திருமண நாளை மறந்த கணவன்.. ஆட்களுடன் வந்து அடித்து உதைத்த மனைவி!!

மும்பையில்..

மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவனை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையின் காட்கோபரில் வசித்து வரும் தம்பதிகள் விஷால் நங்ரே (32) மற்றும் கல்பனா. இவர்களுக்கு கடந்த 2018 இல் திருமணம் நடந்துள்ளது.

விஷால் நங்ரே கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கல்பனா ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி கல்யாண நாள் வந்துள்ளது. ஆனால், அந்த நாளை விஷால் நங்ரே மறந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கமான சண்டைதான் என்று கணவன் விஷால் நங்ரேவும் மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனால், பிரச்சினை அதோடு முடியவில்லை. அடுத்த நாள் மாலை நாங்ரே தனது வீட்டிற்கு அருகில் தனது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, கல்பனா வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆவேசமாக காணப்பட்ட மனைவி விஷால் நங்க்ரேவை பார்த்து, ‘இனி உன்னுடன் வாழ விரும்பவில்லை’ என்று கூறி கணவனின் தலையில் இடியை இறக்கியுள்ளார். ‘ஒரு சாதாரண விஷயத்துக்கு விவாகரத்து வரை இவள் பேசுகிறாளே என்று விஷால் நங்ரே அதிர்ச்சியாக, கல்பனா விஷால் நங்ரேவின் தாயையும் கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.

இது விஷால் நங்ரேவுக்கு கோபத்தை கிளப்பியது. இருவருக்குள்ளும் கடுமையான வார்த்தை போர் வெடித்தது. இதனை அடுத்து கல்பனா இரவு 9:30 மணியளவில் தனது பெற்றோரையும், சகோதரரையும் அழைத்து வந்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஏற்பட்ட மோதலில், கல்பனா தனது வீட்டாருடன் சேர்ந்து விஷால் நங்ரேவையும், அவரது தாயையும் சரமாரியாக அடித்தது மட்டுமல்லாமல், கடித்தும் வைத்துள்ளார். இதில் படுகாயடைந்த இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் காட்கோபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் கல்பனா, அவரது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் மீது பிரிவு 323, 324, 327, 504 மற்றும் 506இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீசும் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு…ஒரு கோடி செலவில் பேன்சி நம்பர் : இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்!!

சிம்லாவில்..

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 1 கோடி ரூபாய் செலவழித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ₹ 90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான HP-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் அந்த நபர் கலந்து கொண்டுள்ளார்.

HP 99-9999 என்ற உரிமத் தகடுக்கு 26 ஏலதாரர்கள் வரை போட்டியிட்ட நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் உரிமையாளர் இந்த பேன்சி பதிவு எண்ணை ₹ 11,215,500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

₹ 1000 ரூபாய்க்கு தொடங்கிய பதிவு ஏலம் இறுதியில் ₹ 11,215,500 ரூபாய்க்கு நிறைவடைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1.12 கோடி ரூபாய் என்பது மாநில வரலாற்றில் இருசக்கர வாகனப் பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தும் அறிக்கையை கோரியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றுக்கு பேன்சி நம்பரை வாங்க ₹ 1 கோடி ரூபாய் வரை செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணியில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை ஆரம்பம்!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் மாணவர்களுக்கான இலவச பேருந்து போக்குவரத்து சேவை கடந்த 20.02.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில் தொடர்ச்சியாக இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் தொடர் பேசுபொருளாகவும் இருந்து வந்ததது.

இதன் முதற்கட்டமாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக வவுனியா வடக்கு நெடுங்கேணி கூட்டுறவு சங்கத்தின் பேருந்து பாடசாலை சேவையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சேவையின் மூலம் ஊஞ்சல் கட்டி, வெடி வைத்த கல்லு,பட்டிகுடியிருப்பு,காஞ்சிர மோட்டை, கற்குளம், பட்டடைப்பிரிந்தகுளம்,மருதோடை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நெடுங்கேணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தரும் 83 மாணவர்கள் பயனடையும் வகையில் இலவசமாக இப்பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான பருவ கால சீட்டும் நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் வழங்கி வைக்கப்படுள்ளது.

