சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை வெளியாகின்றது.
அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
“நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன் நடித்தது, ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம், ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். எனவே நாங்கள் பல ‘ரீ டேக்’ எடுக்க வேண்டியதாக போய் விட்டது.
நான் நடித்த முந்தைய படங்களை விட ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் எனக்கு காதல் காட்சிகள் அதிகமாகவே இருக்கின்றது. ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷின் சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டுவந்துவிட்டது.
சித்ரா லக்ஷ்மன் சார், லிவிங்ஸ்டன் சார் போன்ற மூத்த கலைஞர்கள், காளி வெங்கட், யோகி பாபு போன்ற புதிய கலைஞர்கள் மற்றும் பேபி மோனிக்கா என எல்லா தலைமுறை கலைஞர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் பெற்று தந்திருக்கிறது. நிச்சயமாக நாளை வெளியாகும் கட்டப்பாவ காணோம் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்கு வைத்துள்ளதுடன், அதுபற்றிய விளம்பரங்களையும் பிரசுரித்து வருகிறது.
ஆஞ்சனேய பக்தர் ஒருவர் இந்தப் பேனைகளை விற்பனை செய்து வருகிறார். ஹனுமான் சரஸ்வதி யாகத்தில் வைக்கப்பட்ட இந்தப் பேனைகள் மிகவும் சக்தி வாய்ந்ததெனவும், இதைக் கொண்டு எழுதும் பரீட்சைகள் அனைத்துமே மாணவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் 1,900 ரூபாய்க்கு இந்தப் பேனை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், இந்தப் பேனையைக் கொண்டு எழுதப்பட்ட பரீட்சையில் மாணவர் ஒருவர் சித்தியெய்தத் தவறிவிட்டால், பேனைக்கான பணத்தை மொத்தமாகத் திருப்பித் தருவதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்தப் பேனைகளை வாங்குபவர்கள் பாடசாலை அடையாள அட்டை, பரீட்சைக்கான அனுமதி போன்ற ஆவணங்களின் பிரதிகளைக் கையளிப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பேனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக, என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100 மில்லியன் வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்துள்ளதாக செக் பாயிண்ட் மென்பொருள் தொழிநுட்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் செயலியின், கணினி பதிப்புகளில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக 100 மில்லியனுக்கும் அதிகமான வட்ஸ்அப் பாவனையாளர்களை பாதிக்குமெனவும், குறித்த புதிய பிழை காரணமாக பெரும்பாலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயனாளர்களின் தரவுகளை ஊடுருவும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடுருவலில் ஈடுபடும் விஷமிகள் மூலம், ஒரே வகையான படத்தை அனுப்பி, கணக்குகளை முழுமையாக இயக்க முடியும். அத்தோடு பாவனையாளர்களின் தகவல் பரிமாற்றுக்களை இயக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிழையை கொண்டு டிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் அனுப்பப்படும் இரகசிய குறியீடுகளை கொண்டு, பாவனையாளர்களின் செயலியை முழுமையாக இயக்க முடியும் என்பதோடு, அவர்களின் தொடர்புகள் உள்ளிட்ட தரவுகளை களவாடும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய தொழிநுட்ப நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா சென்றிருந்த 200 பேரில், 70 பேர் எரிமலைத் தீவிலிருந்து கேபல் காரின் ஊடாக கீழே வரமுனைந்த போது, இடையில் சுமார் 250 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயினில் சுமார் 3700 மீற்றர் உயரமுடைய எரிமலைத்தீவில், கேபில் காரின் ஊடாக பயணம் செய்ய வந்தவர்களில் 70 பேர் சென்ற கேபில் கார்கள், இடையில் 250 அடி உயரத்தில் நின்றதால், பயணிகளை மீட்பதற்காக அந்நாட்டின் விமான மீட்புக்குழு, தீயனைப்பு படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்தால் மலையின் உச்சியிலிருந்த அநேகமானோர், இரவு முழுவதும் மலையிலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ள பயணிகளில் அநேகமானோர் மனோரீதியான பிரச்சினைக்குட்பட்டுள்ளனர்.
அத்தோடு மீட்கப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட மனோதத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோடு, 70 பேரையும் பத்திரமாக மீட்பதற்காக சுமார் 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயண்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்தார்.
குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மீட்கப்பட்ட கப்பலும் அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைப் பச்சை அரிசிக்குச் சிவப்புச் சாயம் சேர்க்கப்பட்டு சிவப்பு அரிசியாக விற்பனை செய்யப்படுகின்றது என வவுனியா மாவட்ட செயலகத்தில் பொதுமகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது முறைப்பாட்டின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக சோற்றுச் சட்டியை அவர் மாவட்ட செயலகத்துக்குக் கொண்டுவந்து மாவட்ட செயலரிடம் காண்பித்தார். அது தொடர்பாக விசாரித்தறிந்த மாவட்ட செயலாளர் அந்த அரிசி மாதிரியைக் கொழும்புக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2ம் திகதி வவுனியாவில் பிரபல்யமான வியாபார நிலையத்தில் 5 கிலோ பச்சை அரிசியை அந்தப் பொதுமகன் கொள்வனவு செய்துள்ளார்.
அரிசியில் சந்தேகம் கொண்ட அவர் அது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு அறிவித்துள்ளார். அதற்குரிய சரியான பதில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குச் சென்றபோது அங்கு அதிகாரி இல்லை என்று பதிலளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
நேற்று அந்த அரிசியைச் சோறாக்கியபோது அதிலிருந்து சிவப்புச் சாயம் வெளிக்கிளம்பியது. அவர் சோற்றுச் சட்டி சகிதம் மாவட்ட செயலகம் வந்து முறைப்பாடு செய்தார்.
மாவட்டசெயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விவரங்களைக் கேட்டறிந்தனர். மாவட்ட சுகதார வைத்திய அதிகாரியின் பணிமனையிலுள்ள சுகாதாரப் பரிசோதகரும் முறைப்பாடு பதிவு செய்தார். அரிசி மாதிரியும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற தெரிவாகியுள்ளார்.
குறித்த விசேட தேவைக்குட்பட்ட இளைஞனுக்கு தாயகத்திற்கான உதவித்திட்டத்தில் லண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினரால் ஒரு இலட்சம் ரூபா உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (16.03.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியாவில் கடந்த 21 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.03.2017) 21வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
தீர்வு கிடைக்கும் வரை இச் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று (16.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நிலைமாறு கால நீதிக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கு என ஜ.நாவை வலியுறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மணிநேரமாக தமது போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்குச் சென்று தமது ஆதரவினையும் வழங்கியுள்ளனர்.
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று(15.03.2017) முதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இப்பதிவானது தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறுவதுடன், இப்பதிவு நடவடிக்கைகளின் இறுதித்தினமாக 24.03.2017 அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத வேலையற்ற பட்டதாரிகள் குறித்த பதிவு நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறும், ஏனைய பதியாமல் உள்ள சக வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தற்போது இதுவரை 91 பட்டதாரிகளே பதிந்துள்ள நிலையில் அவசரமாக ஏனைய வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் உடனடியாக கிராம சேவையாளரிடம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்துடன் (வேலையற்ற நிலை தொடர்பாக) வருகை தந்து பதிவு செய்யுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவானது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் பிரதிபலனாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு
வவுனியா மாவட்ட இணைப்பாளர்
0773923509
கூகுள் நிறுவனமானது நவீன இணைய உலகில் பல வசதிகளையும், சேவைகளையும் வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதியினை அளித்துள்ளது.
இவ்வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் உள்ள ஜிமெயில் அப்பிளிக்கேஷன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். எனினும் அப்பிளிக்கேஷன் தவிர்ந்த ஏனைய முறைகளில் இவ்வசதி கிடைக்கப்பெறாது.
அதாவது இணைய உலாவிகளின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் முதன் முறையாக அமெரிக்காவில் மட்மே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் எனைய நாடுகளுக்கும் விஸ்தரிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியானது இலகுவானதும், விரைவானதுமானதுமாக இருப்பதுடன் நம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய்ஹசாரே தொடரின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர் ஒருவர் அவரிடம் ஆட்டோகிராப் வழங்கும் படி கேட்டுள்ளார்.
இந்திய அணிக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது உள்ளூரில் நடக்கும் விஜய்ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஜார்கண்ட் அணியும், விதர்பா அணிகளும் மோதின. இப்போட்டியில் விதர்பா அணி 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை விரட்டிய டோனி அணி எளிதாக எட்டி பிடித்து வெற்றி பெற்றது.
இதற்கிடையில் ஆட்டத்தின் 35வது ஓவரில் சவுராப் திவாரி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அடுத்த துடுப்பாட்ட வீரராக டோனி களத்தில் இறங்கினார்.
