வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றையதினம் (26.07.2021) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினையடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார தேவை, அலுலக தேவை போன்றவற்றிகாக,
வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியிலும் பணியாற்றும் இவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்ற இளைஞர்கள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்துபேர்கொண்ட இளைஞர்குழுவினர்,
அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக ஆயுதங்களால் தாக்குதல் நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த நபர்களால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பீகாரின் முசாபர்பூர் கிராமத்தில் தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்ததாக கூறி 17 வயது இளைஞரின் ஆ.ணுறுப்பை து.ண்டித்து அ.டித்துக் கொ.ன்.றுள்ளனர்.
குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து, கொ.ல்லப்பட்ட இ.ளைஞரின் ச.டலத்தை பெண்ணின் குடியிருப்பு முன்பு சடங்குகளுடன் எ.ரியூட்டியுள்ளனர்.
ந.டுங்க வைக்கும் இச்சம்பவம் முசாபர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சவுரவ்குமார் என்ற 17 வயது இளைஞரே காதலித்ததாக கூறி கொ.டூரமாக கொ.ல்லப்பட்டவர்.
இரவு வழக்கம் போல காதலியை காண அவளின் குடியிருப்புக்கு சென்ற சவுரவ்குமாரை குடும்பத்தினர் சேர்ந்து பி.டித்துள்ளனர். பின்னர் கொ.டூரமாக தா.க்கியதுடன் ஆ.ணுறுப்பையும் து.ண்டித்துள்ளனர்.
இதனால் ஆ.பத்து கட்டத்திற்கு சென்ற இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவர்களால் கா.ப்பாற்ற முடியாமல் போனது. இளைஞர் ம.ரணமடைந்த தகவல் அறிந்து குடும்பத்தினரும் கிராம மக்களும் மருத்துவமனையை மு.ற்றுகையிட்டனர்.
உடற்கூராய்வுக்கு பிறகு உ.டலை வாங்கிச் சென்ற குடும்பத்தினர், முக்கிய குற்றவாளியான சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்புக்கு முன்பு உரிய சடங்குகளுடன் எ.ரியூட்டியுள்ளனர். அத்துடன், சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்பையும் அ.டித்து நொ.றுக்கியுள்ளனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு எதிர்வரும் புதன்கிழமை (28.07.2021) தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தடுப்பூசி ஏற்ற தகுதியுடையவர்களின் விபரங்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக சேகரிக்கப்படுகின்றன. தடுப்பூசிகளை மக்களுக்கு ஏற்றுவதற்காக பாடசாலைகள் , பொதுகட்டிடங்கள் என்பன சுகாதார பிரிவினரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திற்கு சினோபாம் அல்லது பைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 நபர்கள் , சுகாதாரப் பிரிவினர், தபால் சேவை பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் சென்ற பெண்ணை, அவரது தாயும் கணவனும் திட்டமிட்டு கொ.லை செ.ய்த சம்பவம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழக மாவட்டம் தேனியில், உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் குடும்பம் நடத்தச் சென்ற பெண்ணை, கொ.லை செ.ய்தது தொடர்பாக அப் பெண்ணின் தாய், கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண், ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார். இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் ச.டலத்தை உறவினர்கள் மயானத்தில் எ.ரிக்க முயன்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் பாதி எ.ரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் ச.டலத்தை மீ.ட்டு, பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொ.லை செய்யப்பட்டது தெரியவர, அவரது உறவினர்களிடம் பொலிஸார் கி.டுக்கிப்பிடி வி.சாரணை நடத்தினர்.
அதில் ரஞ்சிதாவிற்கு வேறொருவருடன் உ.றவு இருந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன், அந்த நபருடன் சென்றதால், குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, ரஞ்சிதாவை அவரது தாய் கவிதா, கணவர் கல்யாணகுமார் உள்ளிட்ட மூவர் கொ.லை செ.ய்தது தெரியவந்தது.
தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும், நங்கநல்லூரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில நாட்களிலேயே கணவர் க.ஞ்சா மற்றும் ம.து அ.ருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், தாய் வீட்டிற்கு சென்று நகை பணம் வாங்கி வருமாறு துன்புறுத்தினார்.
அதுமட்டுமின்றி தன்னை வேலைக்கு செல்லும் படி சண்டை போட்ட அவர், தான் வேலைக்கு சென்ற பின் அதை வைத்து அவருக்கு இரு சக்கர வாகனம் மற்றும் வங்கிக் கடன் பெற்று கொடுத்தேன்.
அதைப் பெற்றுக்கொண்டு சிறிதுகாலம் அமைதியாக இருந்த கணவர் லாரன்ஸ் மீண்டும் ம.து அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்த துவங்கினார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
பின்னர் கணவர் தன்னை சேர்ந்து வாழ அழைத்ததுடன், இன்னும் ஒரு ஆறு மாத காலம் தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும், அதுவரை தன்னை தாய் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனால், கடந்த ஆறு மாத காலம் தனது தாய் வீட்டிலேயே தான் இருந்து வந்தேன். இந்நிலையில், கணவருக்கு வாங்கிகொடுத்த வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து பேசுவதற்காக கணவரையும் மாமியாரையும் சந்திக்க சென்ற போது,
அங்கு திவ்யா என்ற பெண்ணுடன் வந்த கணவர் லாரன்ஸ் மற்றும் மாமியார் ஜெயசீலி ஆகியோர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டனர். அதன் பின் இது குறித்து விசாரித்த போது, திவ்யா என்ற பெண்ணை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
தன்னை அம்மா வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் இது குறித்து புகார் அளித்துள்ளேன். முதல் மனைவி தான் இருக்கும்போதே, தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய கணவர் ,மற்றும் மாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான நிலையில் காரில் பயணித்த சிலர் ம.து போ.தையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின்மீது மோதியது.
அதனால் அந்தக் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்கள், காப்பாற்றுங்கள் என கத்தினார்கள். அதைக்கேட்டு குளேரிக்காடு பகுதி மக்களும் அவ்வழியாக சாலையில் சென்றவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவது நடிகை யாஷிகா ஆனந்த் எனப் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக மாமல்லபுரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.
அப்போது காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரின் சடலத்தை மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது நடிகை யாஷிகா ஆனந்த்தின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி (28) எனத் தெரியவந்தது.
மேல்சிகிச்சைக்காக நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் என மூன்று பேரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொலிசார் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் பயணித்த சிலர் ம.து போ.தையில் இருந்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
ஆனால் இதை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் விசாரணை முடிவில்தான் ம.து அ.ருந்தினார்களா என்ற தகவல் தெரியவரும்.
விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகள் 279-337-304 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இதில் 304 சட்டப்பிரிவுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி 2 மாதங்களுக்கு பின்னர் இன்று (25.07.2021) மாலை மணியளவில் புகையிரதம் பயணித்தது.
கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவையின் வடக்கு தொடருந்து வீதி நாளையதினம் கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஒர் புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி இன்று மாலை சென்றடைந்தது.
நாளை தொடக்கம் வடக்கு தொடருந்து வீதியில் அலுவலக புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. காலை 5.15 க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.
இச் சேவையினை ஆரம்பிப்பதற்கான புகையிரதமே இன்று மாலை அனுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்றடைந்திருந்தது.
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட மாணிக்கவாசகம் இளஞ்செயழின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்பாதுகாவலரான சரத் ஹேமசந்திர என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
சரத் ஹேமசந்திர உயிரிழந்து 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் சிலாபத்தில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
உயிரிழந்த ஹேமசந்திரவின் கல்லறையில் விளக்கேற்றி, வழிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குடும்பத்தாருடன் தானம் வழங்கவும் நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழந்த பின்னர் அவரது பிள்ளைகள் இரண்டினையும் தனது பிள்ளைகளாக கருதும் நீதிபதி, அவர்களின் கல்வி நடவடிக்கைகளு்ககு உதவி செய்து வருகின்றார்.