மேற்படி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவைக்கான நிதி அனுசரணை நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஜெர்மனியில் வசித்து வருபவருமான திரு.நவராசா என்னும் அன்பரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரசவத்துக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

ஆட்டையாம்பட்டியில்..

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி செல்லப்பன் வீதியில் கீர்த்திவர்மன் (26) – நிஷாந்தினி (22) தம்பதி வசித்து வந்தனர். இதில் கீர்த்திவர்மன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து குடும்பம்தை வழிநடத்தி வந்தார்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் நிஷாந்தினி மீண்டும் கர்ப்பமான நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு நேற்று முன்தினம் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுரைப்படி, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், இரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனை கேட்டு நிஷாந்தினி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் கதறி அழுதனர். அதேநேரம் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால்தான், நிஷாந்தினி இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கீர்த்திவர்மன் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன தோழிக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, ப்ரீசர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, திருவொற்றியூர் ,ராஜா கடை, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் நந்தினி, இவரது மகள் அபிநயா (16). இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.

இந்த நிலையில், காது வலியால் அவதிப்பட்டு வந்த அபநயா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு அபிநயா இறந்து விட்டார். காது வலிக்காக வந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், தவறான சிகிச்சையால் தான் அபிநயா இறந்ததாக கூறி, அவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின் போலீசாரின் சமரச பேச்சுக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்காக அபிநயா உடல் ப்ரீசர் பெட்டியில் வைக்கப்படிருந்தது. உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த அஜித் (19) என்பவர் அபிநயாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

அப்போது ப்ரீசர் பெட்டியில் கை வைத்தபோது, மின்சாரம் தாக்கி அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த பெட்டியை தொட்ட சிலரையும் மின்சாரம் தாக்கியது.

சர்ச்சையான முறையில் பள்ளி மாணவி கோரமாக இறந்த சம்பவத்தால் அப்பகுதியினர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த 19 வயது வாலிபனும் அநியாயமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

அசாமில்..

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் அமர்ஜோதி- பந்தனா கலிதா தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பந்தனா கலிதா காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் ஷங்கரியை காணவில்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடினர். எனினும் எந்த தகவலும் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் பந்தனா கலிதா மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து பந்தனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிதல் அளித்ததால் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவர் அமர்ஜோதி வேலையின்றி இருந்ததால், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேநேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்த பந்தனாவுக்கு அங்குவந்து செல்லும் ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஒரு நண்பருடன் திருமணத்திற்கு மீறிய உறவிலும் இருந்துள்ளார். அவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பந்தனா கலிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என இவரது மாமியார் தடுத்துள்ளார். எனினும் வேலைக்கு செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பந்தனா தனது மாமியாரை கொலை செய்துள்ளார்.

நண்பர்களின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்துள்ளார். இதன் பிறகு கார் மூலம் மேகாலயாவுக்குச் சென்று மலையில் இருந்து உடல் பாகங்களை இவரும் இவரது நண்பர்களும் வீசியுள்ளனர்.

பின்னர், இதே பாணியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி கணவரையும் கொலை செய்து, உடல் பாகங்களை அதே பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகளில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பந்தனா கலிதா மற்றும் அவரது நண்பர்கள் தந்தி டெகா, அருப் தேகா ஆகிய 3 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வியட்நாம் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

நெல்லையில்..

காதலுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பது கிடையாது. மொழி, தேசம் என அத்தனை பாகுபாடுகளையும் தகர்க்கும் காதல் தான் உலக மக்களையும் ஒன்றிணைக்கிறது. உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதும், பலதரப்பட்ட மக்களை சந்திப்பதும் தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது.

அதுவே, சிலரது வாழ்க்கையில் காதலுக்கான பாதையாகவும் மாறிவிடும். அப்படியானவர்களில் ஒருவர் தான் நெல்லை மாவட்டதை சேர்ந்த தாமஸ் பிரபு. இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் – நவரத்தினம் தம்பதியின் மகன் தாமஸ் பிரபு. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு கடந்த 9 வருடங்களாக பிரபு ஜப்பானில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பகுதி நேரமாக தனது பிஎச்டி ஆய்விலும் பிரபு ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜப்பானில் அவருடைய பணிபுரியும் பா பா ஃம் துய் ட்சுக் வான் எனும் பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது.

