வவுனியா வடக்கு பிரதேசம் விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கும்-பிரதேச செயலாளர்!

vavuniya
வவுனியா வடக்கு பிரதேசம் சவால் நிறைந்த விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்ததொரு தடம் பதிக்கும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது தலைமையுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவத்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் விளையாட்டின் ஊடாக உள நலத்தில் சிறந்தவர்களாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். அத்துடன் எமது ஆற்றல்களை வெளிக்கொனர்வதற்கான தளமாக விளையாட்டினையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

எமது பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அனைவரும் அக்கறையுள்ளவாகளாக செயற்பட வேண்டும். இன்று எமது பிரதேசம் மாவட்டம், மாகாணம், தேசிய மட்டம் என வெற்றிகளை ஈட்டும் வீரர்களை கொண்டதாக உள்ளது.
அவற்றுக்கு காரணமாக எமது பிரதேச விளையாட்டு விழாக்கள் காணரமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் எமது பிரதேசம் விளையாட்டுத்துறையில் தனக்கொன ஓர் இடத்தனை தக்க வைத்துக்கொள்ளும் என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர

இவ்வாறான கஸ்டப் பிரதேசத்தில் இந்தளவிற்கு ஓர் விளையாட்டு நிகழ்வை நடத்துவதையிட்டு பொருமையடைவதோடு, இவ்விளையாட்டுவிழாவினூடாக நீங்கள் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவாகள் என்பதனையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. விளையாட்டு வீரரொருவர் விளையாட்டில் விருப்பமுடையவர் தான் சாந்திருக்கின்ற சமூகத்தின் நேசனாக மாறுவது நிச்சயம்.

விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எப்பொதும் வயது முதிர்வை அடைவதில்லை என நாம் கூறுவது வழமை. அந்தவகையில் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் செலுத்துபவர்களாக மாறி இப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறையை வளர்ச்சியடைய செய்யவேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செலயாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சுக்களின் இணைப்பாளர் சில்வஸ்டார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் லலித், செட்டிகுளம் பிரதேச செலயாளர் ந. கமலதாஸ், வவுனியா தெற்கு உதவி பிரதேச செலயாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆனந், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஏ. ஆயகுலன், இராணுவ உயரதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

பேஸ்புக் சட்டிங் மூலம் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா?

 

இணைய உலகில் முதற்தர சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது தற்போது பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இப்பயனர்களை தொடர்ந்து தக்கவைக்கும் முகமாகவும், புதிய பயனர்களை தன்பால் ஈர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட புதிய அம்சங்களை உட்புகுத்தி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பேஸ்புக்கினூடாக நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடும்போது விரும்பிய புகைப்படங்களையும் இலகுவாக அனுப்பி மகிழக்கூடிய வசதியே அதுவாகும்.

இப்புதிய வசதியானது பயனர்களை அதிகளவில் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

facebook_chat_001

இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

sanga
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர்.

294 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு குஷால் பெரேரா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாட இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷன் 44 ஓட்டங்களையும் மகேள ஜெயவர்தன 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சங்ககார ஆட்டமிழக்காமல் 12 நான்கு ஓட்டங்கள் உட்பட 135 பந்துகளில் 134 ஓட்டங்களையும், குலசேகர 3 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் இலகுவான வெற்றியை உறுதிசெய்தனர்.

குமார் சங்ககார இன்றைய போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி போட்டிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

~கேசா~

 

 

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய மேலும் தகவல் தெரிவிக்கையில்.

அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் இரு திருத்தங்களை அரசாங்கம் கடந்த வாரம் அமைச்சரவைக்கு முன்வைத்தது.முதலாவது திருத்தமான இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தது.

எனினும் இரண்டாவது திருத்தம் உட்பட ஏனைய திருத்தங்கள் மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

உச்சக்கட்ட கோபத்தில் கமல்..

