2020 புத்தாண்டு பலன் : கடக ராசி : முழுமையான பலன்கள்!!

கடக ராசி

பொறுமையின் சிகரமாக இருக்கும் கடக ராசியினரே இந்த வருடம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்

தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும்.

பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம் : இந்த வருடம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

பூசம் : இந்த வருடம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

ஆயில்யம் : இந்த வருடம் தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.

பரிகாரம் : திங்கள் கிழமையில் அம்மனுக்கு மல்லிகை மலரை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன்

2020 புத்தாண்டு பலன் : மிதுன ராசி : முழுமையான பலன்கள்!!

மிதுன ராசி

எடுத்த காரியத்தை முடிப்பதற்காக ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்யும் மிதுன ராசியினரே இந்த வருடம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார்.

ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம்.

உங்கள் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் : இந்த வருடம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

திருவாதிரை : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

பரிகாரம் : பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் – வெள்ளி

2020 புத்தாண்டு பலன் : ரிஷப ராசி : முழுமையான பலன்கள்!!

ரிஷப ராசி

உடல் நிலையில் முன்னேற்றத்தை காண விரும்பும் ரிஷப ராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த வருடம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும்.

வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை வீட்டில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தூக்கமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.அரசியல்வாதிகள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவீர்கள். இதனால் தொகுதி மக்களிடம் நற்பெயர் கிட்டும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

ரோகிணி : இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள் : இந்த வருடம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம் : வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் – வெள்ளி

2020 புத்தாண்டு பலன் : மேஷ ராசி : முழுமையான பலன்கள்!!

மேஷ ராசி

உன்னதமான வாழ்க்கையை வாழ விரும்பும் மேஷ ராசியினரே இந்த வருடம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.அரசியல்துறையினர் வீட்டைவிட்டு வெளியில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

அஸ்வினி : இந்த வருடம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரணி : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

கார்த்திகை : இந்த வருடம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

பரிகாரம் : செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

வெளிநாட்டில் து டிதுடித்து உயிரிழந்த 25 வயது இளம்பெண் : உடல் உறுப்புகள் தானம் குறித்து முன்னரே எழுதிய வரிகள்!!

சரிதா ரெட்டி

அமெரிக்காவில் இந்தியப்பெண் கார் விபத்தில் உ யிரிழந்த நிலையில் அவர் விருப்பப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா ரெட்டி (25). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு மிச்சிகனில் சரிதா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வேகமாக வந்த கார் சரிதா கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதில் நால்வரும் படுகாயமடைந்தனர். இன்னொரு காரில் வந்த நபர் கு டிபோ தையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வ லியால் து டித்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சரிதா ஏற்கனவே மூ ளைச் சாவு அடைந்துவிட்டது தெரிந்தது. மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் தனக்கு எதாவது நேர்ந்தால் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என சரிதா ஏற்கனவே எழுதி வைத்தது தெரியவந்ததையடுத்து அவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சரிதா குடும்பத்தார் சம்மதத்துடன் மருத்துவர்கள் எடுத்தனர்.

இதனிடையில் சரிதாவின் ச டலம் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ஒன்லைன் மூலமாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெ டித்துச் சி தறிய விமானம் : இ றப்பதற்கு முன்னர் கணவனுக்கு இளம் மனைவி அனுப்பிய மெசேஜ்!!

புறப்பட்ட சிறிது நேரத்தில்..

அமெரிக்காவில் கிளம்பிய சிறிது நேரத்தில் வெ டித்து சி தறிய விமானத்தில் இருந்த இளம்பெண் உ யிரிழப்பதற்கு முன்னர் தனது கணவருக்கு இறுதியாக அனுப்பிய மெசேஜ் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

Louisianaவில் இருந்து சிறிய ரக விமானம் கடந்த சனிக்கிழமை கிளம்பிய நிலையில் அதில் மொத்தம் ஐந்து பயணம் செய்தனர். கல்லூரியில் நடக்கும் கால்பந்து போட்டியில் பங்கேற்கவே அதில் பயணம் செய்தவர்கள் சென்றார்கள். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வெ டித்து சி தறி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த Ian Biggs (51), Vaughn Crisp (59), Gretchen Vincent, (51), Walker Vincent (15) மற்றும் McCord ஆகிய ஐவருமே உ யிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையில் ஐந்து பேரில் McCord (30) என்ற இளம்பெண் விமானத்தில் ஏறியவுடன் தனது கணவர் ஸ்டீவன் செல்போனுக்கு தனது செல்போனில் இருந்து ”ஐ லவ் யூ” என மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த மெசேஜை ஸ்டீவன் உடனடியாக பார்க்காமல் தாமதமாகவே பார்த்துள்ளார். பின்னர் அவரும், ஐ லவ் யூ டூ என மனைவிக்கு மெசேஜ் அனுப்பினார். ஆனால் ஸ்டீவன் மெசேஜை McCord பார்த்தாரா அல்லது அதற்குள் உ யிரிழந்துவிட்டாரா என தெரியவில்லை.

