நயன்தாரா ஹிந்தியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் பிரபுதேவா??

nayanthara-prabhu-devaநயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழில் அஜீத், ஆர்யா, உதயநிதி போன்ற நடிகர்களுடன் நடித்திருப்பவர், இப்போது தெலுங்கில் அனாமிகா என்ற படத்தில் நடிக்கிறார். இது வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக் என்பதால், இந்த படம் தன்னை பெரிய அளவில் கொண்டு செல்லும் என்பது நயன்தாராவின் நம்பிக்கையாக உள்ளது.

அதனால் கன்னடம், ஹிந்தியிலிருந்து வந்த வாய்ப்புகளைகூட திருப்பி அனுப்பிவிட்டார் நயன். இதுபற்றி நெருக்கமானவர்கள் நயன்தாராவிடம் கேட்டபோது, இந்திய அளவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. ஆனால், எனக்கு துரோகம் செய்த பிரபுதேவா ஹிந்தியில் இருப்பதால் அங்கு செல்வதில் எனக்கு நாட்டமில்லை.

அதனால்தான், தமிழ், தெலுங்கோடு எனது எல்லையை அமைத்துக்கொண்டு பிரதான நடிகை என்ற இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா. மேலும் கஹானியைத் தொடர்ந்து இன்னும் அதிரடியான மாறுபட்ட கதைகளாக தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் அவர் கூறிவருகிறார்.

தற்போது தெலுங்கில் அனுஷ்கா நடித்து வருவது போன்ற சரித்திர கதைகளில் நடிப்பதிலும் நயன்தாராவுக்கு அதிக ஈடுபாடு உள்ளதாம்.

விம்பிள்டன் டிக்கெட் எடுக்க காத்திருந்த 34 வயதுப் பெண் கற்பழிப்பு!!

rape

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் எடுக்க காத்திருந்த பெண்ணைக் கற்பழித்து விட்டார் ஒரு நபர். இது லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் எடுக்க வருவோருக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்குள் வைத்து தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து போலீஸாருக்குப் போன் செய்து அவர் தன் மீதான தாக்குதல் குறித்துப் புகார் கொடுத்தார்.

விம்பிள்டன் போட்டியைக் காண வருவோருக்காக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் சார்பில் கூடாரங்கள் அமைக்கப்படும். டிக்கெட் எடுக்க வருவோர், தங்களை ஓய்வில் ஆழ்த்திக் கொள்வதற்காக இந்த கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. அதில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்து தற்போது ஜாமினில் விடுவித்துள்ளனர். சம்பநத்ப்பட்ட பெண் விம்பிள்டன் மைதானத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கியிருந்தார். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட நபரும் தங்கியுள்ளார். அப்போதுதான் கற்பழிப்பி்ல் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இருவரும் அதற்கு முன்பு அறிமுகமானவர்கள் இல்லையாம். இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். விசாரணை நீடிக்கிறது.

கொழும்பு – வவுனியா ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

rainகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பொலிஸ் பிரிவின் பூனேவ பலுகொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 56 வயதான பலுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த நபரொருவரே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது!!

court

இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எஸ்.ஜே.முகோபாத்யாய அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தால் வழக்கு ஒன்றில் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினாலும் அந்த நபர் இந்தத் தீர்ப்பின்படி பதவியிழப்பார்.

எனினும் இந்தத் தீர்ப்பு தங்களது இன்றையத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வரவேற்கத்தக்கத் தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்க கட்சிகள் தயங்கும் என்றும் இந்தியாவின் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையாளர் என் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் தற்போது பதவியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திலுள்ள ஒரு பிரிவுக்கான விளக்கம் என்பதால் இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரவும் முடியாது என்றும் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

-BBC தமிழ்-

இன்று நாடெங்கும் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு?

busஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1500க்கும் மேற்பட்ட பஸ் குழுக்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்திற்கு அமைய பஸ் கட்டணத் திருத்தங்கள் இடம்பெறாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை சில தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த பணிப் பகிஷ்கரிப்பு நியாயமற்றது என தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

கடலுக்குச் செல்வது ஆபத்து..!

seaகாலி ஊடாக ஹம்பாந்தோட்டை தொடக்கம் புத்தளம் வரையான கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறித்த கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

டெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)

d8

 

டெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் மிகப்பெரிய மசூதி அருகில் Hakim Ghyas என்ற 79 வயது நபர் ஒருவர் ஒரு திறந்தவெளி கிளினிக் ஒன்றை வைத்துள்ளார். அவரிடம் வரும் நோயாளிகளின் கை மற்றும் கால்களின் பல இடங்களில் பிளேடினால் பல இடங்களில் கீறி ரத்தத்தை வரவழைக்கிறார். அவர் தானே நேரடியாக இந்த சிகிச்சையை செய்யாமல், தன்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மூலம் சிகிச்சை செய்து வருகிறார்.