Kamal_Hasan

விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்த போது தன்னைப் பற்றிய தகவலை உடனுக்குடன் வெளியான போது மகிழ்ச்சியடைந்த கமல் தற்போது கோபத்தின் உச்ச கட்டத்தில் காணப்படுகிறார்.
தற்போது விஸ்வரூபம் 2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப் போகும் படங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டு வருவதால் டென்சனாகி உள்ளாராம்.

குறிப்பாக திருப்பதி பிரதர்ஸ்க்காக தான் இயக்கும் கொமடி படம் பற்றிய தகவலை லிங்குசாமியே அறிவித்து விட்டாராம்.இந்நிலையில் அந்த படத்தில் காஜல் அகர்வால், திவ்யா ஸ்பந்தா உட்பட நடிகைகளை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது என்ற தகவலும் வெளியாகி வருவதால், இது எப்படி வெளியாகிறது என்று தனது உதவியாளர்களிடம் சாடுகிறாராம்.

இப்படி அவர் கோபத்தை காட்டி வந்த நேரத்தில் தற்போது அப்படத்திற்கு உத்தம வில்லன் என்ற பெயர் வைத்திருப்பதையும் ஊடகங்கள் கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டது.

இதனால் கமலின் கோபம் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதாம். இதையடுத்து இனிமேல் நான் இயக்கும் படங்கள் பற்றிய தகவலை எனக்குத் தெரியாமல் யாரும் வெளியில் மூச்சு விடக் கூடாது என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் கட்டளையிட்டுள்ளாராம் கமல்.

 

 

இரணைமடு விமான ஓடுபாதை 15ம் திகதி ஜனாதிபதியால் திறப்பு..

Eranai

இரணைமடு விமான ஓடுபாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எதிர்வரும் 15ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமிருந்த இரணைமடுவில் 2009 ஒகஸ்ட் 14ம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.

2011 ஒகஸ்ட் 3ம் திகதி இரணைமடு விமானப்படை முகாமாக மாறியது. அதன் பின்னர் அங்கு விமான ஓடுபாதை அமைக்கும் பணி 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. ஓடுபாதைக்கு காபட் இடும் பணி கடந்த ஏப்ரலில் ஆரம்பமானது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுபாதை 1500 மீற்றர் நீலமும் 25 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.
மாங்குளம், அம்பகாமம், ஒலுமடு மற்றும் கிளிநொச்சி, வட்டக்கச்சி, ராமநாதபுரம் வழியாக இந்த விமான ஓடுபாதையை அடைய முடியும்.

இந்த ஓடுபாதை அமைப்பு பணியில் முற்றுமுழுதாக இலங்கை விமானப்படையினரே ஈடுபட்டனர்.

 

தீவிர சிகிச்சை பிரிவில் கவிஞர் வாலி.. அதிர்ச்சியில் திரையுலகினர்

Vaali

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான் என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இன்று வரை நன்றி பாராட்டுவதில் வாலிக்கு இணையாக ஒருவரையும் சொல்ல முடியாது.

இதனால் திரையுலகில் அனைவருக்கும் இனியவராக வாலி திகழ்கிறார். காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

கிரடிட் காட் அளவிற்கு மெல்லியதான கைக்கடிகாரம் – அமெரிக்க நிறுவனம் சாதனை !!

watch
சிகாகோ நகரில் உள்ள ஒரு கடிகார நிறுவனம் மிகவும் மெல்லிய கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.

இந்த கைக்கடிகாரம் 0.8 மிமீ பருமன் கொண்டது. இது ஒரு கிரடிட் காட் அளவுக்கு மிகவும் மெல்லியதாக இருக்கின்றது. இதில் எலக்ட்ரோனிக் இங்க் மூலம் நேரம் பளிச்சென தெரிகிறது. இது ஒரு வளைக்கக்கூடிய ஸ்டீல் தகட்டினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரத்தை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும். 15 வருடங்களுக்க் சார்ஜ் நிலைத்திருக்கும். நான்குவித மொடல்களில் வெளிவந்திருக்கும் இந்த கைக்கடிகாரத்தின் விலை $69 முதல் $109 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கைக்கடிகாரங்களை வாங்கி உபயோகிக்க பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

watch1

 

 

பாதி கதை கேட்டு இயக்குனரை விரட்டிய சத்யராஜ்..

sathiyaraj
பாதி கதையை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என இயக்குனரை விரட்டினார் சத்யராஜ். இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பொன் ராம். இவர் இயக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இது பற்றி அவர் கூறியதாவது வின்னர் படத்தில் வடிவேலு வைத்து நடத்திய சங்கத்தின் பெயரைத்தான் இப்படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறோம். இதில் சிவ கார்த்திகேயன், சூரி காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.

