வியாபாரியை ஏமாற்றி 2வது திருமணம்.. காட்டிக்கொடுத்த கூகுள்.. திருடனின் மனைவி சிக்கியது எப்படி ?

குஜராத்தில்..

5000-க்கும் மேற்பட்ட கார்களை திருடிய வழக்கில் கைதான பிரபல திருடனின் மனைவி, தற்போது வியாபாரி ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் போர்பந்தர் பகுதியில் உள்ள ஜலராம் குதிர் என்ற இடத்தை சேர்ந்தவர் விமல் கரியா. இவர் அந்த பகுதியில் சொந்தமாக தொழில் செய்து இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு விவாகரத்து ஆன பெண் வேண்டும் என்று மேட்ரிமோனியல் சைட் ஒன்றில், தனது குறிப்புகளை பதிவேற்றியுள்ளார். அப்போது இவருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவர் அறிமுகமானார்.

இருவரும் மொபைல் பேசி மூலம் பழகி ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். எனவே விமல் ரீட்டாவிடம் விவாகரத்து பத்திரத்தை கேட்டுள்ளார்.

அதற்கு ரீட்டவோ, தான் பஞ்சாயத்துமுறையில்தான் விவாகரத்து பெற்றதாகவும், அதனால் தன்னிடம் பத்திரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய விமலும், வேறெதுவும் பேசாமல் ரீட்டாவை முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

திருமனம் முடிந்து இருவரும் ஒன்றாக குஜராத்தில் வஹந்து வந்த நிலையில், 6 மாதம் கழித்து அசாமிலுள்ள தனது அம்மா நிலா பிரச்னை காரணமாக தன்னை நேரில் அழைத்ததாக கூறி சென்றுள்ளார்.

அங்கே சென்ற மனைவி, திரும்ப வரவும் இல்லை; கணவரை தொடர்பு கொண்டு எதுவும் பேசவில்லை. மாறாக ரீட்டாவின் வழங்கறிஞர் விமலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது தங்கள் மனைவி ரீட்டா கேஸ் ஒன்றில் சிக்கியுள்ளதாகவும், பதற்றப்பட வேண்டாம் எனவும், இது ஒரு சிறிய கேஸ்தான் எனவே 1 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த விமல், என்ன ஏது என்று கேட்டதற்கு வழக்கறிஞர் சரியாக பதில் கூறவில்லை. இதனால் பணத்தை விமலும் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பதிலாக ரீட்டாவின் வழக்கறிஞர் ஆவணம் ஒன்றை விமலுக்கு அனுப்பியுள்ளார்.

அதில் ரீட்டாவின் முழுப்பெயர் ரீட்டா செளகான் என்று இருந்துள்ளது. மேலும் அவர் மோசடி, திருட்டு, கொலை மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் விமலுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமல் உடனே ரீட்டாவை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முறையாக எதுவும் பதிலளிக்காத ரீட்டா, விமல் போன் காலை கட் செய்துவிட்டு, ப்ளாக்கிலும் போட்டுள்ளார்.

இதையடுத்து ரீட்டா குறித்து நெட்டில் தேடுகையில், அவர் கார் திருட்டில் கடந்த ஆண்டு கைதான அனில் செளகானின் மனைவி என்றும் தெரியவந்தது. இதையடுத்து ரீட்டா மீது காவல்துறையில் பாதிக்கப்பட்ட விமல் புகார் கொடுத்தார்.

மேலும் தன்னை ஏமாற்றிய ரீட்டா, வேறு யாரையும் ஏமாற்றுவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனில் செளகான், என்பவர் 5000-க்கும் மேற்பட்ட கார்களை திருடிய வழக்கில் கடந்த ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு (1990’s) முன்பிருந்தே தொடர்ந்து கார் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக அசாம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் கார்களை திருடி, மற்ற பக்கம் அந்த கார்களை விற்று வந்துள்ளார். அதோடு இவருக்கு அரசியல் பலமும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் சொந்தமாக ரூ.10 கோடி மதிப்பிலான வில்லா வைத்திருக்கிறார்.

விலையுர்ந்த துணி மணிகள், கார் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் இருக்கும் நிலையில், அனில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் இவருடன் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

அதில் இரண்டு மனைவிகள், தங்கள் கணவர் அனில் இதுபோன்ற தொழில் செய்து வருவது தங்களுக்கு தெரியாது என்று வாக்குமூலம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அனிலிடம் இருந்து அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அனிலுக்கும், அவரது மனைவி ரீட்டாவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இந்த சூழலில் வேறொருவரை திருமணம் செய்து அவரை ஏமாற்றியுள்ளார் ரீட்டா. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

54 வயது முதியவரை திருமணம் செய்ய காதலனை கழட்டி விட்ட பெண்!!