நட்பாக இருவரும் பழகிவந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் தங்களது காதல் குறித்து தங்களது வீட்டினரிடம் பேசியிருக்கின்றனர் அப்போது இருவரின் பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கடந்த 12 ஆம் தேதி தாமஸ் பிரபு – பா பா ஃம் துய் ட்சுக் வான்-ன் தம்பதி ஜப்பானில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து, தாமஸ் பிரபுவின் சொந்த ஊரான கூடங்குளத்தில் திருமண வரவேற்பு விழாவும் நடைபெற்றிருக்கிறது.

அப்போது மாப்பிள்ளையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுபற்றி பிரபுவின் தந்தை செல்வராஜ் பேசுகையில்,”தமிழகம் – வியட்நாம் இடையே பண்டைய காலம்தொட்டே உறவு இருந்துள்ளது.

அம்மக்கள் தமிழ்நாடு மீது பாசம் வைத்துள்ளார்கள். அதன் எடுத்துக்கட்டாகவே இருவரின் திருமணமும் நடைபெற்றிருக்கிறது” என்றார். விரைவில் மணமக்கள் ஜப்பானில் குடியேற இருப்பதாகவும் செல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

இளைஞரின் கண்களை தின்ற அரிய வகை ஒட்டுண்ணி : அதிர்ச்சிக் காரணம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் காண்டெக்ட் லென்ஸ் அணிந்து தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்களை அரிய வகை ஒட்டுண்ணிகள் தின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மைக் க்ரம்ஹோல்ஸ் என்ற 21 வயது இளைஞர் கண்ணில் காண்டெக்ட் லென்ஸ் அணிந்து வந்துள்ளார்.

இவ்வாறு வழக்கமாக லென்ஸை அணிந்து சென்ற அவர், ஒருநாள் தன்னை மறந்து லென்ஸை கழற்றாமல் தூங்கியுள்ளார். பின்பு கண் சிவப்பாக இருப்பது, கண்ணில் வலி என இடையில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இதனை சகஜமாக எடுத்துக்கொண்ட அந்த இளைஞருக்கு, நாளடைவில் கண்பார்வையே பறிபோயுள்ளது. ஆம் கண்களில் சதை உண்ணும் அரிய வகை ஒட்டுண்ணி உருவாகி தற்போது வலது கண்ணில் பார்வையையே இழந்துள்ளார்.

மைக்கின் வலது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதற்கு காரணம் லென்ஸை அணிந்துகொண்டு அவர் தூங்கியது தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அரியவகையான ஒட்டுண்ணியானது, கண்களில் நுழைந்து திசுக்களை சாப்பிட்டுவிடுவதால் பார்வையே இல்லாமல் போவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர் அரசிடம் நிதி உதவி கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், இவ்வாறு லென்ஸ் அணியும் நபர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். அதாவது லென்ஸ் அணிந்து கொண்டு குளிப்பதோ, அல்லது தூங்குவதையோ தயவு செய்து செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்!!

திண்டுக்கல்லில்..

பிரசவம் முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பம் விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளது இராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன அடைக்கான் (28). அந்த பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவரும், இராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் பகுதியைச் சுமதி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுமதி, தனது தலை பிரசவத்திற்காக பெற்றோர் வீடான இராமநாதபுரத்துக்கு சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதால், இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இதையடுத்து இவர்கள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ராமநாதபுரத்திலிருந்து வேதாளைக்கு பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அடைக்கான், சுமதி, பிறந்த குழந்தை அவரது குடும்பத்தை சேர்ந்த காளியம்மாள் என அனைவரும் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோ ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரத்தை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோமீது நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலைகுலைந்து போன ஆட்டோ, தடுமாறியது. மேலும் அந்த காரும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் உட்பட ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அனைவரையும் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ், சுமதி, அடைக்கான் மற்றும் பிறந்த பிஞ்சு குழந்தை ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காளியம்மாள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி பகுதி காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரசவம் முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பம் விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளது இராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவிக் கொட்டு..

