இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நீடிப்பார்?

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டி கிண்ணத்தை​ இந்தியா வென்றது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை மட்டுமில்லாமல், அவர்களின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் பிளட்சர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றவுடன் தொடர்ந்த தோல்விகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டார். ஆயினும்,தற்போது அணியின் வெற்றிகள் இவரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஜிம்பாபாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிளட்சர் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளிலும், உள்நாட்டில் விளையாடிய இங்கிலாந்து நாட்டுடனான போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. பிளட்சருக்கு பதிலாக வேறு பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்ற யூகத்தின் நடுவே, அவுஸ்திரேலியாவுடனான உள்நாட்டுப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது.

அப்போது, பிளட்சரின் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. இப்போது சாம்பியன் கிண்ணத்தை பெற்ற வெற்றி, பிளட்சரின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளட்சர் தனது பணியைத் திறம்பட செய்துவருவதாக இந்திய கிரிக்கெட் சங்கம் நேற்று பத்திரிகையாளர் செய்தியில் தெரிவித்துள்ளது. கேப்டன் டோனியும் இவரது செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வரும் செப்டெம்பரில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும்போது புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. பிளட்சரின் வித்தியாசமான அணுகுமுறை நல்ல பலனைத் தந்துள்ளது. அது இங்கிலாந்தின் சாம்பியன் போட்டியில் வெளிப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் போர்டு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல், பயிற்சியாளரும் அவரது உதவியாளர்களும் குறைந்த கால ஒப்பந்தத்தில் செயல்படுவதைவிட, குறைந்தது நான்கு வருட ஒப்பந்தத்தில் செயல்பட்டால் நல்லதொரு அணியை உருவாக்கமுடியும் என்ற எண்ணமும் குழுவின் அங்கத்தினர்களுக்குத் தோன்றியுள்ளது. தங்களது பணியின் நிரந்தரத் தன்மையினால் அவர்கள் திறமையுடன் செயல்படமுடியும் என்று கிரிக்கெட் போர்டு கருதுகின்றது. ஆயினும், பயிற்சிக் குழுவினர் அனைவரும் இதில் ஒத்துப்போனால் மட்டுமே இந்த எண்ணத்தை செயல்படுத்த முடியும்.

வறுமையால் வாடுவோரின் தொகை 13ஆண்டுகளில் பாதியாக குறைந்தது..!

கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நிர்ணயிக்க ஒப்புக் கொண்டனர்.

இந்த இலக்கை 2015ஆம் ஆண்டுக்குள் எட்டுவது என முடிவு செய்யப்பட்டது.வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, பாலின சமத்துவம், தாய், சேய் நலம், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, எய்ட்ஸ் மற்றும் மலேரியா கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆயிரமாண்டு இலக்கு தொடர்பாக இந்த ஆண்டுக்கான அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த இலக்குகளில் சில முழுமையாக எட்டப்பட்டுள்ளன. அதை அடைவதற்காக அரசு, சமுதாயம் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் எந்த வகையில் உதவின என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இன்னமும் எட்டப்படாமல் உள்ள சில இலக்குகளை அடைவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தல் மற்றும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட சில இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுள்ளன. 2010 நிலவரப்படி70 கோடி பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர். இது 1990இல் இருந்த அளவில் பாதிதான். மலேரியா, காச நோய் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்தல்,எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் உள்பட சுகாதாரத் துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடியும்.

கடந்த 2000 முதல்2010ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோய்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 1.1லட்சம் பேர் இந்த நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.கடந்த 1995மற்றும்2011க்கு இடைப்பட்ட காலத்தில்5.1 கோடி காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை3.4 கோடியிலிருந்து80 லட்சமாகக் குறைந்துள்ளது. 2000 முதல்2010 வரையிலான காலத்தில் குடிசைகளில் வசிக்கும் 20 கோடி பேர் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, போதுமான தங்குமிட வசதி பெற்றுள்ளனர். இது 10 கோடி என்ற இலக்கைப்போல 100 சதவீதம் அதிகம் ஆகும்.

தாய்சேய் நலம், அனைவருக்கு கல்வி, கழிப்பிட வசதி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் இலக்கு எட்டப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பான் கி மூன் கூறுகையில்,ஒரு சில இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. எனினும், அவை எட்டக்கூடிய தூரத்தில் தான் உள்ளன. இதற்காக

தரமான படங்கள் தேவை – ஏ.ஆர்.ரஹ்மான்..

AR-rahman
சௌந்தர்ராஜன் தயாரிப்பில், “சில்லுன்னு ஒரு காதல்” கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.

சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு பாடல் சி.டி.யை வெளியிட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “இயக்குநர் கிருஷ்ணாவை தாணு சார் தான் என்கிட்ட அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கதை சொல்லும்போது எமோஷனாக சொல்வார். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

பெரிய நடிகர்களின் படத்தைப் போல ‘நெடுஞ்சாலை’ படத்தை தரமாக எடுத்திருக்கிறார்கள் . படம் பண்ணினால் தரமா பண்ணனும்.

இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா, குவாலிட்டியா படம் இருந்தால்தான் போறேன். இந்தப் படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது” என்றார்

ஹொலிவுட் நடிகருடன் மோதும் ஜெயம் ரவி!

jayam ravi

ஜெயம் ரவி நடிக்கும் “பூலோகம்” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஒஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் ஜெயம் ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹொலிவுட் நடிகர் நேதன் பிரன்டன் ஜோன்ஸ் சென்னை வருகிறார்.

இவர் “டிராய்”, ஜாக்கிசானுடன் “போலீஸ் ஸ்டோரி 4”, டோனி ஜாவுடன் “தூம் யூம் கோங்”, ஜெட்லியுடன் “பியர்லெஸ்” ஆகிய படங்கள் உட்பட பல ஹொலிவுட் படங்களில் நடித்தவர்.

“பூலோகம்” படத்தில் ஜெயம் ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு 1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹொலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.

வவுனியாவில் திருமணமாகி 2 மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்..

vgh

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.

அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனுஷின் “ராஞ்சனா” திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை!!

Ranjana
தனுஷின் இந்தி படமான ராஞ்சனாவுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனுஷ்- சோனம் கபூர் ஆகியோரின் நடிப்பில், ஆனந்த் ராய் இந்தியில் தயாரித்துள்ள படம் ராஞ்சனா.

இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு பாகிஸ்தான் சினிமா தணிக்கை குழு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தணிக்கை குழு அனுப்பிய கடிதத்தில் ராஞ்சனா படத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் இந்து பையனை காதலிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பாகிஸ்தானில் வெளியிட உரிமை பெற்ற ஐ.எம்.ஜி.சி. குளோபல் என்டடெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அம்ஜத் ரஷீத் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அணியின் மசாஜ் நிபுணர்..

 

pakistan

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் மசாஜ் நிபுணர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்குச் சென்றிருந்த வேளையில் லண்டனில் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றிலேயே பாகிஸ்தானின் மசாஜ் நிபுணர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஹோட்டலில் பாகிஸ்தான் அணி தங்கியிருந்த போது, மலாங் அலி என்ற குறித்த மசாஜ் நிபுணர் அந்த ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், அவ்விடயம் தொடர்பாக அந்தப் பெண் அதுகுறித்து முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதில் அவர் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் உடனடியாக இங்கிலாந்தை விட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதும் அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் இந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது – சீன இராணுவ தளபதி எச்சரிக்கை..

china

எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அந்நாட்டு இராணுவ அமைச்சருடன் இன்று அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இதற்கிடையே சீன இராணுவ தளபதி லுயோ யுவான் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், இரு நாட்டுக்கிடையே உள்ள எல்லை பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பகுதியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து, சீனாவின் கோபத்தை தூண்டக்கூடாது

சீனாவின் அச்சுறுத்தலால் தான் இராணுவ செலவை அதிகரித்துள்ளதாக இந்தியா கூறுகிறது.எதைக் கூற வேண்டும், எதை கூறக்கூடாது என்ற விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின் சுவாரஸ்ய புகைப்படங்கள்..

 

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கணனியின் பங்கு மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கணனியுடன் ஒட்டிப்பிறந்தது தான் மௌஸ் எனப்படும் சுட்டி. மௌசை கண்டுபிடித்த டக்லஸ் என்கேல்பட் நேற்று (04.06) மரணமடைந்தார்.

எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின் சுவாரஸ்ய புகைப்படங்களை இங்கே காணலாம்..

24 25 23 22 18 19 20 21 17 16 15 14 10 11 12 13 9 8 7 6 4 3 2 5 1

மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

australian-flag

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரையில் 1285 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1072 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சூர்யா..!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.இவர் சூர்யா, கார்த்தியின் உறவுக்காரர் ஆவார்.

சூர்யாவின் கால்ஷீட் திகதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் திகதிகள் கொடுத்து படத்தை தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.

அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் திகதிகள் கேட்டு தான் சென்றார்களாம்.

ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர்.

அத்துடன் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம்.

இதற்கிடையே நடிகர் சூர்யாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார்.

இந்நிறுவனத்திற்கு D – Diya, D – Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

narasingar

ஆஞ்சநேயருக்கும் பைரவருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே “வடமால்யா’ என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது.

போதாக்குறைக்கு ஆஞ்சநேயர் வானரமுகம் கொண்டவர் என்பதால், வானரத்துக்குப் பிடித்த வடைமாலை அணியும் வழக்கம் வந்துவிட்டது. எப்படியிருப்பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு. பைரவருக்கு வாகனம் நாய். அதற்கும் வடை பிடிக்கும் என்பதால், வடைமாலை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.

மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் – விஞ்ஞானி சாதனை..!

உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் யோகோஹாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் நிகழ்த்திய ஆராய்ச்சியில் உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரல் உருவாக்கப்பட்பட்டுள்ளது.

மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள், பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம், நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும். பெரும்பாலும், மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால், அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படும்.

இம்முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அதோடு, ஒரே பிரிவைச் சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும், சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்து, அதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)..!

யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது.

சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள் ஏழு கால்களுடன் ஆரியக் கடவுளைப் போல ஒரு அவலட்சணமான குழந்தை பிறக்குமென அவர்களின் மூதாதையர்கள் எழுதிவைத்திருந்ததால் அந்த பயத்தில் இயல்பாகவே வேறு சாதியைச் சேர்ந்த மனிதரின் மேல் இன்னொரு சாதி மனிதருக்கு காதல் வந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டார்கள்!

அங்கே வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அழகான குழந்தைகள் பிறந்துகொண்டேயிருந்தன.

இப்படியான அந்த கிரகத்தில் வெவ்வேறு சாதியில் ஆண், பெண் என இரண்டு சேட்டைக்காரர்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு கேள்விகள் மேல் தீராக்காதல். பதில்களின் மேல் கொள்ளைக் காமம். இரண்டையும் சேர்த்து ஆனந்தத்தில் திளைப்பதென்பது அவர்களின் இயற்கை புத்தி. பின் என்ன? இருவேறு சாதிகளைச் சேர்ந்த அவர்களுக்குள் காதல் வந்தது.

அந்த கிரகத்தின் எட்டு லட்ச ஆண்டுகள் வரலாற்றில் மனதிற்குள்ளேயே அழுத்தாமல் வெளிப்படுத்தப்பட்ட சாதி மறுப்பு காதல் அது! கிரகம் அல்லோலகல்லோலப்பட்டது! தலைவர்கள் திமிறினார்கள், கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். சாதியை மறுத்து உறவு கொள்வதென்பது கிரகத்தையே அழிக்கும் என தீர்க்கமாக வாதிட்டார்கள்.

காட்டுக்குள் ஓடிய அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நாட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் மெல்லிய துணியால் போர்த்தப்பட்ட ஒரு பச்சிளங்குழந்தை இருந்தது. இரண்டு கைகள் இரண்டு கால்களுடன் தோற்றமளித்த அந்தக் குழந்தை தன் தந்தை தாயின் லட்சணங்களைத் தாங்கி அழகாக இருந்தது.

கிரகத்தாருக்கு அதிர்ச்சி! இத்தனை லட்சம் ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்துவிட்டோமே இயற்கையாய் ஊறிய காதலை மரபால் அடக்கி வாழ்ந்தோமே என்ற வெட்கத்திலும், இப்போதாவது நம் இனத்தில் இரு அறிவுடையவர்கள் பிறந்தார்களே என்ற மகிழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் அந்த கிரகம் இருவிதமான உணர்வுகளுடன் விழாக்காலம் பூண்டது.

எங்கும் வானவேடிக்கைகளும், விருந்துகளும் நடந்தன. அன்றோடு அந்த பைத்தியக்காரத்தனமான மரபு பிய்த்தெறியப்பட்டது. வழமையில் இருந்து மாறி புரட்சி செய்த அந்தக் காதலர்கள் உடோபியா கிரகத்தின் புரட்சியாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.

அந்த கிரகத்தில் இருந்து சரியாக ஒன்பது லட்சம் மைல் தொலைவில் பூமி என்ற கிரகம் இருந்தது. சாதி மாறி காதலித்ததற்காக ஒரு இளைஞனை சிலர் காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்றாழையை அவன் கழுத்தில் வைத்து அழுத்தினார்கள். முள் நிறைந்த அந்த கற்றாழை அவன் கழுத்தை அறுத்து நரம்புகளைக் கடந்து ரத்தத்தை ஆறுபோல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

-டான் அசோக்-

இந்திக்கு செல்கிறார் விஜய்?

விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம்.

ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் அங்கு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததால், தெலுங்கு ரைட்ஸே பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார்களாம். அதேபோல் மலையாளத்திலும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறதாம்.

இந்தநிலையில், தலைவா படத்தை இந்தியிலும் அடுத்து ரீமேக் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது தனுஷ் ராஞ்சனாவில் இந்தியில் கால்பதித்ததைத் தொடர்ந்து அடுத்து ஜாக்பாட் என்ற படம் மூலம் பரத்தும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

இதையடுத்து விஜய்யும் தலைவா ரீமேக் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைவா படம் ரிலீசான பிறகுதான் இந்தி பதிப்பில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரம் முழுமையாக வெளியிடப்படுமாம்.

வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு..!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார்.

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29இல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.

இதன்படி 1987 நவம்பர் 14இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகள் உருவாகக்ப்பட்டன.

மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன. 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது.

தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது.

2002ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இலங்கையின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது.

வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு 5வது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை.