உலகச் செய்திகள்

ரஷ்ய ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 19 பேர் அதிர்ச்சி மரணம்..!

ரஷ்யாவின் வடக்கே இருக்கும் யாகுதியா பகுதியில் 11 குழந்தைகள் உள்பட 25 பயணிகள், 3விமான சிப்பந்திகளுடன் மிக் 8 ரக ஹெலிகாப்டர் சென்றது. அது திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில் குழந்தைகள் உள்பட  19பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிர்...

2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்..!

அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள். அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக்...

எகிப்து போராட்டத்தின் போது நடு வீதியில் வைத்து பெண் நிருபர் பலாத்காரம்..!

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எகிப்தின் ஜனாதிபதி முகமது மொர்ஸிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில்...

சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா..!

குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்ந்துகொண்டுள்ளதை ஒட்டி, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரோஷியா அதிகாரபூர்வமாக சேர்ந்துகொண்ட உள்ளூரின் நள்ளிரவு நேரத்தில் மக்கள் பட்டாசு கொளுத்தி...

அமெரிக்கா கண்காணிப்பு: ஸ்நோவ்டன் கசியவிட்டுள்ள புதிய தகவல்..!

பிரிட்டனின் கார்டியன் செய்தி நாளிதழுக்கு கசியவிடப்பட்டுள்ள புதிய தகவல்களின்படி, பிரான்ஸும் கிரேக்கமும் இத்தாலியும் அமெரிக்காவின் உளவுத்துறைக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஐரோப்பாவைச் சேராத-கூட்டாளி நாடுகளும் அமெரிக்காவின் என்எஸ்ஏ புலனாய்வுத்துறையினால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணமொன்று...

காட்டுதீயை அணைக்க சென்ற அமெரிக்க வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி..!.

கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து130 கிலோமீட்டர் தொலைவில்...

பாகிஸ்தானில் மசூதி அருகே மனித குண்டு வெடித்து 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதி அருகே குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி மனித குண்டாக வந்து இந்த தாக்குதலை நடத்தினான். அதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30  பேர் பரிதாபமாக இறந்தனர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

உகண்டாவில் எண்ணெய் லொறியுடன் கார் மோதல்: தீயில் கருகி 29 பேர் பலி..!

உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள முக்கிய சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் லொறியின் மீது மோதியது. உடனே லாரியில் இருந்து வழிந்தோடிய பெட்ரோலை...

சீனாவில் மீண்டும் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்..!

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஷின்ஜியாங்கில் மோட்டார் சைக்கிள்களில் பட்டாக் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமானோர் அங்குள்ள ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இலகுவில் சென்றடைய முடியாத ஹோடன் நகரில்...

தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி..!

தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இராணுவ...

சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்..!

சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில்...

வத்திக்கான் வங்கி விசாரணையில் மூத்த ஆயர் ஒருவர் கைது..!

வத்திக்கானின் நிதி நிர்வாகத்துறையில் பணிபுரிந்த மூத்த ஆயர் ஒருவர் ( பிஷப்) இத்தாலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகளில் ஈடுபட்டமை, பணத்தை சுருட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மொன்சிக்னோர் நுன்சியோ ஸ்காரானோ...

துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் போர் விமானத்துடன் மோதாமல் தப்பியது..!

துபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வானில், போர் விமானம் ஒன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட விபரம் தற்போது தெரியவந்துள்ளது. வெறும் 3.5 செக்கன்களில் இந்த விபத்து...

கனடாவில் இந்துக் கோவில் உடைப்பு – குற்றவாளிகள் கமராவில் பதிவு..

கனடாவில் இந்துக் கோவில் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த...

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு??

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது. மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து...