காதல்..

காதலுக்கு கண் இல்லை, சாதி, மதம், இனம் இல்லை என சொல்வார்கள். அப்படியே வயதையும் தாண்டி காதல் செய்வதை தற்போது வைரலாக்கி வருகின்றன. அந்தவகையில் தான் இப்போது ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது.

அதாவது, தனது காதலனுடன் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு தன்னை விட 24 வயது அதிகமடைய ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். 30 வயதான அமண்டா கேனான், தனது கல்லூரி காதலியுடனான தனது திருமணத்தை நிறுத்திய பின்னர் அமண்டா ஒரு சுய கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்கினார்.

இது 2017 கோடையில் தனது வானொலி டிஜே ஏஸ், 54, சந்திப்பில் முடிந்தது. தி ஏஸ் & டிஜே ஷோவின் நட்சத்திரங்களில் ஒருவருடன் ‘முதல் பார்வையிலேயே காதல்’ ஏற்பட்டதாக அமண்டா கூறினார், அதன் உண்மையான பெயர் டேவிட் கேனான்.

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஏஸ் முன்பு சபதம் செய்திருந்தார், ஆனால் அவர் ஜனவரி 2021 இல் தனக்கு 24 வயது இளைய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி விவாகரத்து பெற்றுக் கொண்ட பின் திருமணமே செய்துக்கொள்வதில்லை என சபதமே ஏற்றிருக்கிறார் டேவிட் ஏஸ் கெனான். ஆனால் அமெண்டாவை கண்ட பிறகு அந்த சபதத்தை கைவிட்டிருக்கிறார்.

இவருக்கு திருமணமான ஏஸிற்கு 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இருப்பினும் முதிய கணவனாக இருப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென டேவிட் ஏஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பில் தெரிவித்த அமெண்டா, வயதில் மூத்தவருடன் பழகும் போது வித்தியாசமானதாகவே இருக்கும். தந்தை மகள் என்றெல்லாம் கருதப்பட்டோம். ஆனால் அவரது மகளை விட 7 வயது மூத்தவள் நான்.

இருப்பினும் எங்கள் இருவருக்குமான உறவு குறைபாடற்றதாகவே இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார். முன்னதாக 2017ம் ஆண்டு தனது கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்த நபருடனான திருமணம் நின்று போன பிறகு டேவிட் ஏஸுடனான பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஏனெனில் அந்த உறவில் நான் நானாக இருப்பதற்கான இடமே கிடைக்கவில்லை. ஆகையாலேயே அந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டே என்றிருக்கிறார் அமெண்டா. மேலும், அமெண்டா தற்போது கருவுற்றிருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார்.

100 அடி பள்ளத்தில் விழுந்த கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து : மூவர் உயிரிழப்பு : 26 பேர் படுகாயம்!!

கோர விபத்து..

நல்லதண்ணியிலிருந்து, கொழும்பு – மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரிகர்கள் குழுவை ஏற்றி சென்ற தனியார் பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளான சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அதில் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 9.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போதே குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த யாத்ரிகர்களை இராணுவப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த 26 பேர் ஆரம்ப சிகிச்சைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இரு இளம் பெண்கள் நேற்று (19) இரவு உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை இராணுவப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து விபத்துக்குள்ளான பேருந்தை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காணாமல்போன இளைஞரின் சடலம் பேருந்திற்கு அடியிலிருந்து மீட்கப்பட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இரு யுவதிகளும், இளைஞனும் பண்டாரவளை, மஹரகம மற்றும் ஹிக்கடுவ, களுபே ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26, 28 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும்,

யாத்திரிகர்கள் குழு கடந்த 18ஆம் திகதி யாத்திரைக்கு வந்திருந்ததாகவும், இது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவாகும் எனவும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் : யாழில் இளம் குடும்பப் பெண்ணும் குழந்தையும் கடத்தப்பட்டதால் பரபரப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (20.02.2023) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளதுடன், அழுதபடி சென்ற பிள்ளையையும் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

அதேவேளை பெண்ணின் கணவன் கனடாவில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சக்கர நாட்காலியில் இரத்த வாந்தி எடுத்த இளைஞர்.. இணையத்தில் பிரபலமான காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கண்ணிக்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஒன்றில் சிக்கினார்.