பின்னர் அரைமணி நேரம் வெயிலில் நோயாளிகளை நிற்க வைத்து ரத்தம் தானாகவே கசிவது நின்றவுடன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். இந்த முறையான வைத்தியத்தால் அவர் மூட்டுவீக்கம், ரத்தபுற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கியுள்ளதாக பலர் நம்புகின்றனர்.

இந்த மருத்துவமுறை காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி மருத்துவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

d1 d2 d3 d4 d5  d7 d8d6

 

அணில் கும்ளேவின் வனத்துறை அலுவலக விவகாரம் அம்பலம்!

anil kumble

இந்திய கிரிகெட் அணியின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அணில் கும்ளேவின் கர்நாடக வனத்துறை அலுவலகமானது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அணில் கும்பளே ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்ந்தவர். தற்போது கர்நாடக வனத்துறையின் வன விலங்குகள் வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கின்றார்.

இவருக்கான அலுவலக அறையை கர்நாடக அரசானது மக்களின் பணத்திலிருந்து வாரியிறைத்து கட்டியுள்ளது.

பெங்களூர் வி.வி.டவர்ஸில் இந்த ஆடம்பர அலுவலக அறையானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் கதிரை, நாற்காலி, உள்ளிட்ட தளபாடங்களுக்காக 3 லட்ச இந்திய ரூபாவை செலவழித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த அலுவலக அறைக்கு 20 இலட்சத்தை கர்நாடக அரசானது செலவிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசானது தன்னிடம் பணம் இல்லை என்று பல்வேறு துறைகளிடம் பணம் பெற்று வருகின்றது.

மேலும் மும்பை விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஜீப்புகளை நன்கொடையாக வாங்கியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் போது கும்ளே என்றாவது ஒரு முறை வந்து போகும் அலுவலகத்திற்கு கர்நாடக அரசானது இவ்வளவு பணம் செலவழித்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று ஆர்டிஐ சேவகர் கூறியுள்ளார்.

 

200வது டெஸ்டில் விளையாடப் போகும் முதல் வீரர் டெண்டுல்கர்?

sachin

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் 3 டெஸ்டும் அடங்கும்.

இதன்படி கேப்டவுனில் நடைபெறும் 2–வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 2–6) டெண்டுல்கருக்கு 200–வது டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

மேலும் 200–வது டெஸ்ட் விளையாட இருக்கும் உலகின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

 

சச்சின் மகன் அணியில் இருந்து நீக்கம்..!

sachin

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வருகிறார் அர்ஜூன். இவர் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் மோசமான போர்ம் என்று கூறியுள்ளனர்.

மும்பை அணிக்கான 30 பேர் கொண்ட பட்டியலில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் இடம்பெறவில்லை. 14 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பைக்காக ஆடியிருந்தார்.

கிண்ணத்தை அந்த அணிதான் வென்றது. ஆனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை.

சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜூனை அணியில் சேர்த்து விட்டதாக பல பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டிருந்தனர். புகார்களும் கூறியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில்தான் தற்போது அர்ஜூனை அணியிலிருந்து நீக்கியுள்ளது தேர்வாளர்கள் குழு. தேர்வுப் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதுவே அவருக்கு ஆப்பாக மாறி விட்டது.

இதுகுறித்து தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் கூறுகையில் சரியாக விளையாடாவிட்டால் அணியில் இடம் கிடையாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மீண்டும் அவர் சிறப்பாக விளையாடி பார்முக்குத் திரும்பினால் மும்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றார்.

மேலும் சச்சின் மகன் என்பதற்காக இலகுவாக அணியில் நுழைந்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த அதிரடி முடிவை தேர்வாளர்கள் எடுத்தனராம்.

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்ற அயர்லாந்து!

Ireland-Cricket-Team

உலகக் கோப்பை லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. அயர்லாந்து 3வது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.

