என் உயிர் தோழி
எனக்கு உயிரை கொடுத்து
உலகை பரிசாக காட்டிய
எனது முதல் உயிர் தோழி
என் " அன்னை"
உலகை பரிசாக கொடுத்த
என் அன்னைக்கு அடுத்து
என் உள்ளத்தை எப்போதும்
குழந்தையாய் வைத்திருப்பவள்
நீயடி...
நீ என்ன இயற்கையின் அவதாரமோ
உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம்
என்ற...
என் தேசத்தைப் பற்றி – மித்யா கானவி!!
என்னடி தோழி
எப்படி சுகம்?
சிட்டுக் குருவி
இசை மறந்த எம்
தேசத்தைப்பற்றி
என்னத்தை சொல்ல -நான்
துருப்பிடித்த துப்பாக்கிகள்
எல்லைதாண்டியே வருவதால்
சத்தமின்றி கொல்லும்
சுவாச நோய் பற்றி...
வாகை மரங்கள்
உதிரும் கண்ணீரில்
அரசமரங்கள்
உயிர்ப்பித்தல்
பற்றி-எப்படி
சொல்ல நான்..
வற்றிப் போகாத
வரட்டுப் பிடியில்
ஒற்றை காலில்
நிற்கும் கொக்கை-பார்த்து
வெக்கிப் போகும்
தூரோகத்தை பற்றி
எப்படிச் சொல்லுவேன்..
செம் பருந்தை...
கண்டேன் = கொண்டேன்
தோகையில்லா
மயில்
ஒன்றை கண்டேன்
கூண்டில் சிக்காத
பறவை
என்று எண்ணிக்கொண்டேன் !
சிறகில்லா
அன்னப்பறவை
ஒன்றை கண்டேன்
சிற்பியால் செதுக்கப்பட்ட
சிற்பம்
என்று எண்ணிக்கொண்டேன் !
வண்ணமில்லா
ஓவியம்
ஒன்றை கண்டேன்...
ஓடி விளையாடு பாப்பா
வீதியில் விளையாட்டு
இன்பான காற்றோடு.
சுவாசத்தில் ஒரு பாட்டு
துள்ளலான மெட்டோடு.
ஓடிக் களைத்திடினும்
உற்சாகமான விளையாட்டு.
கணனியில் கண்ணயர்ந்து
காணமல் போவதை நீ மாற்று.
ஓடிப்பிடித்து சுதந்திரமாய்
ஒளிந்து நீயும் விளையாடு.
தேடி நட்பு நாடி வரும்.
தேகப்பயிற்சி கூடி வரும்.
பாடப்படிப்பு முடிந்தவுடன்
பம்பரமாய் சுழன்றாடு.
கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும்
களிப்பு தரும்...
துருப்பிடித்த காதல்..
நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்..
உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்..
காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்..
அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்..
இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது..
நீண்ட போரின்
பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்..
இருந்தும்
துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப்...
வரலாற்றில் அழியா மே 18!!
எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி
அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள்
குஞ்சுகளை சுமந்து குலங்காக்க
குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை
தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை
துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள்
நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது
இன்று அகவை ஏழாச்சு
அன்று இருந்த நிலையிலேயெ
நாமின்றும்..
இழந்த எம்உறவுகளை...
இன்று..
வாழ்வின் இறுதி
அத்தியாயங்களில் -உயிருடன்
ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம்
ஈழத்து உறவுகளை -இன்னும்
என்ன செய்ய போகின்றாய்?
உண்மைகள் மறைக்கப்படும்
இரவுகள் தொடர்ந்து கொண்டே
விடிகின்றது எம் முற்றம்..
எங்கோ மண் பிறாண்டி
துடிப்படங்கும்-நாயின் ஓலமும்
இரும்புச் சப்பாத்துகளின்
இரக்கமற்ற உதைப்புகளும்
சொல்லித் தருகின்றன
எம் மீதான பார்வைகளை..
எதை எதையோ
எழுத நினைத்த-என்
கரங்கள் அடங்கிப்போயிற்று
ஒரு...
சிறகிழந்த பறவைகள்..!!
எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத
கர்வம் மிகுந்த வீரப் பறவைகள்.
வேடன் இட்ட சதி வலையில்,
சிறகுகள் வெட்டப்பட்டு
வேடன் வகுத்த தனி வழியில்
குவியல் குவியலாக
இறக்கை வேறு உடல் வேறு
முண்டம் வேறு பிண்டம் வேறாக
பாதை எங்கும் கண் பெற்ற...
உலகம் மாறிப் போகுதையா!!
குடிதண்ணிக்காய் உயிர் தவிக்கும்
உடலுள்ளே தண்ணியும் குடலரிக்கும்
அடுப்பிலே பூனையும் படுத்திருக்கும்
அநியாய வட்டியில் குடி தொடரும்-பணம்..
கொடுத்தவன் உறுதியை அறுதியென்பான்-இவன்
தொங்கிட கோவணம் இல்லையென்பான்
தின செய்திகள் தலைப்பெல்லாம் தற்கொலைகள்
திடுக்கிடும் தகவல்கள் வேதனைகள்
பாவிகள் செய்திடும் வன்செயல்கள்..
ஆவியாகினும் அடங்கிடா தறுதலைகள்
முறையற்ற உறவுகள்...
நவயுக நட்பு
முல்லை மொட்டுக்களாய்...
பள்ளிச் சிட்டுக்களாய்...
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு....!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது...!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை...!!!
நாங்கள் அங்கு...
ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..
வாய்கால் தண்ணீரில்
மூழ்கிக் குளித்து
வரும் சிறுநீரையும்
கலக்க விட்டு
மேல் தண்ணீர் விலக்கி
இருகைகள் இணைத்து
அள்ளிப் பருகுவேன்
அப்போது புது
உற்சாகம் என்னுள்
பிறக்கும்..
இப்போ
கூல்வாட்டர் குடிக்கின்றேன்
குனிர் காய்ச்சல்
அடிக்கின்றது...
ஒல்லித் தேங்காய்க்கு
பூவரசம் தடி சீவி
கொம்புகள் அமைத்து
முள்முருக்கம் சோத்தியிலே
வண்டி செய்து
தங்கையை அதில் அமர்த்தி
வெட்ட வெளி வெயில் எல்லாம்
இழுத்து...
சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..
வாழை இலை நீர்
விரும்பும் கிளிகள்..
அதைவிட்டு
உன் வாய் வழி நீர்
விரும்புகின்றது..
காலை எழு கதிரவன்
கதிர்களும் உன்
தோள் தொட்டு
குளிர்கின்றது..
சோலை மலரும்
மலர்களும் உன்
வாசம் நுகர்கின்றது..
மாலை வருகின்ற
மேகம் உன்
செவ்விதழ்
குழைகின்றது..
சேலை இணைகின்ற
நுாலும்
என் சாலை ஆகின்றது..
ஆலை இடுகின்ற
கரும்பும் உன்னில்
ஆசைப்படுகின்றது..
வேலை ஏதுமின்றி
எனக்கும் உன்னைக்
காதலிப்பதே
வேலையாகிறது..
பாலையாய் உன்
ஈரமில்லா
இதயம்...
யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)..!
யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது.
சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள்...
தோழி
இனையம்
நம்மை
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது
விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்
என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட!
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)
-nandhalala-
ஒரு பயணத்தில்..
ஒரு பயணத்தின் முடிவுகள்
முடிவிலியாய்..
பேருந்து பயத்தின்
நெருசல்களின்
உரசல்களால்
யார் யாரோ
விட்டு சென்ற
வியா்வை நாற்றங்கள்
இன்னும் என்னுள்
அருவருக்க......
காலைத் தேநீரும்
காலவதியாகி
களைப்பும் இளைப்பும்
சடுதியாய் வந்துவிட
தோற்றுப் போன
பயணத்தின் வெறுமை
தனிமையை நொந்து கொள்ள
கரை தொட்டும்
கடல் மேவும்
அலையாகி
நுளைவாயில்
நோக்கி நடந்து கொண்டிருந்தேன்
அத்தனை வெறுமைகளையும்
விழுங்கி ..
கொட்டும் வெயிலையும்
குளிருட்டி
கணப்பொழுதொன்றை
கனதியானக்கியது
அவன் வருகை
உயிரள்ளிப்...
புரிந்துணர்வு..
வான், கடலைப் புரிந்ததால் மழை நீரானது
மண், வித்தை புரிந்ததால் விளைச்சலானது
கதிரவன், ஒளியைப் புரிந்ததால் பசுமையானது
இருள், நிலவைப் புரிந்ததால் பௌர்ணமியானது
நான், உன்னைப் புரிந்ததால் உனக்கேயானேன்
நீ, என்னைப் புரிந்தால் நாமாய் ஆனோம்
உண்மை, வாய்மை புரிந்ததால் சத்தியமானது
நியாயம்,...