அதில் இவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், இவரால் எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் மற்றவர் உதவியின்றி இவரால் எதுவும் செய்ய இயலாது.

இந்த சூழலில் இவர் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை செய்துவந்தார். மேலும் அம்மாநில போக்குவரத்துத்துறை மேற்கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் இவரும் கலந்துகொண்டு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு முகநூல் வாயிலாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹானா என்ற இளம்பெண் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இருவரும் தங்கள் நட்பை வாழ்த்துக்கொள்ள அது காதலாக மாறியது.

தொடர்ந்து அந்த பெண் இவரை திருமணம் செய்ய எண்ணியுள்ளார். இதனால் இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.

எனவே பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2020-ம் ஆண்டு பிரணாவை திருமணம் செய்துக்கொண்டார் சஹானா. இதையடுத்து இந்த காதல் ஜோடி சமூக வலைதளம் வாயிலாக மக்களை கவர்ந்தனர். மேலும் இருவரும் சேர்ந்தே விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விழிப்புணர்வு செய்து வந்தனர்.

எந்த சூழலிலும் இருவரும் பிரிந்ததும் கிடையாது. பிராணாவிற்கு சஹானா எப்போதும் துணையாகவே இருந்து வந்தார். மேலும் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் சஹானாவுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து இருவரும் சமூக வலைதளம் மூலமாக அனைவரையும் கவர்ந்த ஜோடியாக இருந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரணாவுக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீல் சேரில் இருந்தவாறே இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனை கண்டதும் பதறிப்போன அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரணாவ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சமூக வளைதளவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரணாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தற்கொலை.. கதறும் கணவன்!!

கர்நாடகாவில்..

காதலர்களை பிரித்து, இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன நிலையில், காதலனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபுரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தில் ஈசப்பா (22), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுவர்ணா (20), என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவர்ணாவுக்கு, வேறுறொரு மாப்பிளையை பார்த்து பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். அவர், பெங்களூரில் தனது கணவருடன் வசித்தார். இந்நிலையில், கணவரிடம் கூறாமல் பெங்களூரில் இருந்து ஹுருசகுண்டகிக்கு நேற்று முன்தினம் மாலை அவர் வந்தார்.

அங்கு தனது காதலன் ஈசப்பாவை சந்தித்து பேசினார். அப்போது காதலர்கள் இருவரும் கண்டிப்பாக நம்மால் வாழ்வில் ஒன்றுசேர முடியாது, அதனால் சாவிலாவது ஒன்று சேருவோம் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு ஈசப்பாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களின் சொந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு நேற்று சென்ற இருவரும் விஷத்தை குடித்தனர். வாயில் நுரை தள்ளி சிறிது நேரத்தில் இறந்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதலர்கள் இருவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விபத்தில் காதலன் மரணம்.. பிரிய முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகரை சேர்ந்தவர் வினோதினி. இவரும், அதேபகுதியில் உள்ள முத்தாபுதுப்பேட்டையில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வசந்த் உயிரிழந்தார். இதன் காரணமாக வினோதினி பெரும் சோகத்தில் மூழ்கினார்.

நாட்கள் சென்றாலும் காதலன் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்துவந்த வினோதினி, தனது காதலன் சென்ற இடத்துக்கே செல்வதாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டில் மகள் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் உயிரிழப்பை தாங்க முடியாமல் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

42 வருடங்களுக்குப் பின்னர் பெற்றோரை தேடியலையும் டென்மார்க் தமிழ்ப்பெண்!!

டென்மார்க்கில்..

சிறிய வயதிலேயே பெற்றோரை பிரிந்து சென்ற பெண் ஒருவர் தற்போது தனது பெற்றோரை தேடிவருகிறார். பொதுவாக பலருக்கும் சிறிய வயது வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். ஆனால், சிறுவயதிலேயே பெற்றோர்களை பிரிந்தவர்களுக்கு காலம் அப்படி இருப்பதில்லை.