கோபம், வருத்தம், ஜாலி, கிண்டல், கேலி கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து ஒப்புக்கொள்ளும் அவர், இதில் நடிப்பாரா என்ற சந்தேகத்துடன் கதை சொல்லச்சொன்றேன். பாதி கதையை கேட்டவுடன் முதல்ல எந்திரிச்சி போங்க இந்த கேரக்டர்ல நடிக்கத்தான் எங்கிட்ட கத சொல்ல வந்தீங்களா? என்று விரட்டினார்.

நான் பயத்தில் உறைந்துபோனேன். மீதி கதையை கேளுங்கள் என்றேன். அதை கேட்டபிறகு இந்த கேரக்டரில் நான்தான் நடிப்பேன்‘ என்றுசொல்லி உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. தயாரிப்பு பி.மதன். வசனம் எம்.ராஜேஷ். இசை டி.இமான். ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம்.

 

மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்..!!

விருதகிருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலிருந்த விஜயகாந்த், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல. மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அரசியலில் மிக்த தீவிரமாக இறங்கி, எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆன பிறகு, சினிமாவைத் தவிர்த்து வருகிறார் விஜயகாந்த். கடைசியாக 2010-ம் ஆண்டு விருதகிரி என்ற படத்தை நடித்து இயக்கினார். அந்தப் படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணி துணையுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டார்.

இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் தீவிரமானார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இப்போது ஒரு கதையை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இப்போது முன்னிலையில் இருக்கும் விஜய், சூர்யா போன்றவர்கள் திரையுலகில் ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தன் படங்களில் அவர்களை இடம்பெற வைத்து பிரபலமாக்கி, முன்னுக்கு வர உதவியவர் விஜயகாந்த்.

விஜய்க்கு ஒரு செந்தூரபாண்டியும், சூர்யாவுக்கு ஒரு பெரியண்ணாவும் அமைந்ததுபோல, தன் மகனுக்கும் இந்த புதிய படம் அமைய வேண்டும் என்பது விஜயகாந்த் ஆசை. கூடவே, அதிமுகவில் தன் கட்சி கரைந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் திரைப்பிரவேசம் செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதுகிறாராம்.

சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை!

child abuse

யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிக்கு தனிமையில் கட்டுடை பிரதேசத்திலிருந்து சென்று கொண்டிருந்த சிறுமியை துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவர் அவரைப் பற்றை ஒன்றிக்குள் வைத்து பாலியல் வல்லுறவிற்கு முயற்சித்துள்ளார்.

குறிதத் சிறுமி கதறியதால் அயலிலுள்ளவர்கள் இந்த முதியவரைத் துரத்திப்பிடித்து பனை மரத்துடன் கட்டி வைத்து பச்சை மட்டையினால் தாக்கியுள்ளனர். இதன் போது முதியவரின் கை எழும்பு முறிவடைந்துள்ளதுடன் அவருக்கு உடம்பில் பல பகுதிகளிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முதியவர் தொடந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

யாழ். நகரில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல்! 2 பேர் காயம்!

யாழ்.கே.கே.எஸ் வீதி தட்டாதெருச் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

ஹயஸ் வாகனத்தில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த இளைஞர் குழுவுக்கும் இடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை குறித்த இரு இளைஞர் குழுக்களுக்கும் இடையில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஒரு மதுபான நிலையத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மேற்படி சம்பவத்தில் முரண்பட்ட இரு குழுவினரும் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள மற்றுமொரு மதுபான விற்பனை நிலையத்தில் சந்தித்ததை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

இச் சம்பவத்தில் ஹயஸ் வாகனம் முழுமையாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனத்தில் வந்த இருவர் பலத்த தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வீதியில் விழுந்து கிடந்தனர்.இதன் பின்னர் அங்கு வந்த பொது மக்களால் காயப்பட்ட இருவரும் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுமார் 1 மணித்தியாலம் வரைக்கும் நீடித்த மேற்படி மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நீண்ட நேரத்தின் பின்னரே வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்!!

kochadayan

கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும். இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல.

ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார்.

ஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மூன்று ஸ்டில்கள் தவிர ரசிகர்களுக்கு படத்தின் தோற்றம் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர். படத்தின் டீஸர், ‘மேக்கிங் ஆஃப் கோச்சடையான்’, டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம்.

தீபாவளியன்று கோச்சடையான் வெளியிட்டு செய்து ரசிகர்களை இரட்டை தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் – சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

child

உலகில் ஒரு கோடிக்கும் அதிகமான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும் சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு அவை இட்டுச் செல்வதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

சிறாரை தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சிறார் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒழிப்பதற்கான ஒழுங்குவிதிகள் தேவை என்று அது கோரியுள்ளது.

ஒரு கோடியே 5 லட்சம் சிறார்கள் – இவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள்- வீட்டு வேலையாட்களாக செயற்படுவதாகவும், துப்பரவு செய்தல், சமைத்தல், குழந்தைகளை மற்றும் முதியவர்களை பராமரித்தல் ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அது கூறுகிறது.

இவர்களில் 65 லட்சம் சிறார்கள் 14 வயதுக்கு கீழானவர்களாவர் என்றும் 71 வீதத்தினர் சிறுமிகள் என்றும் உலக தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.

இலங்கை நிலவரம் குறித்து மைக்கல் ஜோக்கிம்

இவர்களில் பலருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது. இவர்களில் சிலர் கடத்தப்படுவதுடன் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

சில சிறார்கள் தமது குடும்பத்தினர் பெற்ற கடன்களை அடைப்பதற்காக சில வீடுகளின் பணியாளர்களாக அனுப்பப்படுவதாகவும் அது கூறுகிறது.

இன்னமும் ரகசியமாக இந்தச் சிறார்கள் வேலைவாங்கப்படுவதால் அது குறித்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சர்வதேச மட்டத்தில் ஒழுங்குவிதிகள் தேவை என்றும் அது கூறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை சிறார் தொழிலாளர் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதிலும் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் அமைதி அறக்கட்டளை என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக பால் பாஸ்கரன் கூறுகிறார்.

அதேவேளை இலங்கையிலும் நிலைமை முன்னேறியிருப்பதாகவும் ஆனாலும் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் இது தொடர்பில் நிறைய முன்னேற்றங்கள் தேவை என்றும் கூறுகிறார் தோட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரான மைக்கல் ஜோக்கிம்.

 

 

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா காட்சிகள்(படங்கள் இணைப்பு ).

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன்  திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

Photo026

Photo029

Photo032

Photo035

Photo036

Photo037

Photo042

Photo031

12
(படங்கள்: சுகுமார்)

 

நெடுங்கேணி பொலிஸ் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

n2வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில்,

இன்று காலை நெடுங்கேணி பிரதேச விளையாட்டு விழா இடம்பெற இருந்த சமயம் மைதானத்தில் இருந்து தனது விடுதிக்கு சென்ற சமயம் பொலிஸார் மறித்தபோதிலும் அதனை அவதானிக்காத நிலையில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தனது விடுதிக்கு சென்றபோது பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் அவரை விடுத்திக்குள் வைத்து தாக்கியதுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பொலிஸாரிடம் கலந்துரையாடுவதற்காக சென்ற பிரதேச செயலாளரை நிலையத்தின் பொறுப்பதிகாரி நீண்ட நேரம் சந்திக்காது காத்திருக்க வைத்ததுடன் உதவி பிரதேச செயலாளரை போக்குவரத்து பொலிஸார் தரக்குறைவாக நடத்தனர் எனவே நாம் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.