இது குறித்து ஸ்டீவன் கூறுகையில், என்னுடைய மெசேஜை கடைசியாக McCord பார்த்திருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன், விபத்துக்கான காரணம் குறித்து நான் ஆராயவில்லை. ஏனென்றால் என் மனைவி எப்படியிருந்தாலும் என்னிடம் திரும்ப வரமாட்டாள் என்பதை நான் அறிவேன் என சோ கத்துடன் கூறியுள்ளார்.

வயிறு வ லிப்பதாக மருத்துவமனைக்கு சென்ற 13 வயது சிறுமி : தந்தையால் தாயாகி உ யிரிழந்த சோ கம்!!

13 வயது சிறுமி

வயிறு வ லிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்ற ஒரு 13 வயது சிறுமி, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்று உ யிரிழந்த நிலையில், அவளது கர்ப்பத்துக்கு காரணம் அவளது சொந்த தந்தைதான் என்று தெரியவந்ததால் அ திர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரேஸிலில் Luana Ketlen (13) என்ற சிறுமி க டுமையாக வயிறு வலி ப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளாள். அவளை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்.

உடலில் போதுமான இரத்தம் இல்லாமல் அ வதியுற்ற Luana, இனியும் குழந்தையை சுமப்பது ஆபத்து என்பதால் Luanaவை பிரசவிக்க செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள் Luana. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

ஆனால், அதற்குப் பின் Luanaவுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அவளது கல்லீரல், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டதோடு அவளுடைய இரத்த அழுத்தமும் க டுமையாக குறைந்தது.

ஆகவே உள்ளூர் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், தலைநகரிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டாள் அவள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே அவளது உ யிர் பி ரிந்தது.

இதற்கிடையில், Luanaவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரித்தபோது, அவளது சொந்த தந்தையான Tome Faba (36)தான் கு ற்றவாளி என்பது தெரியவந்தது. தன் தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்ல க ட்டாயப்படுத்தப்பட்ட Luanaவை, மீன் பிடிக்கச் செல்லும்போது Tome தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வ ன்புண ர்ந்து வந்தது தெரியவந்தது.

இதற்கிடையில், மகளுக்கு குழந்தை பிறந்த விடயம் தெரிந்ததும் Tome த லைமறை வானார். ஒரு வாரத்திற்குப்பின் அவரைக் கைது செய்த பொலிசார், சி றார் பா லியல் து ஷ்பிரயோ கம் மற்றும் கொ லைக் கு ற்றச்சாட்டுகளை Tome மீது சுமத்தியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட பயணிகளை கா ப்பாற்றிவிட்டு உ யிரிழந்த பேரூந்து சாரதி : சோக சம்பவம்!!

பேரூந்து சாரதி

தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பணியில் இருந்த போது நெ ஞ்சுவ லி ஏற்பட்டதால், பேருந்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். 50 வயதான இவர் சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சங்கராபுரம் – மல்லாபுரம் செல்லும் பேருந்தை இயக்கி வந்த இவர், பிற்பகல் உள்ளூர் நேரப்படி 2:00 மணியளவில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் சென்று கொண்டிருந்தபோது தேவபாண்டலம் அருகே தி டீரென பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, ஸ்டியரிங்கில் பாண்டியன் ம யங்கி வி ழுந்தார்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் கண்ட்ரக்டர் ஆம்புலன்ஸ் முலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் பாண்டியனை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பாண்டியன் இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

நெஞ்சு வ லியிலும் பேருந்தை ஓரமாக நிறுத்தி 50-க்கும் மேற்பட்ட பயணிகளைக் கா ப்பாற்றி, உ யிரைவிட்ட டிரைவரை நினைத்து பயணிகள் சோ கத்தில் ஆழ்ந்தனர். உ யிரிழந்த பாண்டியனுக்கு 40 வயதில் மனைவியும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செத்துவிடுவேன் போல இருக்கு, என்னை காப்பாற்று என மனைவியிடம் கெஞ்சிய கணவன் : அடுத்து நடந்த பரிதாபம்!!

மனைவியிடம் கெஞ்சிய கணவன்..

தமிழகத்தில் வி ஷ மா த்திரையை சாப்பிட்டு விட்டேன் எனவும் தன்னை கா ப்பாற்றுமாறும் மனைவியிடம் கெ ஞ்சிய கணவன் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.