மீண்டும் தங்களது பெற்றோர்களை சந்திக்கும் தருணத்திற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இவர்களது வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது. அப்படியானவர்களில் ஒருவர் தான் நிஷா. டென்மார்க்கில் தற்போது தனது கணவருடன் வசித்துவரும் நிஷா தனது பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

டென்மார்க்கை சேர்ந்தவர் பேட்டரிக். பிலாங்சர் டர்பன் பகுதியை சேர்ந்த இவருக்கு 45 வயதாகிறது. இவர் நிஷாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு 3 வயது குழந்தையாக நிஷா இருந்தபோது சென்னை பல்லாவரத்தில் உள்ள கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். அப்போது இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த டென்மார்க்கை சேர்ந்த ராஸ் முஷன் என்பவர் நிஷாவை கண்டதும் தத்தெடுக்க விரும்பியிருக்கிறார்.

அதன்படி, நிஷாவை அழைத்துக்கொண்டு டென்மார்க் திரும்பியுள்ளார் ராஸ். அப்படித்தான் நிஷாவிற்கும் டென்மார்க்கிற்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. காலங்கள் உருண்டோடிய நிலையில் நிஷாவிற்கு தன்னுடைய பெற்றோரை பார்க்க வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனை தனது கணவரிடமும் தெரிவித்திருக்கிறார் நிஷா. அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர் இருவரும். பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தின் சேலத்தில் தனது பெற்றோரை தேடிவருகிறார் நிஷா.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”42 வருடங்களுக்கு முன்னர் எனது பெயர் மீனாட்சி என ஞாபகம் இருக்கிறது. சொந்த ஊர் கபூர் அல்லது கருப்பூர் என்பதுபோல நினைவிருக்கிறது.

அதனால் இப்பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகளை பார்த்தால் பழைய ஞாபகம் வருகிறதா? என இங்கு வந்தேன். எப்படியும் எனது பெற்றோரை கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி… அழுதுகொண்டே இருக்கும் போதே நேர்ந்த துயரம்!!

விழுப்புரத்தில்..

பல காலமாக இணைந்து வாழ்ந்த கணவர் உயிரிழந்த சூழலில், அடுத்து மனைவிக்கும் நேர்ந்த துயரம், குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 71).

இவருக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, குப்புசாமி உடலை அவரது மகன்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கண்டாச்சிபுரத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் குப்புசாமியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அங்கே தீவிரமாக நடந்து கொண்டிருக்க, குப்புசாமி மரணம் அங்கிருந்தவர்களை நிலைகுலையவும் வைத்திருந்தது.

மேலும் இத்தனை ஆண்டுகள் தன்னுடன் கணவனாக இருந்து பல்வேறு தருணங்களில் உடன் இருந்து பார்த்துக் கொண்ட குப்புசாமியின் இழப்பு அவரது மனைவி சரஸ்வதியை கடுமையாக பாதிக்கவும் செய்திருந்தது.

இந்த நிலையில் அங்கே கூடி இருந்த அனைவருக்கும் மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது. குப்புசாமி உடல் அருகே இருந்த அழுது படி இருந்த அவரது மனைவி சரஸ்வதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்த மனைவியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இன்னும் அதிக சோகத்தை ஏற்படுத்தியதுடன் இறப்பில் கூட இணை பிரியாத தம்பதி என குப்புசாமி மற்றும் சரஸ்வதி ஆகியோரை உருக்கத்துடனும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஊரெல்லாம் திருமண பத்திரிக்கை கொடுத்தாச்சு… சில நாட்களில் திருமணம்.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கல்யாண பத்திரிக்கை கொடுத்தாச்சு. ஜெயந்தி தற்கொலை முடிவை தேடிக் கொண்ட அன்றைய தினம் கூட, அவரது பெற்றோர்கள் ஜெயந்தியின் கல்யாண பத்திரிக்கையை சொந்தக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தான் சென்றிருக்கிறார்கள்.

மாப்பிள்ளையையும் ஜெயந்திக்கு பிடித்து போயிற்று. ஜெயந்தியின் சம்மதம் கேட்டப்பிறகு தான் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், கடன் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால், ஜெயந்தி தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை தாம்பரத்தையடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் மதியழகன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதியழகனின் மகள் ஜெயந்தி (31). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்தையொட்டி அவரது பெற்றோர், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, ஜெயந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது சகோதரர் நவீன் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தபோது, வெளியே கேட் மூடப்பட்டிருந்தது.

இதனால், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சகோதரி ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தகவல் தெரிவித்ததும், தந்தை மதியழகன் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜெயந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு 31 லட்சம் ரூபாய் லோன் வாங்கி கட்டி வந்தது தெரிய வந்தது. மேலும், மார்ச் மாதம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடன் அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

23 வயது இளம் பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது நபர் : 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த திருமணம்

உத்தரப் பிரதேசத்தில்..