வவுனியா கோவில்குளம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (21.02.2023) பிற்பகல் காற்றில் கலைந்த குளவி வீதியால் சென்றவர்கள் மீது கொட்டியதால் பாடசாலை சென்ற மாணவர் ஒருவர் உட்பட ஐவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிவிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் பின்னர் மாலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவ்வீதியால் சென்ற நான்கு பேர் உட்பட பாடசாலைவிட்டு வீடு சென்ற மாணவனுமே இக் குளவிக் கொட்டிற்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சனையால் பறிபோன உயிர்கள் : இலங்கையில் இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்!!

இரத்தினபுரி..

இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒன்று மற்றும் ஆறு வயதுடைய தனது மகன்களை தாயாரே தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்துயர சம்பவம் இரத்தினபுரி குருவிட்ட கரபிஞ்ச வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 7 மற்றும் ஒன்றரை தனது இரண்டு ஆண் குழந் தைகளை கிணற்றில் தள்ளியதால் இரண்டு பிள்ளைகளும் மரணமடை ந்துள்ளனர்.

தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதமே இந்நிலைமை க்கு காரணம் என ஆரம்ப விசாரிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது மகள் : இதுதான் முதல் முறையாம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீஷ் (48). ஹொட்டல் நடத்தி வரும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், பிரதீஷிற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்கவில்லை.

மேலும் வறுமை மற்றும் மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் பரிதவித்தனர். அப்போது அவரது 17 வயது மகள் தேவானந்தா தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானமாக வழங்க முடிவு செய்தார். எனினும் அதில் ஒரு சிக்கல் இருந்தது.

அதாவது இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். அதன் பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் இதற்காக அனுமதி வேண்டி தேவானந்தா மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி அளித்தது.

இதன்மூலம் நாட்டிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த 17 வயது சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்த தேவானந்தா, தன் உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றி, கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் கொழுப்பு முற்றிலுமாக கரைந்ததால், தேவானந்தா கல்லீரல் தானம் செய்ய தயாரானார்.

கடந்த 9ஆம் திகதி பிரதீஷ்க்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தை மற்றும் மகள் இருவரும் உடல்நலம் தேறி வருகின்றனர்.

தேவானந்தாவின் செயலைப் பாராட்டி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியாக இருப்பதாகவும் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.

ஊரில் சாதி வெறி கொடுமை.. காதலுக்காக போலீசில் தஞ்சம் அடைந்த பெண்!!

சேலத்தில்..

காதலன் கடத்தியதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக பெற்றோர்கள் மீது கல்லூரி மாணவி வீடியோ வாயிலாக பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். கலப்பு திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பொய் சொல்லி அழைத்து சென்று வேறொரு நபருடன் பதிவு திருமணம் செய்த வைத்ததாக இளம்பெண் பரபரப்பு

சேலம் தாதகாப்பட்டி வேலுநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கனிஷ்கா (22). இவர் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற போது மாயமானார்.

இதுபற்றி மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீசார் புகார் அளித்தார். அதில் தனக்கும் கனிஷ்காவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடந்தது. ஆனால் கனிஷ்கா தனது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து பேசி வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கனிஷ்காவை காதலனான சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் கடத் திச்சென்றுவிட்டனர் என அதில் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அஜித்குமாரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் தான் கனிஷ்காவை கடத்தவில்லை என்றும், அவருடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கனிஷ்காவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் கனிஷ்கா பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்ததாகவும். இந்த சம்பவம் கடந்த 2 மாதத்திற்கு முன் எனது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்த பெற்றோர், தாத்தா இறந்துவிட்டதாக பொய் சொல்லி அங்கிருந்து அழைத்துச்சென்று உறவினரான மணிகண்டன் என்பவருடன் பதிவு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அப்போது தான் காதலித்த வாலிபரை கொன்றுவிடுவதாக என்னை மிரட்டி கையெழுத்து போடவைத்தனர். தற்போது நான் சென்னையில் உள்ள விடுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளேன். மேலும் இதுபற்றி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

போலீசாரும் விசாரித்தனர். அதில் எனது பெற்றோரை வரவழைத்து அவர்களும் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டோம் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் சேலம் சென்றதும், எனது காதலன் மற்றும் அவரின் பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார்கள்.

