வவுனியா செய்திகள்

வவுனியாவில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கண்காட்சியும் விற்பனையும்!!

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி, விற்பனை நிகழ்வுகள் நேற்று (26.08) வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள பலநோக்கு பயிற்சி...

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்!!

காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் பெரும் போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியாவில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினமாகும்....

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த மகோற்சவம்!!

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம்...

மாவீரன் பண்டார வன்னியன் – வரலாற்றுக் கட்டுரை!!

தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய மாவீரன் பண்டார வன்னியன் ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப் பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது....

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பண்டார வன்னியன் ஞாபகார்த்த நிகழ்வு!!(படங்கள், காணொளி)

பண்டார வன்னியன் ஞாபகார்த்த நிகழ்வு இன்று காலை 8.40 மணியளவில் வவுனியா செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலையருகே இடம்பெற்றது. முல்லைதீவு கோட்டையை பண்டார வன்னியன் வெற்றிகொண்ட தினமான (25.08.1803) இன்றய தினத்தில்...

வவுனியா ஸ்ரீராமபுரம் ஸ்ரீ நடன முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா ஸ்ரீராமபுரம் ஸ்ரீ நடன முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் (23.08.2014) ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 தினங்கள் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்று 3ம் திகதி பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில்...

வவுனியாவில் நன்னீர் மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்!!

வவுனியா மாவட்டத்தில் குளங்களில் பிடிக்கும் மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்ஷந்திர வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்டத்தில் நிலவிய வரட்சியினை அடுத்து குளங்களின் நீர் வற்றியுள்ளதாகவும் இதனால் மீன்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ரததோற்சவம்!!

வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ரததோற்சவம் நேற்று முன்தினம் (21.08) இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர். அதேபோன்று ஆலயத்தில் நேற்று (22.08)...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்திற்கு இந்துக் கலாச்சார அமைச்சினால் 63 நாயன்மார்களுடைய திருவுருவப்...

வவுனேஸ்வரம் என அழைக்கப்படும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலுக்கு நேற்று (22.08.014) வெள்ளிகிழமை இந்துக் கலாச்சார அமைச்சினால் 63 நாயன்மார்களுடைய திருவுருவப் படங்கள் வழங்கப்பட்டன. -கஜேந்திரன்- ...

வவுனியா – கொழும்பு மார்க்கத்தில் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக எதிர்வரும் மூன்று வாரங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இந்த நடவடிக்கைகளுக்காக பல குழுக்கள் நாடு பூராகவும்...

வவுனியா ஊடகவியலாளர் ஒருவரின் தொலைபேசியில் இருந்து மோசடியான முறையில் சுதந்திர ஊடகவியலாளர் இயக்க முக்கியஸ்தருக்கு மிரட்டல்!!

வவுனியாவில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவருடைய கைத்தொலைபேசியில் இருந்து சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் முக்கியஸ்தராகிய சுனில் ஜயசேகரவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சுனில் ஜயசேகர முறைப்பாடு ஒன்றைச்...

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகர்ப் பகுதியில் 2 கிராம் கஞ்சாவுடன் நடமாடிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரையே கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்த 2...

தமிழ் இனத்தை சிதைக்கவே சிங்கள குடியேற்றங்கள் தொடர்கின்றன : செல்வம் அடைக்கலநாதன்!!

தமிழ் இனத்தை சிதைக்கவே தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியபுளியங்குளம் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்கள்...

வவுனியா இளைஞனுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்னையில் திருமணம்!!

சென்னையில் தடுப்புக் காவலில் இருக்கும் இலங்கையை - வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு சென்றதாகத் தெரிவித்து,...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்!!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் குடாகச்சகொடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இவ் விபத்தில், திருகோணமலை, அன்புவெளிபுரத்தைச்...

வவுனியாவில் மழை பெய்வதை தொடர்ந்து நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் விழா!!

வவுனியாவில் அண்மைக்காலமாக மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் அண்மை நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இதனை அடுத்து இதற்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் நிகழ்வு ஒன்று வவுனியா...