நெதர்லாந்துக்கு எதிராக நேற்று அம்ஸ்டெர்டாமில் நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடியது அயர்லாந்து. அந்த அணியின் ஜோய்சி 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றதன் அந்த அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேணும் – ஸ்ருதியின் வினோத ஆசை!!

sruthi-hasan

திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், எனது சுதந்திரத்தை யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. என்னை என் போக்கில் விடும் கணவன் தேவை. அப்படி ஒரு மனிதர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான்.

உறவு என்ற பெயரில் எனது சுதந்திரத்தை களவாடிவிடக் கூடாது.
இதில் இரண்டாவது என்ற கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

ஊழலில் முதலிடத்தில் இந்தியா – சர்வதேச ஆய்வில் தகவல்!!

corruption

 

 

 

 

 

 

 

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட “ஊழல் அளவுக்கோல் 2013” என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. “டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல்” என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க இந்திய அரசு போதுமான முயற்சி எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

86 சதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கூறுகின்றனர். ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.

உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி ருக்ஷானா நானயக்கார தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது இலஞ்சம் தந்துள்ளனர். ஆனால், இந்தியாவில் மட்டும் 54 சதவீதம் பேர் இலஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஊழலை அடுத்து இலஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பொலிஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவீதம், நிதித்துறையில் 36 சதவீதம் இலஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்படி பெருகிவரும் இலஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது. இலஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை.

எதிர்வினையாக மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது என அந்த சர்வே அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

என் அழகும் கவர்ச்சியும் குறைந்து விட்டது –அனுஷ்கா வேதனை..!

அனுஷ்கா நடித்த சிங்கம்–2 படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா அழகு குறைந்துள்ளது என்றும் முன்பு போல் கவர்ச்சியாக இல்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:–

என்னிடம் கவர்ச்சியும், அழகும் குறைந்து இருப்பது உண்மைதான். பிசியாக படங்களில் நடிப்பதே இதற்கு காரணம்.

சிங்கம்–2, இரண்டாம் உலகம் படங்களில் அடுத்தடுத்து நடித்தேன். வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போய் வந்தேன். வெயிலிலும் நின்று நடித்தேன். இதனால் என் அழகை கவனிக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் நேரம் அமையவில்லை. என் அழகான பொலிவு குன்றியது.

இந்த படங்கள் முடிந்ததும் உடனடியாக ருத்ரமாதேவி படப்பிடிப்புக்கு சென்றேன். இதில் ராணி வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற வேண்டி இருந்தது. வெயிலில் தான் இந்த பயிற்சிகளை பெற்றேன். சரியான தூக்கம் இல்லை.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 72 வயது முதியவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த (வயது 72) கதிர்காமத்தம்மி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு யானையின் தாக்குதலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக  நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த முதியவரையே காட்டு யானை தாக்கியுள்ளது. இவ்வாறு நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த இம்முதியவரின்  பின்பக்கமாக வந்த காட்டு யானை  அவரை தூக்கி அடித்து நெருப்பில் வீசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை – தீர்ப்பு தள்ளிவைப்பு..

ilavarasan

தர்மபுரி இளைஞன் இளவரசனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார் உடலை சுயாதீனமாகப் பரிசோதனை செய்துவிட்டு அறிக்கை சமர்ப்பிப்பார் அதன் பிறகே உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பினைக் கூறும்.

இளவரசனின் கலப்புத் திருமணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இறுதியில் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த மனைவி திவ்யா பிரிந்து செல்வதாக அறிவித்த்தார்.
மனமுடைந்த தலித் இனத்தவரான இளவரசனின் உடல் கடந்த ஜூலை நான்காம் நாள் தர்மபுரியில் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.

இளவரசன் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் எனக் கருதும் இளவரசனின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில் இளவரசனின் நண்பர் ரமேஷ் மறு பரிசோதனை கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவருகிறது.
தர்மபுரி பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவை நேற்று நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த ஏழு மருத்துவர்களில் மனுதாரர் ரமேஷ் தெரிவு செய்த மருத்துவர் மட்டும் தர்மபுரி பரிசோதனை பிழைபட்டது எனவே மீண்டும் பரிசோதனை தேவை எனக் கூறினார்.

மருத்துவர்களின் அறிக்கைகள் குறித்து இன்று புதன் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. பிறகு நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த சம்பத்குமார் நாளை தர்மபுரி சென்று இளவரசனின் உடலை பரிசோதனை செய்து பிறகு தனது கருத்தினைத் தெரிவிக்கட்டும். அதன் பிறகு வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறிவிட்டனர்.