ஹேமசந்திர உயிரிழந்த தினத்தன்று அவரது மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட மனிதநேயமிக்க நீதிபதி இளஞ்செழியன் தற்போது திருகோணமலை நீதிபதியாக செயற்படுகின்றார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை பேஸ்புக்கில் நீதிபதியை வாழ்த்தி தென்னிலங்கை சேர்ந்த பலரும் பதிவுகளை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், உண்மையான மனிதன். கல்லறையில் வணங்கி விட்டு மாத்திரம் செல்லாமல்,
பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் செயலுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இலங்கை சிறந்த மனிதாபிமான உள்ள இந்த மனிதனுக்கு எங்கள் மரியாதை எப்போதும் உண்டு என பதிவிட்டுள்ளனர்.
தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் யாஷிகாவும் அவருடைய தொழிகள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதால் பொலிசார் நடவடிக்கை
மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மாமல்லபுரம் அருகே காரில் வந்த போது கார் விபத்தில் சிக்கியது.
இதில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பவானியின் உடலைக் கைப்பற்றிய மாமல்லபுரம் பொலிசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் யாஷிகா மற்றும் அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பொலிசார் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன் ஜெய் பிரகாஷ் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் வாயிலாக பள்ளி பாடங்கள் நடைபெற்று வருகின்றன.
அதற்காக ஜெய் பிரகாஷிற்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் தந்தை ரஞ்சித்குமார். அந்த மொபைல் போனில் பள்ளி பாடங்கள் படிக்கும் நேரம் தவிர்த்து, அதிக நேரம் மொபைல் கேம் விளையாடி வந்துள்ளார்.
குறிப்பாக, Free fire போன்ற வ.ன்.மம் நிறைந்த விளையாட்டுக்களை அதிகம் விளையாடி வந்துள்ளார். இதனை அவ்வப்போது குடும்பத்தினர் எ.ச்.ச.ரி.த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அ.டி.மை.யானது போல நாள் முழுவதும் விளையாடி வந்துள்ளார் ஜெய் பிரகாஷ். இதனை கவனித்த அவரது தந்தை ரஞ்சித், மிக க.டு.மை.யாக கண்டித்ததுடன், அவரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி, படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துமாறு அ.றி.வு.றுத்தி உள்ளார்.
இதனால் ம.ன உ.ளை.ச்சலும், வி.ர.க்தியும் அடைந்த ஜெய் பிரகாஷ் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் போர்வையின் மூலம் தூ.க்.கி.ட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றிய சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் அதிகமாக மொபைல் பயன்பாட்டிற்கு அ.டி.மையாக மாறி வரும் சூழலில், ஊரடங்கு காலம் அதனை மேலும் அதிகரித்ததன் காரணத்தால் தற்போது 10 வயது மாணவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொள்ளும் அளவிற்கு நிலமை மோ.ச.மாகி கொண்டிருப்பது பெற்றோர் மத்தியில் க.டு.ம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தேவையான எ.ச்.சரிக்கை உணர்வை பெற்றோர்கள் பெற வேண்டும் என்றும், பள்ளிகள் இது குறித்து போ.தி.ய வி.ழி.ப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எ.தி.ர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
கல்யாண மாப்பிள்ளை முறுக்கில் பட்டு வேட்டி சட்டையுடன் நிற்கும் இவர் தான் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன். அருகில் பட்டுச்சேலையுடன் பவ்வியமாக நிற்பவர் கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரியான மணப்பெண் கலைச்செல்வி.
கலைச்செல்வியை காதல் வலையில் வீழ்த்திய கையோடு , கடந்த ஒரு வருடமாக ஊர் ஊராய் அழைத்துச்சென்று தமிழ் செல்வன் எல்லைமீறி காதல் டூயட் பாடிய விபரீதத்தின் விளைவாய் கலைச்செல்வி கர்ப்பிணியானதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணியானதால், வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி காதலியை கழட்டிவிட்ட தமிழ்ச்செல்வன் மீது கலைச்செல்வி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரிடம், தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று செண்டிமெண்டாக கதை அளந்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
மகனின் இந்த காதல் வாழ்க்கையை அறிந்த பெற்றோர் அவரைக் கைது செய்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்ததோடு, இருவரின் திருமணத்துக்கும் சம்மதித்துள்ளனர்.