அப்போது திடீரென்று ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்த சுவற்றை தாண்டி குதித்து மைதானத்திற்கு உள்ளே வந்து டோனியிடம் ஒரு பேப்பரை காண்பித்து, ஆட்டோகிராப் போடும்படி வேண்டுகோள் வைத்துள்ளார்.
டோனி ஆட்டோகிராப் போடும் சமயத்தில் உணர்ச்சி தாங்கமுடியாமல் அவர் டோனியின் காலில் விழுந்தார். இதை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உண்ர்ச்சிவசத்துடன் ஆரவாரம் செய்தனர்.
தாய்லாந்தில் 10 மாத குழந்தை ஒன்று இரண்டுகால்கள் ஒன்றினைந்த நிலையில் உள்ளதால் அக்குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு போதுமான அளவு பணம் இல்லாமல் குடும்பத்தார் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் Kananchaburi பகுதியில் பிறந்தவர் Jermkwan Krathumnat. இக்குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகிறது. தற்போது இக்குழந்தை அவரது பாட்டியின் வீட்டில் இருந்து வருகிறது.
Jermkwan Krathumnat சிரினோமோலியா என்ற நோயின் தாக்கத்துடனே பிறந்தார் என்று கூறப்படுகிறது.
இது ஒரு அரியவகை நோய் என்றும் குழந்தை கற்ப்பத்தில் இருக்கும் போதே கை அல்லது கால்கள் ஒன்றினைந்து காணப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது இதே போன்ற சுழ்நிலை தான் இக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தைக்கு ஒரு பக்கம் கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் குழந்தையின் கால்கள் ஒன்றினைந்து காணப்படுவதால் அதற்கு உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும் என்றும் இதனால் தங்களால் இயன்ற உதவியை இவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று பின் என்பவர் சமூகவலைத்தளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.
இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49).
கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை மீட்டு பராமரித்துள்ளார்.
அவர்களுடைய கடைசி காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வைத்து, கடைசி ஆசைகளை நிறைவேற்றி இறந்ததும் அடக்கம் செய்து வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி, ‘‘நீங்கள்தான் உண்மையான ஹீரோ’’ என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி போன்றோர் அழைத்து கவுரவித்து விருதுகளை வழங்கி உள்ளனர்.
கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, ஆட்டோ ராஜாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து மதுரைக்கு நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆட்டோ ராஜா கூறியதாவது: எனது பெற்றோர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பே, பிழைப்பு தேடி அவர்கள் பெங்களூரு வந்தனர்.
சின்ன வயதில் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் திருடியதோடு நிற்காமல் கண்ணில் படுவோரை தாக்கி பொருட்கள், பணத்தை பறிப்பேன். நீ எங்க பிள்ளையே இல்லடா என பெற்றோர் துரத்திவிட்டபோது சென்னை சென்றேன். அங்கும் திருட ஆரம்பித்தேன். இப்படி 16 வயதிலேயே எந்த ஒரு நோக்கமும், குறிக்கோளும் இல்லாமல் முழுநேர திருடனாக, ரவுடியாக திரிந்தேன்.
சென்னை போலீஸார் என்னைப் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அங்கு ஆடை இல்லாமல் நிற்க வைத்து, கடுமையாக தாக்கி கழிப்பறையில் தூக்கி வீசினார்கள். ஈக்கள் மொய்த்த நிலையில் சாப்பாடு இல்லாமல் நரக வேதனையை அனுபவித்தேன்.
ரொம்ப சீர்கெட்டு விட்டேன். செத்துப்போய் விடுவேனோன்னு நினைத்தேன். கடவுளே நீர் இருக்கிறீரான்னு மனசுக்குள்ளே கதறியபோது கடவுள்போல என் பெற்றோர் கேள்விப்பட்டு என்னை மீட்டு மீண்டும் பெங்களூரு அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகும் நான் திருந்தவில்லை. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்.
அரசியல் கட்சிக்காரங்க சொன்னா, வாகனங்களை கொளுத்துவது, அடித்து நொறுக்குவது, ஆட்களை அடிப்பது, போராட்டம், தர்ணா என மீண்டும் ரவுடியானேன்.
அப்போது ஒருமுறை ஆட்டோவில் சென்றபோது, ரோட்டோரத்தில் அழுகி புழுக்கள், ஈக்கள் மொய்த்த நிலையில் ஆடை இல்லாமல் உயிருக்கு போராடிய ஒருவரை பார்த்தேன். அவரை உற்று கவனித்தபோது, அதே கோலத்தில் நான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தது நினைவுக்கு வந்தது.
