இலங்கை செய்திகள்

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் சாதித்த இலங்கை மாணவன்!!

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த மாணவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ரகிந்து ரன்திவி விக்ரமரத்ன இந்த சாதனையை படைத்துள்ளார். 40...

கொழும்பில் மேலும் ஒரு இளம் பெண்ணை காணவில்லை!!

கொழும்பில் காணாமல் போன இளம் பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணிக்கராஜா மொனிகா என்ற 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல்...

இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் : குடியேறும் அனைவருக்கும் 2000 யூரோ!!

இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ...

மற்றுமொரு வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள்!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய...

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் மரணம், சிறார்கள் காயம்!!

பிலியந்தலையில் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மரணமானார். மரணமடைந்தவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர்...

6 மாத குழந்தையும் தாயும் குத்திக் கொலை!!

கொஸ்கொட தெற்கு பொரலுகெடிய பகுதியில் 6 மாத குழந்தையும் தாயும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த தாயின் வயது 38 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை...

முகநூல் காதலால் இளம் பெண்ணிடம் பணமோசடி செய்த நபர்!!

முகநூலின் மூலம் காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போது, 50,000 ரூபா...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகமெங்கும் முடங்கிய பேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல நிமிடங்கள் முடங்கியுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வரையில் பேஸ்புக் தளம் முடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. "ஏதோ தவறாகி...

உலகின் முதலாவது லேசர் வெசாக் அலங்கார பந்தல் இலங்கையில்!!

  உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த அலங்கார பந்தல் புதன் கிழமை மாலை...

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில், இலங்கையை சேர்ந்த வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நேற்று-முன்தினம் நடைபெற்ற 2017 Eugene மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த வீராங்கனை வெற்றி...

இரண்டு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்!!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதிலும் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி...

பெண்ணொருவர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

கொட்டாஞ்சேனை வாசல பகுதியில் 39 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் குறித்த பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாசல பகுதியில் உள்ள விடொன்றில் தனது...

க.பொ.த சாதாரணப்பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!!

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள்...

16 வயதானவருக்கு 10 வருட சிறைத் தண்டனை!!

16 வயதான ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மொரவக்க பிரதேசத்தில் 3 வயதான சிறுமியை தடியால் தாக்கி கொலை செய்தமை தொடர்பாக அந்த சிறுவன் மீது மாத்தறை...

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம் : இருவர் காயம்!!

களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு...

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட படுக்கை மெத்தைகள் வழங்கிவைப்பு!!

  இறுதிப் போரின்போது காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டநிலையில் படுக்கையில் இருக்கும் நோயளிகளுக்கு விசேட காற்று நிரப்பும் படுக்கை மெத்தைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சுகாதார மேம்பாட்டு...