சைக்கிளோட்டப் போட்டியின்போது வீரர் மீது பாய்ந்த மான்!!

D1

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் மீது மான் ஒன்று மோதிய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ட்ரையத்லன் எனும் மூன்றாம் போட்டியின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிறன்று சைக்கிளோட்டப் போட்டியொன்றில் வீரர்கள் பங்குபற்றிக்கொண்டிருந்தனர்.

இதன்போது, பீனிக்ஸ் பாக் எனும் பூங்காவுக்கூடாக போட்டியாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை மான் கூட்டமொன்று எதிர்கொண்டது.

அவற்றில் ஒரு மான் வீதியை பாய்ந்து கடக்க முயன்றபோது, ஷேன் ஓ ரெய்லி எனும் வீரர் மீது மோதியது. 30 வயதான ஷேன் ஓ ரெய்லி, அந்த பாரிய மான் தன் மீது மோதியதால் நிலை தடுமாறி வீழ்ந்தார்.

இக்காட்சிகளை அங்கிருந்த புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் படம்பிடித்துக்கொண்டார். போட்டியின் எல்லைக்கோட்டிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.

பின்னர் சுதாகரித்துக் கொண்டு எழுந்து மீண்டும் போட்டியில் பங்குபற்ற ஆரம்பித்து 2 மணித்தியாலங்கள், 25 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்தார்.

இப்பூங்காவில் சுமார் 300 மான்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்போட்டியின் பின்னர் ஷேன் ஓ ரெய்லி கருத்துத் தெரிவிக்கையில், “இச்சம்பவத்தால் எனது தோளிலும் தலையிலும் வலி ஏற்பட்டது. தலைக்கவசம் என்னைக் காப்பாற்றியது” என்றார்.

D2 D3

ரஷ்ய நகர மக்களை அச்சமடையச் செய்த முகில்!!

Cloud

ரஷ்ய நகரமொன்றில் பாரிய காளான் போன்ற உருவம் கொண்ட முகில் தோன்றியமை அந்நகர மக்களை அச்சமடையச் செய்தது.

மேற்கு சைபீரிய பிராந்தியத்திலுள்ள கேமேரோவோ நகரில் கடும் இடிமின்னலுக்கு மத்தியில் இந்த முகில் தென்பட்டது. ஆனால், அணுகுண்டு வெடிப்புகளின் போது இத்தகைய பாரிய காளான் உருவிலான புகை ஏற்பட்டதை அறிந்திருந்த மக்கள், இந்த முகிலைக் கண்டு அச்சமடைந்தனராம்.

அந்நகருக்கு சற்று தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ எனவும் சிலர் அச்சம் கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இடிமின்னல் காரணமாகவே இந்த விசித்திர முகில் உருவம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்­பிக்கில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட பிரெஞ்சு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு தடை!!

o1

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வின்­போது ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட கார­ணத்­துக்­காக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவ­ருக்கு தற்­கா­லிக தடை விதித்துள்ளது.

டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்­க­னை­க­ளான கிறிஸ்­டினா மிலா­டே­னோவிக், கரோலின் கார்­சியா ஆகிய மூவரே தடைக்­குள்­ளா­ன­வர்­க­ளாவர்.  இந்த மூவ­ரி­னதும் நடத்தை சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘ரியோ ஒலி­ம்பிக் விளை­யாட்டு விழா முடி­வ­டைந்த பின்னர் பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ள­னத்தின் குழு இந்த மூவர் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்­தது.

இவர்கள் சம்­மே­ள­னத்தின் விதி­களை மீறி­யுள்­ள­துடன் சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்’ என அந்த அறிக்­கையில் குறி­பி­டப்­பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்­பிக்கில் இரண்­டா­வது சுற்றில் இத்­தா­லியின் ஃபேபியோ ஃபொஞ்­ஞி­னி­யிடம் தோல்வி அடைந்த பாய்ரே, ஒலிம்பிக் வீரர்கள் கிரா­மத்­தி­லி­ருந்து நெடு நேரம் வெளியே இருந்­த­மைக்­காக உட­ன­டி­யாக நாட்­டிற்கு திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே அவ­ரக்கு பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தடை விதித்­துள்­ளது.

மில­டே­னோவிக், கார்­சியா ஆகிய இரு­வரும் தங்­க­ளது சீருடை தொடர்­பாக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ள­னத்தை கடு­மை­யாக விமர்­சித்­த­மைக்­காக தடை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

செப்­டெம்பர் மாதம் 24 ஆம் திகதி எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம்வரை இவர்கள் மூவரும் பிரான்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

o2

தனுஷ் தயாரிப்பில் ரஜனி நடிக்கும் திரைப்படம்!!

