிபர், விடியல் அமைப்பின் தலைவர் கி. பிரணவன், உப தலைவர் சி.சிவதர்சன், பொருளாளர் அ.அனுசியன், செயற்குழு உறுப்பினரும் அப்பாடசாலை ஆசிரியருமான சே.நிமலன் ஆகியோர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் திரைக்கலை பயின்றார்.
“சேது” திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பாலா இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
ரசிகர்களுக்கு தெரியாத ஒரு நடிகனை தனது “சேது” படம் மூலம் வெளிக்காட்டிய பெருமை பாலாவையே சேரும். அவர்தான் ’”சீயான்” விக்ரம். இதையடுத்து சூர்யா என்கின்ற நடிகனை நாம் அவ்வளவாக திரையில் கவனித்ததில்லை, அவரையும் வேறொரு கோணத்தில் “நந்தா” படம் மூலம் திரையில் காண்பித்து ரசிகர்களைக் கவனிக்க வைத்தவர்.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது படங்கள் யதார்த்தம், இருள் என மனதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என விமர்சன ரீதியாகப் பாரட்டப்பட்டது.
வவுனியா நெற் ரசிகர்கள் சார்பாக பாலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் சோபிக்கத் தவறியதால் சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவி, இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாது வெளியேறியது.
இதேவேளை முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி கண்டு பின்னர் சுதாகரித்துக் கொண்ட இந்திய அணிக்கு மழையும் கைகொடுக்க அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் அபார வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்றேயுள்ளது.
இந்திய அணியின் தலைவர் டோனி 2-வது லீக் ஆட்டத்தின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் டோனி அணியில் இடம் பெறவில்லை. தற்போது டோனியின் காயம் நன்கு குணமடைந்து வருவதாகவும், இறுதிப்போட்டியில் டோனி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் தற்போது தலைவராக உள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டோனி விளையாடினால் விஜய் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.
இலங்கை அணி லீக் ஆட்டத்தில் 2 வெற்றிகள், 2 தோல்விகளைக் கண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் விறுவிறுப்பான இறுதிப்போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.
இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.
இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது.
முந்தைய தலைமுறை Processor-களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1. கணனி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி.
2. பழைய மடிக்கணனிகளை விட 50% அதிக Battery Life.
3. ஆரம்பித்த 3 நொடிகளில் கணனி இயங்க ஆரம்பித்துவிடும்.
4. பழைய கணனிகளை விட நான்கு மடங்கு அதிக வேகம்.
20 நிமிட HD Video – களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.
சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம்.
ஆனால் சிஙகம்-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் சிவகுமார். முதன்முறையாக மகன் சூர்யாவுக்கு எஸ.எம்.எஸில் பாராட்டு மடல் அனுப்பினாராம். எத்தனை பேர் பாராட்டினாலும் பெற்ற தந்தையின் பாராட்டு உயர்வானது அல்லவா. அதிலிருந்து சூர்யா இன்னும் பரபரவென்று உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இப்படி அப்பாவின் பாராட்டு ஒருபுறமிருக்க சூர்யாவின் துணைவியார் ஜோதிகாவும் இந்த படத்தைப்பற்றி பலரும் சொல்வதைக்கேட்டு தானும் குழந்தைகளுடன் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்தாராம்.
அதையடுத்து வீட்டுக்கு வந்தவர் சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்டு விட்டாராம். அந்த அளவுக்கு உங்களது நடிப்பு மட்டுமின்றி பொலிஸ் சீருடையில் என் கண்ணே பட்டிருக்கும் அத்தனை அழகு என்று சூர்யாவை கொண்டாடினாராம்.
இதனால் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு மழையில் மிக்க சந்தோசத்தில் இருக்கிறார் சூர்யா.
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென நாசா மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார்.
7 வயது சிறுவன் டெக்ஸ்டர் இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டு மென்பதுதான் இலட்சியம்.
இது தொடர்பாக இந்த சிறுவன் அண்மையில் அமெரிக்காவின நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி நாசா மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும் விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.
நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன்,
அன்புள்ள நாசா,
எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு ஏழு வயது தான் ஆகிறது.
எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?”
எனக் கேட்டிருந்தார்.
இதற்கு நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா,
டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு நாசாஅளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான்.
அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதையடுத்து இந்த நம்பிக்கை வலுவடைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நாணய சுழற்சியின் போது கோலி கூறுகையில், “டோனியின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இறுதிக்கு தகுதி பெற்றால் டோனி விளையடலாம்” என்றார்.
இதனால் தற்போது டோனி விளையாடுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடுவும் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு விதிமுறைகளின் படி டோனி விளையாட முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால் காயமடைந்தவர் நினைத்தால் இந்தியா திரும்பியிருக்கலாம். அவர் அந்த வாய்ப்பை உதறி அங்கு அணியை உற்சாகப்படுத்தவே தங்கியுள்ளார். டோனி விளையாடாவிட்டாலும் ஓய்வறையில் அவரது இருப்பே இந்திய வீரர்களுக்கு ஒரு பெரும் உத்வேகம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
மும்பை நகரம் மீது ஏழு நாட்களில் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அறிவித்திருக்கிறது.
அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் புத்தகயாவில் 9 வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது நாங்களே என்று பதிவிடப்பட்டிருக்கிறது. இதேபோல், எங்களது அடுத்த இலக்கு மும்பை நகரம்தான், உங்களால் முடிந்தால் தடுக்கலாம். ஏழு நாட்களுக்குப் பின்னர் என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டுவிட்டரிடம் இந்திய முஜாஹிதீன் பெயரில் யார் பதிவு செய்திருப்பது? பதிவு செய்யப்பட்ட கணிணியின் ஐபி எண் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது.
உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் அந்த பதிவைப் போட்டதா? அல்லது போலியாக யாரும் பதிவிட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார்.
தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா நடித்து வரும் படத்திலும், லாரன்சின் கங்கா (முனி-3) படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆர்யாவிடம் தான் பலமுறை ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
ஆர்யா படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசா கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய் என்பார். இதுபோல், ஏராளமான முறை, ஆர்யாவிடம் ஏமாந்திருக்கிறேன் என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் அசிங்கமானவர்கள் என ஒரு நடிகை கூறியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால் அதனை சொன்னவர் யார் என்று சொன்னால், அட அவர் இந்த மாதிரி சொல்லவில்லை என்றால்தான் ஆச்சரியம் என்பார்கள்.
சில பிரபலங்களுக்கு ஒரு வியாதி அடுத்தவர்களை மட்டம் தட்டி அந்த விளம்பரத்தில் பெயரை தக்க வைத்துக் கொள்வது நடிகை அமண்டா பைன்ஸுக்கு முற்றிய நிலையில் உள்ளது இந்த வியாதி.
கடந்த காலங்களில் சக நடிகைள் பலரையும் இதேபோல் வம்பிழுத்திருக்கிறார். ஒருமுறை அவர் வம்பிழுத்தவரின் காதலர், போய் கண்ணாடியில் உன் முகத்தை பார்த்துக்கொள் என்று பதிலடி கொடுத்ததும் நடந்திருக்கிறது.
இந்தநிலையில் சமூக வலைதளத்தில் அமண்டா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது மனைவியும் அசிங்கமானவர்கள் (Ugly) என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார்.அவரின் இந்த அத்துமீறல் கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.