இருந்தாலும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து முறுக்கிய எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ் செல்வனிடம், பலாத்கார வழக்கில் சிறைக்கு செல்ல தயாராய் இருக்கும் படி போலீசார் கூறியதும், மிரண்டு போன தமிழ்…. திரு நிறை செல்வனாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்தே அவர்களுக்கு திருமணம் நடந்தது.
பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மகளிர் போலீசார் தங்கள் சொந்த பணத்தில் புது புடவை, வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து மாலை வாங்கி வந்து கொடுத்தனர். அங்கு கெட்டி மேளத்திற்கு பதிலாக கைதட்டு மேளம் முழங்க கலைச்செல்வி கழுத்தில் தமிழ்ச்செல்வன் தாலிகட்டினார்.
பின்னர் போலீசார் வந்து மாப்பிள்ளைக்கு வார்த்தைகளால் வேப்பிலை அடித்ததால் பெற்றோர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றார் புதுமாப்பிள்ளை.
பின்னர் கோவிலை சுற்றிவர இருவரும் ஜோடியாக சென்ற நிலையில், மணப்பெண்ணை தனியாகவிட்டு மாப்பிள்ளை மட்டும் தனியாக வந்தார். அருகில் நின்ற பெண் போலீஸ் ஒருவர், மணமகன் தமிழ் செல்வனுக்கு புத்தி சொல்லி அனுப்பிவைத்தார்.
கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி விட்டு காவல் நிலையத்தில் இருந்து அழாதகுறையாக காதல் மனைவியை கூட்டிச்சென்றார் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன்.
காதலி புகாரில் காதலன் மீது ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினார் என்று வழக்கு போட்டு இருவரது வாழ்க்கையையும் சீரழிப்பதை விட , இருவரையும் அழைத்து பேசி, முறைப்படி கவுன்சிலிங் செய்து பெற்றோர் முன்னிலையில் மணம் முடித்து வைத்து வாழ்வில் புதிய ஒளியை ஏற்றி வைத்து உள்ளனர் மகளிர் போலீசார்.
கேரளாவில் பிரபல ஆர்ஜே-வான அனன்யா குமாரி அலெக்ஸ் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ்(வயது 28).
இந்நிலையில் இவருடைய காதலரான ராஜ்(வயது 36), அவருடைய நண்பரின் வீ.ட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். காதலியின் பி.ரிவை தா.ங்க முடியாமல் அவர் த.ற்.கொ.லை செ.ய்.தி.ருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இ.யற்கைக்கு மாறான ம.ர.ண.ம் என வழக்கு பதிவு செய்துள்ள போ.லீசார் வி.சாரணையை தீ.விரப்படுத்தியுள்ளனர்.
அடுத்து சில மாதங்களில் கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான டெல்டா திரிபு உலகம் முழுவதும் துரிதமாக பரவும் ஆபத்து காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்த வைரஸ் திரிபு உலகம் முழுவதும் 124 நாடுகளில் பரவியுள்ளது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த மூன்று வாரங்களில் உலகம் முழுவதுமு் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.
தினம் அடையாளம் காணப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் கோவிட் தடுப்பு சட்டங்களை கடுமையாக நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் கொள்ளவு தாண்டும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு பரவது சம்பந்தமாக கூடிய கவனத்தை செலுத்தி சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பாரதூரமான சிக்கல் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் திரிபு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வைரஸ் சுமை சுமார் 1,000 மடங்கு அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் டெல்டா தொற்று அதிகமாகப் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வின் படி, 2020இல் கண்டறியப்பட்ட வைரஸ் சுமையை விட டெல்டாவின் பரவல் 1000 மடங்கு அதிகமாக இருப்பதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்தல் மற்றும் மரபணு கண்காணிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே உலக அளவில் டெல்டா மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் என்று சந்திம ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.