Rajani

ரஜினி அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்து கோலிவுட்டில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், பா.ரஞ்சித் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப்போகிறார் என்பது மட்டும் பரபரப்பு செய்தியாக பரவி வந்தது. விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், பா.ரஞ்சித் தரப்பிலிருந்து தான் யாருக்கும் கதை சொல்லவில்லை என்றும், தற்போது தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று தனுஷ், ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘2.ஓ’ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கப்போவதாகவும் அறிவித்தார்.

‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாவது ரஜினி இரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினி ‘2.ஓ’ படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது பிறகுதான் தெரியவரும். மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

வட்ஸ்அப் தக­வலால் மண மேடை­யிலே நிறுத்­தப்­பட்ட திரு­ம­ணம்!!

Whatsapp

வட்ஸ்அப் தக­வ­லினால் திரு­ம­ண­மொன்று நிறுத்­தப்­பட்ட சம்ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்பெற்றுள்­ளது.

தமி­ழ­கத்தின் திரு­வண்­ணா­மலை மாவட்டம் ஆர­ணி­யி­ன­ரு­கே­யுள்ள சேவூர் கிரா­மத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 58). இவ­ரது மகன் மகேஷ் (31). திருச்­சி­யி­லுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி­பு­ரிந்து வரு­கிறார்.

இவ­ருக்கும், ஆரணி எஸ்.வி. நகரை சேர்ந்த மீனா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற 20 வயது பெண்­ணுக்கும் திரு­மணம் செய்து வைக்க இரு­வீட்­டாரும் முடிவு செய்­தனர்.

இவர்­க­ளி­ரு­வ­ருக்கும் கடந்த 8 மாதங்­க­ளுக்கு முன்பு நிச்­ச­ய­தார்த்தம் நடந்­துள்­ளது. இதை­ய­டுத்து நேற்று முன்­தினம் சேவூ­ரி­லுள்ள ஒரு தனியார் மண்­ட­பத்தில் திரு­ம­ணத்தை நடத்­த­வி­ருந்­தனர். இரு வீட்­டாரும் திரு­மண வேலை­களில் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வந்­தனர்.

இதற்­காக முன்­தினம் மாலை திரு­மண வர­வேற்பு நிகழ்ச்சி நடந்­தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முகூர்த்த நேரமும் நெருங்­கி­யது. மண­மே­டையில் மகேஷ் அமர்ந்­தி­ருந்த நிலையில், அவரு­டைய செல்­போ­னிற்கு ஆரணி தச­ரா­பேட்டை பகு­தியைச் சேர்ந்த விநா­யகம், என்­பவர் ‘வட்ஸ்­அப்பில் ஒரு குறுந்­த­க­வலை அனுப்­பி­யி­ருந்தார்.

மகேஷ் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த அந்த குறுஞ்­செய்­தியில், மண­மகள் மீனாவும், விநா­ய­கமும் சேர்ந்­தி­ருக்கும் புகைப்­ப­டங்கள் இருந்­தன.

மேலும் விநாயம் கூறி­ய­தா­வது, எனக்கும், உங்­க­ளுக்கு திரு­மணம் நடக்­க­வி­ருக்கும் பெண்­ணுக்கும் கடந்த 8 மாதங்­க­ளுக்கு முன்பே திரு­மணம் நடந்து விட்­டது.

அதன்­போது நாங்­க­ளி­ரு­வரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்­ப­டங்கள் தான் இவை. நான் திருமணம் செய்த பெண்ணை நீங்கள் எப்­படி திரு­மணம் செய்ய முடியும் என அவர் கூறி­யி­ருந்தார்.

உடனே மகேஷ், அவ­ரது பெற்­றோ­ரிடம் இது­பற்றி தெரி­வித்தார். இதை­ய­டுத்து மகேஷின் குடும்பத்தினர், மண­ம­களின் பெற்­றோ­ரிடம் உங்கள் மக­ளுக்கு ஏற்­க­னவே திரு­மணம் முடிந்துவிட்ட­தாக தகவல் கிடைத்­துள்­ளது.

இது­பற்றி நீங்கள் ஏன் எங்­க­ளிடம் எதுவும் சொல்­ல­வில்லை என கேட்­ட­தற்கு பெண்ணின் பெற்றோர் பதில் எதுவும் கூற­வில்லை என தெரி­கி­றது. இதைத் தொடர்ந்து மகேஷின் குடும்­பத்­தினர் திருமணத்தை நிறுத்தி விட்­டனர்.