எனக்கும் எனது காதலன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நிகழ்ந்தால் எனது பெற்றோர் மற்றும் மணிகண்டன் தான் காரணம் என கனிஷ்கா தெரிவித்துள்ளார்.

மேலும் எனது பெற்றோர் சாதி வெறி பிடித்து அலைவதாகவும் தன்னை காதலித்தவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் எங்களை சேர்ந்து வைக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன்… ஒரு நிமிடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

சென்னையில்..

தன் தாயின் சேலையில் வீட்டிற்குள்ளேயே ஊஞ்சல் கட்டி விளையாடிய 1ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஐஸ்வந்த் (5 ) பரிதாபமாக உயிரிழந்தான். விளையாட்டி வினையாகி,தன் தாயின் சேலையே உயிரைப் பறித்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன். தனியார் டிராவல்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு ஜஸ்வந்த் (5), மயிலேஷ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜஸ்வந்த், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்1ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று ஜஸ்வந்த், தாயின் சேலையை எடுத்து, தனது தம்பியுடன் வீட்டின் மாடியில் ஊஞ்சல் கட்டி இருவருமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜஸ்வந்த் கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்த்த போது ஜஸ்வந்த் கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஜஸ்வந்தை உடனடியாக தூக்கிக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜஸ்வந்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயில் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 வயது சிறுவன் தாயின் சேலையில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளின் பசிக்காக உயிரை தியாகம் செய்த தாய் : இலங்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கம்பளையில்..

கம்பளையில் பசியின் கொடுமையினால் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த சாந்தி குமாரி என்ற 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள். மேலும் அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருவதும், இறந்தவருக்கு வேலை இல்லை என்பதும் தெரியவந்தது.

கணவன் சம்பாதிக்கும் வருமானம் குடும்பப் பராமரிப்பிற்குப் போதாததால் பாடசாலை பிள்ளைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், உணவு வழங்குதல், மருந்து வழங்குதல் போன்ற பணிகளைச் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க பலாப்பழத்தை கண்டுபிடித்த இந்த தாய், மதியம் உணவு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.mவீட்டின் அருகே இருந்த பலா மரத்தில் ஒரு பழம் இருப்பதைப் பார்த்து, அதை பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

நீளமான தடியில் கத்தியை ஒட்டியிருந்தாலும், பலாப்பழம் அதை விட உயரமாக இருப்பதால் அதை பறிக்க முடியவில்லை. பலா மரத்தின் அருகே இருந்த ஜாதிக்காய் மரத்தில் ஏறி இதனை பறிக்க முயற்சித்துள்ளார். எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை பிள்ளைகளை நினைத்து பலாப்பழத்தை பறிக்க மரத்தில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் பலத்த சத்தம் கேட்டு பிள்ளைகள் மரத்தின் அருகே வந்து பார்த்தபோது, ​​அவர் மரத்தின் அருகே கிடப்பதைக் கண்டு கிராம மக்களின் உதவியை நாடி கம்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

துருக்கியை உலுக்கிய பெரும் சோகம் : இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணின் மனிதாபிமான செயல்!!

துருக்கி..

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கியின் அங்காராவில் வசிக்கும் தில்ஹானி சந்திரகுமார் என்ற பெண்ணே இவ்வாறான மனிதாபிமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் தனது இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தை நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.

“இந்த செயலினால் எனக்கும் என் கணவருக்கும் கிடைக்கும் நன்மை, மன மகிழ்ச்சியாகும் இதுதான் நமது மனிதநேயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அனர்த்தங்களின் போது தான் உயிரை விட பணம் முக்கியம் இல்லை என்பதை உணர முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவின் வடபகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.