அன்று முதல் இன்று வரை ரோட்டோரத்தில் ஆதரவில்லாமல் மரண தருவாயில் போராடுபவர்களை மீட்டு வந்து குளிப்பாட்டி சாப்பாடு கொடுத்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் சிறுநீர், மலம் கழித்தால் சுத்தம் செய்து குழந்தைபோல கவனிக்கிறேன்.
ஆரம்பத்தில் என் மனைவியே என்னுடன் வாழ விரும்பாமல் குழந்தைகளுடன் என்னைவிட்டு போய்விட்டார். கூடப் பிறந்தவர்கள், உறவினர்கள் என்னை வெறுத்து ஒதுக்கினர். ஆனால், நான் உறுதியாக, எனது வாழ்க்கை ஆதரவற்றோருக்குத்தான் என இருந்துட்டேன்.
எனது செயல்பாடுகளை பார்த்து மாநில முதல்வர், பிரபலங்கள் பாராட்டியபோதுதான், என்னை புறக்கணித்தவர்களுக்கு எனது சேவை புரிந்தது. தற்போது என்னோட தொட்டகுப்பி ஆசிரமத்தில் 750 பேரை பராமரிக்கிறேன். இறக்கும் தருவாயில் இருக்கும் அவர்களை முடிந்தளவு கவனித்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 5 பேர் இறப்பார்கள்
ஆட்டோ ராஜா மேலும் கூறுகையில், தொண்டுள்ளதோடு உதவுபவர்கள் மூலம் அவர்களுக்கான சாப்பாடு, பராமரிப்பு, மருத்துவச் செலவுக்கு மாதம் ரூ. 12 லட்சம் செலவழிக்கிறேன். ஒவ்வொரு நாளுக்கும் 2 பேர், 3 பேர், ஏன் ஒரே நேரத்தில் 5 பேர் கூட இறப்பார்கள். அவர்களுக்கு மகனாகவும், சகோதரனாகவும் இருந்து அடக்கம் செய்கிறேன்.
என்னோட பராமரிப்பில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் மன நோயாளிகள். 10 சதவீதம் குழந்தைகள். மீதி பேர் வயதானவர்கள். மனநோயாளிகளை, கை கால் ஊனமுற்றவர்களை அதிலிருந்து குணப்படுத்தி, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை என்னோட பணிக்கு ஈடுபடுத்துகிறேன்.
தற்போது அரசாங்கத்தினரே ஆதரவற்றவர்கள் எங்கு கிடந்தாலும் என் ஆசிரமத்தில் கொண்டுவந்து சேர்த்து செல்கின்றனர். அவர்களை பராமரிப்பது மட்டுமே எனது வேலை. தமிழகத்திலும் எனது சேவையை விரைவில் தொடங்க உள்ளேன் என்றார்.
ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளருக்கு அவர் அளித்துள்ள மனுவில், ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.
இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார்.
ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய ஒருவர் கடவுளாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் மீது ஏறி, தங்கள் இருவருக்கும் பொதுவான மொழியான உருதுவில் அவருடன் உரையாடியுள்ளார்.
அதன் பின்னர், தற்கொலை எண்ணம் கொண்டிருந்த அந்நபர் கீழே இறங்க சம்மதித்துள்ளார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கேண்டனீஸ் மொழியிலும் சரளமாக பேசும் பொலிஸ் கான்ஸ்டபிளான ஜஃபர், தனது பொலிஸ் பயிற்சி முறைகளை தான் பின்பற்றியதாக கூறினார்.
இது குறித்து ஆப்பிள் டெய்லி ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ”நாங்கள் பொலிஸ் அகாடமியில் கற்ற உத்திகளை நான் கையாண்டேன். கிரேன் இயந்திரத்தின் மீதேறிய நபரிடம் நான் தாய் மொழியில் பேசியதும், அவர் பாதுகாப்பாக உணர்ந்ததாக நினைக்கிறேன் ” என்று தெரிவித்தார்.
பொலிஸ் துறையில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு பணியில் சேர்ந்த இந்த இளைஞர்தான், இம்மாவட்டத்தில் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ஒரே பொலிஸ் அதிகாரி என அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்தினை தொடர்ந்து அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அத்துடன் இந்த செயற்பாட்டின் பின்னர் 20 வயதான ஹாங்காங் நாட்டினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.