இது­கு­றித்து மணி தாலுகா பொலி ஸாரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். அதில் ஏற்­க­னவே நடந்த திரு­ம­ணத்தை மறைத்து பெண் வீட்டார் மோசடி செய்­துள்­ளனர். முன்­னெ­டுக்­கப்­பட்ட திரு­மண ஏற்பா­டு­க­ளுக்­காக 5 இலட்சம் ரூபா செல­வா­கி­யுள்­ளது.

குறித்த பணத்தை மண­மகள் வீட்­டா­ரி­ட­மி­ருந்து பெற்­றுத்­தர வேண்டும் என க் கூறி­யி­ருந்­தனர். முறைப்­பாட்டை பதிவு செய்த பொலிஸ் அதி­காரி சின்­னராஜ், அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

இந்­த­நி­லையில், வட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளைஞர் விநாயகம் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் அவரைத் தேடி வரு­கின்­றனர்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : சந்தேக நபர்கள் 7 பேர் கைது!!

Sulaiman-2

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சடலத்தை மாவனல்லை பகுதிக்கு கொண்டு செல்ல உதவிய கூலித் தொழிலாளிகள் உட்பட எழுவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைச் செய்யப்பட்ட வர்த்தகரின் கொடுக்கல் வாங்களுடன் தொடர்புடைய அவரது சேவையாளர் ஒருவர், சகீபின் தந்தையிடம் கப்பம் பெறும் நோக்கில் இக்கொலையை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி : அவுஸ்திரேலியா 3-1 என முன்னிலை!!

Australia's Travis Head, center, and George Bailey celebrate defeating Sri Lanka by six wickets in their fourth one day international cricket match in Dambulla, Sri Lanka, Wednesday, Aug. 31, 2016. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியை வெற்றிக்கொண்டதன் மூலம் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பகலிரவு ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனஞ்சய டி சில்வா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.

எனினும் உபாதையின் மத்தியிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 71 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆஸி அணி சார்பில் ஹேஸ்டிங்ஸ் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

213 என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 31 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்டு 4 விக்கட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.

ஆஸி அணி சார்பில் ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, ஆரோன் பின்ச் 19 பந்துகளில் அரைச்சதம் கடந்து 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸி அணியின் ஹேஸ்டிங்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 3-1 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

பிரபல அரசியல் கட்சியில் நயன்தாரா : வெளிவந்த ரகசியம்!!(வீடியோ)

Nayan

நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை. இந்நிலையில் இவர் தயாரிப்பாளராகவும் மாறவிருக்கிறார்.

இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். மேலும், இவருக்கு சமீப காலமாக அரசியலிலும் சத்தமில்லாமல் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் ஆளுங்கட்சி சார்பில் நடத்திய ஒரு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் விழாவில் கலந்துக்கொண்டார்.

நயன்தாரா தான் நடித்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதே கட்சியில் இவர் இணையவும் வாய்ப்பு இருக்கின்றது.

திருடனை தரதரவென்று இழுத்து சென்ற பொலிஸ் : வீடியோ காட்சியால் சர்ச்சை!!(காணொளி)

Thef

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் ரெயில் நிலையத்தில் தினமும் நிறைய திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து குவாலியர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை ரெயில்வே பொலிசார் தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் குவாலியர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் பணத்தை திருடன் பிக்பாக்கெட் அடித்தான். அவனை ரெயில்வே பொலிஸ்காரர் கையும் களவுமாக பிடித்தார்.

ஆத்திரம் தீரும் வகையில் அந்த திருடனை ரயில்வே பொலிஸ்காரர் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் அந்த திருடன் மயங்கி விழுந்தான்.

அதன் பிறகும் அந்த ரெயில்வே பொலிஸ்காரர் கோபம் தீரவில்லை. அவனது சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.

தரையில் உடல் உரசி ரத்தம் வழிந்தோட அந்த திருடனை அவர் இழுத்துச் சென்றார். இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டார்.

ரயில்வே பொலிஸ்காரர் அந்த திருடனை தரதர வென்று இழுத்து செல்வதை ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் யாரும் தடுக்கவில்லை. மாறாக எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோ காட்சியாகவும் பலரால் பகிரப்பட்டது.

இதையடுத்து அந்த ரயில்வே பொலிஸ்காரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ரெயில்வே பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். திருடனை தரையில் போட்டு இழுத்துச் சென்ற பொலிஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மனைவியை துப்பாக்கியால் சுட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில்!!