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நக்கத் யாதவ் தன்னை விட 42 வயது குறைவான பெண்ணை 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் ஹூசைனாபாத் பகுதியை சேர்ந்த நக்கத் யாதவ் என்ற 65 வயது தாத்தாவிற்கு 6 மகள்கள் உள்ளனர்.

இந்த 6 மகள்களுக்கும் உரிய முறையில் நக்கத் யாதவ் திருமணம் செய்து வைத்து தனது கடமை நிறைவேற்றியுள்ளார். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கத் யாதவ்-வின் மனைவி மரணமடைந்ததால்,

தனிமையில் வாடிய 65 வயது நக்கத் யாதவ் வேறு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னை விட 42 வயது குறைவான நந்தினி என்ற 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள நக்கத் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

நக்கத் யாதவ்-வின் 6 மகள்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இரு வீட்டாரின் முன்னிலையில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோவிலில் நந்தினி என்ற 23 வயது பெண்ணுக்கு நக்கத் யாதவ்(65) தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார்.

உறவினர்கள் முன்னிலையில் அனைத்து சடங்குகள் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் நக்கத் யாதவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த திருமணம் குறித்து பேசிய நக்கத் யாதவ், மனைவியின் மறைவுக்கு பிறகு தனிமையில் வாடியாதால் மறுமணம் செய்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மணப்பெண் நந்தினியும் இந்த திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சி எனவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் : நடந்த விபரீதம்!!!

நெல்லையில்..

தென்காசியை போலவே நெல்லையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண்ணை, அவரது பெற்றோர் குஜராத்திற்கு கடத்திச் சென்றனர்.

அதன்பிறகு, பல்வேறு கட்ட நீதிமன்ற விசாரணைகளுக்கு பின், அந்த இளம்பெண் உறவினர்களுடன் சென்று விட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நெல்லையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா -சுகந்தி தம்பதியரின் மகன் முருகன் (24), பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19) ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால், சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 18ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சுமிகாவின் தந்தை முருகேசன் தனது மகளை காணவில்லை என்று கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து முருகன், சுமிகா இருவரையும் போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் திருமணம் செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்து சேர்ந்து வாழ்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, முருகன், சுமிகா இருவரும் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர். பின்னர், இது தொடர்பாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சுமிகாவின் தந்தை முருகேசன், தாய் பத்மா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருவதுடன் சுமிகாவை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காதுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

திருவொற்றியூரில்..

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி என்பவரின் மகள் அபிநயா(16). இவர் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்துவந்த நிலையில், இவருக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர்கள் திருவொற்றியூரில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சிகிச்சைக்கு அபிநயாவை அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அறுவை சிகிச்சை சயெ்ய வேண்டும் என்று கூறியுள்ளதையடுத்து கடந்த 14ம் தேதி காதில் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த சில மணிநேரத்தில் அபிநயா நெஞ்சுவலிப்பதாக கூறியதையடுத்து, அவருக்கு எக்கோ சோதனை எடுத்து பார்த்த போது, அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்ததால், மேல் சிகிச்சைக்கு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவறான சிகிச்சை மேற்கொண்டதால் குறித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்பு பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்பு மருத்துவமனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கலைந்து சென்றுள்ளனர்.

என் உயிரே அவன்தான்… காதலனுக்காக உயிரைவிட்ட காதலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை ஆவடி அருகே ரயிலில் அடிப்பட்டு காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். உலக காதலர்களால் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி தனது வாழ்க்கையையே முடித்துக்கொண்ட சம்பவம் மிகவும் உருக்கமாக உள்ளது.

சென்னை, ஆவடி அடுத்து கோவில்பாதகை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வினோதினி (22). இவர் வீட்டிலிருந்தே அழகப்பா யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து வந்தார்.

இவர் படிக்கும்போது இவருடன் படித்த கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்த் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காதலன் அகால மரணம் அடைந்த செய்தியை கேட்ட வினோதினியின் மனதில் பேரிடியை இறக்கியது. ஒவ்வொரு நாளும் காதலனை குறித்து வருந்திக்கொண்டிருந்த வினோதினி காதலன் இல்லாத உலகில் நாம் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.

மன உளைச்சலில் இருந்த வினோதினி நேற்று முன்தினம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வினோதினி வீட்டில் சென்று பார்த்த போது, வினோதினி படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதை கண்டு பேரதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வினோதினியின் உடலை கீழே இறக்கி தடயங்களை சேகரித்து குறிப்பிகளை எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வினோதினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலின் தோல்வியையும், காதலரின் இழப்பையும் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தை கொடுத்தாலும், நம்மை பெற்றெடுத்து இந்த உலகில் வாழ்வதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்த தாய், தந்தையை மறந்து காதலனுக்காக தற்கொலை செய்துகொண்ட வினோதினியை போல வேறு யாரும் அந்த தவறை செய்யக்கூடாது என்று வினோதியின் குடும்பமே கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.

சித்தப்பாவின் திருமணத்துக்கு மகள் கொடுத்த அதிசய பரிசு… அசந்துபோன உறவினர்கள்!!

மேட்டுப்பாளையத்தில்..

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது ஏழு தலைமுறை மூதாதையர் பற்றிய தகவலை திரட்டியுள்ளார். மேலும் அதனை தனது சித்தப்பா திருமணத்தில் பரிசாகவும் அளித்து அனைவரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்க மித்ரா. ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் கொரோனா காலத்தில் விடுமுறையின் போது தனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன்னுடைய முன்னோர்கள் பற்றி அறிய முற்பட்டிருக்கிறார்.

அதன்படி தனது பெற்றோர் மற்றும் தாத்தாவின் உதவியுடன் தனது மூதாதையர்களின் பெயர்கள், அவர்களது வாழ்க்கை, அவர்களுடைய ஊர் ஆகியவை பற்றி தகவல்களை திரட்டி இருக்கிறார் சங்கமித்ரா.

இவருடைய தேடல் நீள, பல அரிய தகவல்களை திரட்டியுள்ளார் சங்கமித்ரா. அதாவது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த தனது முதல் தலைமுறை தாத்தா துவங்கி 7 தலைமுறையை சேர்ந்தவர்கள் வரை அறிந்திருக்கிறார் இந்த சிறுமி.

மேலும், அவர்களுடைய முதன்மை பணி, விருந்தோம்பல் பண்பு, கலாச்சார குணம் ஆகியவை பற்றியும் தகவல்களை ஆர்வத்துடன் திரட்டியுள்ளார் சங்க மித்ரா.

தன்னுடைய மூதாதையர்கள் பற்றி அறிந்துகொள்ளவே இந்த முயற்சியில் இறங்கியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், இதுதொடர்பாக அவர் திரட்டிய புகைப்படங்களை கொண்டு ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சங்க மித்ராவின் சித்தப்பாவான கவுதம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய சித்தப்பாவின் திருமணத்தின்போது, தான் உருவாக்கி வைத்திருந்த சார்ட்டை திருமண பரிசாக அளித்திருக்கிறார் சங்க மித்ரா. இதனை கண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூழ்கியுள்ள சிறுவர்களுக்கு மத்தியில் தன்னுடைய மூதாதையர்கள் குறித்து ஆர்வத்துடன் தகவல் சேகரித்த சங்க மித்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பொம்மைக் காதலியுடன் வாழும் நபர்… மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாம்!!

கொலம்பியாவில்..

பொம்மை ஒன்றை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் ஒருவர் கொலம்பியா நாட்டில் வாழ்கிறார். அவள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன் என @montbk959 என்ற பெயரில் டிக்டாக் விடியோக்கள் வெளியிடும் ஒருவர், ஆளுயர பெண் பொம்மை ஒன்றுடன் வாழ்ந்துவருகிறார்.

அந்த பொம்மைக்கு அவர் நடாலியா என்று பெயர் வைத்துள்ளார். சமூக ஊடகங்களில் மக்கள் பொம்மையுடன் வாழ்கிறீர்களே என விமர்சித்தால், பொம்மைகள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன், அதாவது எனக்குக் கிடைத்ததே என்கிறார்.

நடாலியா தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். தங்கள் மூன்றாவது பிள்ளைக்கு சாம்மி என பெயர் வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோக்களை பார்க்கும் சிலர், இது என்ன பைத்தியக்காரத்தனம் என விமர்சித்தாலும், தன் காதலி கர்ப்பமாக இருப்பதாக அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ 2.2 மில்லியன் முறை பார்வையிடப்பட்டு 72,000 லைக்குகளைப் பெற்றுள்ளது, மற்றொரு வீடியோ 237,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.