ம து ப ழக்கத்திற்கு அ டிமையான ராஜேந்திரன் தினமும் ம து கு டித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி நிர்மலாவிடம் த கராறு செய்வாராம். அந்த சமயத்தில், இந்த உலகத்தில் இருப்பதை விட சா வதே மேல் என்று சொல்வாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ராஜேந்திரன் வழக்கம் போல் ம துபோ தையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மனைவியிடம், ஒருவித பதற்றத்துடன் பேசியுள்ளார்.

அதாவது, ம துபோ தையில் வி ஷ மாத்திரை தின்று விட்டேன், செ த்து விடுவேன் போல் இருக்கிறது. எனவே, தன்னை கா ப்பாற்றுமாறு கெஞ்சினார். அதே சமயத்தில், அங்கேயே திடீரென ம யங்கியும் வி ழுந்தார்.

உடனே நிர்மலா, தன்னுடைய தம்பி விஜயகுமாருடன் சேர்ந்து கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இ றந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் வைத்தியர் ஒருவரின் மனைவி த ற்கொ லை : பொலிஸார் தீவிர விசாரணை!!

தீவிர விசாரணை..

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துா க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம்பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருந்தது.

அந்தவகையில், த ற்கொ லைக்கான காரணம் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இத் த ற்கொ லை தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் எட்டு பேர் காயம்!!

எட்டு பேர் காயம்

யாழ். பொன்னாலைச் சந்தியில் உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேகமாகச் சென்ற உழவு இயந்திரம் பொன்னாலைச் சந்தியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது உழவு இயந்திர பெட்டியானது தனியாகக் கழன்று தடம் புரண்டது.

இதன்போது படுகாயமடைந்த இருவர் உட்பட 6 பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றைய இருவர் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பின்னர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) ஆகியோரும் பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), எஸ்.துஜிபன் (வயது-20) ஆகியோருமாக 8 பேரே காயமடைந்துள்ளனர்.

பசுங்கிளிராசா, துஜீபன் ஆகியோர் காரைநகர் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்!!

யாழில்..

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும் , மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.

அந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு , லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது , சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள் , கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை மின்னஞ்சல் ஊடாக ம ர்ம கு ம்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் ம ர்ம கு ம்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர் , திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபா பணத்தினை அந்த ம ர்ம கு ம்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பணப் பரிசிலும் , காரும் இலங்கைக்கு வந்து விட்டது எனவும் அதனை பெற்றுக்கொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் , காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் வி சாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அத்துடன்,

வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த ம ர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும், திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த ம ர்ம நபர்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை.

தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது , குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது , உடைந்த கண்ணாடி போத்தல்கள் , பஞ்சு , நாணய தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம் , நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன் , ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் வாங்கியுள்ளனர். இது தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோ சடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும் , அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!!

வடமாகாணத்தில்..

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் கடமையாற்றி வந்த நிலையில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது யாழில் கடமையாற்றும் 120 தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

கிணற்றிலிருந்து..

மூதூர் பகுதியில் கிணறொன்றிலிருந்து இளைஞனொருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்தே இளைஞன் ஒருவரின் ச டலமொன்று நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் கிளிவெட்டி, 58, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாகரன் கிஜோதன் என்ற 18 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து கா ணாமல் போயிருந்த நிலையில் இளைஞனை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் ஈடுபட்டிருந்த வேளை அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த அவரது மாமா தற்செயலாக வீட்டுக்கு முன்னால் உள்ள கிணற்றை பார்வையிட்டபோது கிணற்றுக்குள் ச டலம் தென்பட்டதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலத்தை உறவினர்கள் கிணற்றுக்குள் கிடப்பதை அவதானித்து இருந்த நிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்ட மூதூர் பொலிஸார் சடலத்தை திடீர் ம ரண விசாரணை அதிகாரி ஏ. ஏ ஜே. எம். நூறுல்லாஹ் முன்னிலையில் மீட்டனர்.

இந்நிலையில் கிணற்றுக்குள் விழுந்து ம ரணித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம் நூறுல்லாஹ் ச டலத்தை பி ரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் வெ ட்டுக் கா யங்களுடன் ஆண் ஒருவரின் ச டலம் மீட்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – மலையாளபுரம் புதுஜயன் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் ப லத்த வெ ட்டுக் கா யங்களுக்கு இ லக்காகிய நிலையில் ஆணொருவரின் ச டலம் நேற்று(30.12.2019) நள்ளிரவு மீ ட்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெ ரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில்..

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெ ரோயின் போ தைபொ ருளை பஸ்ஸில் க டத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் பொலிஸார்,

அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு கிலோ ஹெ ரோயின் போ தைப்பொ ருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) போன்றோர் முறியடிப்பினை மேற்கொண்டிருந்தனர்.