Jail

தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட லுத்தினல் கேர்ணல் பிரதீப் குமார கேத்தசிங்க (49) எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கடுவளை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கி மற்றும் அவர் வசம் இருந்த வாகனமும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.

யாழில் பெருந்தொகை தங்கத்துடன் இருவர் கைது!!

Gold

ஐந்தரை கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் காங்கேசன்துறை கடற்படை முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நேற்று இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மாதகல் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை மைதானத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்!!

Dambulla

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியே, இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தால் தம்புள்ளை – குருநாகல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் சூழ தேரேறி வந்த நல்லூர்க் கந்தன்!!(படங்கள், காணொளிகள்)

 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா இன்று(31.08.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா நடைபெற்றது.

இக் கண்கொள்ளாக் காட்சியினை நாட்டின் பல பாகங்களில் இருக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுமாக பக்திப் பரவசத்துடன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர்.

இந்த திருவிழாக்களில் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன மிக முக்கியமானவை.

1 14079922_1671006649825780_1527900764622613660_n 14088545_1671006973159081_2728190983688286614_n 14095765_1671005839825861_4305396239993087339_n 14100261_1723503651010557_5323277813641974571_n 14100409_1723511571009765_8589511205172239885_n 14102400_1671006193159159_1879578130282746315_n 14102591_1671005879825857_9071930960456941902_n 14102689_1671006916492420_1292473935172536360_n 14102721_1723504831010439_39497004904282820_n 14117867_1723533341007588_6829150069373115783_n 14117888_1723512231009699_3473785814576218280_n 14141550_1723512454343010_1848159736347827936_n 14141639_1723510711009851_6563384030877087594_n 14141906_1723505424343713_6628272461589593481_n 14141915_1671006969825748_6587839140062304382_n 14183775_1723505544343701_1890034795808060820_n 14184460_1723511407676448_8096935850533952528_n 14191926_1723510707676518_6417471395957406085_n 14199376_1671005749825870_7991734089839524062_n 14199702_1723503507677238_3703720775589807345_n 14202727_1723512364343019_7649450150152649600_n 14203264_1671006506492461_4237124970200075939_n 14212077_1723512464343009_115211072482620303_n 14212764_1671006526492459_2109806723242194309_n 14212799_1671006656492446_7670845338446184135_n 14212825_1087259124695481_5105214139396653665_n

ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவி அடித்துக்கொலை!!

Love

கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் இன்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார்.

இதில், வலி தாங்க முடியாத சோனாலி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின்னர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் தான் கல்லூரிக்குள் புகுந்த இவர் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளார்.

சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்த உதயகுமார், தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார், ஆனால் சோனாலி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட உதயகுமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவனை கைது செய்துள்ள பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கல்லூரிக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள்!!(வீடியோ)

Punishment

ஒடிசா மாநிலத்தில் கேலி செய்த ஆசிரியரை இரு மாணவிகள் அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழக மாணவிகளை அங்குள்ள தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கேலி செய்துள்ளார்.

அதில் கோபமடைந்த இரு மாணவிகள் ஒன்று சேர்ந்து, குறித்த ஆசிரியரை மண்டியிடச் செய்து அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எவரெஸ்டில் ஏறியதாக பொய் கூறிய இந்திய தம்பதிக்கு நேபாள அரசு தடை!!

Everest

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும், காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். தம்பதியரான இவர்கள், மே 23ல், அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்ததாக கூறி, அதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால், ‘அவை, திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள்’ என, சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர்; இருப்பினும், பொலிஸ் தம்பதி, எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக, நேபாள சுற்றுலாத் துறை சான்றிதழ் அளித்தது.

அதேசமயம், சக வீரர்கள் எழுப்பிய சந்தேகம் தொடர்பாக, நேபாள அரசு விசாரணையும் மேற்கொண்டது. தற்போது அந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பொலிஸ் தம்பதி அளித்த புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, இந்த தம்பதிக்கு, 10 ஆண்டுகள் தடையை, நேபாள அரசு விதித்துள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு மட்டும் மார்ச் முதல் மே மாதம் முடிய 454 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பனிப்பொழிவு காரணமாக வீரர்கள் எவரும் மலை ஏறுவதை நேபாள அரசு தடை செய்திருந்தது.

மட்டுமின்றி காலநிலை மாறுதல் குறித்த போதிய தகவல்கள் சேகரிக்காமல் சென்ற பல குழுக்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமும் மலை ஏறுவதற்கு தடை விதிக்க காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.